கைம்பெண்

 “ஏ முத்தம்மா..... மேல போயித் தம்பிய எழுப்பிவிடு. மணி ஏழாகப் போகுதுல்லா. இன்னுமா தூங்கிட்டுக் கெடக்கான்?” என்ற அம்மாவின் குரல் கீழே சமையலறையில் இருந்து மாடியில் படுத்திருக்கும் என் காதில் விழுந்தது.

நான் இன்னும் இழுத்துப் போர்த்திக்கொண்டு, கலைந்த தூக்கத்தைத் தொடர முயன்றேன். எழுந்திருக்க வேண்டிய நேரத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் காலையில் தூக்கம் தொடர்வது ஒரு உன்னதமான சுகம். குற்ற உணர்வு கலந்த சுகம். எல்லாரும் விழித்திருக்க நாம் மட்டும் தூக்கத்தில் லயிக்கும் சுயநலம் கலந்த சுகம். யாராவது வந்து எழுப்பினால் எழுந்தால்போதும் என்கிற அகம்பாவமான சுகம். பொறுப்பான மனதை உடலின் சோம்பல் வெல்லும் அற்புதமான சுகம்.

“ஏட்டி இன்னுமா போகல? போயி எழுப்புடி இவளே” - அம்மா மீண்டும் முத்தம்மாவிடம் கத்தினாள்.

“அவுக எந்திச்சி இப்ப என்ன செய்யப்போறாகம்மா? இன்னும் செத்தோடம் தூங்கட்டுமே?” என்றாள் முத்தம்மா எனக்கு வக்காலத்து வாங்கும் குரலில்.


“அட..... வேலிக்குக் கரட்டாண்டி சாட்சியாக்கும்? போயி எழுப்புடின்னா....” - மீண்டும் அம்மா.

முத்தம்மாவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. 

“என்னடி இன்னும் மோட்டுவளையப் பாத்துக்கிட்டு....” - விடாமல் அம்மா.

“இல்லம்மா.... காலைல எந்திச்சதும் மொதமொதல்ல அவுக எம் மொட்ட மொகத்துல முழிக்கணுமான்னு யோசிக்கேன்...” - இழுத்தாள் முத்தம்மா.

எனக்கு சுரீர் என்றது. இவள் ஏன் இப்படி நினைக்கிறாள், இதற்குக் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியும்.

முத்தம்மா ஓர் இளம் விதவை. வயது 24. எங்கள் வீட்டின் வேலைக்காரி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக எங்கள் வீட்டில் இருப்பவள். 7 வயதில் தன்னுடைய அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு எங்கள் வீட்டில் நுழைந்தவள். 18 வயதில் மணமாகி, மளமளவென்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி, அதே வேகத்தில் 20 வயதிலேயே கணவனைக் கிணற்று வெடியில் பறிகொடுத்தவள். தன்னுடைய அம்மாவின் மறைவுக்கப்புறம் எங்கள் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒத்துக்கொண்டவள். 

அழகான முகம். சிவப்பை எட்டிப்பிடிக்கும் நிறம். ஐந்தரைக்குக் கொஞ்சம் கம்மியான உயரம். கட்டான உடல். 24 வயதுக்கே உரிய இளமை அவள் உடலெங்கும் ஏற்ற இறக்கங்களையும், வளைவு நெளிவுகளையும், பெருத்தல் சிறுத்தல்களையும் வாரியிறைத்திருந்தது. 


”அவள் விதவையானதால், நான் அவளிடம் இருந்து விலகிவிடுவேன்” என்று சொல்லும் அளவுக்கு அழகுக்கும் வனப்புக்கும் தைரியம் இல்லை போல அப்படியொரு உடல். வறட்சி என்பது அவள் சிரிப்பதில் மட்டும்தான் இருக்கும். உடலுக்கு அது ஏது?

தூக்கம் கலைந்த என் பெயர் கிருஷ்ணகுமார். வயது 27. எஞ்சினியரிங் முடித்துவிட்டு, சென்னையில் நல்ல வேலையில் இருப்பவன். பந்நாட்டு வங்கியொன்றில் ஆறு இலக்கத் தொடக்கத்தில் சம்பளம். இதுவரை செய்த அதிகபட்ச பாவம் பாரில் பீர் குடித்தது. செக்ஸ் புத்தகம் படிப்பதைப் பாவத்தில் சேர்க்கக்கூடாது. பெற்றோரின் வற்புறுத்தலை மீறி, திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருபவன். இப்போது நான் தூங்கியெழுவது மதுரையை அடுத்த ”பூவாணி” என்ற எங்கள் கிராமத்தில். விடுமுறைக்கு வந்திருக்கிறேன். என் அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா வீட்டன்னை. ஆம்... ஹவுஸ் ஒயிஃப். 

இவர்களைப் பார்த்துக்கொள்பவள்தான் முத்தம்மா. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அவளுடைய ஓட்டு வீடு இருந்தது. வீடென்றால், ஒரே ஒரு அறை. குளிக்க, படுக்க, சமைக்க என்று எல்லாவற்றுக்கும் ஒரே அறை.

நான் மேலும் சிந்தனையில் ஆழ்வதற்குள், என் அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது.

“என்ன பேசற முத்தம்மா.... அவனுக்கு இதுமாதிரி சாங்கியம் சம்பிரதாயம்லாம் சுத்தமாப் பிடிக்காதுன்னு தெரியாதா ஒனக்கு? விட்டா சாமியே இல்லேன்னுருவான். அவங் காதுல கீதுல விழுந்துச்சின்னா தையாத்தக்கான்னு குதிப்பான். அவன்கிட்டப் போயி மொட்டமொகம் அது இதுன்னுக்கிட்டு.. இந்தா இந்தக் காப்பியக் கொண்டு போ. அந்த வாசனைல டக்குனு எந்திரிச்சிருவான்” என்ற அம்மாவின் குரலை அடுத்து மாடிப்படியில் சப்தமில்லாமல் நடந்துவரும் முத்தம்மா கொண்டுவரும் காஃபியின் மணம் என்னை நெருங்கியது. மெல்ல என் கதவு தட்டப்பட்டது.

“உள்ள வா முத்தம்மா” என்றபடியே லுங்கியை சரி செய்துகொண்டேன். 

மெல்ல உள்ளே நுழைந்த அவள் எனக்கு சைடாக நின்றுகொண்டு முகம் காட்டாமல், சைடிலேயே காஃபியை நீட்டி “இந்தாங்க சின்னய்யா காப்பி” என்றாள்.

“எதுக்க நின்னு குடுக்கறது. ஏன் இப்படி ராசாவுக்கு வீசி விடுற பணிப்பெண் மாதிரி சைடுல நிக்கிற முத்தம்மா. எதுக்க வந்து குடு” என்றேன்.

“ஐயே... வேணாம் ராசா. வாங்கிக்கங்க. நான் போகணும்” என்றாள்.


