உங்களில் ஒருத்தி 105
காரின் பின் ஸீட்டுக் கதவைத் திறந்துகொண்டு நிஷா இறங்கினாள்.
சீனு அதிர்ந்தான். திகைத்தான்.
நிஷா முன்னால் இப்படி ஒரு தப்பான சூழலில் மாட்டுவோம் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன. ராஜ் சொன்னபோது, சீனு அப்படி பண்ணமாட்டான், சாதாரணமாகத்தான் அங்கே போயிருப்பான் என்று வாதிட்டாள். ஆனால் அவன் சீனுவைப்பற்றி சொல்லச் சொல்ல... துக்கம் தொண்டையை அடைத்தது. அவளுக்கு, ஸ்கூலிலும் சரி, போகிற வருகிற இடங்களிலும் சரி.... திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி... எத்தனையோ பேர் தனக்கு propose பண்ணியதும்... அதை அவள் கட்டுப்பாடாக தவிர்த்ததும் நினைவுக்கு வந்து வந்து போனது. சமீபமாகக்கூட வினய்.. அப்புறம் ஷாப்பிங்க் மாலில் ஒரு நார்த் இண்டியன்.. இப்படி யாரிடமும் மடங்காத தனக்கு... சீனு இப்படி துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
கடவுளே சீனு மஹாவோடு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அவன் சுவரேறி வெளியே குதிப்பதைப் பார்த்ததும்.... இதயமே வெடித்துவிட்டது.
தன்னை நம்பியிருந்த கண்ணனுக்கு தான் உண்மையாக இல்லாததால்தான் தனக்கு இப்படி நடக்கிறதா என்று தோன்றியதும் அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்றியது.
அவள் கண்ணீர் வடிய நிற்பதைப் பார்த்ததும் சீனுவுக்கு அவள் மிகுந்த வேதனையோடு நிற்கிறாள் என்பது புரிந்து போனது.
"நிஷா....."
சீனு தவிப்போடு அவளைத் தொட கையை நீட்ட, அவள் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள். அவளது வேகமும் கோபமும் பார்த்து அவன் சிலையாக நின்றான்.
"என்னத் தொடாத. உள்ள மஹா கூட இருந்தியா?"
"நிஷா...."
"சீனு சொல்லு உள்ள மஹாகூட இருந்தியா??" - நிஷா அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள்.
"நிஷா... ப்ளீஸ்.... ந... நான்...."
"நான் மோசம் போயிட்டேன் சீனு........" - நிஷா இரு கைகளையும் முகத்தில் வைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள். என் வாழ்க்கையே போச்சே.... என்று... நிற்கமுடியாமல்... காரில் சாய்ந்துகொண்டே கீழே உட்கார்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
நிஷாவை அவன் அந்தக் கோலத்தில் பார்த்ததேயில்லை. "நிஷா.... அழாதே... என்ன இது!!" என்று அவன் அவள் கண்ணீரைத் துடைக்க வர, "என்னத் தொடாத!!!!" என்று கத்தினாள்.
சீனு கலக்கத்தோடு, பின்னால் திரும்பி ராஜ் வருகிறானா என்று பார்த்தான். "நிஷா நீ தேவையில்லாம ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணுற. ப்ளீஸ்..." என்க, அவள் எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள்.
"நான் என்ன கேட்டேன். நீ எனக்கு மட்டும்தான்னு இருக்கணும்னு கேட்டேன். எனக்காக உன்னால இதுகூட பண்ண முடியலைல்ல?"
"நிஷா..."
"சொல்லுடா எனக்காக உன்னால இது கூட பண்ண முடியாதா? மத்தவளுங்களோட பழகாம இருக்க முடியாதா??" - கத்தினாள்.
"நிஷா.. நீ..... ஐயோ நான் எப்படி உனக்கு புரியவைப்பேன்?"
"அப்போ நீ ஆரம்பத்திலிருந்து என்கிட்டே சொன்னது பேசினது ப்ராமிஸ் பண்ணது எல்லாமே பொய்யா சீனு?"
"அய்யோ நிஷா நான் உன்ன வெறித்தனமா லவ் பண்றேன்"
"பொய் சொல்ற. நீ முன்ன மாதிரி இல்ல. முன்னாடிலாம் நான் சொல்றத நீ கேட்ப. நான் என்ன சொன்னாலும் கேட்ப...." - அவள் மீண்டும் அழ, சீனு செய்வதறியாமல் திகைத்தான்.
