இளங்கன்று 3 (இறுதி பாகம்)

அடுத்த நாள் நான் எந்திரிக்கவே மணி 10 ஆகியது. இடையில் ஆர்த்தி எழுப்பிய போது, “தலைவலி. வேலைக்கு லீவு சொல்லிடு...” என்று சொல்லி படுத்தது ஞாபகம் வந்தது. 'சே..! கீதாவோட பர்த்டேக்கு அரசு விடுமுறை கிடையாதா..?' என்று அழுத்துக் கொண்டு பல் தேய்க்கப் போனேன். 11 மணி போல குளிக்கப் பின் பக்கம் போன போது, கீதா நின்று கொண்டு இருந்தாள். கீதாவா அது. ஒரு விநாடி அசந்தே போனேன். நான் கொடுத்த சிகப்புச் சேலையில், பெரிய பெண்ணாய், பளிச் என்று ஜவுளிக் கடை விளம்பரங்களில் சிரிப்பார்களே அது போல இருந்தாள். பக்கத்தில் இருந்து, “இப்ப தான் முழிச்சிங்களா..?" என்ற குரல் கேட்ட போது தான், கல்பனா அங்கே இருப்பதே தெரிந்தது. “கீதாவுக்கு இன்னைக்குத்தான் பர்த்டே...” என்றார் கல்பனா. வாழ்த்துக்கள் சொல்லி விட்டு, “எனக்கு ஸ்வீட் எல்லாம் கிடையாதா...” என கேட்டு விட்டு ஒன்றும் தெரியாதவன் போல குளிக்கப் போனேன். குளித்து முடித்து விட்டு, சாப்பிட்டு, என் அறையில் ஹாயாக கைலி மட்டும் கட்டி படுத்திருக்க, வெளியே பேச்சு சத்தம் கேட்டது. என் படுக்கை அறையில் இருந்து எட்...