“இதப் பார்றா. ஒரு பேச்சுக்கு ராசா மாதிரின்னு சொன்னா, நெசமாவே என்னய ராசான்னு சொல்ற” என்றேன், கையை நீட்டியபடியே.

“விடிஞ்சும் விடியாம இன்னிக்கு ஒங்களுக்கு நாந்தான் அம்புட்டனா?” என்று சொன்னவள், சட்டென்று என் நீட்டிய கையில் காஃபி டம்ளரைத் திணித்துவிட்டு, சப்தம் காட்டாமல் ஓடிப்போனாள்.

காஃபியின் சுவையை நிதானமாக உள்வாங்கிக் குடித்து முடித்தேன். அங்கிங்கெனாதபடி அங்கமெல்லாம் சட்டென்று சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ள, கீழே இறங்கி வந்து, வராண்டாவை ஒட்டியிருந்த வேப்பமரத்தில் குச்சியொன்றை ஒடித்து, பல்லிடுக்கில் வைத்து நசித்து, குச்சியின் கசப்புச்சுவை அடிநாக்கில் வருட, பல் துலக்க ஆரம்பித்தேன்.

“லேய்... என்னடா... ஒங்கய்யா அங்க ஒனக்காக புதுசா புருசும் டூபும் வாங்கி வச்சிருக்காக. நீ என்னடான்னா வேப்பங்குச்சிய மெல்லுற” என்ற அம்மாவுக்கு நான் பதில் சொல்லுமுன், அங்கே ஆஜரானார் என் மாண்புமிகு அப்பா.

“இருக்கட்டும்டி. ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்றபடியே என்னை எக்காளமாகப் பார்த்தார். எனக்கேற்ற பழமொழியைச் சொல்லிட்டாராமாம்.

“என்னமோ நீங்களே சொலவம் கண்டுபிடிச்ச மாதிரி, மூஞ்சில பெருமையப் பாரு. ஹுக்கும்..” என்று என் அம்மா தன்னுடைய தோளில் முகவாயை இடித்துக்கொண்டாள்.

“அவன் என் வளப்புடி. அதான் இயற்கையோடவே இணைஞ்சி வாழ்றான். அவன் பல்லு வெளக்குற அழகப் பாரு” என்றார் அப்பா.

“ஒம்ம பரம்பரைல அவன் ஒருத்தனாச்சும் பல் வெளக்கட்டுமே. அதையும் ஏய்யா கண்ணு வைக்கீரு” என்ற அம்மா, அப்பாவின் இடுப்பில் ஒரு நிமிண்டு நிமிண்ட, கூச்சம் தாங்காத அப்பா “ஐயையோ அமரோ... அங்க மட்டும் கைய வைக்காத... கூச்சம் தாங்கல” என்றபடியே விழுந்தடித்து ஓடினார்.

“அங்க ஒரு எடத்துலயாச்சும் கூச்ச நாச்சம் இருக்கே.. பக்கி பக்கி” என்று முணுமுணுத்த அம்மா “நீ வெரசாக் குளிச்சிட்டு வாப்பா. முத்தம்மா இட்லி அவிச்சிக்கிட்டுருக்கா. ஒனக்குப் பிடிச்ச கெளுத்தி மீன் கொழம்பு இருக்கு. இட்லி செத்தோடத்துல வெந்துரும். சட்டுனு வா” என்றபடியே அடுக்களைக்குச் சென்றாள் அம்மா.

நான் குளியலறைக்குள் சென்று காலைக்கடன்களை முடித்து, குளித்து வெளியே வந்தால், நான் நேற்றுப் போட்டிருந்த பேண்ட், சட்டை முதற்கொண்டு ஜட்டி பனியன் வரை எல்லா உடைகளும் சுத்தமாகத் துவைக்கப்பட்டு, கொடியில் காய்ந்துகொண்டிருந்தன. சென்னை நீரில் காவி ஏறிய பனியன், இங்கே முத்தம்மாவின் கைபட்டு வெளேரென்று மாறியிருந்தது. மொடமொடப்பான ஸ்பெஷல் தோசைபோல் இருக்கும் ஜட்டியும் குழைந்து பூப்போல் ஆகியிருந்தது. சட்டையின் காலரில் அழுக்கின் தடம்கூட இல்லாமல் இருந்தது. முத்தம்மாவின் கைநேர்த்தியின் விந்தையை வியந்தவண்ணம் சாப்பிட உட்கார்ந்தேன்.

கிராமத்தில் தட்டு வைத்து உண்ணும் வழக்கம் அதிகம் இல்லை. தட்டுப்பாடு ஆனால் ஒழிய, எப்போதும் வாழையிலையில்தான் சாப்பிடுவோம். இளம் இலையில் சூடான இட்லி வைத்து, அதன் ஓரத்தில் இரண்டு கெளுத்தி மீன்களும், குழம்பும் ஊற்றினாள் அம்மா. முழம்போட்டு அளக்கலாம் போல் பூப்போன்ற இட்லியுடன், கெளுத்திமீன் குழம்பின் புளிப்பும் காரமும் சுதி சேர்க்க, எண்ணிக்கையில்லாமல் இட்லிகளை விழுங்கினேன்.

லைனில் இட்லிக்காகக் காத்திருந்த அப்பா “என்னடா.. இன்னிக்கு விரதமா?” என்றார்.

“இல்லயே. ஏன்?” என்றேன்.

“இல்ல. இன்னிக்குப் பூரா இட்லி மட்டும்தான்கிற மாதிரி மொக்குறியே அதான் தெரிஞ்சிக்கிறதுக்காகக் கேட்டேன்” என்றார் என் அம்மாவின் சுட்டெரிக்கும் பார்வையைத் தவிர்த்தபடி. 

“யோவ் பெரிய மனுசா.. ஒமக்கு வேணும்னா முத்தம்மாவை ஒரு ஈடு எடுத்து பலுமாறச் சொல்றேன். அதுக்காகப் புள்ளையப் போயிக் கண்ணு வச்சீரு......ஆமா...” என்று நாக்கை மடித்துக் கடித்தாள்.

அப்பாக்களுக்கு எப்போதுமே பிள்ளைகள் அளவோடு சாப்பிட்டு உடலைக் கட்டோடு வைத்திருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கும். ஆனால், அம்மாக்கள் கண்ணில் பிள்ளைகள் எவ்வளவு சாப்பிட்டாலும் போதாது என்கிற குறை தெரியும்.

“சர்தான். வயித்துல கொஞ்சூண்டு எடம் வச்சிக்கட்டும். இன்னிக்கு நம்மூருக் கொளத்துல ஊர்ப்பறிப்பு இருக்குன்னு சொன்னா, அது புரியாம என் மேல பாய்றியே பாதகத்தி. அவனுக்கு வயித்துல எடம் வேண்டாமா அம்ரு?” என்றார் அப்பா.

