தடம் மாறிய வாழ்க்கை 50

முழு தொடர் படிக்க


 விடியற்காலை 4  மணிக்கு ஏர்போர்ட்டில் இறங்கிய சதிஷ் தூக்க கலக்கத்துடன் தன்னுடைய அணைத்து லக்கேஜையும் பெற்று கொண்டு வெளியில் வர மணி 4 .45


ஒரு டாக்சி பிடிச்சி தன்னுடைய அணைத்து லக்கேஜையும் டாக்சி ஓட்டுனரின் உதவியுடன் டிக்கியில் அடுக்கி பின்பு டாக்சி உள்ள அமர, உடம்பு அதிகாலை வேளையிலும் புழுங்கியது. டாக்சி ரோட்டில் பயணிக்க ஆரம்பிக்க இவன் மனசும் பயணிக்க ஆரம்பித்தது.


கடந்த வாரத்தில் அவன் நண்பன் அன்பு சொன்ன விஷயத்தை அசை போட்டது. அவன் குடும்பத்தையும் அவன் மனைவி கல்யாணியையும் நினைக்க, மனசு கனத்தது.



முதல் முறையாக, வெளிநாட்டுக்கு போய் இருக்க கூடாதோ, அவன் மனசு கேள்விகளை அவன் முன்னாடி அடுக்கி கொண்டே இருக்க ஓட்டுனரின் கார் ஹார்ன் சத்தமும் அதை தொடர்ந்து கார் வேகம் குறைய நினைவில் இருந்து வெளியே வந்தான் சதிஷ்.


ஒரு மாடு குறுக்கே நுழைந்து மெதுவாக அசை போட்டபடி நடந்தது. நம்ம வாழ்க்கையிலும் ஏதாவது மாடு நுழைந்து இருக்குமோ. சதீஷின் வீணான கவலை அவனை ஆட்கொள்ள கார் மீண்டும் வேகம் பிடித்தது.


எதிர் சாரியில் வரும் வாகனங்களையும் பிஸியான மாநகர மக்களையும் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான். மீண்டும் அவன் நினைவுகள் பறக்க ஆரம்பிக்க அவன் மனசு கல்யாணியையும் பவித்ராவையும் மாறி மாறி யோசிக்க வைத்தது.


பவித்ராமேல இருந்த அன்பு அவனை குழப்பியது. கல்யாணி தன்னுடைய நண்பன் அன்புவுக்கு துரோகம் செய்தது நியாயம் என்றால், பவித்ரா ஒரு வேலை தப்பு செய்திருந்தால்.... அதை எப்படி எடுத்து கொள்வது,


பொழுது மெல்ல மெல்ல விடிய ஆரம்பிக்க தனக்கு எப்போது விடியும் என்று ஏங்க ஆரம்பிச்சான் சதிஷ்.


சார், நீங்க சொன்ன தெருவுக்கு வந்துட்டோம் சார், எந்த வீடு, 


ஓட்டுனரின் குரல் அவன் நினைவுகளை கலைக்க ஓட்டுனருக்கு, அந்த கேட் பக்கத்துல நிப்பாட்டிக்கோங்க அவருக்கு தன்னுடைய வீட்டை அடையாளம் காண்பிக்க வண்டி வேகத்தை இழந்து ஊர்ந்து கொண்டு அவன் காட்டிய வீட்டுக்கு முன்னாள் நின்றது. அவன் இறங்கி அணைத்து சாமான்களையும் இறக்கி விட்டு ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து ஒரு நன்றியை உதிர்த்தான்.


ஓட்டுநர் சந்தோசத்துடன் பணத்தை பெற்றுக்கொண்டு, தன்னுடைய முதல் சவாரி கொடுத்த பணத்தை சந்தோசத்துடன் தன்னுடைய சட்டை பையில் வைத்து, இந்த நாள் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டினான்.


