ரவிக்கு அப்பொழுது பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது. கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு , சென்னையில் நல்ல காலேஜில் அப்ளை செய்து , அட்மிஷனும் வாங்கி விட்டான். அவனுடைய தந்தை சுப்பிரமணியம் , தன் மூத்த பையன் ராஜுவிடம் , ரவியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி , பணமும் , சில சாமான்களும் வந்து தந்து விட்டு போனார். ரவி இதற்கு முன் வீட்டை விட்டு எங்குமே போகாதவன். தனியே தங்க வேறு இடமில்லாமல் , தன் அண்ணன் வீட்டிலேயே மாடி போர்ஷனில் வாடகை தராமல் செட்டிலாகி விட்டான். ரவிக்கும் ராஜுவுக்கும் கிட்டத்தட்ட 16 வருட வித்தியாசம்.ரவி பிறந்ததே , அவனுடைய தாய்க்கு எக்கச்சக்க சங்கடத்தையும் , தந்தைக்கு சற்று அவமானத்தையும் தந்தது. முதல் மகன் காலேஜ் சேரும் நேரத்தில் , தாய் கர்ப்பமானால் யாருக்குத்தான் சங்கடம் வராது ? அதனாலேயே , ரவிக்கு வீட்டில் அவ்வளவாக அக்கறை கிடைக்கவில்லை. ஏனோ தானோ என்றுதான் ரவியின் படிப்பு உட்பட நடந்தது. ராஜுவின் கல்யாண சமயத்தில் கூட , சிலரிடம் , ரவியை தூரத்து உறவு என்றுதான் அறிமுகம் செய்தனர். இதை எல்லாம் பொறுத்து கொண்ட ரவி , வீட்டை விட்டு வெளியேற துடித்தது நியாயம்தானே ? ரவி வாட்டசாட
Comments
Post a Comment