உங்களில் ஒருத்தி 100
ஈவினிங்க் ஆக ஆக மலருக்கு உடம்பு குறுகுறுத்தது. எப்போதுடா போய் படுப்போம் என்று உட்கார்ந்திருந்தாள். நல்ல பிள்ளையாக... லேப்டாப்போடு உட்கார்ந்துகொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.
"என்னாச்சு அண்ணி... ஒருமாதிரியா இருக்கீங்க?" என்றாள்
தீபா.
"ஒன்னும் இல்லடி. கொஞ்சம் தலை வலிக்குறமாதிரி இருக்கு..." என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துகொண்டாள்.
"அண்ணா நீ பண்றது கொஞ்சம்கூட நல்லால்ல"
"ஏண்டி"
"அண்ணிக்கு ரெஸ்ட்டே கொடுக்க மாட்டேங்குறியாம். தூக்கிட்டு தூக்கிட்டு போயிடுறியாம்"
"சும்மா சொல்வாடி. நம்பாத"
"நானும்தான் பார்க்கிறேனே"
"தூக்கிட்டுப் போயி சும்மா பேசிட்டிருப்பேண்டி"
"அப்புறம் ஏன் அண்ணி கசங்கிப்போய் டயர்டா நடந்து வராங்க?"
"உன்ன...." - ராஜ் தீபாவை விரட்டினான்.
"என்னங்க... அவளை ஏன் துரத்துறீங்க!" என்று கேட்டுக்கொண்டே டீயோடு வந்தாள் மலர்.
"மொழச்சி மூணு இழை விடல. இது பேசுற பேச்சைப் பாரு... அண்ணன்கிட்ட பேசுறமாதிரியா பேசுதுங்க?..ஷபா.. இதுக்குத்தான் தங்கச்சிகளையெல்லாம் கரையேத்திட்டு அண்ணன்காரன் கல்யாணம் பன்னனும்போல. இவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிவச்சிடனும்..." என்றான்.
"கதிர் நல்ல பையனாத்தானே இருக்கார்"
"விவசாயம்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான். நான் என்ன செய்ய? கண்ணன் மாதிரியேதான் இவனும் இருக்கிறான்."
"தீபாவும் MBA. அவனும் MBA. அதான் யோசிச்சேன்"
"கம்பெனிக்காக உழைக்க விருப்பமிருக்குன்னு சொன்னா முடிச்சிடலாம். இல்லைனா நடக்காது" என்றான்.
மலர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பினாள். கெத்தாக நடந்துகொண்டாள். மாமியாரிடம் கொஞ்சிக்கொண்டிருக்காமல் ஸ்ட்ரிக்ட்டாக நடந்துகொண்டாள். நிஷாவைவிட இந்த வீட்டில் தான்தான் கொண்டாடப்படவேண்டும் என்று நினைத்தாள்.
அடுத்த நாளே நீச்சல் குளத்தில் விளையாட "ஏன் பக்கத்து வீட்டு பிள்ளைகளை அனுமதித்தாய்" என்று செக்யூரிட்டியை பிடித்து கத்தினாள். சிறுவர் சிறுமிகள் சிதறி ஓடினார்கள்.
"நான்தான் அண்ணி அவர்களையெல்லாம் விளையாடச்சொல்லியிருக்கேன்..." என்று நிஷா வந்து தன்மையாக சொன்னாள்.
"அவங்கள்ல யாராவது தண்ணில மூழ்கி, உயிருக்கு ஏதாவது ஆச்சுன்னா யாரு பதில் சொல்லுவா? நீ சொல்லுவியா? ராஜ்தானே பதில் சொல்லணும். இதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா? கொஞ்சமாவது படிச்சவங்க மாதிரி நடந்துக்கோங்க..." என்று வெடித்தாள்.
மோகனும் பத்மாவும் பதறிப்போய்... ஆனால் பதில் பேசமுடியாமல் நின்றார்கள்.
நிஷா ஏனோ தான் எந்த ஆதரவும் இல்லாமல் தனி மரமாக நிற்பதுபோல் உணர்ந்தாள்.
அன்று -
"நான் வேலையாக இருக்கிறேன், தொந்தரவு
செய்யாதீர்கள் என்று கண்ணன் போனில் சொல்லிவிட...." ராஜ் வருத்தத்தோடு
நின்றுகொண்டிருந்தான்.