“அந்த மீனுக வந்துசேர இன்னிக்கு மத்தியானம் ஆயிரும்ல. கல்லத் தின்னாக் கரையிற வயசுல நொய்ய நொறுங்கத் தின்னாத்தானே தெம்பா இருக்கும். ஒம்ம மாதிரி வெனயம் பிடிச்சி ஒல்லிக்குச்சியா இருக்கச் சொல்றீராக்கும்” என்று நொடித்தாள் அம்மா.

“போடி போடி பொச கெட்டவளே. எந்தெம்புக்கு என்னடி கொறைச்சலு? வயித்த லேசாக் காலியா வச்சிக்கிட்டு, பசியோட சாப்பிடுறதுல இருக்கிற சொகம் என்னான்னு ஒனக்கு எங்க தெரியப்போவுது?” என்று சொல்லியபடி இரண்டு இட்லியுடன் கைகழுவினார் அப்பா.

”ஊர்ப்பறிப்பு” என்றால் என்னவென்று நான் இங்கே சொல்லியாக வேண்டும். ஊருக்குப் பொதுவான குளத்தில் மீன் வளர்த்துப் பிடித்துக்கொள்ள தனிப்பட்ட நபர்களுக்குக் குத்தகை விடுவார்கள். அவர்களும் குளம் வற்றும் நிலையில் மீன்களைப் பிடித்து ஊரிலேயே விற்றுக் காசு பார்ப்பார்கள். சில சமயங்களில், தனி நபர்கள் முன்வராத நிலையில் அல்லது அவர்கள் கேட்கும் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் ஊரிலேயே எல்லார் வீட்டிலும் காசு போட்டு குளத்தைப் பொதுவாகக் குத்தகைக்கு எடுப்பார்கள். குளம் வற்றும் நிலையில் வீட்டுக்கு ஒருவர் என்று ஆணோ பெண்ணோ குழந்தைகளோ குளத்தில் இறங்கி, யாருக்கு எவ்வளவு அகப்படுகிறதோ அவ்வளவு பிடித்துக்கொள்ளலாம். அதுதான் ‘ஊர்ப்பறிப்பு’. நான் விடுமுறையில் வந்திருக்கும்போது இவ்வாறு நடப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கோடி ரூபாய் கொடுத்தாலும், சென்னை மாதிரி மாநகர்களில் இந்த மாதிரி அனுபவம் கிடைக்குமா?

சட்டென்று சாப்பிட்டு எழுந்து ”ஐ.. எப்போப்பா கொளத்துக்குப் போகணும்?” என்றேன்.

“ஏன்? நீயும் வரப்போறியா? ஒரே சகதியா இருக்குமேடா? ஆனா, நான் போயாகணும். ஏன்னா நாந்தான் இன்னிக்கு மேனேஜ்மெண்ட்” என்றார். அவருடைய ‘மேனேஜ்மெண்ட்’ என்னவென்று எனக்கும் தெரியும்.

”நீங்கபாட்டுக்கு ஒரு பக்கம் ஒங்க மேற்பார்வைய நடத்துங்க. நான் வேணாம்னா சொல்லுதேன்? நான் கொளத்துல எறங்கி மீன் பிடிச்சே ஆகணும் இன்னிக்கு” என்று பிடிவாதம் பிடித்தேன்.

“சரி. வா. 10 மணிக்குக் கொளத்துக்கு வந்து சேரு. வரும்போது வாளியக் கொண்டாந்துரு” என்றபடியே சைக்கிளில் ஏறினார். தெருவில் பெண்களை நெருங்கும்போது சட்டென்று “கிணி கிணிங்” என்று பெல்லை அடித்து அவர்கள் விலகி அலறுவதை சப்தம் போட்டுச் சிரித்து ரசித்தபடியே சென்றார். “என் மணியப் பாத்தாலே எல்லாவளும் ஊர்ல அலர்றாளுவப்போய்” என்று அலம்பல் வேறு. இதைக் கேட்ட பெண்களில் ஒருத்தி “சார்வாள்... பாத்து. என்னிக்காச்சும் அந்த மணிய வெடுக்குன்னு புடுங்கிர்றேன் பாரும்” என்க, “போடி போடி... உன் புருஷன்கிட்டப் புடிங்கிக்க” என்றபடியே விரைந்தார்.

“அறுவது வயசுல கெளவனுக்கு நக்கலு நையாண்டியப் பாரேன். என்னிக்காச்சும் எவகிட்டயாச்சும் செமயா வாங்கப்போறாரு பாரு. அப்ப நானும் கும்பலோட கும்பலா நாலு சாத்து சாத்தலாம்னு இருக்கேன்” என்று அம்மா சொல்ல, முத்தம்மா அடக்க முடியாமல் சிரிக்க, நானும் அவளைப் பார்த்துக்கொண்டே சிரித்தேன். அவள் கண்களில் நீர் வரும்வரை சிரித்தாள்.

“சிரிடி ராசாத்தி. என்னயப் பெத்த அம்ம.. சிரி” என்று அம்மா சொல்ல, அப்போதுதான் முத்தம்மா சிரிப்பதும் அபூர்வம் என்பதை உணர்ந்தேன்.

சரியாக 10 மணிக்கு, முத்தம்மா வாளியைச் சுமந்து என்னுடன் வர, ஊர்க்குளத்துக்குச் சென்றோம். குளத்தைச் சுற்றிலும் மக்கள் நின்றிருந்தார்கள். வீட்டுக்கு ஒருவர் மட்டும்தான் செல்கிறார்களா என்பதைக் கண்காணித்து குளத்துக்குள் அனுப்பக் காத்திருந்தார்கள். ஊர்ப்பூசாரி வந்து கற்பூரம் காட்டி, குளத்துப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்க, ஆணும் பெண்ணுமாய்க் குளத்துக்குள் இறங்கினார்கள். அதிகபட்ச ஆழமே முழங்கால்வரைதான் என்பதால் பயம் ஏதும் இல்லை. நான் ட்ரவுசரோடு இறங்கி சகதிக்குள் கைகளை அளைந்து மீன்களைத் தேட ஆரம்பித்தேன். கெண்டையும், கெளுத்தியுமாக என் கையில் சிக்கின. நான் அவற்றை வாளிக்குள் போட, என் கூடவே வாளியுடன் இருந்த முத்தம்மாவின் உடலில் சகதி தெறித்தது. அவளுடைய ஈர உடைக்குள் அவள் இன்னும் அழகாகத் தெரிந்தாள். 

சேலையை நன்கு உயர்த்தி, இடுப்பில் செருகியிருந்தாள். உருண்டையான முழங்காலில் சேறு மறைத்திருந்தாலும், அவளுடைய செழுமையை மறைக்க முடியவில்லை. அவளுடைய சேலையின்மேல் எடுப்பான முலை மேடுகளில் சகதி பட்டு, முலையின் கதகதப்பில் காய ஆரம்பித்தது. குளத்து நீர் அவளுடைய பிரா அணியாத ரவிக்கையில் பட்டு, அந்த மெல்லிய ரவிக்கையினுள் அவளுடைய முலைகளின் நிறத்தைக் காட்டியது. சைடு போஸில் பார்க்கும்போது, அவளுடைய முலைக்காம்புகள் ரவிக்கையை முட்டிக்கொண்டு நின்றன. 


