வேட்டையாடு விளையாடு 24
முழு தொடர் படிக்க லேகா மற்றும் பிரேமவாதி அவர்கள் இருவரையும் பாதித்த சம்பவங்களை பற்றி பரபரப்புடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். உண்மையை சொல்லப்போனால் பிரேமவாதி தான் அதிகமாக பேசிக்கொண்டு இருந்தாள், லேகா பெரும்பாலும் அடங்கியே இருந்தாள். அவர்கள் இருவரும் லேகாவின் வீட்டில் இருந்தார்கள், அந்த நேரத்தில் லேகாவின் வீட்டில் வேற யாரும் இல்லை. தரனா மற்றும் வஜேந்திரா லேகாவிடம் நடத்திய விசாரணையை பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருந்தாள் பிரேமவதி. பிரேமவாதிக்கு அவள்மீது அக்கறையும் கவலையும் இருந்தது, ஆனால் அதில் ஒரு சிறு சதவீதம் தான் லேகாவின் பிரச்சனைக்காக, பிரேமவாதியின் பெரும் கவலை அவளும் இந்த விசாரணையில் இழுக்கப்படுவாளாளா என்று. அவளுக்கு தெரியும் அப்படி எதுவும் நடந்தால் அவள் கணவர் யோகேஷ்வர் அவளை மன்னிக்கக்கூடிய டைப் கிடையாது. இதுவெல்லாம் லேகாவின் முட்டாள்தனத்தால் ஏற்பட்ட பிரச்சனை என்று தனக்குள் கோபத்தில் புகைந்தாள். பிரேமவாதி இதை பற்றி போனில் பேச விரும்பவில்லை, அதனால் அவள் லேகாவின் வீட்டுக்கு வந்தாள். "எப்படி நீ இவ்வளவு முட்டாளாக இருந்த?" லேகாவை பிரேமவாதி கடுமையாக விமர்சித்தாள்....