உங்களில் ஒருத்தி 110
சீனு - அகல்யா இருவருமே, வெயில், தூசி என்று பாராமல் அலைந்து திரிந்துகொண்டிருந்தார்கள். நவீனின் மாமா வீட்டு அட்ரஸ் தெரியாமல், வேறு எந்த விவரமும் இல்லாமல் தேடிக்கொண்டிருந்தார்கள். ஷாப்பிங்க் மால், பீச் என்று எங்கேயாவது அவனோ அவனோடு நெருங்கியவர்களோ கண்ணில் பட்டுவிட மாட்டார்களா என்று நின்று நின்று பார்த்தார்கள். அவனது வாட்ஸப், பேஸ்புக் என்று எதிலும் அப்டேட் இல்லை. அகல்யா பயந்து போனாள்.
அகல்யா மிகவும் களைப்பாக இருந்தாள். சீனுவுக்கு அவளைப் பார்க்கப்
பாவமாக இருந்தது. சென்னையில் பார்க்கும்போது லட்டு
மாதிரி இருந்தவள், இப்போது முகம் வாடி, கருத்திருந்தாள். கூந்தல் கண்டபடி அலைந்து கிடந்தது. கண்களில் சோகம்.
என்னதான், இப்போது விட்டால், காதலனுக்கு கட்டாய கல்யாணம் நடந்துவிடும் என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும், ஒரு பெண்ணாக, அவள் இப்படி அவனைத் தேடி வரத் துணிந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேநேரம் வீட்டில் இவளை நினைத்து கஷ்டப்படுவார்களே என்கிற எண்ணம் இல்லாமல் அவள் இங்கே வந்து இப்படித் திரிவதை நினைத்து வருத்தமாக இருந்தது.
இதுவரை நவீன் பேசியிருந்ததை வைத்து, அகல்யா, குத்துமதிப்பாக ஒரு பகுதியைச் சொல்ல, அந்த ஏரியாவில் அதிகமாய் சுற்றினார்கள்.
அகல்யா நிற்க முடியாமல், ஒரு கடை முன் சென்று உட்கார, சீனு, பரத்திடம் பேசினான். பின் அகல்யாவிடம் போய் சொன்னான்.
"நீங்க கிளம்புங்க அகல்யா. பரத்துக்கு இன்னும் ஒன் ஆர்
டூ டேஸ்ல அட்ரஸ் கிடைச்சிடுமாம். நான் பார்த்து
கன்வின்ஸ் பண்ணி அவனைக் கூட்டிட்டு வர்றேன்."
"இல்ல சீனு. நாளைக்கு வரைக்கும்தானே... நான் இங்கயே இருந்து அவனைப்
பார்க்கிறேன். நீங்க வேணும்னா சென்னைக்கு கிளம்புங்க சீனு. பாவம் என்னால நீங்க கஷ்டப்படுறீங்க"
சீனு அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அவளுக்கு சாப்பாடு
வாங்கிக்கொடுத்தான். அவள் கூப்பிட்ட திசையில் எல்லாம் அலைந்தான். கடைசியில்,
தங்குவதற்கு, ஹோட்டலில் ரூம் எடுத்தார்கள். தனித்தனி
ரூம். "அப்பாடா" என்று பெட்டில் விழுந்தான்.
தூங்கும் முன், நிஷாவின் கண்ணீர் வடிந்த முகம்
ஞாபகத்துக்கு வந்தது. போனை எடுத்தான். டயல் பண்ண மனது வரவில்லை. 'அழுவாள்.
கத்துவாள். நான் திருந்திவிட்டேன் என்று சொன்னால் நம்பமாட்டாள்.'
ஒருமுறை கால் பண்ணினான். பதில் இல்லை.
'சில நாட்கள் போகட்டும். கோபம் தனியட்டும். காயத்ரி மற்றும் வீணாவை வைத்து அவளை எப்படியாவது
சமாதானப்படுத்திவிடலாம். இனிமேல் மனதை அலைபாயவிடக்கூடாது. கண்ட்ரோலாக
இருக்கவேண்டும்.'
அகல்யாவுக்கு, சீனுவை நினைத்து
கஷ்டமாக இருந்தது. அவன் தன்மேல் காட்டும் அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.
