தடம் மாறிய வாழ்க்கை 1

முழு தொடர் படிக்க


 வாழ்க்கையில் தடுமாற்றம் என்பது ஆன் பெண் அனைவருக்கும்  வருவது  இயல்பு.


அதன் பின்பு அதன் தாக்கம் – மிகவும் பயங்கரம்.


இங்கு நம் கதாநாயகியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய தடுமாற்றம், மிக பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.


கதாபாத்திரங்களின் அணிவகுப்பு


அப்பா - மகேந்திரன் - 48 வயது


அம்மா - லதா - 45 வயது


அண்ணன் - பாலு - 24 வயது


தங்கை – பவித்ரா என்ற பவி (நாயகி) - 22 வயது


சிறிய குடும்பம். அப்பா கோப பட தெரியாத அப்பாவி.  நல்லவர்.  பிசினஸ்.  சிறிய வயது முதல் செல்வசெழிப்போடு வளர்ந்தவர்.  


மனைவி லதா குடும்ப பாங்கான பெண்.  கணவரை எதிர்த்து பேச தெரியாதவர்.  அமைதி குணம்.  பிறந்த பிள்ளைகள் அப்படியே பெற்றோரை அடி சுவடாக கொண்டு வளர்கிறது.  


பாலு MBA படித்து அப்பாவுக்கு பிசினஸ் இல் உதவியாக இருக்கிறான்.  


பவித்ரா காலேஜ் முடித்து திருமணத்திற்காக காத்திருக்கும் அழகி.  


பவித்ரா பற்றி சொல்ல வேண்டும் என்றால், அழகில் குடும்பத்தில் தப்பி பிறந்த பெண். 


தாய் தந்தை மாநிறம், ஆனால் பவித்ரா அழகோ அழகு.  


ஒரு முறை பார்த்தவரை, திரும்பி பார்க்க வைக்கும் அழகு,  கவர்ச்சியான கண்கள்.  


லிப்ஸ்டிக் போடாமலே கடித்து உரிய சொல்லும் உதடு.  நளினமான உடம்பு.  சொல்லி கொண்டே போகலாம்.



அண்ணன் தங்கை மிகவும் பாசமாக இருப்பார்கள்.  


அண்ணன் என்றால் பவித்ராக்கு தனி மரியாதை.  பாலு சொல்வதை உடனே கேட்பாள் பவித்ரா.  


அப்படி ஒரு பாசம்.  பவித்ரா பாலுவோட செல்லம்.    


கதைக்குள் போகலாம் வாங்க


என்னங்க என்னங்க, லதா தன் கணவனை அடுப்படியில் இருந்து கூப்பிட


என்னடி, மகேந்திரன் எதிர் குரல் கொடுக்க


இன்னைக்கு தானே பவித்ராவை பொண்ணு பார்க்க மாப்பிளை வீட்டிலிருந்து வராங்க


அடியே லதா எப்படி மறக்காம ஞாபகம் வச்சிருக்கே என்று மகேந்திரன் கிண்டலடித்தார்.  


போங்க, லதா வெட்கப்பட்டு கொண்டு, இன்னைக்காவது ஆஃபிஸில் இருந்து சீக்கிரமா கவாங்க.  


பாலுவை சீக்கிரமா அனுப்பிவிடுங்க.  எனக்கு ஒத்தாசையாக இருக்கும்.  


மகேந்திரன், சரி என்று மகன் பாலுவுடன் கிளம்பினார்.


தன்னுடைய பெற்றோர் பேசியதை கேட்ட பவித்ராக்கு ஒரே வெட்கம், ஓடி ரூமில் போய் பெட்டில் படுத்து கனவு காண ஆரம்பித்தாள்.


ஏண்டி பவித்ரா, இன்னைக்காவது நல்லா ஷாம்பு போட்டு தலைக்கு குளி


போமா, நான் மதியம் மேல் குளிக்கிறேன்.


அம்மா, சிரித்துகொண்டே கிட்ச்சனை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தாள்.


சமையலை முடித்த லதா,


ஏண்டி பவித்ரா போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம், லதா குரல் கொடுக்க


சரிம்மா


பவித்ரா, துள்ளிகுதித்து, துண்டை எடுத்து கொண்டு குளிக்க ஓடினாள்.


உள்ளே, கதவை சாத்தி தன்னுடைய உடையை ஒவொன்றாக கழட்ட ஆரம்பித்தாள்.  