ஆனா, இந்த நாள் சதீசுக்கு எப்படி இருக்கும். வீட்டு இரும்பு கேட்டை திறந்து, எல்லாத்தையும் உள்ள எடுத்து வைத்து விட்டு, இரும்பு கேட்டை மூடி கொண்டு இருக்கும்போது


ராஜா வந்துடியாடா, அம்மாவின் அன்பு குரல் சதிஷ் காதில் நுழைய சதிஷ் வேகமா திரும்ப அம்மா இரண்டு கரங்களையும் விரித்து தள்ளாத வயதிலும் ஓடி வந்து அவனை இருக்க கட்டி பிடிச்சி அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்க


ஒரே நொடியில் தன்னுடைய கவலைகளை எல்லாம் மறந்த சதிஷ் அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து பின்பு அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.


உள்ள செல்ல அப்பா வர அவர் காலிலும் விழுந்து வணங்கினான். இவன் குரல் கேட்டு செல்வியும் வெங்கட்டும் தூக்கத்துடன் வெளியில் வர சதிஷ் அவர்கள் இருவர் காலிலும் விழுந்து வணங்க வெங்கட் அவனை கட்டி பிடிச்சி தன்னுடைய அன்பை தெரிவிச்சான்.


செல்வி அவனை செல்லமா முதுகில் அடிச்சி, எப்படிடா இருக்கே



நல்ல இருக்கேன் கா. சொல்லி கொண்டே முக்கிய ஜீவன் வருகையை எதிர்பார்த்து அவன் கண்கள் அவன் ரூமை நோக்கி நகர அதை பார்த்த செல்வியின் முகம் மாறியது.


செல்வியின் நெஞ்சி பதை பதைக்க


பவித்ரா எங்கக்கா 


ஐயோ கேட்டுட்டானே, என்ன சொல்றது, செல்வி யோசிக்க


மீண்டும் அதே கேள்வி


பவித்ரா எங்க


இந்த முறை கொஞ்சம் வார்த்தை கடினமா வந்த மாதிரி செல்விக்கு தெரிஞ்சது. அப்போது அவர்கள் அம்மா அங்கே வர தன்னுடைய அம்மாவை பார்த்து சதிஷ் கேட்டான், பவித்ரா எங்கேம்மா 


அவன் அம்மாவோ தன் மகள் செல்வியை பார்த்து, அவ கிட்டேயே கேட்டுக்கோடா, நான் என்னத்த சொல்லறது


அவங்க கவலை அவங்களுக்கு, முனங்கி கொண்டே அடுப்பறைக்கு போனாங்க 


சதிஷ், எங்கடி பவித்ரா தன்னுடைய அக்காவை டி போட்டு பேச


வெங்கட், மாப்பிளை, எல்லாத்தையும் சொல்றோம் முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிட்டுட்டே பேசலாம், வெங்கட் சமாளிக்க


மாமா பவித்ரா எங்கேன்னு முதல்ல சொல்லுங்க


செல்வி, அவ வேலைக்கு போயிருக்காடா, 


சதிஷ், இவ்வளவு காலையிலேயா


வெங்கட், இல்லை சதிஷ், அவ அங்கேயே தங்கி இருந்து வேலை பார்க்கிறா மாமா வாயில் இருந்து இந்த வார்த்தை வந்தவுடன் சதிஷ் கொஞ்சம் அமைதியானான்.


நான் வரேன்னு அவளுக்கு தெரியுமே, பின்ன ஏன் வரல


செல்வி, வேலை அதிகமாக இருந்திருக்கும்னு நினைக்கிறன். ஒன்னு பண்ணு, நீ வேணும்னா அவளை அங்கே போய் பாருன்னு செல்வி சொல்லி, அவனை கழட்டி விட தன்னுடைய மனைவியை பார்க்கும் ஆசையில் அவனும் அப்பாவியாக சம்மதிச்சான்.


மதியம் அம்மா கையாலே செஞ்ச அருமையான வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கினான்.