துணிகள் கூட எடுக்காமல் அவள் வந்திருந்தாள்.
அலசி, காற்றில் காயப்போட்டுவிட்டு கவலையோடு படுத்தாள். 'நவீன்... நீ எங்கடா இருக்க.... என்ன இப்படித்
தவிக்கவிட்டுட்டு நீ என்னடா செய்ற?'
'ச்சே... அவன் அப்பா அம்மா தவிர, அவன்
குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் இவ்வளவு நாள் லவ்
பண்ணியிருக்கிறேன்'
அலைந்து திரிந்ததில் கால்கள் வலித்தன.
அடித்துப் போட்டதுபோல் தூங்கினாள்.
மறுநாள் -
இருவரும் கொஞ்சம் சகஜமாக பேச
ஆரம்பித்திருந்தார்கள். சீனு அவளை பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டான். அவள்,
இவன் கைபிடித்துக்கொண்டு ரோடு க்ராஸ் பண்ணினாள். இவன், அவள் கைபிடித்துக் கூட்டிக்கொண்டு நடந்தான்
இன்று, அகல்யாவை ஆங்காங்கு நிழலில் உட்காரவைத்துவிட்டு, அவன் மட்டும் வெயிலில் அலைந்தான். மீறி அவள் அலைந்தால், தடுத்தான். "ப்ளீஸ் அகல்யா ரொம்ப வருத்திக்காதீங்க. உங்களை இப்படிப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு"
அன்றும் அவர்களுக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லை.
அவள் வார்த்தைக்கு வார்த்த நவீன் நவீன் என்றாள். 'இப்படி லவ் பண்ற பொண்ணை தவிக்க விட்டுட்டு.... எந்தப் பிரச்சனையா இருந்தா என்ன... வந்து நிற்க வேண்டாமா? என்ன ஆம்பளை இவன்?' என்று இவன் மனதுக்குள் அவனைத் திட்டினான்.
ஈவினிங்க் - ஹோட்டல் போகும்முன், அவளை ஷாப்பிங்க் மாலுக்குள் கூட்டிக்கொண்டு போனான்.
"உங்களுக்கு ட்ரெஸ் எடுத்துக்கோங்க
அகல்யா" என்றான்.
"இல்ல... வேணாம் சீனு"
"நேத்துலேர்ந்து ஒரே ட்ரெஸ் போட்டுருக்கீங்க. எடுத்துக்கோங்க." - அவள்
கைபிடித்து அவளைக் கூட்டிக்கொண்டு போனான்.
"என்கிட்டே பணம் இருக்கு. நீங்க உங்களுக்கு பிடிச்சதை
எடுத்துக்கோங்க..." என்றான். அவள் ட்ரெஸ் பார்க்கும்போது அவளது ஹேண்ட் பேக் அவளுக்கு இடைஞ்சலாக இருக்க, அதை
அவளிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
"நான் வச்சிக்கறேன். நீங்க ப்ரீயா பாருங்க.." என்றான்.
நல்ல ரெஸ்டாரண்ட் ஆக போய் சாப்பிட்டார்கள். அகல்யாவுக்கு என்னலாம் பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அதையே ஆர்டர்
பண்ணினான்.
கை கழுவிட்டு, அவள் துப்பட்டாவில் துடைக்கப்போக,
வேகமாக டிஸ்யூ எடுத்துக்கொடுத்தான். வெயிலில்.. வியர்க்கும்போது
கர்ச்சீப் கொடுத்தான். அவளுக்கு என்ன தேவை என்பதை
புரிந்துகொண்டு செய்தான்.
ஒருமுறை, குப்பையைக் கிளப்பிக்கொண்டு ஒரு லாரி
இவர்களைக் கடந்துசெல்ல, அகல்யாவின் கண்ணுக்குள் தூசி
விழுந்துவிட்டது. மிகுந்த சிரமப்பட்டாள். உடனே ரோட்டுக்கடையில் sunglass
வாங்கிக்கொடுத்தான்.
"எதுக்கு சீனு இதெல்லாம்...."
"இது சாதாரண க்ளாஸ்தான். 500 ரூபாதான்.
இந்த 500 ரூபாயைவிட கண்ணு
ரொம்ப முக்கியம்." என்றான்.