நிஷா ராஜ்க்கு காபி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும்
பால்கனியில் நின்றுகொண்டிருந்தார்கள். காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. அவன்
கண்ணனோடு பேசி பேசி மூக்குடைபடுவது பிடிக்காமல்... வேறு வழியில்லாமல்... தயங்கி தயங்கி.. பேச்சை ஆரம்பித்தாள்.
"அண்ணா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"
"என்ன விஷயம் சொல்லு"
"நான் இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கறதா முடிவு பண்ணியிருக்கேன்"
"வாட்?"
"சீனுவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னா"
ராஜ் கோபமாக அவளைப் பார்த்தான். "நிஷா உனக்கு என்ன பைத்தியமா?"
"ப்ளீஸ்ணா"
"கண்ணன் உன்ன ராணி மாதிரி பார்த்துப்பார்டி. நான் அவர் கால்ல விழுந்தாவது உன்ன ஏத்துக்க சொல்றேன். யார் இந்த சீனு? ப்ளடி பாஸ்டர்ட்."
"அண்ணா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ எனக்கு சீனுகூட வாழத்தான் பிடிச்சிருக்கு"
"நிஷா உன் லெவல் என்ன அவனோட லெவல் என்ன? அவன் எப்படியோ உன் மனசை கெடுத்திருக்கான். நோ. நோ வே"
"அவன் என்மேல உயிரையே வச்சிருக்கான். என்ன நல்லா பார்த்துப்பான்"
"நிஷா ஸ்டாப் இட். என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது. கண்ணன்தான் உனக்கு ஏற்றவர். ஏதோ கோவத்துல டிவோர்ஸ்னு சொல்லிட்டார். அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவர்கூட வாழுற வழியைப் பாரு"
ராஜ் கோபம் தெறிக்க.... அவளிடம் கத்திவிட்டுப் போய்விட்டான். நிஷா கண்கள் கலங்க நின்றுகொண்டிருந்தாள்.
'ஐயோ என் தங்கச்சிக்கு என்னாச்சு? எது அவள் மூளையை இப்படி மழுங்கடித்தது?' - அவனுக்கு அவள் பேசியதை இன்னும் நம்பமுடியவில்லை. அவள் அப்படி சொன்னதற்கான காரணம் சுத்தமாக விளங்கவில்லை.
மறுநாள் - ஆபிசில் -
ராஜ் இருந்ததால், ஆஃபிஸில் கீ
போர்டில் டைப் பண்ணும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவ்வப்போது போன்
ஒலிக்கும் சத்தம்.
"வந்தனா சீனுவை என்கிட்ட அனுப்பு"
சிறிது நேரத்தில்... சீனு தயங்கித் தயங்கி வந்து நின்றான். ராஜ்
சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அவனைப்
பார்த்தான். அவன் பார்வையில் இருந்த வெறுப்பைப் பார்த்து சீனுவுக்கு கால்கள்
நடுங்கின.
"நிஷாகிட்ட என்ன சொல்லி வச்சிருக்க?"
"ஸார்"
"சொல்லுடா நிஷாகிட்ட என்ன சொல்லி அவளை மயக்கி வச்சிருக்க?"
"ஸார்"
"நிஷாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறியா?" - பாகுபலி ப்ரபாஸ் போல் அவனை சுற்றி சுற்றி நடந்துகொண்டே கேட்டான்.
"ஸ... ஸார்"
"ஐயோ சார் அப்படி எல்லாம் இல்ல!! என்ன சார் இதெல்லாம்?....னு அதிர்ச்சியாகி அழுது புலம்புவேன்னு நெனச்சேன். ஆனா நீ நிக்குறதை
பார்த்தா அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருக்கத்தான் செய்யுது இல்லையா?"
"ஸார்"
ராஜ் அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இதை எதிர்
பார்க்காத சீனு தடுமாறி கீழே விழுந்தான். கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு
அதிர்ச்சியோடு ராஜ்ஜைப் பார்த்தான்.
"ங்கோத்தா... உன்ன கொன்னே போட்டுடுவேன்" என்று அவன் ஷோல்டரில் ஓங்கி
ஒரு மிதி மிதித்தான்.
"ஸார்... எனக்கு தகுதி கிடையாதுதான். ஆனா நான் அவங்களை நல்லா
பார்த்துப்பேன்.... அவங்களை சந்த்..."
