உங்களில் ஒருத்தி 87

முழு தொடர் படிக்க

லண்டன் - 

( சில நாட்களுக்கு முன் )

காவ்யா குளித்து முடித்து தலை துவட்டிக்கொண்டிருந்தாள். தான் அழகாக இருப்பதை உணர்ந்தாள். இந்த மாதிரி மனதார தன் அழகை ரசித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன அவளுக்கு. கணவன் விபத்தில் இறந்ததிலிருந்து எத்தனை எத்தனை கஷ்டங்கள்! 


வாழ்க்கை அநியாயமாய் பறிபோய்விட்டதே என்று நினைத்து அழுது அழுது ஒரு வருடம் கழிந்தது. அதன்பிறகு, தன்னைப் பார்த்து அம்மாவும் தங்கையும் கவலைப்பட்டு அழுவதைப் நினைத்து அவர்களுக்காக மனதைத் தேற்றிக்கொண்டே ஆகவேண்டியதாயிற்று. 

அம்மா இன்னும் சில நாட்களில் ரிட்டயர்ட் ஆகிவிடுவாள். அதன்பிறகு குடும்பத்தைத் தாங்கவேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது. இப்போது உதவித்தொகையில் ரிசர்ச். தூரத்துச் சொந்தமான லாரன்ஸ் அறிவுரையின் பேரில்தான் ரிசர்ச்சில் சேர்ந்தாள். முடிந்ததும் ஏதாவதொரு கல்லூரியில் லெக்சரர் ஆகிவிடலாம் என்பது உறுதியான நம்பிக்கை. புருஷன் இல்லையென்பதால் ஈஸியாக படுத்துவிடுவாள் என்று விடலைப் பையன்கள் முதல் கிழவன்கள் வரை காமப்பார்வை பார்க்க... தன்னை அலங்கரித்துக் கொள்ளவே அவளுக்கு மனசு வரவில்லை. உண்மையான அன்புக்காக ஏங்கினாள். புடவையைத் துளைத்துக்கொண்டு தன்னைப் பார்க்காத ஒரு ஆணின் கண்களுக்காக ஏங்கினாள். அந்தக் கண்கள் கண்ணணிடம் இருந்தன.

கண்ணனின் சின்சியாரிட்டி அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அதன்பிறகு அவரது அறிவுத் திறமை, மற்றவர்கள் அவர்மேல் வைத்திருக்கும் மரியாதை எல்லாமே அவளை அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்க்க வைத்தன. 

'இவர் மனைவி எவ்வளவு கொடுத்து வைத்தவளாக இருப்பாள்??' என்று நினைத்து நினைத்து பொறாமைப்படுவாள். 

அவர் அவளோடு லண்டன் வர ஒத்துக்கொண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தாள். சில நாட்கள் அவரோடு காதலி போல பேசி சிரித்து சந்தோசமாக இருக்க அவள் மனது ஆசைப்பட்டது. மனதிலுள்ள பாரத்தையெல்லாம் அவரிடம் பேசி தனித்துக்கொள்ள வேண்டும், அவர் தோளில் சாய்ந்து ஆறுதல் அடைய வேண்டும் போல் அடிக்கடி தோன்றும். லண்டனில் இதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினாள். மற்றவர்கள் பார்ப்பார்களே என்ற பயம் இல்லாமல் அவர் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கலாம் என்று ஆசைப்பட்டாள். 

சென்னையில்.. லேபில்.. அன்று அவர் நிஷாவை விட்டுப் பிரிந்துவிட்டதை சொன்னபோது... அவளுக்கு அதிர்ச்சி. ஆனால் சிறிது நேரத்திலேயே.. கண்ணன் எனக்கு கிடைக்கவேண்டும் என்றுதான் இப்படி நடந்திருக்கிறதோ என்று நினைத்தாள். அவர் வேறு யாருக்கும் சொல்லாமல் தன்னிடம் மட்டும் அவரது பர்சனல் விஷயத்தை சொன்னதிலிருந்து அவளுக்கு அவருடைய நெருக்கமானவர்களில் ஒருத்தியாக தான் இருப்பது புரிந்தது. டிவோர்ஸ்க்கான காரணம் கேட்டபோது, தான் வேலை வேலை என்றிருப்பது நிஷாவுக்குப் பிடிக்கவில்லை என்றார். இதற்காகவா இந்த முடிவு? என்று திரும்பத் திரும்பக் கேட்டபோது இறுகிய முகத்துடன் நடந்த எல்லாவற்றையும் சொன்னார். ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். 