"புருஷனை விட்டுட்டு வந்தவதானே.... நாம கூப்பிட்டப்போலாம் வந்து படுத்தவதானே... புருஷன் முன்னாடியே நம்மள படுக்கக் கூப்பிட்டவதானே... இவ வார்த்தைக்கு எதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சிட்டியா சீனு..."
"நிஷா நோ... அப்டிலாம் இல்லடி நோ நோ"
அவள் அழுதாள். "என்ன தேவதை தேவதைன்னு சொல்லுவியே சீனு. எப்படில்லாம் என்ன ரசிச்சு வரைஞ்ச. நீதான் எனக்கு உலகம். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் செய்வேன்னு சொல்லுவியே...."
அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அவளது உள்ளங்கைகளும் முகமும் கண்ணீரால் நனைந்திருந்தன.
"நிஷா...!! இப்போ என்ன நடந்துருச்சுன்னு இப்படி அழுது ஒப்பாரி வச்சிட்டிருக்க!" - அவன் பொறுமையிழந்து கோபமாகக் கேட்டான்.
"என்ன...! நடந்துருச்சா....!! உனக்காக என் புருஷனையே விட்டுட்டு வந்தனேடா பாவி! உன்ன கேட்டுட்டுத்தானே டிவோர்ஸ்லயே கையெழுத்து போட்டேன்!"
"இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன்... முதல்ல அழுறதை ஸ்டாப் பண்ணு"
அவள் தலையை இருபுறமும் அசைத்தாள். "நீ என்ன லவ் பண்ணல சீனு. லவ் பண்ணல. உண்மையிலேயே லவ் பண்ணியிருந்தா இப்படி பண்ணியிருந்திருக்க மாட்ட. இவ அரிப்பெடுத்தவதானே.... படுக்கைல சுகம் கொடுத்தா போதும், நாம எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டா, எத்தனை ப்ராமிஸ் வேணும்னாலும் பிரேக் பண்ணிக்கலாம்னு நெனச்சிட்டேல்ல... நான் உனக்கு சீப்பா போயிட்டேன்ல"
"நிஷா ப்ளீஸ்..."
"இது நடக்காது..... நடக்காது. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும்
வேண்டாம் இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காதே. சீனு... என்ன விட்டுடு. ப்ளீஸ் என்ன
விட்டுடு."
அவள் கையெடுத்துக் கும்பிட்டாள்.
"புரிஞ்சுக்காம பேசாதடி. நான் மஹாகூட இருந்தேன்கிறதுக்காக உன்ன லவ்
பண்ணலைன்னு அர்த்தம் இல்ல."
"நான் நம்பமாட்டேன் சீனு. உனக்கு மத்த பொண்ணுங்களை மாதிரிதான் நானும்.
நான்தான் உன்ன கண்ணனுக்கு மேல தூக்கி வச்சிப் பார்த்துட்டிருந்திருக்கேன்"
"ப்ச் உனக்கு இப்போ சொல்லி புரியவைக்க முடியாது. நான் கிளம்புறேன் நீ
தயவு செஞ்சி அழாத"
"நில்லு"
"என்ன சொல்லு"
"எனக்காக மத்த பொண்ணுங்களை தொடாம உன்னால இருக்க முடியுமா முடியாதா"
"முடியும்"
"அப்புறம் ஏன் வந்த?"
"இதுதாண்டி லாஸ்ட்டு. ப்ளீஸ்டி இந்த ஒரு தடவை மன்னிச்சுடுடி"
"வேணாம் சீனு. உன்ன நான் நம்பி ஏமாந்தது போதும். என்ன இனிமே டி போட்டு
பேசாத.... உனக்கு அந்த உரிமை இல்ல" - அவள் அழுதாள்.
"நிஷா...."
புடவை முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்தாள். "அன்னைக்கு நீ காயத்ரி
கூட இருந்ததைப் பார்த்துட்டு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டேன். அப்போ நான்
உன்ன வெறும் லவ்வராத்தான் பார்த்துட்டு இருந்தேன் சீனு. என்னைக்கு அவர்கிட்ட
டிவோர்ஸ்னு சொன்னேனோ அன்னைலேர்ந்தே உன்ன என் புருஷனாத்தான் பார்த்தேன்.
அதுக்கப்புறம்தான் நீ என்ன மட்டும்தான் சுத்தி சுத்தி வரணும்னு திரும்ப திரும்ப
சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா நீ... என்ன... பத்தோட பதினொன்னாத்தான் பாத்திருக்கேல்ல?"