சட்டென்று வாளியைக் கீழே வைத்த முத்தம்மா “அம்புட்டுக்கிச்சி... அம்புட்டுக்கிச்சி” என்றபடியே, சகதிக்குள் கையைவிட்டு எதையோ பிடித்தாள்.

“என்ன முத்தம்மா அம்புட்டிச்சி?” என்றபடியே கையை சேற்றுநீரில் கழுவினேன்.

“வாங்க. நீங்க ஒருபக்கம் கைய வச்சி இழுங்கு. வெரா மீனு கணக்காக் காலுல மிதிபட்டுச்சி. அதான் கால்ல அமுக்கிப் பிடிச்சேன். கீழ கெடக்கு” என்றாள் முத்தம்மா.

“ஓ... சூப்பர்” என்றபடியே விரால்மீனின் துள்ளும் வாலைப் பிடித்து உயர்த்த முயன்றேன். இந்த விரால் மீன் இருக்கிறதே, அது வலிமையான மீன். பக்குவமாகப் பிடிக்காவிட்டால், வாலாலும் தலையாலும் ஓங்கி ஓங்கி வீசும். கொஞ்சம் ஏமாந்தால் கையெலும்பையே முறித்துவிடும். சகதியின் வழுவழுப்பில் என் கையின் பிடிமானத்துக்குக் கட்டுப்பட விரால்மீன் மறுத்து, தலையால் அப்படியும் இப்படியுமாக அடிக்க, நான் பேலன்ஸ் இழந்து முத்தம்மாவின் முழங்காலைப் பற்ற, அந்த இழுப்பு தாங்காமல் அப்படியே என்மேல் விழுந்தாள் முத்தம்மா. அவளுடைய எடையைத் தாங்காமல், நான் சகதிக்குள் அமிழ, என் கையில் துடித்துக்கொண்டிருந்த விரால்மீன் நழுவப்பார்க்க, முத்தம்மா மீனின் தலையை ஒரு கையால் அமுக்க, முத்தம்மாவின் கனத்த குண்டிகள் சரியாக என் சுண்ணியின் மேல் அமுக்கின. 


அந்தச் சேறு சகதியிலும், என் சுண்ணி லேசாகத் தலைதூக்க ஆரம்பித்தது. எங்கே அவள் “இன்னொரு விரால்மீனும் சிக்கிரிச்சி” என்று என் சுண்ணியைக் கொத்தாகத் தூக்கிவிடுவாளோ என்று பயந்த நான், மெதுவாக அவளை இடுப்போடு பிடித்துத் தூக்கி நிறுத்தினேன். நான் படுத்திருந்த நிலையில், எழுந்து நின்ற அவளுடைய கனத்த வெளீர் தொடைகள் என்னைப் படுத்தி எடுத்தன.

“எந்திரிங்க” என்று என் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டாள். அவளுடைய தோளில் கையை வைத்து, எழுந்து நின்றேன். “மீன் எங்கே?” என்றேன். “ம்ம்.. அதெல்லாம் பத்திரமா இருக்க வேண்டிய எடத்துல இருக்கு” என்றபடியே வாளியைக் காட்டினாள். மேலும் அகப்பட்ட மீன்களைப் பிடித்து, வாளி நிறைந்தவுடன் கரைக்கு வந்தோம்.

அங்கே என் அப்பா தன்னுடைய ’மேனேஜ்மெண்ட்’டை ரகளையாக நடத்திக்கொண்டிருந்தார். ”ஏ புள்ள இருளாயி. ஒன் காலுக்குக் கீழ கெளுத்தி நெளியுது பாரு. அமுக்கிப் பிடி. ஏத்தா நல்லகருப்பி... பாத்து... மேச்சீலைல கெண்டை போயிரப் போவுது. அங்க என்னமோ கண்ணு எட்டிப்பாக்க மாதிரி இருக்கே. எலே கந்தையா.. என்னலே ஒன் பொண்டாட்டிக்குச் சரியாச் சாப்பாடு போடமாட்டியா... ஒரு மீனப் பிடிக்க இந்தத் தடவு தடவுதாளே” என்று ஒரே அலம்பல்.

நான் சிரித்தபடியே கொஞ்சநேரம் நின்றுவிட்டு, முத்தம்மாவைத் தேடினேன். காணவில்லை. வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள் போலும் என்று நினைத்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த கிணற்றில் சேற்றை அலசிவிட்டு ஊருக்குள் செல்லலாம் என்று நினைத்து, கிணற்றை நெருங்கினேன்.

கிணற்றடியில் ஏதோ பேச்சுக்குரல் கேட்க, அது பெண்களின் குரலாய் இருக்க, நடையை நிறுத்தி, ஒரு மரத்தின் பின்புறம் நின்று, பேச்சுக்குக் காது கொடுத்தேன்.

“என்னடி முத்தம்மா. மீனயெல்லாம் அலசியாச்சா?” - இது முத்தம்மாவைப் பார்த்து அவளுடைய தோழி கேட்கும் குரல்.

“அதுக்குத்தான வந்திருக்கேன். பாரு வாளி நிறைஞ்சிடிச்சி” - இது முத்தம்மா.

“சேறும் சகதியுமா இருந்திச்சே. பாத்து பத்திரமா இருந்தியா? இல்லாட்டி எதாச்சும் வெராமீனு உன் பொந்துல பூந்துருச்சா? ஹஹ்ஹஹாஆஆ” - தோழி மீண்டும்.

“போடி. எல்லாத்தையும் ஞாபகப்படுத்திக்கிட்டு. இந்த மாதிரி மீன் பிடிக்கையில எதாச்சும் கெண்ட கெளுத்தின்னு தெரியாம எனக்குள்ள புகுந்தாத்தேன் எனக்குக் கீழ அப்படி ஒண்ணு இருக்குன்னே நெனப்பு வரும்போல. நீ வேற” என்றாள் முத்தம்மா.


“ஏய்.. நான் கிண்டலுக்குச் சொன்னா, நீ ஒரு மாதிரியாப் பேசறேயே. நான் உன் மனசக் கஷ்டப்படுத்திட்டேனா?” என்றாள் தோழி.

“இல்லடி. நீ சொன்னாலும் சொல்லாட்டியும், என் நெலம அப்படித்தான இருக்கு” என்றாள் முத்தம்மா.

சொல்லமுடியாத வேதனையை இறக்கிவைக்க முடியாமல், முத்தம்மா வார்த்தை கிடைக்காமல் திண்டாடுவது எனக்குப் புரிந்தது.