கலங்கிய கண்களுடன், "அவளுக்கு நான் அவள்கூடவே எப்பொழுதும் படுத்துக் கிடைக்கணும் போல..." என்று வருத்தமுடன் சொன்னார். 

காவ்யாவுக்கு அவரை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு ஆறுதல் சொல்லவேண்டும்போல் இருந்தது. "உங்களுக்கு நான் இருக்கிறேன்" என்று சொல்லவேண்டும்போல் இருந்தது. அவருக்காக உண்மையாக வருந்தினாள்.

அதுவரை அவரது தோளில் சாய்ந்து ஆறுதலடைய வேண்டும் என்று நினைத்தவள், அவருக்கு ஆறுதலாக இருக்க ஆசைப்பட்டாள். அவரைக் காதலனாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.


வந்து சேர்ந்த நாள், லாரன்ஸ் கண்ணனிடம் அவரது ரிசர்ச் progress பற்றி கூலாக கேட்க, அப்போது கண்ணன் தான் செய்திருக்கும் வேலைகள் பற்றி விவரிக்க விவரிக்க, லாரன்ஸ் எழுந்தேவிட்டார். கேன்சரை ட்ரீட் பண்ணும்போது கீமோதெரபியின் வீரியத்தை குறைத்து, சைடு எபக்ட்ஸ் இல்லாமல் ட்ரீட் பண்ணுவதற்கான மூலப்பொருட்க்கள் பற்றிய தன்னுடைய ரிசர்ச் பேப்பர்களை ஆல்ரெடி தான் சப்மிட் செய்துவிட்டதை அவர் சொன்னபோது லாரன்சுக்கு வேர்த்தேவிட்டது. 

"கீப் இட் கான்பிடென்ஷியல் மிஸ்டர். கண்ணன்... மெடிசின் மாபியால ஒரு சிலரால உங்களுக்கு ஆபத்து வரலாம்." 

"நீங்க காவ்யாவோட மென்டர்னு தெரியும். அதனாலதான் உங்ககிட்ட சொன்னேன். அதோட... கவர்ன்மென்ட்ல இருந்து எனக்கு ஹெல்ப் கிடைக்கும்னு நம்புறேன்."

"லேப் உங்களோடது. எந்த அப்ரூவல் வேணும்னாலும் நான் வாங்கித்தரேன்.... நீங்க வந்திருக்கிறதே எங்களுக்கு பெருமை..." - லாரன்ஸ் பவ்யமாகச் சொன்னார்.    

காவ்யா கண்ணனை நினைத்து வியந்துகொண்டிருக்க... கண்ணனோ வேலையில் கவனம் செலுத்த முடியாமல், லேபுக்குப் போகாமல் நிஷாவை நினைத்து குடிக்க ஆரம்பித்தார். 

ஒருநாள் அவருக்கு நிஷாவிடமிருந்து போன் வந்தது.

"நல்லாயிருக்கீங்களா கண்ணன்?"

"ம்.. இருக்கேன்"

"உங்க மனசை குணப்படுத்த முடியாத அளவுக்கு கஷ்டப்படுத்திட்டேன். இனிமேலும் உங்க கூடவே இருந்து உங்களை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னா... நாம பிரிஞ்சிருக்கிறதுதான் சரி. உங்களுக்குன்னு நீங்க ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கணும். நான் எப்பவும் உங்களுக்காக pray பண்ணுவேன்"

கண்ணன் பேசாமல் இருந்தார். 'பண்றதெல்லாம் பண்ணிட்டு....'

"என்னப்பத்தி தப்பா நீங்க யார்கிட்டயும் சொல்லல. உங்க வீட்டுல கூட சொல்லல. ரொம்ப தேங்க்ஸ் கண்ணன்!" - அவள் குரல் தழுதழுத்தது. இடையிடையே "நான் இப்படி போன் பண்ணினா தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்" என்று சொல்லி போனை வைத்தாள்.

