மறுவாழ்வு 57
முழு தொடர் படிக்க காலையில் மதுரையை நோக்கி, சத்யா குடும்பத்தினரை ஏற்றிப் புறப்பட்ட லெனோவா தேசிய நீண்ட நெடுஞ்சாலையில் சீறிக் கொண்டு பறந்தது. தனியார் மயத்தின் பலன், மேடு பள்ளமில்லா சீறான பாதை, அலங்கல் குலுங்கள் இல்லாத பயணம். ஆனால், டோல்கேட் மடி கரக்கும் பொழுதுதான் நெருடல். இந்த தரமான ரோட்ட அரசாங்கமே போட்டிருந்தா? மரிக்கொழுந்துவும், பின் சீட்டில், பெட்டி சாமான்கள் நெருக்க உட்கார்ந்தவள், புறப்பட்ட பத்து நிமிடத்திற்கெல்லாம், கண் மூடி தூங்கிவிட்டாள். ராத்ரி முச்சூடும் வேறு வேலையில் இருந்தாள். இந்தப் பயணம், மற்றவர்களைப் போலவே, ஏன் அதை விட ஒரு படி மேலே அவளை மிகவும் பாதித்த பயணம். முன் தினம், சுகந்தியை பெண் பாரக்கும் நிகழ்வுக்குப் பின் மதிய விருந்தும் முடிந்தது. புவனேஸ்வரி, சத்யா வீட்டு டிரைவர், செக்யூரிட்டி வனத்தையன் இருவரையும் சாப்பாட்டுக்கு அழைத்தாள். அப்பொழுதுதான், வனத்தையனும், மரிக்கொழுந்துவும் அறிமுகமானார்கள். இருவரின் ஊர்கள், மதுரைக்கு அருகில் பக்கத்துப் பக்கத்து ஊர் என்று தெரிந்து, இயல்பான வாஞ்சையுடன் பேசிக் கொண்டார்கள். வீட்டில் யாவரும், அறைக்குப் போய்ப் படுத்து விட மரிக்கொழு...