உங்களில் ஒருத்தி 2
ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும், மேலுக்கு குளித்துவிட்டு தன் மேடு பள்ளங்களில் தஞ்சம் புகுந்திருந்த தண்ணீர்துளிகளை துடைத்துவிட்டு உள்ளாடைகள் அணியும்போது கண்ணனிடமிருந்து போன் வந்தது.
பாவாடையை கையில் வைத்துக்கொண்டு, வீணாகிக் கொண்டிருக்கும் தன் இளமையை கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொண்டே ஹலோ என்றாள்.
"என்னடி வீட்டுக்கு வந்துட்டியா?"
"ம்..... மத்தியானம் நல்லா சாப்பிட்டீங்களா?"
"எங்கடி.... ரிசல்ட் சரியா வரல.... தலைய பிச்சிக்கிட்டிருக்கேன். என்ன சாப்பாடு?"
"ஏங்க... காலைல அவ்ளோ கஷ்டப்பட்டு உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணிக்கொடுத்தா இப்படித்தான் சாப்பிடாம இருப்பீங்களா?"
"சாப்பிடுறேண்டி... அதுக்கு ஏன் கத்துற?"
"பேசாதீங்க. " – கோபமாக போனை கட் பண்ணினாள்.
"ச்சே... இவருக்கு போயி பார்த்து பார்த்து சமைச்சேன். இதுக்கு 6 மணிக்கே எந்திரிச்சிருக்கலாம்." சலிப்பாக பாவாடையை கட்டினாள்.
"ஆங்....எந்த புடவை கட்டட்டும்னு கேட்கணும்னு நெணைச்சேனே...."
உடனே போனை எடுத்தாள்.
"என்னடி?"
"எப்போ வருவீங்க இன்னைக்கு?"
"5 மணிக்கு வந்துரணும்னு பிளான் பண்ணேன். பட் என்னோட ஸ்காலர் ஒரு தப்பு பண்ணிட்டான். இப்போ சரிபண்ணிட்டு வர 8 மணி ஆகிடும்போல...."
"ப்ச்... நீங்க 5 மணின்னு சொன்னாலே 7 மணிக்கு தான் வருவீங்க... போங்கங்க... பேசாதீங்க" – கோபமாக போனை கட் பண்ணினாள்.
அப்போதுதான் பிளவுஸ் இல்லாமல் இருப்பது ஞாபகம் வர... "அடச்சே.... எந்த புடவை கட்டுறதுன்னு கேட்கலையே... ப்ச்.... கட்டி என்ன புண்ணியம். என் அழகை ஆராதிக்காமல் புருஷன் ரிசர்ச் ரிசர்ச் என்கிறானே. அவருக்கு நைட்டியே போதும்." என்று ஸ்கர்ட்டை அவிழ்த்து போட்டுவிட்டு நைட்டியை எடுத்தாள்.
"ச்சே.. குளிக்கிறதே வேஸ்ட்."
"அக்காகிட்ட போயி கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமா...... யெஸ். பெட்டர்" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மனதில் அவளுக்கே தெரியாமல் சீனிவாசன் எட்டிப்பார்த்தான். அவன் அவளை ரசித்துப் பார்க்கும் காட்சி ஒரு செகண்ட் வந்துபோக... கையிலிருந்த நைட்டியை கீழே போட்டுவிட்டு மறுபடியும் ஸ்கர்ட்டை உடுத்தினாள். பிளவுஸ் பிட்டாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். புடவையை கொசுவத்தை சொருகும்போது யோசித்தாள். "அங்க போனா அவன் இருப்பான். ஃப்ரீயா கைய தூக்க முடியாது... குனிய முடியாது..... ஸோ ஏத்திக் கட்டிக்கலாமா?"
"ச்சே... யாரோ ஒருவனுக்காக நான் ஏன் என் ஸ்டைலை மாத்திக்கணும்? அதோட, அவன் அப்படி ஏக்கமா பாக்கும்போது ஒரு மாதிரி குறுகுறுப்பா... நல்லாதானே இருக்கு!!"