கண்ணன் இன்னும் அதிகமாக குடித்தார். காவ்யா பதறிப்போனாள். ஆறுதல் சொன்னாள். கண்ணன் அவள் கையைப் பிடித்துக்கொண்டு அழுதார். தான் செய்த தவறுகளை சொல்லி அழுதார். நிஷா செய்த தவறுகளை சொல்லி சுவரில் குத்தினார். காவ்யா அவரை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு கொண்டுவந்தாள். மெதுவாக அவருக்கு எடுத்துச் சொன்னாள். அவர்மேல் ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என்பதை விளக்க முயன்றாள்.

"கண்ணன்.. யாருமே இங்க பர்பக்ட் கிடையாது. எல்லார்கிட்டயும் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். உங்ககிட்ட இருக்கிற எத்தனையோ நல்ல குணங்கள் எப்படி அவளுக்குத் தெரியாமப் போச்சு?"

"காமம் அவ கண்ணை மறைச்சிருக்கு"

"நீங்க அந்த காமத்தை கொடுக்கமாட்டேன்னு சொல்லலையே..."

"நான் கொடுத்தது அவளுக்குப் பத்தல"

"நீங்க ஒன்னும் கொடூர மனசுள்ளவர் கிடையாது. கொலைகாரனோ பொம்பளை பொறுக்கியோ கிடையாது. அவ நினைச்சிருந்தா அவளுக்கு தேவையானதை உங்ககிட்டயே அனுபவிச்சிருக்கலாம். பொறுமை இல்லாத முண்டம். அரிப்பெடுத்தவளா இருந்திருக்கா"

"காவ்யா ப்ளீஸ். அவளை திட்டாதே. அவளே தப்பு பண்ணிட்டோமேங்கிற குற்ற உணர்ச்சிலதான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தா. நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லைங்க...ன்னு அவளேதான் சொன்னா"

"இல்ல கண்ணன்... அந்த சீனு ரொம்ப கேவலமானவனா இருந்திருக்கான். அவனை நம்பி இவ எப்படி போறான்னுதான்... டிஸ்கஸ்டிங்க்."

"அவ நல்லவ காவ்யா"

"நல்லவளா இருந்து என்ன புண்ணியம்? எந்த சூப்பர் மேனாலயும் ஒரு பொண்ணை எல்லா நேரமும் திருப்திப்படுத்த முடியாதுன்னுகூட தெரியாத அடிமுட்டாளா இருந்திருக்காளே."

"அவளுக்கு அவளை ரசிச்சிக்கிட்டே இருக்கணும். அவகூட விளையாண்டுக்கிட்டு அவளை சிரிக்க வச்சிக்கிட்டே இருக்கணும். எனக்கு படிப்பு இருக்கு. ஆனா அவ எதிர்பார்க்கிற திறமை இல்லையே."

"காவ்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது."

"கண்ணன், இனிமே உங்களை குறைச்சி என்கிட்ட பேசாதீங்க. இப்படி எல்லா பொண்ணுங்களும் நினைச்சுக்கிட்டு தங்களை சிரிக்க வைக்கிறவன்கூட போயிட்டா நாட்டுல மக்கள் தொகை மட்டும்தான் கூடியிருக்கும். வேற ஒரு முன்னேற்றமும் வந்திருக்காது. you are in this world for some reason, not to fuck and roam around her all the time!"

கண்ணன் அவளை நிமிர்ந்து பார்த்தார். "ஸாரி காவ்யா..." என்று கண்களை துடைத்தார். அவள் அவரது முகத்தை தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள். ஆறுதலாக அவர் தலையை கோதிவிட்டாள்.  

அவளது அரவணைப்பு அவருக்கு இதமாக இருந்தது. மனதிலுள்ள பாரங்கள் எல்லாம் இறங்கி மனம் லேசானதுபோல் உணர்ந்தார். அப்படியே அவள் மார்புகளுக்கு நடுவே ஆயுசுக்கும் இருந்துவிட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைத்தார். கண்களில் கண்ணீர் முட்டியது.

காவ்யா அவர் முகத்தை நிமிர்த்தி அவர் நெற்றியில் முத்தமிட்டாள்.