சப்தம் போடாமல் வீட்டுக்கு வந்தேன். குளித்தேன். கொஞ்சநேரத்தில் சுத்தம் செய்த மீன்களுடன் முத்தம்மா வந்தாள். குளித்துவிட்டு சேலை மாற்றிவிட்டு வந்திருந்தாள்.

“முத்தம்மா.... விரால்மீனை மட்டும் நீயே ஒரு கொழம்பு வச்சிரேன். கிருஷ்ணாவுக்கு உசுரு. எனக்கு ஒரே அம்பாசமா வருது. செத்தோடம் அப்படியே படுக்கேன்” என்ற அம்மா, படுக்கையறைக்குள் சென்று படுத்தாள்.

“சரிங்கம்மா” என்றபடியே, ஒரு பாத்திரத்தில் நிறையப் புளியை ஊற வைத்துவிட்டு, விரால்மீனை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்குச் சென்றாள். நானும் வேடிக்கை பார்க்கச் சென்றேன். குத்தவைத்து, முழங்கால்வரை சேலையை உயர்த்தி, இன்னும் உயிரோடு துள்ளிய விரால்மீனின் உச்சந்தலையில் அரிவாள்மணையின் கட்டையால் ஒரு போடு போட்டாள். மீன் மயங்கியது, “இனிமேல் எழவே மாட்டோம்” என்பதை அறியாமல். மீனின் துடுப்புகளை நறுக்கி எடுத்தாள். அங்கே கிடந்த சொரசொரப்பான கல்லில் தேய்தேய் என்று தேய்த்தாள். விரால்மீனின் சுவைக்கு இதெல்லாம் அவசியம். சரியாகக் கழுவாவிட்டால் குழம்பே வழுவழுப்பாக உளுந்தங்களி மாதிரி ஆகிவிடும். நன்றாக உரசி, விரால்மீனை அப்படியே உயர்த்திப் பிடித்து, தான் நன்றாக உரசிவிட்டதைத் திருப்தியுடன் கவனித்துச் சிரித்துக்கொண்டாள்.

அரிவாள்மணையில் துண்டு போடுமுன் “வெறும் கொழம்பு மட்டும் போதுமா இல்லேன்னா வறுக்கிறதுக்கும் வேணுமா?” என்றாள்.

“ரெண்டும்” என்றேன்.

அதற்கேற்றாற்போல் மீனைத் துண்டுகளாக்கினாள். குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த அவளின் முலைகள் அவளுடைய முழங்காலில் முட்டி, மீனை வேடிக்கை பார்க்க வருவதுபோல் எட்டிப்பார்த்தன. வெளீரிட்ட கெட்டியான தசையுடன் இருந்தன அவளுடைய முலைகள். 


அவளுடைய முலைகளின் இடைவெளியின் கதகதப்பு எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. 

எப்பேர்ப்பட்ட உடலை வைத்துக்கொண்டு, ஒரு சுகமும் அனுபவிக்காமல் இருக்க இவளால் எப்படி முடிகிறது? இப்படி உடலை ஏன் இயற்கையோ ஆண்டவனோ படைத்தார்கள்? கடலில் பெய்யும் மழைபோல் இவளின் உணர்ச்சிகளுக்கு எந்தப் பதிலும் இல்லையோ? ஒரு ஆணின் அகால மரணம், வாழ வேண்டிய ஒரு பெண்ணை இப்படியா சிதைத்துவிடும்? இவள் என்ன பாவம் செய்தாள், இந்தக் கோலம் தரிக்க? காட்டிலேயே முளைத்து மலர்ந்து காய்த்து கனிந்து வெம்பி வெடித்து, அதே காட்டில் புதையும் மரங்களுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்? இதை யார் சரி செய்வது? 

மெதுவாக “நீ கெணத்து மேட்டுல ஒன் சிநேகிதியோட பேசுனத நான் கேட்டேன்” என்றேன்.

அவள் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக, மீனுக்கான மசாலை அம்மியில் அரைக்க ஆரம்பித்தாள். சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி விதை, மல்லித்தழை, மிளகாய் வற்றல், மிளகு என்று சேர்த்து அவள் அரைக்க அரைக்க, மீன் குழம்பின் மணம் அப்பொழுதே வந்துவிட்டது.

“ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறியே முத்தம்மா. நான் கேக்கறேன்ல?” என்றேன்.

சர்க்...சர்க்....சர்க்...... என்று இன்னும் வேகம் கூட்டி மசாலை அரைத்தாள் முத்தம்மா.

”சொல்லு” என்றேன்.

“என்ன சொல்லணும்கீக சின்னைய்யா? என் விதி, எதேதோ ஆயிப்போச்சி. பிள்ளைக ரெண்டு இருக்கு. இல்லேன்னா எப்பவோ போய்ச் சேந்திருப்பேன்” என்றபடியே அம்மிக்குழவியை நெடுக்காக நிறுத்திச் சுழற்றி, மசாலை வழித்துக் கிண்ணத்தில் வைத்தாள்.

“வேற வழி ஏதும் யோசிக்கலயா நீயி?”.

“வேற வழின்னு எதச் சொல்லுதீக சின்னைய்யா? ஏதோ நம்ம அம்மாவும் அய்யாவும் இருக்க புண்ணியத்துல ஒட்டிக்கிட்டு சீவனத்த ஓட்டிக்கிட்டிருக்கேன். வேற எதையும் நெனைக்க அளவுக்கு எனக்குப் படிப்பும் இல்ல. வசதியும் இல்ல. எதுனாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா அதயெல்லாம் செயிக்க எனக்கு சத்தும் இல்ல”.

“அப்ப ஒன்னோட வாழ்க்க அவ்ளோதானா முத்தம்மா?”.

“ஹும்.. உடுத்த உடுப்பு. படுக்கப் பாயி. மூச்சுக்காத்து ஓட சாப்பாடு. இதுக்கு மேல எனக்குன்னு என்ன வேண்டிக்கெடக்கு?”.

“இதெயெல்லாம் மீறி ஒடம்புன்னு ஒண்ணு இருக்குல்ல. வயசுன்னு ஒண்ணு இருக்கில்ல ஒனக்கு? அதுக்கு?”.

“அதுக்கு?” என்று அடிபட்ட நாகம்போல் என்னைப் பார்த்தாள் முத்தம்மா.

“ஐயையோ.... நான் உன்னய நோண்டிப்பாக்கணும்னோ உன் மனசக் காயப்படுத்தணும்னோ இதக் கேக்கல முத்தம்மா. எங்ககூடவே இருக்க. எங்களுக்காக உழைக்க. அந்த உரிமைல உன் மேல அக்கறையோடதான் கேக்கேன்”.

“ஒங்கள மாதிரி எனக்குக் கோர்வையாப் பேச வராது சின்னைய்யா” என்றபடியே வறுவலுக்கான மீன்களில் மசாலைப் பூசினாள் முத்தம்மா.