அவன் தூங்கும் போது, செல்வி பவித்ராவுக்கு போன் போட்டு ஏண்டி உன் புருஷன் வந்துட்டான், நீ ஏண்டி வரலன்னு கேட்க பவித்ரா பக்கத்தில் மௌனம்.


செல்வி கோபத்துடன் போனை வச்சிட்டா. ஆனா, அந்த பக்கம் பவித்ரா மன கலக்கத்துடன் போனை வைக்க தோன்றாம நின்னுகிட்டு இருந்தா.


அவள் மனதில் ஓடியவை...............


என்னுடைய புருஷன் வெளிநாட்டில் இருந்து வந்துருக்கான். எனக்கு அவனை பார்க்கணும் என்று எப்படி போய் ஹசனிடம் சொல்லி கிளம்புவது.


பவித்ராவின் குழப்பம் நியாயமானதுதான். கொஞ்சம் சிக்கலான நிலைமை 


ஆனா, யானை தன்னுடைய தலையில் தானே மண்ணை போட்டுக்கும் போல இந்த நிலைமைக்கு முழு காரணம் பவித்ராதான். இந்த நிலைமையை அவளே தான் சமாளிக்க வேண்டும்.


பழைய பவித்ராவாக இருந்தால், இந்த நிலைமையை தைரியமாக சமாளிச்சிருப்பா. ஆனா, இப்போதோ ஆஸ்ரமத்துக்கு போயிடு வந்த பிறகு அவள் மனதில் நல்ல மாற்றங்கள்.


போதா குறைக்கு வெங்கட்டின் நல்ல உபதேசம், அவள் மனசை மாற்றியது. தன்னுடைய புருஷனை டிவோர்ஸ் பண்ணனும் என்ற நினைவு அவளை விட்டு அகன்றது. அதன் நிமித்தமாக சதிஷ் மீது கொஞ்சமும் இரக்கமும் அன்பும் வர இது தான் அவளின் கலக்கத்துக்கு காரணம். 


ஆனாலும் ஹசனின் அளவுக்கு அதிகமான அன்பு அவளை நிலை குலைய செய்தது.


இங்கே, செல்விக்கு மனசு கேக்காம மீண்டும் பவித்ராவுக்கு போன் போட அவ உடனே அட்டென்ட் பண்ணினா.


பவித்ரா, நீ என்ன லூசாடி, என் நிலைமை தெரியாம கோப படுகிற


செல்வி, முழிச்சா, நான் சொல்ல வேண்டியதை இவ சொல்றா இந்த இடத்துலே, நான்தானே கோப படனும், இவ எதுக்கு கோப படுறா, யோசிச்ச செல்வி, ஏண்டி, நான் தான் உன்னை திட்டனும் நீ ஏண்டி என்னை திட்டுறே


பவி, நான் எல்ல காரியத்தையும் துணிஞ்சி பண்ணினது நீயும் வெங்கட் அண்ணனும் இருக்கிற தைரியத்துல தான். இப்போ மையிரா போச்சுன்னு என்னை டீல்லே விடுறீங்க


செல்வி, எல்லாம் சரிதாண்டி, நீ ஏன் இங்கே வரல நேத்து சாய்ந்திரமே வந்து இருக்கணும்லே,


பவித்ரா, லூசு மாதிரி பேசாதடி நான் அவர் கிட்ட என்ன சொல்லிட்டு வரணும், சொல்லு


செல்வி, எவர் கிட்ட


பவித்ரா, என் வாயில நல்லா வந்துரும், ஹசன் கிட்ட நான்எண்ணத்தை சொல்லிட்டு வர முடியும்படி என் புருஷன் வந்துருக்கான், நான் அவனை கொஞ்ச போறேன் னு சொல்லிட்டு வர சொல்றியா, பவித்ரா அழ இதை கேட்ட செல்விக்கு சிரிப்பு வந்தது.


