ரசிகன் 2 (இறுதி பாகம்)
என் அலுவலகத்தில் அது மதிய நேரம். என் அலுவலகத்தில் இருந்து 3௦ கிலோமீட்டர் தூரத்தில் அந்த இடம் இருந்தது. அது ஊருக்கு வெளியே தான் ஒரு தனிமையான இடம் போல இருக்க, போகலாமா வேணாமா என்று மிகவும் யோசித்து ஒரு வழியாக அரைநாள் லீவு சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன். மதியநேரம் என்பதால் ஒரு 5௦ நிமிடத்தில் அங்கே சென்றுவிட்டேன். அது வீடு எல்லாம் இல்லை மாறாக ஒரு பெரிய தென்னந்தோப்பு. சுற்றி முர்க்கம்பி வேலி. உள்ளே யாருமே இருந்தாற்போல இல்லை மேலும் அங்கே வீடுகளும் இருந்தமாதிரி இல்லை. 'இந்த லூசுப்பயல் தப்பான முகவரியை கொடுத்திவிட்டானோ என்னவோ.' அங்கே நின்று சுற்றும் முற்றும் பாத்தேன். அந்த இடம் பார்பதற்க்கே மிகவும் நிசப்தமாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த கிழக்கு கடற்கரை சாலைகளில் இருந்து உள்ளே திரும்பும் அவனியூ தெருக்களை போல இருந்தது. இதற்க்கு மேல் இங்கே நிற்பது நல்லது இல்லை என்று கிளம்ப முயல. அங்கே ஒரு தாத்தா வந்தார். "என்னமா இங்க தனியா நிக்குற. யாரை தேடி வந்த.?" எனக்கு அவரிடம் கேட்க தயக்கமாக இருந்தது. "என்னம்மா வழிதவறி வந்துட்டியா?" “இல்ல தாத்தா பிரெண்...