எல்லா ஆண்களும் செய்வதைத்தான் அவனும் செய்தான். அகல்யா - தான் ஒரு comfort
zone - க்குள் இருப்பதாக உணர்ந்தாள்.
அந்த இரவு - அகலயாவின் மனதில் இருந்த வலி குறிந்து இருந்தது. வழக்கம்போல, நவீனை நாளைக்கு பார்த்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் தூங்கினாள்.
மறுநாள் -
இருவரும் ஒருவரின் ரூமுக்கு ஒருவர்
வர ஆரம்பித்திருந்தனர். காலையில் அவன் அகல்யாவின் ரூமுக்குள் நுழைந்தபோது, அவளது ப்ராவும் பேன்ட்டியும் சேர்
மேல் காய்ந்துகொண்டிருந்தது. அவள் வேகம் வேகமாக அவற்றை எடுத்து கைக்குள்
வைத்துக்கொண்டு wardrobe க்குள் போட்டாள்.
கலையாமல் இருந்த அவள் பெட் ஷீட்டைப் பார்த்து, நைட்டு
தூங்கவே இல்லையா என்று கேட்டான். எல்லாம் சரியாகிடும்
என்று ஆறுதல் சொன்னான். ஆனால் அவள் நன்றாகத் தூங்கியிருந்தாள்.
அங்கும் இங்கும் புரளாமல் தூங்குவது அவள் பழக்கம்.
அடுத்து இவள் அவன் ரூமுக்கு போகும்போது கவனித்தாள்.
ரூமே அலங்கோலமாகக் கிடந்தது. அவன் ஏன் தன்னிடம் அப்படிக் கேட்டான் என்பது புரிந்தது.
இன்று - அவசரம் காட்டாமல் கொஞ்சம் மெதுவாக நவீனைத் தேடினார்கள். அகல்யாவின் கை, அதிக நேரம்
சீனுவின் கைக்குள் இருந்தது. அகல்யாவுக்கு தெம்பாக இருந்தது.
ஈவினிங்க் ஆனதும் - பீச்சில் தேடலாம்.. என்றாள். இவன் உடனே ஓகே என்றான்.
ஆட்டோ பீச்சை நோக்கிப்
போய்க்கொண்டிருக்கும்போது, "ஹோட்டல் போய்... குளிச்சி பிரஷ் அப் ஆகிட்டு..
அதுக்கப்புறம் போலாமா..." என்று தயங்கித் தயங்கிக்
கேட்டாள். அவன் மறுப்பு சொல்லாமல் ஆட்டோவை திருப்பச் சொன்னான்.
"நீங்க எதுனாலும்
என்கிட்டே தயங்காம பேசுங்க அகல்யா" என்றான்.
ஹோட்டல் போனார்கள். அகல்யா குளித்தாள். முதல் இரண்டு நாட்கள் ஏனோ
தானோ என்று இருந்த அகல்யா, சீனுவின் முன் அழகாக இருக்க ஆசைப்பட்டாள். பார்த்துப் பார்த்து
உடுத்திக்கொண்டாள்.
"போலாமா அகல்யா..." என்று கேட்டுக்கொண்டே அவள் ரூமுக்குள் நுழைந்த சீனு, முதல் முறை அவளது ஸ்டன்னிங் ஆன அழகை பார்த்து, வியந்தான்.
ரசித்தான்.
சாதாரண, ஆனால் அழகான சுடிதார். கைகள் ட்ரான்ஸ்பேரண்ட் என்பதால், பார்ப்பதற்க்கு ஸ்லீவ்லெஸ் போலிருந்தது. லெக்கின்ஸ் போட்டிருந்தாள்.
அவன் வியந்து பார்க்கிறான் என்பது அகல்யாவுக்கு தெரிந்தது. மனதுக்கு இதமாக இருந்தது. அவன் முன், க்யூட்டான பெண்ணாக தெரிய கேர் எடுத்துக்கொண்டாள். அடக்கமாக நடந்துவந்தாள்.