அவ சிரிக்கிற சத்தத்தை கேட்ட பவித்ரா இன்னும் அழ 


செல்வி, அட செல்லம், இதுக்குதான் வராம இருந்துயா இது ஒரு மேட்டர இல்லை டி 


பவித்ரா, அழுகையை நிப்பாட்டிட்டு, எப்படிடி, தெளிவா சொல்லு, 


செல்வி, ஹசனை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான் நீ சொல்ல தயங்கினா, நான் அவர்கிட்ட பேசுறேன். ஆனா, நீ வராததுனாலே உன் புருஷன் அங்கே உன்னை பார்க்க கிளம்பி வந்துட்டு இருக்கான்.


பவித்ரா, ஐயோ, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேடி


செல்வி, நான் என்ன டி பண்றது, நேத்து இங்கே நீ வந்து இருந்தீனா இவ்வளவு தூரம் போய் இருக்காது. எப்படியோ சமாளி. இப்ப போனை வை, நான் ஹசனிடம் பேசுறேன், சொல்லிட்டு செல்வி போனை வைக்க


கொஞ்சம் சந்தோசமா இருந்த பவித்ரா மனதில் திக் திக்..................


செல்வி ஹசனிடம் போன் செய்து விவரத்தை கூற, அவரும் பவித்ராவின் செயலுக்காக வருத்த பட்டார்.


ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் அவளை அனுப்பி இருப்பேனே, சரி பரவா இல்லை, சதிஷ் வரட்டும், நான் பார்த்துகிறேன் என்று செல்வியிடம் சொல்லி போனை வைக்க


செல்வியும் போனை வைச்சுட்டா.


இங்கே, டாக்சியில் பவித்ராவை பார்ப்பதற்காக பயணம் பண்ற சதீசுக்கு ஏக பட்ட யோசனைகள்.


ஒரு பக்கம் நெடு நாள் கழிச்சி தன்னுடைய அன்பு மனைவியை பார்க்க போகிற சந்தோசம். மறு பக்கம், அவள் தன்னை பார்க்க வராமல் இருக்கிறது.......


செல்வி சொன்ன விலாசத்தை மனதில் வைத்து கொண்டு்டு டாக்சி ஓட்டுனருக்கு வழியை சொல்ல விலாசத்தில் இருந்த தெருவில் டாக்சி நுழைய சதீசுக்கு ஆச்சர்யமாக இருந்தது.


இரண்டு பக்கமும் பிரமாண்ட பங்களாக்கள் தெரிந்தன. எல்லாமே உயர் ரக குடியிருப்புகள். வாயை பிளந்துட்டு பார்க்க


டாக்சி விலாசத்தில் இருந்த வீட்டின் முன்பு நின்று தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியது. தயக்கமா கீழ இறங்கிய சதிஷ் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து மெதுவா மெயின் நுழைவு வாயில் பக்கம் போக அங்கே நின்று கொண்டு இருந்த கூர்க்காவால் தடுத்து நிப்பாட்ட பட்டான்.


அவன் யார் என்று கேட்க இவன் என்ன சொல்வது என்று தெரியாமல் சதிஷ் என்று ஒற்றை வார்த்தையில் கூற உடனே கூர்க்கா இவனுக்கு வணக்கம் வைத்து வேக வேகமா கேட்டை திறக்க வாயடைத்து போனான் சதிஷ்.


அப்புறம் என்ன ராஜ நடை போட்டு உள்ளே போக உள்ளே அவனை எதிர் கொண்டது ஹசன் தான்.


செல்வி சொன்னதை வைத்து அடையாளம் இவர்தான் ஹசன் என்று கண்டு கொண்ட சதிஷ் அவருக்கு வணக்கம் தெரிவிக்க பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவிச்சி அவனை உட்கார சொன்னார்.


சோபாவில் உட்கார்ந்த சதிஷ் வீட்டின் பிரமாண்டதை பார்த்து வியந்து கொண்டே இருக்க அவன் முன் பழரசம் நீட்ட பட்டது.