ப்ரா பேண்டிசில் தன்னுடைய அழகை அவளே ரசித்து கொண்டு நிற்க


என்னடி தன்னி ஊத்துறே சத்தமே வரலே - லதா


சுதாரிப்புக்கு வந்த நம்ப பவித்ராகுட்டி, குளிக்க ஆரம்பித்தாள்.  


மூன்று முறை சோப்பு போட்டு குளித்து வாசனையுடன் வெளிய 

வந்து அம்மா செய்த சாப்பாட்டை சாப்பிட்டாள்.


பவித்ரா. .மாப்பிளை வீட்டுகாரர்கள் 6 மணிக்கு வந்துடுவாங்க. 


லேட் ஆகாமே கிளம்பிடு, லதா மகளிடம் சொல்ல.,


சரிம்மா


மாலை 4 மணிக்கு அப்பாவும் அண்ணனும் வீட்டுற்கு வர, வீடு கலகலப்பாக ஆனது.  


5 மணிக்கு புரோக்கர் காசி போன்செய்து மாப்பிளை வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பிவிட்டதாக கூறி இவர்களை சுறுசுறுப்பாக்கினார்.


சிறிது நேரத்தில், பவித்ரா அலங்கரித்து வெளியில் வர



லதா, ஹப்பா என் பொண்ணு கிளம்பிட்டா


மகேந்திரன், ஹாஹா


பாலு – பவித்ராக்கு அருகில் சென்று, செமையா இருக்கே என்று பவித்ராவை வெட்கபட வைத்தான்.


ஒருவழியாக மாப்பிளை வீட்டில் இருந்து 6 பேர் கொண்ட சிறிய கும்பல் பந்தாவாக வீட்டில் நுழைந்தார்கள்.


மாப்பிள்ளை, அம்மா, அப்பா, அக்கா, அக்கா புருஷன், புரோக்கர்.  


மாப்பிள்ளை சதிஷ் நல்ல உயரம்.  மாநிறம்.  பார்க்க ரொம்ப சாதுவாக தெரிந்தான்.  


பாலுவை போலவே MBA  படித்து மார்க்கெட்டிங் உத்யோகம்.  நல்ல சம்பளம்,  சொந்த வீடு.  


அக்கா செல்வி, திருமணம் முடித்து தம்பியோடு ஒரே பிளாட்டில் தங்கி இருக்கிறாள்.


அவளுடைய கணவன் பெயர் வெங்கட்.


பொண்ணு பார்க்கும் படலம் விமர்சையா நடக்க, பெரியவர்கள் கலகலப்பாக பேசி கொண்டு இருந்தார்கள்.


பவித்ரா மிக நேர்த்தியான சேலை கட்டி, மேட்சிங் ப்ளௌஸ் போட்டு, அதே கலரில் நெக்லசும் வளையலும் போட்டு, காதில் அழகான ஜிமிக்கி ஆட வெளியில் வர, 



பொண்ணு பவித்ரா அனைவருக்கும் காபி வழங்கி, சபையின் முன் விழுந்து வணங்க, 


பவித்ரா மாதிரி அழகியை எல்லாம் பரட்டை தலையுடன் தூங்கி விழிக்கும் போது பார்த்தாலே ஆண்களுக்கு தூக்கும்.  

இப்ப தேவதையா வந்தா.....


மாப்பிளை சதிஷ் அவள் அழகில் மயங்கி விழுந்தான்.


மாப்பிள்ளையின் சம்மதம் கேட்க, 


சதிஷ் புன்னகையுடன் சம்மதம் தெரிவிக்க, 


பவித்ராவின் பெற்றோருக்கு மகிழ்ச்சி.


பாலுவுக்கு சந்தோசம்.  


இவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சின்னா, தன்னுடைய ரூட் க்ளியர் ஆகிடும்.


அவன் கவலை அவனுக்கு,


மாப்பிளை சதிஷ் பவித்ராவிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற


பெரியவர்கள் இருவரையும் சிரிப்புடன் மொட்டை மாடிக்கு அனுப்ப


மொட்டை மாடியில்…………………


ஹாய் பவித்ரா


ஹாய்


என்னை பிடிச்சிருக்கா


உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா – நீங்க முதல்ல சொல்லுங்க


ஹல்லோ மேடம்,  நான்தான் முதல்ல கேட்டேன். சதிஷ் வழிய


நீங்க முதல்ல சொல்லுங்க, பவித்ரா விடாமல் கேட்க


சதிஷ், மௌனம்.


பவித்ரா புன்னகைக்கும் அவனை பார்த்து, என்ன என்று கண்களால் கேட்க 


மறுபடியும் புன்னகை.