"இனிமே நீங்க இப்படி குடிச்சி உடம்பை கெடுத்துக்கக் கூடாது. பழைய கண்ணனா ரிசர்ச்ல கான்சென்ட்ரேட் பண்ணனும் சரியா?"


"ம்..."

"இங்க என்ன செய்யப்போறதா உத்தேசம் கண்ணன்?"

"நிறைய கேள்விகள் என்னைப்பார்த்து கேட்கப்படும். சப்போர்ட்டிங்க் டாகுமெண்ட்ஸ் நிறைய ரெடி பண்ணவேண்டியிருக்கு. இதை நான் அங்கேயே பண்ண முடியும். உண்மையை சொல்லப்போனா உனக்காகத்தான் வந்தேன்."

காவ்யாவுக்கு மனம் குளிர்ந்து. 

"லாரன்ஸ் ஸார்கிட்ட ஏன் எல்லாத்தையும் ஒப்பிச்சீங்க?"

"நான் என் வேலைல ஒரு பத்து பர்சன்ட்கூட அவர்கிட்ட சொல்லல காவ்யா. அவுட்லைன்தான் சொன்னேன். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்"

காவ்யா ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள். உரிமையாகச் சொன்னாள். 

"இப்படி சோகமா இருக்கக்கூடாது. அப்புறம் எனக்குக் கோபம் வரும்"

கண்ணன் அவளை நன்றாக பார்த்தார். சைடில் முடியை வகிடெடுத்து இருபுறமும் போட்டிருந்தாள். பாசமிகு அழகான கண்கள். மூக்கில் ஒரு சின்னஞ்சிறிய மூக்குத்தி. வரைந்து வைத்ததுபோன்ற உதடுகள். அவள் முகத்தில் ஒவ்வொரு பார்ட்டும் எடுப்பாக இருந்தன. உதடுகள் அநியாயத்துக்கு அழகாய் இருந்தன. காதில் ஜிமிக்கி அழகாக தொங்கிக்கொண்டிருந்தது.

அவளோடு பேசிக்கொண்டிருப்பது அவருக்கு இதமாக இருந்தது. அவர் மனதில் எஞ்சியிருந்த இன்னொரு பாரத்தை கொட்டினார்.

"வேலை, வீடு - ரெண்டையும் நான் பேலன்ஸ் பண்ணியிருக்கணும். நான் ஒரு பக்கமே கான்செண்ட்ரேட் பண்ணிட்டேன். இது தப்புதான?"

"அதுக்காக நிஷா இன்னொருத்தனை தேடிப் போற அளவுக்கு நீங்க அவளை ஒன்னும் சுத்தமா கண்டுக்காம இல்லையே."

"இப்போ குழந்தை பெத்துக்க வேணாம்னு நான் தள்ளிப் போட்டிருக்கக்கூடாது. ஐ ஆம் எ ஸ்டுப்பிட்."

"அவ நினைச்சிருந்தா இதை சரி பண்ணியிருக்கலாம். அவளுக்கு குடும்பத்துல உள்ள பிரச்சினையை சரிபண்ணிக்கிட்டு நல்லா வாழுறதைவிட அவன்கூட படுக்குறதுதான் ஈஸியா இருந்திருக்கு."

"அவன் அவளை ஆராதிக்குறான். நானே நேர்ல பார்த்தேன். அவளும் அதைத்தான் விரும்புறா."

"கண்ணன், ஒண்ணு புரிஞ்சிக்கோங்க. உலக அழகியா இருந்தாலும், அவளை கட்டிக்கிட்டவனுக்கு கொஞ்ச நாள்ல அவ சலிச்சிப் போயிடுவா. எவ்வளவு பெரிய பேரழகியா இருந்தாலும், தன்கூட படுத்திருப்பவனுக்கு தினமும் அவளால காமத்தை வரவழைக்க முடியாது. இத அவ புரிஞ்சிக்கும்போது உங்க அருமை புரியும். உங்க அருமையை அவ ஒருநாள் புரியிஞ்சிக்கத்தான் போறா."