இதற்குள் ராஜ் சீனுவின் சட்டையை பிடித்து தூக்கி அவன் கண்ணத்தில்
மீண்டும் ஒரு குத்து விட.... அவனுக்கு பொறி கலங்கியது. கடவாயிலிருந்து ரத்தம்
வழிய.... நடுங்கிப்போனான். சாவை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.
ராஜ் தன் ரூம் கார்னரில் இருந்த
பாத்ரூமை காட்டிச் சொன்னான். "முகம் கழுவிட்டு என்கூட வா"
சீனுவுக்கு அவனிடம் கேள்வி கேட்க பயமாக இருந்தது. முகம் கழுவி வாயை
கொப்பளிக்க.... ரத்தம் ஓடியது. கர்ச்சீப்பால் வாயை ஒற்றிக்கொண்டே வந்தான்.
"பேசாம என் பின்னாடி வரணும்..." என்று சொல்லிவிட்டு ராஜ் நடக்க... சீனு தலையை குனிந்துகொண்டு அவன் பின்னாலேயே நடந்தான்.
ராஜ் அவனை காரில் ஏற்றிக்கொண்டு போய் தனது ஆட்கள் இருக்கும் பேட்டைக்குள்
நுழைந்தான். ஷர்மாவிடம் தள்ளிவிட்டான்.
"என்னா ஸார் இவனும் அந்த அரவிந்த் மாதிரியா?"
"ம்... என் தங்கச்சிக்கே ரூட்டு விட்டிருக்கான். அவ மனசை
கெடுத்திருக்கான். இனிமே அவ முகத்துலயே முழிக்கமாட்டேன். அவ வாழ்க்கைல குறுக்கிட
மாட்டேன்னு சொல்றவரைக்கும் அடிங்க. அதுவரைக்கும் பட்டினி
போடுங்க. கை கால் மட்டும் உடையாம பார்த்துக்கோங்க"
"ஸார் ஸார்... நான் நிஷாவை நல்லா பார்த்துக்கறேன் ஸார் அவங்களை
சந்தோஷமா வச்சிப்பேன் ஸார்.... அவங்களும் என்ன விரும்புறாங்க ஸார் ப்ளீஸ் ஸார்
ப்ளீஸ்"
"எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணம் முடிஞ்சி கணவனோடு
வாழ்ந்துக்கிட்டிருக்கிற என் தங்கச்சியை நீ நல்லா பார்த்துக்கறேன்னு சொல்லுவ"
"கண்ணன் சாரைவிட நான் நல்லா பார்த்துக்கறேன் ஸார். நிஷாவுக்காக
என்னனாலும் பண்ணுவேன் ஸார்"
"என்னனாலும் பண்ணுவியா? அப்போ சாவு"
ராஜ் சிகரெட்டை எறிந்துவிட்டு காருக்கு வந்தான். ஷர்மா ஓடி வந்தான். "அண்ணாத்த... அந்த அரவிந்த், என்ன விட்டுடுங்க விட்டுடுங்கன்னு
சொல்லி கெஞ்சுனான். இவன் மேடத்தை நல்லா பார்த்துக்கறேன்னு திரும்ப திரும்ப
சொல்றான்?"
"அப்படி சொல்றதை நிறுத்துறவரைக்கும் அடிங்க"
ஆபிஸ் போனதும் காமினி வேகமாக வந்தாள்.
"ராஜ்! சீனுவை எங்க கூட்டிட்டுப் போன?"
"சீனுவை நாலு நாள் அர்ஜென்ட்டா ஆபிஸ் ட்ரிப் அனுப்பியிருக்கோம்னு அவன் வீட்டுல சொல்லிடு."
"ராஜ்...!"
"எஸ். ஷர்மாகிட்டதான் விட்டுட்டு வந்திருக்கேன்"
காமினிக்கு கண்கள் கலங்கின. பேச முடியாமல் நின்றாள்.அதிகம் பேசினால் அப்படி என்ன சீனு மேல அக்கறை என்று கேட்பான். ராஜ் தொடர்ந்தான்.
"அவனுக்கு நிஷா வேணுமாம்"
"நிஷா வேணும்னு அவன் கேட்டானா? இல்ல சீனுதான் வேணும்னு நிஷா கேட்டாளா?"
ராஜ் மெளனமாக இருந்தான்.