அகல்யாவுக்கு, அழகான பின்னழகுகள். அவளுக்குப் பின்னால் நடந்துவந்த சீனு, தடுமாறினான். 'அய்யோ என்ன இது... இன்னைக்கு அகல்யா அநியாயத்துக்கு அழகா இருக்கா. பின்னழகு வடிவமும் அசைவும் அப்படியே தெரியுதே... இது டாப்ஸ் டைட்டா பிட்டா இருக்கறதுனாலயா... லெக்கின்ஸ்ன்றதுனாலயா... இல்லை இயல்பாவே அகல்யாவுக்கு...'
என்ன இருந்தாலும் இந்த ட்ரெஸ் அகல்யாவுக்கு சூட் ஆகவில்லை. அழகை அப்படியே காட்டுகிறது. அவன் அவளை வேறு டிரஸ் போடச்சொல்ல நினைத்தான். வரம்புக்கு மீறிய செயல் என்று அமைதியாக
இருந்தான்.
நிஷாவாவோ, காயத்ரியாவோ, வீணாவாவோ
இருந்தால், வேற ட்ரெஸ் போட்டுட்டு வாடி இது ரொம்ப செக்சியா இருக்கு என்று குண்டியில் தட்டி
சொல்லியிருப்பான். ஆனால் அகல்யாவிடம் எப்படிச் சொல்வது? அவன்
அமைதியாக வந்தான்.
பீச்சில் -
ஒரு நம்பிக்கையில் - நவீனோ அவனைத் தெரிந்தவர்களோ கண்ணில் படுகிறார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள். பீச்சு மணலில் அவர்கள் நடக்க.... அவர்களைக் கடந்து சென்ற அனைத்து ஆண்களையும் திரும்பிப் பார்க்க வைத்தாள் அகல்யா.
"எனக்காக ரொம்ப அலையுறீங்க. கார்ன் சாப்பிடுறீங்களா.." என்று காற்றில் கூந்தல் பறக்க, அழகாக ஒதுக்கிவிட்டுக்கொண்டே கேட்டாள்.
"எஸ். சாப்பிடலாமே..."
அவர்கள் grilled corn வாங்கினார்கள்.
அவள் விரல்களால் பிய்த்து பிய்த்து வாய்க்குள் போட்டாள்.
"கடிச்சி சாப்பிட மாட்டீங்களா.." என்று கேட்டுக்கொண்டே அவன் ஒரு
இடத்தில் உட்கார்ந்தான். அவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். காற்றில் துப்பட்டா பறக்க, அவள் தன் கட்டி
முலைகளை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள்.
அப்புறம்... அப்படியே விட்டுவிட்டாள்.
அதற்குள் பாதியை காலி செய்துவிட்ட சீனுவைப் பார்த்தாள். "இப்படி
சாப்பிட்டா நிறைய வேஸ்ட் ஆகிடும், சாப்பிட்ட மாதிரியே இருக்காது" என்றாள்.
"எனக்கு பொறுமை இல்லையே. அப்படியே பொறுமையாய் எடுத்தாலும் எனக்கு வராது" என்றான்.
அவள் அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள். க்யூட்டாக இருந்தாள்.
திருமணமான பெண்களின் வெட்கத்தை... பாவனைகளை... அழகை மட்டுமே
பார்த்துப் பார்த்து பழகியிருந்த சீனுவுக்கு அவள் புதிதாக இருந்தாள். இளமை
பொங்கும் அழகோடு, பளிச்சென்று இருந்தாள். உதடுகளில்
அப்படி ஒரு கவர்ச்சி.
எழுந்து நடந்தார்கள். அவன் அவளுடைய காதல் கதையைக் கேட்டான். அவள்
பேசிக்கொன்டே நடந்தாள். அவளது டாப்ஸ், இடுப்புவரை
ஓப்பனிங்க் இருந்ததால் காற்றுக்கு அடிக்கடி தூக்க, அவள்
முன்னும் பின்னுமாக டாப்ஸை பிடித்துவிட்டுக்கொண்டே வந்தாள்.
"காற்று ரொம்ப அடிக்குது. உட்கார்ந்து பேசுவோமா?" என்றான். தன் ஆடை விலகுவதை அவன் விரும்பவில்லை என்பதை அவள்
உணர்ந்தாள். மகிழ்ந்தாள். சந்தோஷத்தில், தண்ணீரில் கால்
வைத்து விளையாண்டாள்.