அவள் அவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து இப்படிச் சொல்ல... இருவரின் மூச்சுக்காற்றும் ஒருவரை ஒருவர் வருடின. இருவரின் உதடுகளும் துடித்தன. கண்ணன் முத்தமிடுவதுபோல் அவள் உதட்டுக்கு அருகே தன் உதடுகளைக் கொண்டுவர... அவள் தலையைக் குனிந்துகொண்டாள். அவள்மேல் ஏற்பட்டிருந்த மதிப்பில், கண்ணன் அவளிடமிருந்து விலகிக்கொண்டார். 

இருவருக்குமே அவர்கள் உடலில் பரவிய இன்ப சுகம்.... இன்ப அவஸ்தையாக இருந்தது. 

கண்ணன் அன்றிலிருந்து சந்தோசமாக வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவ்யா சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க முடிவு செய்தார். அவள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தார்.

'என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க கண்ணன்....' என்று கேட்க காவ்யாவுக்கு தயக்கமாக இருந்தது. எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டால்? இதுக்காகத்தான் என்கூட பாசமா பழகுறியா? என்று தன் அன்பை கொச்சைப்படுத்திவிட்டால்?

அவள் அமைதி காத்தாள். கண்ணன் அவளை தயங்காமல் ரசிப்பதை... அவள் கையைப் பிடித்துக்கொண்டே நடப்பதை... உரிமையோடு அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடப்பதை... அந்த சுகத்தை... அனுபவித்தாள்.

அன்று காலை - 

சிறியதாய் வட்டப் பொட்டு வைத்துக்கொண்டு பீக்காக் க்ரீன் கலரில் சுடி மற்றும் லெக்கின்ஸ் போட்டுக்கொண்டு சந்தன கலர் துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தாள் காவ்யா. 'இத்தனை நாட்கள் இவ்வளவு அழகையும் எங்கே வைத்திருந்தாய் காவ்யா?' என்று தன்னைத்தானே கேட்டுச் சிரித்துக்கொண்டாள். அம்மா என்ன நினைப்பார்களோ, பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை மறந்து, முடியை அழகாக ப்ரீயாக தவழவிட்டாள். தனக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்கிற சந்தோஷத்தில், கடவுளை மனதார கும்பிட்டுவிட்டு, அழகாக நடந்து பக்கத்து வீட்டுக்குச் சென்று, தயக்கத்துடன் கண்ணனின் வீட்டுக் கதவை தட்டினாள்.  

"ஹேய்.. காவ்யா... குட் மார்னிங்க். வா வா உள்ள வா"

"போலாமா..." என்று கேட்டுவிட்டு வாசலிலேயே நின்றாள். 

"இதோ ஒன் மினிட்"

கண்ணன் வேக வேகமாக ஷூவை மாட்டிக்கொண்டு வந்தார். லாரன்ஸ் அவர்களுக்கென்று அரேன்ஜ் பண்ணியிருந்த காரில் இருவரும் பின்னால் அமர்ந்துகொள்ள... காவ்யா அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். கண்ணன் அவளை கண்கள் விரிய ரசித்துப் பார்த்தார்.

"ரொம்ப அழகா இருக்க.... காவ்யா"

அவள் சிரித்துக்கொண்டே இடது கையால் முடியை ஒதுக்கிவிட்டாள். அவர் தோளில் சாய்ந்துகொண்டாள். கண்ணன் அவளுக்குப் பின்னால் கையைக் கொடுத்து அவளை தோளோடு சேர்த்து அனைத்துப் பிடித்துக்கொண்டார். முடியை படிய வாரிக்கொண்டு, எண்ணெய் வழியும் முகத்துடன், சோகமான கண்களுடன் இதுவரை காவ்யாவை பார்த்திருந்த அவருக்கு, அவள் இப்போது பேரழகியாகத் தெரிந்தாள். 'இவள் எனக்காகவே பிறந்திருக்கிறாள்' என்று அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டு வந்தார். 

லேபுக்குள் நுழைந்ததும் இருவருமே பிஸியாகிப் போனார்கள். மதியத்துக்கு மேல்தான் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். ஈவ்னின்க் ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல... கண்ணன் நேரம் போவது தெரியாமல் வேலையில் ஆழ்ந்திருந்தார். காவ்யா அவருக்கு உதவியாக வந்து நின்று சிறு சிறு வேலைகள் செய்துகொண்டிருந்தாள்.  