வீட்டின் வேலையாள் வந்து கொடுக்க பெற்று கொண்டான் சதிஷ். ஆனால் பழரசத்தை மேல அவனுக்கு நாட்டம் இல்லை. கனிஞ்ச பழத்தையுடைய பவித்ராவை தேடியது அவன் கண்.


இதை அறிஞ்ச ஹசன் சிரித்து கொண்டே, பவித்ரா உங்களுக்காக அந்த ரூமில் காத்து இருக்கிறா என்று கையை காட்ட உடனே எழுந்தான் சதிஷ். ஹசன் காட்டிய ரூமுக்கு நேரா நடை போட்ட சதிஷ் மனசு நிறைய சந்தோசத்துடன் கதவை திறந்து உள்ளே நுழைந்த சதிஷ்,


கண்ட காட்சி.........................


அங்கே பவித்ரா ஒரு தங்க சிலையா கட்டிலில் உட்கார்ந்து இருந்தா


அவன் வெளி நாட்டுக்கு போகும் போது தன்னுடைய புது மனைவியை விட்டுட்டு செல்ல, அப்போது அவ ஒரு சின்ன பெண்ணாக இருந்தா.


இப்போதோ, அவன் கண்களுக்கு அவள் நல்ல வளர்ச்சி. அவள் முகத்தில் ஒரு நல்ல தெளிவு. கழுத்திலும் காதிலும் வைரங்கள் ஜொலித்தன. அவள் போட்டு இருந்த உடை மிக விலை உயர்ந்தது என்று பறை சாற்றின.



அவள் முலை இரண்டு மடங்கு வளர்ச்சியுடன் நல்ல பரிணாமத்தில் இருந்தன. இவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமா அளவு எடுக்க பவித்ரா ஓடி வந்து அவன் காலை கட்டி கொண்டு அழ ஆரம்பிக்க இவ வளர்ச்சியில் ஸ்தம்பித்து இருந்த சதிஷ், இவ செய்கையால் களைந்து அவளை தூக்கி அரவணைத்து தன் கண்களில் கண்ணீருடன் அவளுக்கு நெத்தியில் முத்தம் கொடுத்தான்.


அவளும் அவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ இருவரும் கண்களால் ஒருத்தர் அன்பை ஒருத்தர் வெளி படுத்தினர்.


இங்கு, ஹசனுக்கு இருப்பு கொள்ள வில்லை. உள்ளே என்ன நடக்கும் என்று ஒரே பத பதைப்பு. அவரை பொறுத்தவரைக்கும் பவித்ரா அவர் வாழ்க்கையில் கிடைச்ச ஒரு அறிய பொக்கிஷம். தனக்கு கிடைச்ச பொக்கிஷத்தை விட்டு கொடுக்க இல்லை யாருக்கும் கொடுக்க ஹசன் தயாரா இல்லை.


பவித்ராவின் புருஷன் தனக்கு கிடைச்ச ஒரு நல்ல பொக்கிஷத்தை அதன் மதிப்பு தெரியாம அதை உதாசீன படுத்திட்டான். இப்போ நமக்கு இந்த அறிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது பறிபோய்விடுமோ, 


அவரின் வயதான மனது கஷ்ட பட்டது. அவரை பொறுத்த வரைக்கும் அவர் நியாயம் உண்மையானது  பவித்ரா பொறுத்தவரைக்கும் புருஷன் தன்னை கவனிக்க வில்லை அதனால் இப்படி.......... சதிஷ் பொறுத்தவரைக்கும் வீட்டின் பொருளாதார சூழ்நிலையை அடுத்த லெவலுக்கு கொண்டு போக அவன் வெளிநாடு போனான்.............


ஆமாம், எல்லாருக்கும் தான் செய்ற செயலுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியும்.