சீனுவுக்கு நிஷாவின் ஞாபகம் வந்தது. அவனை வாட்டியது. அவன் நினைவைக்
கலைப்பதுபோல், "போன் தண்ணில விழுந்துடுச்சு சீனு...." என்று உதட்டைப் பிதுங்கிக்கொண்டு அகல்யா வந்தாள்.
பதட்டத்தில், "என்கிட்ட கொடுத்துட்டுப்
போயிருக்கலாம்ல... லூசு..." என்று திட்டிக்கொண்டே சீனு வேகம் வேகமாக அதை தன்
சட்டையில் துடைத்தான். கர்ச்சீப் வைத்து ஒற்றி எடுத்தான். போன் ஹேங்க்
ஆகியிருந்தது. அவர்கள் பீச்சிலிருந்து வரும்வரை அவன் அவள் போனோடுதான் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான். அகல்யா, வருத்தத்தோடு, அமைதியாக நடந்துவந்துகொண்டிருந்தாள்.
ரெஸ்டாரண்ட் போகும் வழியில், ஒரு ஷோ ரூம்
இருந்தது. உள்ளே நுழைந்தான். அகல்யாவிடம் சொன்னான்.
"ட்ரெஸ் எடுத்துக்கோங்க"
"மறுபடியுமா?"
"எஸ். அன்னைக்கு.. .ஏதாவது எடுக்காம மிஸ் பண்ணியிருந்தீங்கன்னா....
எடுத்துக்கோங்க. நான் பணம் வச்சிருக்கேன்.." என்றான்.
"ம்..." என்றவள், தேடித்தேடி, அவளுக்கொரு
டாப்ஸும், அவனுக்கொரு டி ஷர்ட்டும், cap - ம் எடுத்துக்கொண்டு வந்தாள். அவனது கார்டைக் கொண்டு போய் பில் போட்டாள். கார்டையும் பில்லையும் இவனிடம்
கொண்டுவந்து கொடுத்தாள்.
பில்லைப் பார்த்தவன், அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள்
வெகுளித்தனமாக, பாவமாக நின்றுகொண்டிருந்தாள். மற்ற
பெண்களிடம் பேசுவதுபோல் சீனுவுக்கு அவளிடம் பேச்சு வரவில்லை. எல்லாவற்றுக்கும்
தயக்கமாக இருந்தது.
"என்னாச்சு?" என்றாள் அகல்யா.
"இன்னர்ஸ் எடுத்துக்க வேண்டியதுதானே. ஏன் இப்படி பண்ற?"
அகல்யா - இடது கையை மார்புகளுக்குக் கீழே குறுக்காக
வைத்துக்கொண்டு, வலது கையால் தொங்கட்டத்தை
தடவிப்பார்த்துக்கொண்டே, தலை குனிந்து நின்றாள். சிறிது நேரம்
கழித்து, அவனை நிமிர்ந்து பார்த்தாள். தன் அழகிய கண்களால்,
அவனை நேருக்கு நேர் பார்த்தாள். அவன் கையிலிருந்த கார்டை..
வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, கடைக்குள் போனாள்.
இங்கே -
நிஷாவுக்கு, அவள் அத்தை லட்சுமி, வீட்டின் முதல் தளத்தை ரெடி பண்ணிக்
கொடுத்தாள். கதிருக்கு, தான் முன்புபோல ப்ரீயாக இருக்க
முடியாது என்பதில் வருத்தம். வீட்டின் நடுவில்.. பெரிய முற்றத்தில் இருந்த
கிணற்றில்.... முன்பெல்லாம் நினைத்த நேரம் குளிக்கலாம். இனிமேல் முடியாது.
"நிஷா இப்படி தனியா தங்கினா ஊர் உலகம் என்ன சொல்லும்?" என்றான். அப்பா வேறு ஒரு அடிதடி சண்டை விஷயத்தில்
ஜெயிலில் இருந்தார்.
"அவ இந்த ஊர் பொண்ணுடா. நம்ம ரத்தம். அவளை
வேற எங்கயாவது தனியா தங்கவெச்சாதான் ஊர்க்காரங்க
தப்பா நினைப்பாங்க. சின்ன வயசுல அவ எனக்கு எவ்ளோ செல்லம் தெரியுமா? அவமட்டும் இப்படி சீரழியாம
இருந்திருந்தா, முன்னாடியே அவங்க நம்ம உறவெல்லாம்
வேணும்னு நெனச்சிருந்தா... உன்னை அவளையே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லியிருப்பேன்.
