காதல் பூக்கள் 60
.jpg)
முழு தொடர் படிக்க “டேய் செல்வா... நீயும் வந்து சாப்ட்டீனா என் வேலை முடியும். மணி எட்டாச்சு. எனக்கு நேரத்துல தூங்கணும்..." மல்லிகாவுக்கு அவனை கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப் போயிற்று. “அம்மா... எனக்கு பசிக்கும் போது நானே சாப்பிட்டுக்கிறேன்... நீ போய் நிம்மதியா தூங்கு... தூங்கறதை விட்டா உனக்கு வேற என்ன கவலை?" மதியமே அவனுக்கு சாப்பிட பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக மல்லிகா போட்டதை, எதுவும் பேசாமல் அவசர அவசரமாக விழுங்கியிருந்தான். “எல்லாம் உன் இஷ்ட்டம்ன்னு சொல்லியாச்சு... அப்புறம் ஏண்டா என்கிட்ட வீண் பேச்சு பேசறே?" “அம்மா... நீங்க ரெண்டு பேரும் திருப்பியும் ஆரம்பிச்சிடாதீங்க... என்னை கொஞ்ச நேரம் படிக்க விடுங்க" "அவன் கேக்கும் போது அவனுக்கு நான் ரெண்டு தோசை ஊத்திக் குடுக்கறேன்; நீ போய் படும்மா..." மீனா ஒரு வாரத்துக்கு பிறகு அன்றுதான் தன் கல்லூரிப் புத்தகத்தை கையில் எடுத்திருந்தாள். மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத்...