“எந்த வேலை செஞ்சாலும் அழகாச் செய்ற முத்தம்மா” என்றபடியே அவளுடைய கன்னத்தில் இறங்கியிருந்த முடிகளைத் தலையில் சேர்த்தேன். 

“இந்த மாதிரில்லாம் செய்யாதீங்க சின்னய்யா”.

“ஏன்?”.

”சொல்லத் தெரியல. ஆனா, நான் ரொம்ப வெசனப்பட்டுப் போவேன். இதுநா வரைக்கும் இப்படி ஒரு ஆம்பளையோட நான் நெருங்கிப் பழகுனதில்ல. கொளத்துலயே ஒரு மாதிரி ஆயிடிச்சி எனக்கு. அந்தாக்குல அப்படியே போயி என் சேத்தாளிகிட்ட ஒரு மாதிரியாச் சொல்லிட்டேன். அதக் கேட்டுட்டு நீங்க இப்ப......”.

“அப்ப மனசுல இருக்கத மறைக்கியா நீயி?”.

“இப்ப என்ன செய்யணும் அதுக்கு?” என்றபடியே சமையலறைக்குள் நுழைந்தாள்.

நல்லெண்ணெயில் வெந்தயம் பூண்டு தாளித்து மசாலைக் கொட்டிக் கொதிக்க வைத்தாள். அந்த மசால் போலவே அவளுடைய மனதுக்குள் கொதிப்பது அவளது நெற்றிச்சுருக்கத்தில் தெரிந்தது. வியர்த்திருந்தாள். நான் என்னுடைய கர்ச்சீஃபை எடுத்து அவளுடைய நெற்றியில் ஒற்றியெடுத்தேன்.

அவள் கண்களில் நீர் தளும்புவது தெரிந்தது.

“ஏன் அழுவுற முத்தம்மா?”.

“இல்ல. மொளகாக் கையோட கண்ணைத் தொடச்சிட்டேன்” என்றாள். இல்லை. பொய் சொல்கிறாள். நினைப்பதை வெளிப்படுத்தும் படித்த பக்குவ மனது இவளுக்கு இல்லை. அல்லது படித்த என்னால் இவளின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எதுவாக இருந்தாலும், அவளது உள்மனதை உரித்துப்பார்க்க முடிவு செய்தேன். எனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று என் மனதுள் தோன்றியது. இருந்தாலும் முத்தம்மா என்ற உயிருள்ள ஜீவனை உயிரோட்டமாகப் பார்க்கும் ஆசை வந்தது. அவள் வேரறுந்த மரம் அல்ல; இலைகள் சற்றே வாடிய மரம் என்பதை அவளுக்குப் புரிய வைக்கும் ஆசை வந்தது.

சட்டென்று கேட்டேன் “உன் புருஷன் போனப்புறம் ஒனக்கு அந்த சுகம் தேவைப்படவே இல்லயா?”.

தேள் கொட்டியவள் போல் என்னை வலியோடு பார்த்து “என்னய்யா என்னென்னவோ கேக்குறீக. அப்புறம் அம்மாகிட்ட சொல்லிருவேன்” என்றாள்.

சட்டென்று அவளுடைய கையைப் பிடித்து “இதுல அம்மா எங்க வந்தாங்க முத்தம்மா? சட்டுனு என்னய மூணாம் மனுஷனாக்கிட்டியே. ப்ளீஸ். எனக்குப் பதில் சொல்லு போதும்” என்றேன்.

“நீங்க பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு பஸ் ஏறிருவீக. எதையாச்சும் சொல்லிட்டு நான்ல இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு நிக்கணும்”.

“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. உனக்கு ஒரு வழி செய்யாம நான் போக மாட்டேன். உன் ஒடம்பு கேக்கறத உன் வாய் வெளிய சொல்ல மாட்டேங்குது. வயித்துக்கு வேளா வேளைக்குச் சோறு போடுற மாதிரி ஒடம்புக்கும் போடணும். தெரிஞ்சிக்க”.

“நா ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல” என்றபடியே மீன்குழம்பையும், வறுவலையும் தயார் செய்து முடித்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் கிளம்பும் வரையில் பேசவே இல்லை. அதற்குள் அம்மாவும் எழுந்துவிட, எங்கள் இருவருக்கும் பரிமாறினாள். என்னை அவ்வப்போது பார்த்துக்கொண்டாள். பின்னர் தனக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு “சாய்ங்காலம் வாறேம்மா” என்றபடியே என்னை ஒரே ஒரு நொடி பார்த்துவிட்டு கிடுகிடுவென்று நடந்துவிட்டாள்.

நான் கடை வரைக்கும் சென்றுவருவதாகக் கூறி அவளுடன் நடந்தேன். “என்ன முத்தம்மா பதிலே காணோம்?” என்றேன்.

“என்ன சொல்லணும்?”.

“எதாச்சும்?”.

“என் மேல ஒங்களுக்கு ஆசை வந்திரிச்சின்னு நினைக்கேன்” என்றாள்.

அட.. நான் வரிவரியாய்ப் பேசியதை ஒற்றை வரியில் படீரென்று போட்டு உடைத்துவிட்டாளே! எனக்கே என்மேல் கோபமாகப் போய்விட்டது. நான் இதுவரை பேசியதின் உள்ளர்த்தம் இதுதானா? அவளுக்கு நான் வலையை வீசியிருக்கிறேனா? அவள் அதைப் புரிந்து கொண்டாளே? அவ்வளவு வெளிப்படையாகவா பேசிவிட்டேன்? ஒரே நொடியில் ஹீரோவை வில்லனாக்கி விட்டாளே!

“என்ன.. என்னென்னமோ சினிமால வாற மாதிரிப் பேசுனீக. இப்ப சத்தத்தையே காணோம்” என்றாள்.

“நீ கேக்கற கேள்விக்கு ஆமான்னு சொல்றதா இல்லேன்னு சொல்றதான்னு தெரியல முத்தம்மா. எந்தப் பதில் சொன்னாலும் தப்பாயிரும். ம்ம்... சரி விடு. எப்போ வர?” என்றேன்.

”மீன் பிடிக்கைலயும் சுத்தம் செய்யைலயும் கொழம்பு வைக்கைலயும் ஒங்க கண்ணு எம் மேல மேஞ்ச மேச்சலு எனக்குத் தெரியாதா என்ன? அவ்வளவு பக்கியா நானு? நெத்தியில ரத்தச் செவப்புல பொட்டு வைக்கலன்னாலும் உள்ள ரத்தம்தானே ஓடுது? எதாச்சும் சாக்கு சொல்லிட்டு ராவுல வாங்க. ஆனா, ஒருவாட்டிதான். அடிக்கடி தொந்தரவு பண்ணக்கூடாது சின்னைய்யா”.

“ம்” என்றேன்

“கீழ முடி இருக்கட்டுமா எடுத்துரவா?” என்றாள் தலையைக் குனிந்தபடியே.

“இருக்கட்டும்”.