ஹ்ம்... என்னென்னவோ நடந்துடுச்சு. இனிமே இவ வாழ்க்கை என்னாகுமோ. ஸ்கூல்லயே அவளுக்கேத்த
ஒரு நல்ல மாப்பிள்ளை அமைஞ்சிட்டா கூட நல்லாயிருக்கும்."
"அதப்பத்தி நீ ஏன் கவலைப்படுற. அங்க ராஜ் நிஷாவுக்கு கண்டிப்பா ஒரு
நல்ல பையனை ரெடி பண்ணிடுவான். நாமளும் ட்ரை பண்ணுவோம்."
அவனுக்கு, நிஷாவோடு பேசவே விருப்பம் இல்லாமல்
இருந்தது.
மறுநாள் காலை -
நிஷா, நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு,
கையில் புத்தகத்தோடு கீழே இறங்கி வர, என்னதான்
அவள்மேல் வெறுப்பில் இருந்தாலும், கதிரால் அவளை ரசிக்காமல்
இருக்கமுடியவில்லை. கண்களை அவளிடமிருந்து எடுக்க முடியாமல்
அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆடு, மாடு,
தீவனம், ஏர், கலப்பை,
வைக்கோல், கோழிகள் என்று இருந்த அந்த
வீட்டுக்குள் திடீரென்று ஒரு தேவதை இறங்கி வந்ததுபோல் இருந்தது.
'ப்ப்ப்பா.... எவ்வளவு அழகு! இறைவா...! இந்த அழகு களங்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா.'
கதிர் ஆல்ரெடி வயலுக்கு ஒருமுறை போய்விட்டு வந்திருந்தான். குளிப்பதற்கெல்லாம் இந்த நேரம்தான் என்று கிடையாது. எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். அது அவனுக்குப் பிடிக்கும். அங்கே அவனே ராஜா. அவனே மந்திரி.
தன் விஷயம் தெரிந்தபின்னும் தன்மேல் அளவில்லாத பாசத்தோடு இருக்கும் அத்தை லட்சுமியை பார்க்க நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள்மேல் மிகுந்த மரியாதை வந்தது. "என்னை வாழ்த்தி அனுப்புங்க அத்தை..." என்று கும்பிட்டபடி நின்றாள். லட்சுமி, சாமி கும்பிட்டு அவளுக்கு திருநீறு பூசிவிட்டு, கூட்டி வந்தாள்.
"கதிரு.. போய் நிஷாவை ஸ்கூல்ல விட்டுட்டு, ஹெட் மாஸ்டரையும் பார்த்து சொல்லிட்டு வந்துடு. முன்னாடியே அண்ணன் எல்லார்கிட்டயும் சொல்லிட்டான். மரியாதையாத்தான் நடந்துப்பாங்க. நீயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடு."
"ந.. நான் எப்படிம்மா? ப்ரண்டுகிட்ட கார் கேட்டிருக்கேன். இப்போ வந்துடுவான்."
கதிர், பார்ப்பதற்கு பருத்திவீரன் கார்த்தி சாயலில் இருந்தான். முடிகள் கண்டபடி அலைந்து கிடந்தன. முதல் முறையாக கைலியை இறக்கிவிட்டிருந்தான்.
"கார்லாம் வேணாம்டா. அப்புறம் நிஷா சம்பாரிக்கறதே எங்களாலதான்னு சொல்லுவானுங்க. ஸ்கூல்ல பிள்ளையை அடிக்காதேன்னு அவகிட்ட போய் நிப்பானுங்க"
நிஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. அத்தையின் பேச்சை ரசித்துப் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
"அதனால? நடந்தே போகச்சொல்லுறியா?"
"ஏலேய்... உன் பைக்ல கூட்டிட்டுப் போ"
"ஏம்மா அதெல்லாம் ஒரு பைக்கா? கொஞ்சமாவது
மனசாட்சியோடு பேசமாட்டியா?" என்று கதிர் பாவமாய் கேட்க, அவன் காட்டிய திசையில்... வாசலுக்கருகில்...