இடுப்புச் சேலையை இழுத்துவிட்டு புடவை முடிச்சை மறைத்தாள். இடது பக்கம் சைடில் மார்பகம் தூக்கி நிப்பாட்டியது போல் கின்னென்று நின்றது. அதை மறைத்தாள்.
"காயத்ரி அளவுக்கு ரொம்ப பெரிசு இல்லையென்றாலும்.... நமக்கும் நல்ல சைஸ்தான்" என்று நினைத்துக் கொண்டே பிளவுசின் கீழ்புறத்தை சுருங்கவிடாமல் இழுத்துவிட்டாள். அழகாக கொண்டை போட்டாள். அப்போது கண்ணாடியில் தெரிந்த தனது இடையைப் பார்த்தாள். அவளுக்கு காயத்ரி சொன்னது நினைவுக்கு வந்தது.
"முன்னழகு அடக்கமா இருந்தாலும், உன் இடுப்பழகுக்கு முன்னாடி எவளும் நிக்கமுடியாதுடி!!!"
மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். பின்னழகில் டைட்டாக சுற்றியிருந்த புடவையை கொஞ்சம் இழுத்துவிட்டு லூசாக்கிக் கொண்டாள். அழகாக நடந்து பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
"அக்கா...."
"யாரு நிஷாவா... வா... வாமா.... நானே உன் வீட்டுக்கு வரணும்னு நெனச்சேன் நீயே வந்துட்ட. எப்போ வந்தே ஸ்கூல்லர்ந்து..." – கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் பார்வதி. நிஷா நேராக கிச்சனுக்குச் சென்றாள்.
"என்னக்கா... தடபுடலா ஏதோ பண்ணிட்டிருக்கீங்க?"
"நீயே வந்து பாரு என்னன்னு. பாயாசம்தான். உனக்கு கொஞ்சம் கொண்டுவரணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீயே வந்துட்ட. நல்லதா போச்சு."
ஒரு பவுலில் ஊற்றிக் கொடுத்தாள் பார்வதி.
"என்ன ஸ்பெஷல்கா... உங்க மகனுக்கு வேலை கீலை கிடைச்சிருக்கா?"
"ம்க்கும். அவனுக்கு அந்த எண்ணமே இருக்குற மாதிரி தெரியல. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். ஏதோ பேஷன் டிசைனிங்... டிராயிங்க்... பெயிண்டிங்... னு நேரத்த வீண் பண்ணிட்டிருக்கான். சிலநேரம் ஜோசியக்காரனா மாறிடுறான். எனக்கு நீ ஒரு உதவி செய்யனுமே..."
"என்னக்கா?"
"அவன ஒரு தடவை... ஒரே ஒரு தடவை நீயே கூப்பிட்டு கண்டிச்சின்னா... கொஞ்சம் அடங்குவான்."
"ஐயோ நானா... அவன் என்ன சின்னப்பிள்ளையா... கண்டிக்கிறதுக்கு?"
"உன் மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கான். அவங்க அப்பாவ விட உண்ண பாத்து கொஞ்சம் மரியாதையா நடந்துக்குறான். அதான் உன்கிட்ட சொல்றேன். பாவம் அவன் அப்பா. இவன நெனச்சி அவருக்கும் கவலை."
நிஷாவுக்கு அவர்களின் கஷ்டம், குடும்ப நிலை தெரியும். பார்வதியின் தாலி செயின் தவிர அனைத்து நகையும் பேங்கில். அவளுக்கு நிஜமாகவே சீனிவாசனின் அலட்சியம் மீது கோபம் வந்தது.
"இப்போ எங்கே இருக்கான்?"
"எக்ஸர்சைஸ் பண்ணப்போறேன்னு மேல போனான். டேய் சீனு.... டேய்... கீழ வா...."
"இதோ வர்ரேம்மா..."