"நிஷா நீ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசுற... நீதான் எனக்கு உலகம்,
எல்லாமே"
"அப்படி நெனச்சிருந்தா நீ இவளை தேடி வந்திருக்க மாட்டியே"
"என் கெட்ட நேரம் நிஷா. இவ... எப்படியோ பேசி என்ன மயக்கிட்டா. மூளை
மழுங்கி.... தப்பு பண்ணிட்டேன். ஸாரிடி.." என்று அவள் இரு கைகளையும் பிடித்து மேலே
தூக்கினான். நிஷா திமிறினாள். மூக்கை உறிஞ்சினாள்.
"இவ மட்டும்தான் உன்ன பேசி மயக்கினாளா இல்ல வேற எவளும்..."
"இவ மட்டும்தான் நிஷா. எப்படியோ.... ஐ டோன்ட் நோ.... ச்சே... ஐ மேட்
மிஸ்டேக். பிக் மிஸ்டேக்."
அவன் அவள் தோள்களை பற்றினான். நிஷா மூச்சு வாங்கினாள். அவளது
மார்புகள் ஏறி இறங்கின.
"இ.. இவளைத்தவிர வேற யாரையும் நீ தொடலையே... யார் பின்னாடியும்
திரியலையே..."
"நோ...டா.... trust me. மஹா கூடதான்...
எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன்."
சீனு அவளை அணைத்துக்கொள்ள முயன்றான். அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.
"என்கிட்ட பொய் சொல்லாத சீனு. மஹா தவிர வேற யார்கிட்டயும் உனக்கு
தொடர்பு இல்லையே"
"இல்லவே இல்லடா செல்லம். இனிமே இந்த மஹா பக்கம்கூட தலைவச்சி
படுக்கமாட்டேன்."
"இன்னும் என்கிட்ட எத்தனை பொய் சீனு சொல்லப்போற?"
"நிஷா...."
"காமினி கூட நீ பழகல? அவகூட படுக்கல?"
நிஷா நிறுத்தி நிதானமாக அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தாள். சீனு
அதிர்ச்சியில் அவளை பிடித்திருந்த கைகளை எடுத்தான்.
"நி.. நிஷா... அது... நம்ம கல்யாணத்துக்கு.. ஹெல்ப்
பண்ணுவாங்கன்னு...."
"ஹெல்ப் பண்ணுவான்னு?"
சீனு தலை குனிந்து நின்றான்.
"என் முகத்துலயே இனி முழிக்காத." - அவள் விசும்பாமல்,
நிதானமாக, அழுத்தமாகப் பேசினாள்.
"நி.. நிஷா....."
நிஷா குரல் தழுதழுக்க.... மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு சொன்னாள்.
"உனக்கும்..." - மூக்கை உறிஞ்சினாள்.
"எனக்கும்..." - அழுதாள்.
"முடிஞ்சுபோச்சு....."
அவள் கண்ணீரை வடித்துக்கொண்டே தன்
இடுப்புச் செயினை அத்து அவன் முகத்தில் எறிந்தாள்.
சீனு சுக்கு நூறாக உடைந்தான்.
*****
சீனு, வீட்டில்
சோகமாக உட்கார்ந்திருந்தான். இதயம் வலித்தது. நிஷாவை இப்படி ஒரு அழுகை கோலத்தில்
அவன் இதுவரை பார்த்ததில்லை.
'இந்த தனபால் எந்த நேரத்துல வாய் வச்சானோ அவன் சொன்னதுபோலவே
நடக்கிறது. ச்சே... எல்லாம் என் நேரம்..' - அவன் கண்கள் கலங்கின.
மஹா போன் பண்ணினாள். இவன்
போனை அட்டன் பண்ணிவிட்டு பேசாமல் இருந்தான்.
"சீனு... ஸாரிடா... ராஜ் கிட்ட எல்லாம் சொல்லவேண்டியதாகிடுச்சி.
ஆமா... உன்ன எதுக்கு தேடினாங்க? என்னடா பிரச்சினை?"
"- - - -"
"ராஜ் ரொம்ப நல்லவர் சீனு."
"எப்படி சொல்ற?"
"உள்ள வந்து பார்த்தாரு. நம்ம இன்னர்ஸ்லாம்கூட அப்படி அப்படியே கிடந்தது."
"நீ எதுக்கு அவரை பெட் ரூம் வரைக்கும் விட்ட?" - எரிச்சலில் கேட்டான். 'ச்சே... இவளைப் போட்டது... வாழ்க்கையில் பண்ணிய மிகப்பெரிய தப்பு.'
"புருஷன்னா கூட சமாளிச்சிருப்பேன் சீனு. அவருக்கு வேலை கொடுத்திருக்கிற பாஸ். அவரை அங்க போகாதீங்க இங்க போகாதீங்கன்னு தடுக்கவா முடியும்? முடிஞ்சவரை தடுத்துப் பார்த்தேன். அவர் நேரா ரூமுக்குள்ள போயிட்டார்."
