உங்களில் ஒருத்தி 120

முழு தொடர் படிக்க

மறுநாள் - 

நிஷாவுக்கு விடுமுறை 

அத்தை - தோட்டத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். 

"வாம்மா.... தோட்டத்துப் பக்கம் போய் மாங்காய், தேங்காய்லாம் பறிச்சிட்டு வரலாம்..." என்று நிஷாவைக் கூப்பிட்டாள். 

நிஷாவுக்கும் கதிரை பார்க்கவேண்டும்போல் இருந்தது. ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல், "இல்லத்த... நான் இன்னொரு நாள் வர்றேன்.." என்று தயங்கினாள். 


அத்தையோ
, அவளுக்கு முந்திரிப்பழம் பறிச்சுத் தாரேன் என்று ஆசை காட்ட, நிஷா சிரித்தாள். "சரி அத்தை..." வர்றேன் என்றாள்.

தெருவில் நடக்கும்போது, எதிரே வருபவர்கள் எல்லாம், நிஷாவிடம் மரியாதையாக நின்று பேச, லக்ஷ்மிக்கு பெருமையாக இருந்தது. 'நிஷாவுக்கு இனிமே ரெண்டு தடவை சுத்திப் போடணும்!'

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. மகிழ்ச்சியோடு நடந்து வந்தாள். ஊருக்குள்.. இளவட்டங்கள் மத்தியில் அவள் பெயர் பேமஸ் ஆகியிருந்தது. 

"இன்னைக்கு நிஷா டீச்சர மெரூன் கலர் புடவைல பார்த்தேண்டா. ஹையோ... சான்ஸே இல்லடா. ஹீரோயினுங்க எல்லாம் பிச்சை எடுக்கனும்டா. நல்லா மூடிக்கிட்டுதான் நடக்குறா. ஆனாலும் அவ ஸ்ட்ரக்ச்சர் இருக்கே... ஹம்ம்ம்ம்ம்....."

"மச்சி... ஸ்கூல்ல எப்படியாவது அட்டண்டர் வேலைலயாவது  சேர்ந்துரணும்டா"

"அங்க வாத்தியாரா இருந்தா அவளை கரெக்ட் பண்ணிடலாம்டா"

"அவ பணக்காரிடா. சென்னைக்காரி வேற. நம்மளையெல்லாம் மதிக்க மாட்டாடா"

"பணக்காரியாவது மயிராவது. கதிருக்கு மட்டும் அவ சொந்தக்கார பொண்ணா இல்லாம இருந்திருந்தா இந்நேரம் நான் அவளை கரெக்ட் பண்ணி மேட்டர முடிச்சிருப்பேன்"

ஆண்கள்... இப்படி அவள் உடல் வளைவுகளைப்பற்றிப் பேசினார்கள். பெண்கள் அவள் உடைகளைப்பற்றிப் பேசினார்கள். பெரிசுகள், 'நம்ம கதிர் ஏன், டீச்சரை கல்யாணம் பன்னிக்கக்கூடாது?' என்று விவாதித்துக்கொண்டிருந்தார்கள். லக்ஷ்மிக்கும் அட்வைஸ் பண்ணினார்கள்.

தோட்டத்தில் - 

கதிர், தர்பூசணி பழங்களை ஒருபக்கம் குவித்துப் போட்டுக்கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும், நிழல் பார்த்து சேரை எடுத்துக்கொண்டு போய் போட்டான். நிஷா, அவன் செய்யும் வேலைகளை... அவன் உடல் கட்டை... ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். 

"நிஷாவுக்கு முந்திரிப் பழம் வேணுமாம்"

"அவகிட்டயே முந்திரி இருக்கே...." - அவளது மூக்கைப் பார்த்துக்கொண்டே சொன்னான். அவளருகில் வந்து கண்ணடித்தான். நிஷாவுக்கு மூக்கு குறுகுறுத்தது.

"அவகிட்ட எப்படிடா இருக்கும். இன்னைக்குத்தானே இங்க வந்திருக்கா. நிஷா... தர்பூசணி சாப்பிடும்மா"

"அதுவும்தான் நிஷாகிட்டயே இருக்கே...." - அவன் நிஷாவுக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்ல, அவள் முறைத்தாள். 

"சரி சரி நீ இந்த பழங்கள்ள கொஞ்சத்தை எடுத்துட்டு கிளம்பு. நான் அவளுக்கு தோட்டத்தை சுத்திக்காட்டிட்டு கூட்டிட்டு வர்றேன்."

"நீ இருக்கியா என்கூட வர்றியாம்மா?"

"இருக்கேன் அத்தை. நீங்க போங்க"

லக்ஷ்மி போய்விட.... நிஷா சேரில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்துகொண்டு, அவனது உடல்கட்டையும் வியர்வைத் துளிகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 


காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது.
 அவன், தர்பூசணியை வெட்டி, ஒரு பீஸை அவளிடம் தூக்கிப் போட்டான். 

"ஏய்...."

அவள் பதறிக்கொண்டு பிடித்தாள். "லூசு.. புடவைல பட்டுடுச்சுன்னா..." என்று அவனை கடுப்போடு பார்த்தாள். 

"சிம்பிள். புடவையை அவுத்து வச்சிடு!"