மாடிப்படியில் அவன் நடந்துவரும் சத்தம் கேட்க, நிஷா புடவையை எல்லா இடங்களிலும் ஒருமுறை சரிசெய்துகொண்டு ரெடியாக நின்றாள். வெறும் கட் பனியன் லுங்கியில் வியர்வையோடு, நிஷா நிற்பது தெரியாமல் ஓடிவந்த சீனு, இன்ப அதிர்ச்சியில் அவளையும் அம்மாவையும் பார்க்க.... நிஷா அவனது திரண்ட தோள்களையும் கட்டுமஸ்தான உடல்கட்டையும் ஒரு விநாடி கண்கள் விரிய பார்த்து... பின் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
நிஷாவை பார்த்து உற்சாகமாக "ஹாய் அக்கா..." என்றான். ஆனால் அவள் முகத்தில் இருந்த முறைப்பைப் பார்த்துவிட்டு, பவ்யமாக அம்மாவிடம் கேட்டான். "என்னம்மா... எதுக்கு கூப்பிட்ட?"
"அக்கா உன்கிட்ட கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு." – ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டு பார்வதி அவள் வேலையை பார்க்கப்போனாள். சீனு வேகமாக உள்ளே சென்று ஒரு சட்டையைப் போட்டுவிட்டு வந்து நின்றான்.
அவளைப் பார்த்தான்… இல்லை, வைத்த கண் வாங்காமல் அவளை ரசித்துப் பார்த்தான்.
நிஷா க்ரிம்ஸன் ரெட் கலரில் காட்டன் சில்க் புடவை அணிந்திருந்தாள். அதில் மூன்று விரல் அளவுக்கு கோல்டன் பார்டர். அந்த பார்டருக்கு விளிம்புகளாக ஒருவிரல் அளவுக்கு இருபுறமும் கருப்பு கோடு. அந்த கருப்பும் கோல்டன் கலரும் கலந்த நிறத்தில் கச்சிதமான ப்ளவுஸ் அணிந்திருந்தாள். இரு கைகளிலும் புடவையில் இருக்கும் அதே அழகான பார்டர். அவளது பெண்மை பள்ளத்தாக்கில் அழகிய மடிப்புகளோடு அவள் புடவையை நேர்த்தியாகக் கட்டியிருந்த விதம் ஒரு நாள் முழுக்க அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பிளவுஸ் கலரிலேயே இருந்த முந்தானையை இடது கை அக்குளுக்குள் விட்டு இடுப்பை மறைத்து அதை முன்விட்டு பிடித்தவாறு அவள் தேவதைபோல் நின்றுகொண்டிருந்தாள்.
ஆனால் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்த நிஷா அவன் அவளை வாயை பிளந்துகொண்டு ரசிப்பதைப் பார்த்து முறைத்தாள் (பாவி... எப்படி விழுங்குற மாதிரி பாக்குறான் பார்!!!)
"சொல்லுங்கக்கா..... ஏதோ...."
"வேலைக்கு ட்ரை பண்றதே இல்லையாமே? என்ன இப்படியே இருந்திடலாம்னு நினைச்சுட்டியா?" – கடுமையான குரலில் கேட்டாள்.
"பண்ணிட்டுதான்க்கா இருக்கேன்..."
"அப்படியா.... எங்கே சொல்லு பாப்போம்... எங்க எங்கலாம் அப்ளிகேஷன் போட்டிருக்க??"
சீனு அமைதியாக நின்றான்.
"அ... அது..."
"உன் ஈமெயில்ஸ் காட்டு பாக்கலாம். இதுவரைக்கும் எத்தனை அப்ளிகேஷன் போட்டிருக்கன்னு."
சீனு இதை எதிர்பார்க்கவில்லை. அம்மா அப்பாவை அது இது என்று சொல்லி ஏமாத்திவிடலாம். இவளிடம் பாச்சா பலிக்காது. விவரம் தெரிந்தவள். அவளது முகத்தில் தெரிந்த கடுமையை ரசிக்க முடியாமல் தலைகுனிந்து நின்றான்.
நிஷாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
"அட்லீஸ்ட் பேப்பராவது பாக்குறியா?? வேகன்சீஸ்.... கிளாஸ்சிஃபைட்ஸ்???" – கிட்டத்தட்ட கத்தினாள்.
சீனு மிரண்டுபோய் எதுவும் பேசாமல் நின்றான். நிஷா இப்படி கோபமாக கத்துவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. "ச்சே... யாரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும், யாரை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று நினைத்தோமோ அவளிடமே திட்டுவாங்க வைத்துவிட்டாளே இந்த அம்மா. நானே அப்பப்போ காய்கறி வாங்கிக்கொடுக்கிறது, சொல்ற எடத்துக்கெல்லாம் ஓடுறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா ஒரு நல்ல பேரு வாங்கி வச்சிருந்தேன்... எல்லாம் போச்சு... " என மனதுக்குள் புலம்பினான்.
"அப்போ என்னதாண்டா நினைச்சிட்டிருக்கே.... இதுக்குத்தான் உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்காங்களா??"
"நல்லா கேளும்மா....." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் பார்வதி.
"ஏன் பதிலே பேசாம நிக்குற? உழைக்காம சோறு தின்கிறது கேவலம்னு உனக்கு தோணலையா? எந்த வேலைக்கும் ட்ரை பண்ணாம டெய்லி என்னதான் பண்ணுற?"
"ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன்க்கா" - சீனுவின் குரல் கரகாரத்தது.
"இதத்தான் சொல்லிட்டிருக்க அப்போலேர்ந்து."
"இ...இல்ல... சினிமால... ஆர்ட் டிபார்ட்மெண்ட்ல... ஆர்ட்ஸ்... "
"சினிமாவெல்லாம் தூக்கிப்போடு. உருப்படுற வழியப் பாரு. உன் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒழுங்கா நேரத்த வீண்பண்ணாம கம்பெனிகளுக்கு அப்ளை பண்ணு."
"ம்... சரிக்கா" (ச்சே... டக்குன்னு தூக்கிப்போடுன்னு சொல்லிட்டாளே... ஏன் இவ்ளோ கோவப்படுறா?? ச்சே.. இனிமே யு ட்யூப், டிக் டாக்லலாம் கண்ணு முழிச்சு கண்டவளுங்களையும் பாக்குறத ஸ்டாப் பண்ணனும்!)
"அடுத்த மாசம் இந்நேரம் ஏதாவது வேலையில இருக்கணும். புரிஞ்சுதா?"
"சரிக்கா... "
"ம்... போ"
நிஷா அவனைக் கடந்து பார்வதியிடம் போனாள். "அவனோட அப்பா கேட்க மாட்டாரா? படிப்ப முடிச்சி 6 மாசம் ஆச்சி. இந்த மாதிரி ஒரு பையன நான் எங்கயும் பாக்கல. சரிக்கா... நான் வர்றேன். நிறைய வேலையிருக்கு."
"சரிம்மா... நீ கிளம்பு"
மிடுக்கான நடையுடன் நிஷா நடந்து போக... அம்மா பார்வதியை அனல் தெறிக்கப் பார்த்தான் சீனு.
வீட்டிற்க்கு சென்றவள் சமையல் முடித்துவிட்டு டிவி பார்க்கப் பிடிக்காமல் சோபாவில் கண்மூடி சாய்ந்தாள். காலிங் பெல் சத்தம் கேட்டபோது மணியைப் பார்த்தாள். 8.30 காட்டியது. பதட்டத்தோடு எழுந்து கதவை திறக்கப் போனபோது காயத்ரி சொன்னது ஞாபகம் வந்தது.
"நானாயிருந்தா துணியில்லாமதாண்டி போயி திறப்பேன்!!!" தன்னை அப்படி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள். "ச்சீய்..." என்று தலையில் தட்டிக்கொண்டே போய் கதவை திறந்தாள்.