என்ன கிண்டலா, பவித்ரா கேட்க


சதிஷ் சிரித்தே விட்டான்.


பவித்ராக்கு கோபம்.


பவித்ரா, என்ன சிரிப்பு, சொல்லுங்க


சொன்னா கோபபட கூடாது. 


சொல்லுங்க


செம்ம பீசு நீங்க, உங்களை பிடிக்காம போகுமா


உள்ளுக்குள் குளிர்ந்த பவித்ரா, ஆனா எனக்கு உங்களை பிடிக்கவில்லை


ஐயோ, சதிஷ் வேர்க்க ஆரம்பித்தான்.


ஏங்க, சதிஷ் கேட்க


பின்ன என்னை பார்த்தா பீசு மாதிரி தெரியுதா, மார்க்கெட்டிங் புத்தி


ஹி ஹி


வழியாதிங்க


சதிஷ் முழித்தான்


பவித்ரா, உங்களை எனக்கு ரெம்பபிடிச்சிருக்கு


உண்மையாவா


ஆமா.... சரி, செம பீசுனு சொன்னீங்களே, அப்பிடின்னா என்ன, பவித்ரா கொக்கி போட


சதிஷ், ஐயோ என்னை விட்டுருமா, தெரியாம சொல்லிட்டேன்.


இல்ல இல்ல, சொல்லியே ஆகாவேண்டும்


சதிஷ் யோசித்தான். சொன்னா நீங்க கோச்சிப்பிங்க


கோச்சிக்கமாட்டேன் சொல்லுங்க


சதிஷ் தலையை சொரிந்து கொண்டே, உங்களை பார்த்தால் எல்லாத்துக்கும் செட் ஆவீங்க போல் இருக்குது. 


அப்பிடின்னா, புரியாத மாதிரி பவித்ரா கேட்கே


வேண்டாங்க, சதிஷ் தடுமாற


ப்ளீஸ் சொல்லுங்க, நான் கோச்சிக்க மாட்டேன்


வெளிய - உள்ள - இரண்டுக்கும் செட் ஆவிங்க


பவி, முறைத்து கொண்டே - புரியலையே


வெளிய - உங்க அழகு செம பந்தா


உள்ளே - உங்க உடல் வணைப்பு, கட்டிலுக்கு பந்தா


பவி - சீ


என்ன சீ


நீங்க மோசம்


எவ்வளவு மோசம் என்று சதிஷ் அருகில் வர


இப்படியா பேசுவீங்க, பவித்ரா வெட்கப்பட


எனக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட பேசுறேன், என்று மெதுவாக சதிஷ்


பவி தோள் மேல் கை வைத்து காது ஜிமிக்கியை சுண்டி விட


பவி, ஹலோ மிஸ்டர், மார்க்கெட்டிங் வேலைக்கு ஒரு கை இருந்தா  போதுமா..........


சதிஷ் புரியாமல், ஏங்க எனக்கு இரண்டு கை இருக்கே 


என்னை தொட்ட கையை உடைத்து விடுவேன், பவித்ரா அதட்ட


சதிஷ் பயந்த மாதிரி நடிக்க


பவி சிரித்து விட்டாள்.



இதுதான் சாக்கு என்று சதிஷ் பவியின் கன்னத்தில் முத்தம் கொடுக்க 


கண்ணை மூடி பெற்று கொண்டாள் பவி.


சுதாரிப்புக்கு வந்தவள், கீழ போய் எங்க அம்மாகிட்ட சொல்றேன் என்று கூறி ஓடி விட்டாள்


ஓவரா தான் போயிட்டோமோ.............


மெதுவாக கீழ வந்த சதிஷ், கும்பலை பார்த்ததும் அமைதியாகி தன்னுடைய இடத்தில உட்கார்ந்து விட்டான்.


பவியிடம் பேசிய தோழிகள், பவிக்கு மாப்பிளையை பிடிச்சிருக்கு என்று கூற,


மாப்பிள்ளை சிரிக்க,


அதை புரிந்து கொண்ட பெற்றோர்


மற்ற சம்ப்ரதாயம் பேச ஆரம்பித்தனர்.


அம்மா, சதிஷ்....மெதுவாக கூப்பிட


என்னடா


பொண்ணு போன் நம்பர் வாங்கி தாங்க


அம்மா சரி என்று கூற


அம்மான்னா அம்மாதான்..........


அனைவரும் கிளம்பினார்கள்.  


தொடரும் ..................

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107