"ராஜ் அன்னைக்கு உன் வீட்டுல நானே பார்த்தேன். நிஷாவே அவன் கைபிடிச்சி இழுத்து அவனை கட்டிப்பிடிச்சிக்கிட்டதை நானே நேர்ல பார்த்தேன்"
ராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. பேசவில்லை. 'நிலமை முற்றியிருக்கிறது. காமினிக்குகூட தெரிந்திருக்கிறது.'
"ஏன் என்கிட்ட சொல்லல?"
"முழுசா விவரம் தெரியாம எப்படி நிஷா மேல பழி போடுறது? பட் தேர் இஸ் ஸம்திங்க் ராங்க் பெட்வீன் கண்ணன் அன்ட் நிஷா. ஐ திங்க் நிஷா ஐஸ் ஆல்ரெடி லாஸ்ட் ஹெர் டு சீனு"
"காமினி...." - அவன் கோபமாகக் கத்தினான்.
"ஐ திங்க் அவனும் உன்னை மாதிரி... பொண்ணுங்க விஷயத்துல வீக்கோ என்னவோ. ஆனா சரியாயிடுவான். நிஷா விரும்புறதுல ஞாயம் இருந்ததுன்னா.... சீனுவை அவளுக்கு கட்டிக் கொடுத்துடு. அவ சந்தோஷமா இருப்பா"
"காமினி ஸ்டாப் இட்."
"ராஜ்..."
"லீவ் மி அலோன். இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதே" - அவன் திரும்பி நின்றுகொண்டு கத்தினான்.
அதேநேரம் -
டிபார்ட்மென்டிலிருந்து அழைப்பு வந்திருந்ததால்... கண்ணன் காவ்யாவோடு சென்னையில் வந்து இறங்க... ஒருசில நிருபர்கள் அவரை
சூழ்ந்துகொண்டார்கள்.
"சார் கவர்ன்மெண்டோட மெடிக்கல்
கவுன்சில்ல உங்களுக்கு முக்கிய பதவி கொடுத்திருக்காங்களே... அதை பற்றி சொல்லுங்க"
"ஏழைகளின் உயிர் காக்க நம்ம மாநிலத்துலயே ஒரு சயின்டிஸ்ட் இருக்கார்னு
பேப்பர்ல வந்திருக்குது அத பத்தி என்ன சொல்றீங்க"
கண்ணனிடம் அவர்கள் கேள்வி கேட்பது TV யில்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. காவ்யா பெருமையோடு அவர்கூட நின்றுகொண்டிருந்தாள்.
"ஸார் கேன்சருக்கு சைடு எபக்ட்ஸ் இல்லாம ஜெனிரிக் மெடிஸின்
கண்டுபிடிக்கணும்னு எப்போ தோணியது?"
"ஸார்...."
"ஸார்...."
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்க...
கடைசியில் அந்தக் கேள்வியும் கேட்கப்பட்டது
"ஸார் உங்ககூட நிக்குறாங்களே இந்தப் பெண் யாரு?"
"இவங்க காவ்யா. இவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எனக்கு
ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க."
கேமரா அனைத்தும் காவ்யா பக்கம் திரும்பின.
காவ்யாவுக்கு அதுதான் வாழ்வின் சிறந்த தருணம் என்று சொல்லலாம். கண்ணனின் வார்த்தைகள் அவளுக்கு அழுகையை வரவைக்க... அடக்கிக்கொண்டு நின்றாள்.
"ஸார் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே"
"அவங்களும் நானும் ம்யூச்சுவலா பிரிஞ்சி வாழ்ந்துட்டிருக்கோம். அவங்களுக்கு இதுல சந்தோஷம்தான். நோ மோர் பர்சனல் க்வெஸ்டின்ஸ்"
"மேம் மேம் நீங்களாவது சொல்லுங்க. ஸார்கூட எப்போதிருந்து பழக்கம்?"
காவ்யா பூரிப்புடன் கண்ணனின் கை பிடித்துக்கொண்டு நடந்தாள். கண்ணன் கார் கதவை திறந்துவிட... மகிழ்ச்சியோடு உள்ளே உட்கார்ந்தாள். கண்ணனின் கைகளை நன்றியோடு பிடித்துக்கொண்டாள்.
"உங்களை நான் சந்தோஷமா வச்சிப்பேங்க... ஐ லவ் யூ...." - கண்ணீர் மல்க சொன்னாள்.
தொடரும்...
Comments
Post a Comment