அப்பாவின் பீரோவைத் திறந்து “எதற்கும் இருக்கட்டும்” என்று ஒரு ஆணுறைப் பாக்கெட்டை எடுத்து வைத்துக்கொண்டேன். இரவில் பக்கத்து ஊர் நண்பன் வீட்டுக்குச் சென்று தங்குவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அப்பா “அம்ரோய்... எனக்குக் காலில் சுளுக்கியிருக்க மாதிரி இருக்கு. உள்ள வந்து படுத்துக்கட்டுமா? கொஞ்சம் பிடிச்சி விடேன்” என்று சுளுக்கெடுக்கச் சொன்றார்.

ஊர் அடங்கும் வேளையில், ஒதுக்குப்புறமாக இருந்த முத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றேன். குழந்தைகள் இரண்டும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். 

“எப்படி முத்தம்மா டக்குனு சம்மதிச்சே?”.

“என்னையும் என் பிள்ளைகளையும் வாழ வைக்கீக. கெடுதியா ஒண்ணும் நெனைக்க மாட்டீகங்கிற நெனப்புலதான் சம்மதிச்சேன்”.

“அப்ப ஒனக்குன்னு ஆசை ஒண்ணும் இல்லயா?”.

“இதெயெல்லாம் கேக்காதீக சின்னைய்யா. எனக்குச் சொல்லத் தெரியாது” என்றபடியே என் மடியில் படுத்தாள்.

“பரவாயில்ல சொல்லு. ஒனக்கும் இஷ்டம்னாத்தான் ஆட்டம். இல்லேன்னா வேண்டாம்”.

கண்களைக் கைகளால் மூடி, என் மடியில் குப்புறப்படுத்துக் கொண்டாள். நான் புரட்டிப் பார்த்தும் திரும்பவில்லை. நான் அப்படியே அவளுடைய முன்புறத்தில் கையைக் கொண்டு சென்று கெட்டியான அவளுடைய முலைகளைப் பற்றிக் கசக்கினேன். 


அப்படியே மல்லாந்து படுத்தாள். என் சுண்ணி அவளுடைய முதுகை இடித்திருக்க வேண்டும். அதற்கு வழிவிட்டுக் கொஞ்சம் நிமிர்ந்தாள். இப்போது அவளுடைய மடியில் நான். அவள் ஆவலாக நான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதுபோல் பார்த்தாள். நான் அவளுடைய ரவிக்கையின் கொக்கிகளைக் கழற்றினேன். பிரா இல்லாமல், கிட்டத்தட்ட 4 வருடங்களாகக் கைபடாமல் இருந்த மகா கெட்டியான முலைகளைத் தடவினேன். அவளுடைய முலைக்காம்புகள் கோவைக்காய்கள் போல் நீட்டிக்கொண்டு நின்றன. இரு முலைகளும் சற்றே எதிர்ப்பக்கம் வளைந்திருந்தது பார்க்கவே அமர்க்களமாக இருந்தது.

பலம் கொண்டமட்டும் முலைகளைக் கசக்கினேன். அவள் சுகம் தாங்காமல் துடித்தாள். அடியில் ஊறியிருக்க வேண்டும். தொடைகளை நெருக்கிக் கொண்டாள். நான் முலைகளைக் குழந்தைபோல் கவ்விச் சப்பினேன். மார்பில் தொங்கும் சொர்க்கத்துண்டுகளாய் அவளுடைய முலைகள் என் வாய்க்குள் அடைக்கலமாகி என் சுண்ணியை ஒரேயடியாய்த் தூக்கின. நான் அவளுடைய பருத்த காம்புகளை நாக்கினால் நீவிச் சப்பிச்சப்பி முலையைக் கவ்விப் பால் குடித்தேன். என் தலையை ஆதரவாய்த் தடவிவிட்டாள். வாய் வலிக்கும்வரையில் முலைகளில் சுகம் தந்து, பெற்று, என் உடைகளைக் களைந்தேன்.

அவளுடைய சேலையை இழுத்தேன். புரிந்துகொண்டவளாய் சேலையை உருவினாள். நான் அவளுடைய பாவாடை நாடாவை அவிழ்க்க, அவள் தன்னுடைய ரவிக்கையை உரித்தெடுத்தாள். அப்படியே படுக்க வைத்து அவளுடைய புண்டையைப் பார்த்தேன். அடர்ந்த முடிகளுடன், விம்மியெழும் புடைப்புடன், நடுவில் தெள்ளந்தெளிவான ஓட்டையுடன் பம்மியிருந்தது அவளுடைய அழகான புண்டை. கையால் கவ்வினேன். நடுக்கோட்டில் விரல்களால் நடந்தேன். 

அப்படியே அவள் புண்டையில் வாயால் கவிழ்ந்தேன். முதன்முதலாய் ஒரு புண்டையை நேரில் பார்க்கும் அதிசயமும், ஆவலும் மேலோங்க, முத்தம்மாவின் புண்டையை நக்கிச் சப்பிக் கவ்விக் கடித்தேன் செல்லமாக. பின்னர் அழுத்தமாகக் கவ்விச் சப்பி உறிஞ்சினேன். புண்டையில் இவ்வளவு மணமும், சுவையும் இருக்க முடியுமா? புண்டையின் மொத்த வடிவத்தையும் என் வாய்க்குள் அடக்க முயன்று தோற்றேன்.

என் சுண்ணியை அவள் கைப்பற்றி, குழந்தையைக் கொஞ்சுவதுபோல் கொஞ்சினாள். நான் பாக்கெட்டில் இருந்து ஆணுறையை எடுத்தேன். “இது என்ன?” என்றாள். சொன்னேன்.

”ரெண்டு கிலோ அரிசிக்காகவும், 500 ரூவாப் பணத்துக்காகவும் ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டேன் சின்னைய்யா. நீங்க சும்மா அப்படியே செய்யுங்க. ஒண்ணும் ஆவாது. எனக்கு எந்த நோய் நோக்காடும் இல்ல” என்றாள்.

என் சுண்ணியை அப்படியே அவளுடைய புண்டைக்குள் திணித்தேன். இரண்டு குழந்தைகள் வந்த வழியா இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது? மனித நடமாட்டம் இல்லாத புல்வெளியில் பாதையே இல்லாததுபோல் என் சுண்ணி நுழையத் தடுமாறியது. நான் இடிக்க இடிக்க அவள் கசிந்து இடம் கொடுத்தாள். அழுத்த்த்.....தி இறக்கினேன். சட்டென்று புண்டைக்குள் புதைந்தது என் சுண்ணி. அவளுடைய முலையைக் கவ்விக்கொண்டே இடிக்க ஆரம்பித்தேன். அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

“நாம கல்யாணம் செஞ்சிக்கலாம் முத்தம்மா” என்றேன் இடித்தபடியே.