குப்பையாய் நின்றுகொண்டிருந்த splendor
plus ஐ பார்த்து, நிஷாவுக்கு
உதட்டுக்குள் புன்னகை அரும்பியது.
அது புது வீடு. ஆனால் எல்லாமே
தூசியாகத்தான் இருந்தது. அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருந்த அவளது ரூம் மற்றும்
பாத்ரூம் தவிர. அது பெரிய வீடு. கிட்சன் தனியாக.. அதுவே ஒரு தனி வீடுபோல்
இருந்தது. பாத் ரூம்கள் பின்புறம் தோட்டத்தோடு சேர்த்து இருந்தது. மரங்களுக்குப்
பஞ்சமில்லை. இவர்கள் வானம் பார்த்த முற்றத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். பெட்
ரூம்கள் தனி வீட்டில் தனியாக இருந்தன. வாசலில்.. உள்ளே நுழைந்ததும் நிலத்தில்
விளைந்த பொருட்கள் போட்டு வைத்திருக்க ஒரு
பெரிய அறை. ஸ்டோர் ரூம் ஒன்று. சுருக்கமாக
சொல்லப்போனால் அங்கே ஒரு 10 குடும்பமாவது வசிக்கலாம்.
"சோம்பேறி... அதை துடைச்சு வையேண்டா...." - அம்மாக்காரி கத்தினாள்.
கதிர், அம்மாவை முறைத்துக்கொண்டே... வண்டியை துடைப்பதற்காக
ஒரு துணியை எடுத்தான். 'எத்தனை தடவைதான் குளத்தில்
முக்கியெடுப்பது? பத்து நிமிஷத்தில் மறுபடியும்
குப்பையாகிடும்!' பைக் பக்கத்தில் சென்று, துடைக்கும் முன்,
ஒரு உதறு உதறினான். துடைக்கக் கொண்டுவந்த அந்தத்
துணியிலிருந்தும் தூசி பறக்க.... மானம் போகுதே என்று அதை ஸ்டைலாகத் தூக்கிப் போட்டான். இதைப்
பார்த்த நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது.
"பரவால்ல கதிர். நாம இதுலயே போகலாம். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல." என்றாள். அதில் உட்காரப்போனாள்.
"நிஷா.. நில்லுங்க நில்லுங்க.... இவ்ளோ அழகா புடவை
கட்டிக்கிட்டு...." என்று சொல்லிக்கொண்டே கதிர் ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து பைக்
மேல் ஊற்றினான். வேகம் வேகமாக தனது டவலை எடுத்துத் துடைத்தான்.
'இவ்ளோ அழகா புடவை கட்டிக்கிட்டு...' என்று பேச்சுவாக்கில் அவன் சென்னை
வார்த்தை, நிஷாவுக்கு சட்டென்று ஒரு சிறிய
சந்தோஷத்தைக் கொடுத்தது. பைக் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுக்கு,
சீனுவோடு பைக்கில் போன காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. கண்களை
மூடிக்கொண்டாள். எப்படி இதிலிருந்து மீளப்போகிறேன்... கண்களில் கண்ணீர்
துளிர்த்தது.
"நிஷா.. போலாமா?" என்றான் கதிர்
"ம்...."
அவள் தன் பின்னழகுகளை அதில் வைத்து உட்கார்ந்தாள். கதிர் அவளை
பூப்போல கொண்டு போய் இறக்கிவிட்டான். நிஷா அந்த ஸ்கூலுக்குள் நுழைந்தாள்.
மனதுக்குப் பிடித்த வேலை. சொந்த ஊர் மண்வாசம். சிறுவயது நிஷாவைப் பார்ப்பதுபோல் சிறுவர்கள் சிறுமிகள். மாணவர்கள் மாணவிகள். அவள் தன்னை
மறந்தாள். அப்பாவை, அம்மாவை, ராஜ்ஜை,
சீனுவை, தீபாவை, கண்ணனை,
மலரை... என்று அனைவரையும் மறந்தாள். சந்தோஷமாக பாடம் சொல்லிக்கொடுக்க
ஆரம்பித்தாள்.
நிஷாவுக்கு அவள் மனம் விரும்பிய வகையில் ஒரு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல நல்ல வாழ்க்கை அமையும்
Delete