"அப்போ தெளிவா தெரிஞ்சிடுச்சா. ச்சே"
"ம்..."
"என்ன மஹா நீ ஒன்னும் நடக்காத மாதிரி சொல்ற?"
"நான் அழுதுட்டேன் சீனு. ஆனா ராஜ் என் கண்ணீரை துடைச்சு விட்டாரு. இங்க பாரும்மா. இத பத்தி நான் உன் புருஷன்கிட்ட எதுவும் சொல்லமாட்டேன். நீ கவலைப்படாம இரு... ன்னு சொன்னாரு."
"அவன் பெரிய கேடி மஹா. ஆல்ரெடி எங்க கம்பெனில வர்க் பண்ற ரெண்டு பொண்ணுங்களை வச்சிருக்கான்."
"தெரியல சீனு. ஆனா என்கிட்டே ரொம்ப மரியாதையா பேசினார். எல்லா ரூம்லயும் உன்ன தேடினாங்க. கிளம்பும்போது, நீங்க கவலைப்படாதீங்க மிஸ். மஹேஸ்வரி. நான் சீனு எப்படிப்பட்டவர்னு கன்பர்ம் பண்றதுக்குத்தான் வந்தேன். ஆனா இனிமே இப்படி தப்பு பண்ணாதீங்க உங்க குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும்னு அட்வைஸ் பண்ணிட்டுப் போனார். ரொம்ப நல்லவரா இருக்கார்."
"- - - -"
"சரி... நீ எப்படி வீட்டுக்கு போய் சேர்ந்த? safe ஆ இருக்குறல்ல?"
அவள் safeஆ என்றதும் அவனுக்கு பக்கென்று இருந்தது. போனை கட் பண்ணியதும் தன் விதியை நினைத்து நொந்துகொண்டே தன் துணிகளை எடுத்து பேகில் போட்டான். 'ச்சே... நிஷா என்மேல உயிரையே வச்சிருந்தா. நிஷாவை கல்யாணம் பண்ணிட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம். சபலத்தால கிடைச்ச நிஷா, மரியாதை, கெத்து, கவுரவம், வசதி வாய்ப்பு...... எல்லாம் சபலத்தாலேயே போயிடுச்சு.'
'நிஷா... என்ன வார்த்தையாலேயே கொன்னுட்டியேடி.. உன்ன நான் எவ்ளோ லவ் பண்ணேன் தெரியுமா?'
'இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது, கொஞ்ச நாள் பொறுத்து அவளை சந்தித்து அவளை எப்படியாவது சமாதானப்படுத்திவிடவேண்டும்'
'ராஜ்க்கு இதெல்லாம் புரியாது. தங்கச்சி அழுகிறாள் என்று கண்டிப்பாக என்னை அடிக்க வீட்டுக்கு ஆள் அனுப்புவான்.'
"வேலை தேடிப் போறேன்மா..." என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினான். அப்போது... அவனது பயணத்தின் திசையை மாற்றுவதுபோல், பரத்திடமிருந்து அவனுக்கு போன் வந்தது.
இந்த நிஷா திரும்ப அந்த சீனு முன்னால முட்டி போட்டு கிட்டு அவனோட பூலை ஊம்பி கிட்டு நிப்பா. இவளுங்களுக்கெல்லாம் அவ்வளவுதான் தெரியும். எக்கேடும் கேட்டு போடி.
ReplyDeleteஅப்புறம் கதாநாயகன் ஆச்சே நம்ம சீனு, திரும்ப மகா, வீணா, காமினி, வந்தனா, காயத்ரி விட்டா மலர், தீபா வரை எல்லாரையும் ஒத்துக்கிட்டே இருப்பான்.
என்னமோ எல்லா பொண்ணுங்களும், ஒரு ஆம்பிளை பூலுக்கு அடிமையா இருக்கிற மாதிரி, புருஷனை விட்டு விட்டு வெறும் உடம்பு சுகத்துக்கு கண்டவனோட அலையுற மாதிரி, அதை தங்களுக்கு சாதகமா எடுத்து கிட்டு ராஜ், சீனு, வினய் மாதிரி ஆண்கள் எல்லாம் கண்ணுல படுற பொண்ணுங்களை எல்லாம் போட்டு ஒத்துக்கிட்டே இருக்காங்க. போங்கடா நீங்களும், உங்க ஆம்பிளை ஆதிக்க கதைகளும்.