“இதெல்லாம் நடக்காது சின்னைய்யா... வந்தீக. செஞ்சீக. இனிமேல பொழப்பப் பாருங்க. நீங்க எங்க. பூவ எழந்துக்கிட்டு நிக்கிற நான் எங்க? இந்த கொஞ்சநேர சொகத்துக்காகப் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீக. செய்யுங்க.... செய்யுங்க” என்று இறுக்கினாள்.

நான் மேலும் மேலும் இடித்து அவளுடைய அழகான மயிடர்ந்த புண்டையின் ஆழத்துக்குள் என் விந்தைப் பீய்ச்சியடித்தேன். உதட்டையும் நாக்கையும் மாறி மாறிக் கடித்துக்கொண்டே இருந்தாள் முத்தம்மா. 

“எப்படி இருக்கு முத்தம்மா?”.

“ ‘வயித்த லேசாக் காலியா வச்சிக்கிட்டு, பசியோட சாப்பிடுறதுல இருக்கிற சொகம் என்னான்னு ஒனக்கு எங்க தெரியப்போவுது’ன்னு பெரிய ஐயா இன்னைக்குக் காலைல ஒங்ககிட்ட சொன்னாகள்ல? அதோட அர்த்தம் இப்பத்தான் சின்னைய்யா புரியுது” என்றாள். 

“ஓ.. அப்ப கண்டிப்பா நான் ஒன்னயக் கட்டிக்கத்தான் போறேன்” என்றேன்.

“அதான் இப்ப கொஞ்சம் முன்ன வரைக்கும் கட்டிக்கிட்டுத்தானே இருந்தீக” என்றாள், உடைகளை அணிந்தபடியே.

“கட்டிக்கிறதுன்னா ஒன் மொலை மேல என் தாலி தொங்கும்ல.. அந்தக் கட்டிக்கிர்றதச் சொன்னேன்”.

”ஊர்ப் பொல்லாப்பு வந்துரும்யா. நாந்தேன் ஒங்களக் கைல போட்டுக் காரியம் சாதிச்சிட்டேன்னு எல்லாரும் பேசுவாக”.

“எத்தனை நாளுக்கு ஊர் பேசும் முத்தம்மா. ஒரு மாசம்.. ஒரு வருஷம்... அட ஒரு நாலு வருஷம். அதுக்குமேல நாம வாழ்ற வாழ்க்கைல அவங்க வாய அடைக்கணும். ஏண்டா இவிங்களைப் பத்தி நாம நாக்குல நரம்பில்லாமப் பேசினோம்னு அவனவன் வெக்கப்படணும். நாம அப்படி வாழணும். எனக்குப் புள்ள பொறந்துட்டா நான் ஒன் புள்ளைகளக் கைவிட்டுருவேன்னு நீயும் சந்தேகப்பட வேண்டாம். நீ ஆப்பரேஷன் செஞ்சது செஞ்சதாவே இருக்கட்டும்” என்றேன் அவளுடைய கைகளைப் பற்றியபடி.

“எனக்கு வாழ்க்க கொடுக்கேன்னு தப்புத்தப்பா யோசிக்காதீக சின்னைய்யா” என்றாள். அவள் கண்களில் வருத்தமா அல்லது ஆனந்தமா எதை வெளிப்படுத்துவது என்ற தவிப்பு தெரிந்தது.

“எல்லாம் நான் பாத்துக்கறேன். நான் ஒனக்கு வாழ்க்க கொடுக்கல. என் வாழ்க்கைய அர்த்தமானதா ஆக்கிக்கறேன். எங்க வீட்டுக்கு சேவை செய்றதுக்காகவே சென்மம் எடுத்த குடும்பம் ஒங்க குடும்பம். அதுக்கு என்னால ஆன சின்ன நன்றி அல்லது பிரதி உபகாரம் இப்படி எதுன்னாலும் நினைச்சிக்க முத்தம்மா. ப்ளீஸ்..”.

“பயமா இருக்கேய்யா”.

“நம்ம ஊர்ப் பேர்ல கூட பூ இருக்கு. உன் தலைல இருக்கக்கூடாதா முத்தம்மா. நீ கம்முன்னு இரு”.

அதிகாலையில் வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் சென்றேன். 

“எலே, என் பீரோல மூணு பாக்குப்பொட்டலம் வச்சிருந்தேன். ஒண்ணக் காணோமேடா. நீ பாத்தியா?” என்றார்.

”நல்லாத் தேடிப் பாருங்க. மூணும் இருக்கும்”.

“என்னடா நடக்குது?” என்றார். நடந்ததைச் சொன்னேன். முத்தம்மாவைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச் சொன்னேன். 

“வீட்டுக்கு வேலைக்கு வந்த புள்ளய மடக்கிட்டான்னு ஒனக்கும் குடும்பத்துக்கும் கெட்ட பேராயிரும்டா” என்றார்.

“அப்பா.. உங்க கூடப் பொறந்தவளுக்கோ, அம்மாவோட அண்ணனுக்கோ ஒரு பொண்ணு இருந்து, அது விதவையாகி நின்னா நான் அதைக் கட்டிக்கிறேன்னு சொன்னா இப்படி யோசிப்பீகளா? இல்ல எனக்கே ஒரு தங்கச்சி இருந்து அவள் இப்படி நின்னு என்ன மாதிரிப் படிச்ச ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா வேண்டாம்பீகளா? முத்தம்மாவ மட்டும் ஏன் பிரிச்சிப் பாக்கீக?” என்றேன். அம்மா வாயைச் சேலையால் பொத்திக்கொண்டாள்.

”விதவைங்கிற பெயரில்கூடப் பொட்டு இல்லையேடா. நீ என்னடான்னா அவளைப் போயிக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறியே ” என்றார்.

”விதவைன்னு வடமொழியில சொன்னாத்தான் பொட்டிருக்காது. கைம்பெண் அப்படின்னு தமிழ்ல சொல்லிப்பாருங்கப்பா. ஒண்ணுக்கு ரெண்டு பொட்டு இருக்கும்” என்றேன்.

“உன்னைய நினைச்சிப் பெருமைப் படறதா வேதனைப் படறதான்னு தெரியலியேடா” என்றார்.

“இதுல வேதனப் படுறதுக்கு என்ன இருக்கு?” என்றேன்.

”அவ குடும்பக் கட்டுப்பாடு வேற பண்ணிக்கிட்டான்னு சொல்ற. ஒன் இனிஷியல் போடக்கூட ஆள் இருக்காதேப்பா” என்றார்.

”அதுக்கென்ன? முத்தம்மா இருக்காள்ல” என்றேன். அம்மா என் தலைமுடியை வருடினார். 

முத்தம்மா எப்பொழுதும்போல் அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அவள் முகத்தில் முன் எப்போதும் நான் பார்த்திராத மகிழ்ச்சி நிலைகொண்டிருந்தது.


சுபம்.

Comments

  1. மிகவும் அருமையான ஒரு கிராமத்து காதல் கதை. நன்றாக உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107