"நீ கோபப்படுவேண்ணுதான் வேகம் வேகமா வந்தேன்.." என்று சிரித்தார் கண்ணன்.
"கடுப்ப கிளப்பாதீங்க." – நிஷா திருப்பிக்கொண்டு போய் காஃபி போட்டாள்.
"என் செல்லத்துக்கு கோபமா??" என அவளது தாடையைப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான்.
நிஷா சிரித்தாள்.
"சரி சீக்கிரம் பிரஸ் அப் ஆகிட்டு வாங்க. சாப்பிடலாம்."
"ஒகே... ஐ லவ் யு... "
அவளது கண்ணத்தைக் கிள்ளிவிட்டு கண்ணன் குளிக்கப்போக... அவன் ஏதாவது குறும்பு பண்ணமாட்டானா என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் நிஷா.
சில நாள்களில் சாப்பிடும்போது அவன் அவளை டீஸ் செய்வதுண்டு. ஸோ நன்றாக இடுப்பையும் மார்பையும் தாராளமாக காட்டிக்கொண்டு அவனுக்கு பரிமாறினாள். கண்ணனோ சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் போவதிலேயே குறியாய் இருந்தான்.
லேப்டாப்பை ஓப்பன் செய்து சில குறிப்புகளை அதில் ஏற்றிவிட்டு தளர்ந்து படுக்கையில் சரிய...
"பாவம் ரொம்ப டயர்டா வந்திருக்கார் இன்னைக்கு" என்று நிஷா சலிப்போடு புடவையை கழட்டி எறிந்துவிட்டு நைட்டிக்கு மாறினாள். "ச்சே.. புடவை நல்லாயிருக்கு... அழகா இருக்கேன்னு சுத்தி சுத்தி வருவான்னு பார்த்தா.... எதிர்பாக்குற அன்னைக்கு கவுத்துடுவாரு" என்று அவனை முறைத்துக்கொண்டே படுக்க... அப்போது அவளுக்கு சீனு அவளை கண்கள் விரிய பார்த்தது ஞாபகத்தில் வந்து போக... "ப்ச்.. கண்டவன்லாம் ரசிக்குறான்" என்று அனிச்சையாக உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.
மறுநாள் காலை
இவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும்போது சீனு அவன் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.
"ஆஹா... காலையிலேயே அழகிய தரிசனம். தேவதையை பார்த்தாகிவிட்டது."
"குட்மார்னிங்க் கா..." என்றான்.
பதிலுக்கு குட்மார்னிங்க் சொன்னாள் நிஷா. கொஞ்சம் புன்னகையுடன்.
"சின்ஸியரா ட்ரை பண்ணு சீனு"
"கண்டிப்பாக்கா.... இன்னும் ஒரு மாசத்துல வேலைல சேர்ந்துருவேன்."
"சின்ன கம்பெனியாயிருந்தாலும் பரவாயில்ல. ஒரு ஒரு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் போதும். அப்புறம் அப்பாகிட்ட சொல்லி நல்ல வேலையா உனக்கு வாங்கி தர சொல்றேன்."
"ரொம்ப தேங்க்ஸ்க்கா. எனக்காக ரொம்ப கவலப்படுறீங்க. தேங்க்ஸ்க்கா."
"ம்..."
நிஷா ஹெல்மெட் மாட்டுவதற்காக கையை தூக்க.... அப்போது அவள் புடவை அப்பட்டமாய் இடுப்பைவிட்டு விலக.... அவள் பட்டென்று சீனுவைப் பார்த்தாள். அவனோ, இவளை தப்பாக பார்த்துவிடக்கூடாது என்றே வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தான். நிம்மதியான நிஷா புடவையை இழுத்து சொருகிவிட்டு அவனைப்பார்த்து "Bye" என்றாள்.
இவன் திரும்பி "Bye" சொல்லும்போது ஸ்கூட்டி சீறிப் பறந்துகொண்டிருந்தது.
தொடரும்...
Comments
Post a Comment