சதிஷ், பவித்ராவின் உதட்டை குறிவைத்து தன்னுடைய உதட்டை கொண்டு போக பவித்ராவும் கணவனின் உதட்டை எதிர்கொள்ள தன்னுடைய உதட்டை ஆயத்தமாக வைக்க


அந்த சமயத்தில் யாரோ தங்களை பார்ப்பதாக உணர பவித்ரா வாசலை நோக்கி பார்த்தா……


அங்கே சிரித்த முகத்துடன் கைகளை கட்டி கொண்டு ஹசன் வாசலில் சாய்ந்து நின்றுகொண்டு இருந்தார்.


சட் என்று விலகிய பவித்ரா குற்ற உணர்ச்சியுடன் தலையை குனிந்து கொள்ள சதிஷ் ஒன்றும் புரியாம அவளை பார்க்க பின்பு பின்னாடி திரும்ப ஹசனை பார்த்த சதிஷ் ஒரு நிமிடம் திகைத்து விட்டான்.


சாரி சார், கவனிக்கல, சதிஷ் வழிய


உள்ளே வந்த ஹசன், நான் தான் சாரி சொல்லணும், உங்களுக்கு நடுவுல வந்துட்டேன்,


இந்த வார்த்தைக்கு பல அர்த்தம் உண்டு என்று பவித்ராவுக்கு மட்டும் தான் தெரியும்.


சார், நீங்க பெரியவங்க, இது உங்க வீடு, நீங்க தாராளமா வரலாம் சார்


சதிஷ் சொல்ல


உள்ளே வந்த ஹசன், என் வீடு உன் வீடு னு ஏன்  பிரிச்சி பேசுறீங்க, எல்லாம் பொது தான்


ஹசன் சொல்ல


புரிஞ்சு பவித்ரா தலையை நிமிர்த்தி அவரை பார்க்க


புரியாத சதிஷ் சிரிச்சான்.


கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்த ஹசன் வெளியில் சென்று விட


பவித்ரா ஓடி சென்று கதவை சாத்தி பூட்டிட்டு வந்து சதிஷ் பக்கத்தில் உட்கார்ந்தாள்.


சதிஷ் ஹசனை புகழ்ந்தான்.


என்ன மனுசன் டி அவர்.  gem  of   the  person 


அதன் பிறகு பவித்ரா சதீஷிடம் சகஜமா பேசினாலும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ன்டன்  பண்ணினா. சதீசுக்கு அது கொஞ்சம் நெருடலான இருந்தது.


சதிஷ், என்னை பார்க்க வீட்டுக்கு ஏன் வரல டி செல்லம்


பவித்ரா, ப்ளீஸ் என்னை தப்ப நினைக்காதீங்க, இங்கே நான் ஹசன் சாருக்கு கேர் டேக்கர். அவர் ஹார்ட் பேஷண்ட். அவர் உடல் நலனை பேணி பாதுகாக்க வேண்டியது என்னுடைய வேலை.


சதிஷ், அதற்கு நிறைய செவிலியர்கள் கிடைப்பாங்களே


பவித்ரா, உண்மை தாங்க, எல்லாரும் அவரை நல்ல கவனிச்சிப்பாங்க ஆனா அது தொழில் ரீதியா தான் இருக்கும். நான் ஆபிசில் அவருக்கு செகரெட்டரியா வேலை பார்த்தது முதல் அவருக்கு என் மேல ரொம்ப பாசம். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.


சதிஷ்......முழிக்க


பவித்ரா, நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பவே பாசம் வச்சிருக்கோம். அதனாலே அவங்க, நான்தான் வரணும்னு கேட்டுக்கிட்டாங்க


சதிஷ், அவங்க ....................


பவித்ரா, உங்க கிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சி. செல்வி அண்ணியும் வெங்கட் அண்ணாவும், கோடீஸ்வரருடைய உடல் நலத்தை அவர் உயிரை காப்பாத்த போற, நான் தம்பிகிட்ட சொல்லிக்கிறேன், நீ போ னு அண்ணிதான் எனக்கு தைரியம் சொன்னாங்க, செல்வியை மாட்டி விட


சதிஷ் அமைதியாக இருந்தான்.




தொடரும் …

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107