"உனக்கெதுக்கு சிரமம்? ரெஸ்ட் எடு. இல்லைன்னா வீட்டுக்குப் போ"

"பரவாயில்லை கண்ணன். ரெண்டு பேரும் சேந்தே போலாம்"

"ஹ்ம்ம்.... ஓகே. அப்போ என்கிட்டே என்ன கேட்க நினைக்குறேங்கிறதை கேட்டுடு. அப்போலேர்ந்து பார்த்துட்டே இருக்கியே" 

காவ்யாவுக்கு சிலிர்ப்பாக இருந்தது. 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று கேட்க ஆசையாக இருந்தது. 'வேணாம் அவசரப்படவேணாம். அவர் மனதில் இன்னும் நிஷா இருந்தால்? என்னை ஒரு க்ளோஸ் ப்ரண்டாக மட்டுமே நினைத்துப் பழகிக்கொண்டிருந்தால்?'

"போகும்போது வெஜிடபிள்ஸ் வாங்கிட்டுப் போகலாம். இனிமேல் என்கூடவே சாப்பிடுங்க. நான் சமைச்சித்தரேன்"

கண்ணன் அவளை நிமிர்ந்து பார்த்தார். பொண்டாட்டி மாதிரி... அவள் தன்னோடு க்ளோஸாக இருக்க ஆசைப்படுவது, பேசுவது அவருக்குப் பிடித்திருந்தது. 

"ஊர்ல உன்ன இப்படி அழகான ட்ரெஸ்ல பார்த்ததே இல்லையே. ஏனோ தானோன்னு வருவ?"

"நம்ம ஊர் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே"

கண்ணன் அவளை நினைத்து வருந்தினார். 'பாவம் இத்தனை நாட்களும் பிடித்த மாதிரி உடை உடுத்தக்கூட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறாள்!'

அவளுக்கு அருகில் வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு பரிவோடு அவளைப் பார்த்துச் சொன்னார். 

"வா வீட்டுக்குப் போகலாம்"

காவ்யாவுக்கு சிலிர்ப்பாக இருந்தது. மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. 

"வேலை இருக்குன்னு சொன்னீங்க?"

"இருக்கத்தான் செய்யுது. ஆனா... உன்கூட இருக்க ஆசையா இருக்கு."

காவ்யா கண்கள் விரிய... புன்முறுவலோடு அவரைப் பார்த்தாள். 'உன்கூட இருக்க ஆசையா இருக்கு...' என்ற அவரது வார்த்தைகள் அவளை என்னவோ செய்தன. வறண்டு கிடந்த அவள் இதயத்தில் சட்டென்று அடைமழை பெய்ததுபோல் இருந்தது. அந்த வார்த்தையில் உணர்ச்சிவசப்பட்டு, கண்களை மூடிக்கொண்டு தனது தவிக்கும் உதடுகளை அவர் உதட்டருகே கொண்டுபோக... கண்ணன் சட்டென்று விலகினார்.  

"காவ்யா... என்ன இது?"

காவ்யாவுக்கு இதயமே உடைந்ததுபோல் இருந்தது. கண்களில் நீர் கோர்த்தது. தலையை கவிழ்ந்துகொண்டாள். 

"ஸ... ஸாரி கண்ணன்"

அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவளையே அவளுக்குப் பிடிக்கவில்லை. 'சீப்பாக நடந்துகொண்டுவிட்டேனோ' என்று திரும்பி நின்று கண்கலங்கினாள். 

"காவ்யா... ஏய்... என்னாச்சு?"

அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பினாள்.

"வா வீட்டுக்குப் போகலாம்." - அவர் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார். அவள் தர்மசங்கடத்தோடு அவரோடு சேர்ந்து நடந்து வந்தாள். காரில், பேசாமல் வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள். 'புருஷன் இல்லாதவள் உனக்கு உதட்டு முத்தம் கேட்குதாடி....' என்று அவள் மனசாட்சி கோபமாகக் கேட்க... மறுபடியும் கண்களில் கண்ணீர் பூத்தது. 'கண்ணன் என்ன நினைத்திருப்பார்? ஏன் இப்படி நடந்துகொண்டேன்? என் மதிப்பை நானே கெடுத்துக்கிட்டேனே' என்று மனதுக்குள் அழுதாள்.

வீட்டுக்குப் போகும் வழியில்  ஷாப்பிங் மாலில், காய்கறிகள் வாங்க இறங்கினார்கள். அவர் டிராலியைத் தள்ள.. இவள் அவர் முகத்தைப் பார்க்காமல்  தேவையான பொருட்களை கட கடவென்று எடுத்துப் போட்டாள். பில் போடும்போது அவள் தன் பொருட்களை தனித்தனியாகப் பிரிக்க... அவர் அவள் கையைப் பிடித்துத் தடுத்தார். அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

"ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் பில் போடப் போறோம். எப்பவுமே." - அவர் அழுத்தமாகச் சொன்னார். காவ்யாவுக்கு சுகமாக இருந்தது. 

வீட்டுக்குப் போனதும் அவள் துப்பட்டாவை மடித்து வைத்துவிட்டு அவருக்கு வேகமாக காபி போட.. அவர் பழங்களை டைனிங்க் டேபிளின்மேல் அடுக்கி வைத்தார். காய்கறிகளை பொறுப்பாக அவளது ப்ரிட்ஜில் அடுக்கினார். 

"இருக்கட்டும் கண்ணன்.. நான் பார்த்துக்கறேன்..." - காபியோடு வந்து நின்றுகொண்டு சொன்னாள். 

ப்ரிட்ஜ்ஜை மூடிவிட்டு கண்ணன் எழுந்து நின்றார். அவளைப் பார்த்துக்கொண்டே காபியை வாங்கிக் குடித்தார். இரண்டு மடக்கு குடித்துவிட்டு காபி கப்பை டேபிளில் வைத்தார். 

"இனிப்பு. ... பத்தலையா?" - தயக்கத்தோடு கேட்டாள்.

"ம்..."

"இருங்க... சுகர் எடுத்துட்டு வரேன்..."

"அதுக்கு எதுக்கு கிச்சனுக்குப் போற?"

காவ்யா அவரைப் புரியாமல் பார்க்க.... கண்ணன் அவளை இழுத்து அணைத்து நச்சென்று அவள் உதட்டில் முத்தமிட்டார்.  

இந்த திடீர் முத்தத்தை எதிர்பார்க்காத காவ்யா இன்ப அதிர்ச்சியோடு இமைகள் படபடக்க அவரைப் பார்க்க.... கண்ணன் அவளது உதடுகளைக் கவ்வி இழுத்துக்கொண்டு சுவைக்க.... காவ்யா இரண்டு வருடங்கள் கழித்து கிடைக்கும் முத்த சுகத்தை.... அனுபவித்தாள். அவளையும் அறியாமல் கண்களை மூடிக்கொண்டாள். 

நன்றாக அவளது இரு உதடுகளையும் மாற்றி மாற்றி சுவைத்துவிட்டு, அவளது ஏங்கிய உதடுகளில் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார் கண்ணன். காவ்யா தன்னை மறந்து அவருக்கு உதடுகளைக் கொடுத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். 

முத்தம் நின்றதும், கிறங்கிய கண்களை லேசாகத் திறந்து பார்த்தாள். அவரைப் பார்த்ததும் சட்டென்று அவள் கண்களில் கண்ணீர் முட்டியது. 

"ஐ ஆம் வெரி வெரி ஸாரி காவ்யா... ப்ளீஸ்... ப்ளீஸ்...அழாத ப்ளீஸ்....."

காவ்யா அவரைத் தள்ளிவிட்டாள். 

"லேப்ல ஏன் அப்படிப் பண்ணீங்க?"

"ப்ளீஸ் காவ்யா. லேப் எனக்கு எப்பவுமே கோவில் மாதிரி. அப்படித்தான் நினைச்சிப்பேன். அதான்... திடீர்னு நீ முத்தம் கொடுக்க வந்ததும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ஸாரிடா... ஸாரிடா செல்லம்"

காவ்யா கண்ணீரோடு.... வேகமாக அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அவர் உதடுகளைக் கவ்விக்கொண்டாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107