நிஷா அவனைப் பார்த்து அழகாக முறைத்தாள். "ரொம்ப ஆசைதான்..." என்று குறும்பாக சொல்லிவிட்டு, பழத்தை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்துக்கொண்டு கடித்து சாப்பிட ஆரம்பிக்க, கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். விதைகளை அவள் வாய்க்குள் வைத்து சப்பிவிட்டு கீழே துப்பும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான். 

அவன் அவளை இப்படி ரசித்துப் பார்ப்பது அவளுக்குப் பெருமையாக இருந்தது. "ஏன் இப்படி பார்க்குறீங்க? எனக்கு வயிறு வலிக்கப்போகுது.." என்றாள். 

கதிருக்கு அப்போதுதான் தான் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது உறைத்தது. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே போய் வேலையை பார்க்க ஆரம்பித்தான். 

நிஷாவுக்கு, அவனோடு விளையாடவேண்டும்போல் இருந்தது. சாப்பிட்டதுபோக மீதி பகுதியை அவன்மேல் தூக்கிப்போட்டாள். அது அவன் முதுகில் பட்டு விழுந்தது. 

"நான் உனக்காகத்தான் இவ்ளோ தூரம் நடந்து வந்தேன். நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருக்க?"

அவள் தனக்காக நேற்று பாவாடை சட்டை போட்டுக்கொண்டது... இரவு முத்தம் கொடுத்தது.. இப்போது உரிமையாய்.. க்ளோஸாக பேசுவது... எல்லாமே கதிருக்கு சந்தோஷமாக இருந்தது. 

"என் நிஷா கண்ணுக்கு என்ன வேணும்??" என்று கொஞ்சிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

"எனக்கு மாங்கா வேணும்"

"கொடுத்துட்டா போச்சு. இது இனிமே உன்னோட தோட்டம் தெரியுமா? எல்லாமே உனக்குத்தான்..." என்று மாமரத்தை நோக்கி ஆர்வமாக நடந்தான். 

"கதிர்..."

"என்ன நிஷா?"

"எனக்கு... திருட்டு மாங்காதான் வேணும்"
 

"அடிப்பாவி! திருட்டு மாங்காவா?"

"ஆமா. அதுதான் டேஸ்ட்டா இருக்கும்"

"சரிதான்!"

இதுநாள்வரை சீரியஸான முகத்துடன் நிஷாவை பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு, அவளது குறும்புத்தனமும் பாவனைகளும் பார்க்க பார்க்க தித்திப்பாக இருந்தன. அவனுக்கும் விளையாட்டுத்தனம் ஒட்டிக்கொண்டது. 

"வா வா பக்கத்து தோட்டத்துக்கு போவோம்"

"ம்..." - நிஷா வேகம் வேகமாக தலையை ஆட்டினாள். 

கதிர் முன்னால் நடக்க... நிஷா பின்னால் வந்தாள். அவன், பக்கத்து தோட்டத்து வேலியை கொஞ்சம் ஒதுக்கி வழி ஏற்படுத்திவிட்டு... அவளோடு உள்ளே நுழைந்தான். 

"அய்யோ... எவ்வளவு மாமரம்!" - நிஷா துள்ளிக் குதித்தாள். 

"கதிர்... இங்க பாரு குண்டு மாங்கா. இங்க பாரு கிளி மூக்கு..."

'அடி சண்டாளி.... ஆயிரக்கணக்குல பணம் செலவு பண்ணி ஜவுளி எடுத்துட்டு வந்தேன். அதுக்கு கூட நீ இவ்ளோ சந்தோஷப்படலையேடி. இரு இரு உன்ன மாட்டிவிடுறேன்'

"அந்தப்பக்கம் வா இன்னும் பெரிய பெரிய மாங்காவா தொங்கும். ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்"

"வாவ்... கதிர் கதிர் நாம தினமும் இங்க வந்து மாங்கா பறிக்கனும்" - அவளுக்கு கைகளும் கால்களும் பரபரவென்று வந்தன. இவ்வளவு கும்பலான மாமரங்களை... அந்தப் பசுமையை அவள் இதுவரை எங்கேயும் பார்த்திருக்கவில்லை. 

"இந்த மரத்துல... செம டேஸ்ட்டா இருக்கும்"

"வாவ்... தேங்க்ஸ் கதிர்..." என்று சொல்லிக்கொண்டே அவள் எட்டிப் பறிக்கப்போக... கதிருக்கு அவளை அணைத்துப் பிடித்துக்கொள்ள ஆசையாக இருந்தது.  அவளைத் தூக்க வந்தான். 

"ஏய்.. என்ன பண்ற?"

"நான் தூக்கிக்கறேன். நீ பறி"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நானே பறிச்சிக்கறேன்." - மறுத்தாள். உதட்டுக்குள் சிரித்தாள். கதிர் ஏமாற்றத்தோடு நிற்பதைப் பார்த்து சிரித்துக்கொண்டே எக்கி எக்கி நின்று மாங்காவைத் தொட்டாள். 

அப்போது.. நிஷாவின் இடுப்பழகை பார்த்த கதிர்.. தன்னையும் அறியாமல் அவள் அழகில் கிறங்க... அவளை ரசித்துப் பார்த்தான். அவனது ஆண்மையில் ஒருவிதமான சுகம்.... பரவி... அது ஹார்டானது. சுகமாக இருந்தது. 

இதற்குள் நிஷா ஒரு மாங்காவை பறித்துவிட... இன்னொரு முறையும் அப்படி இடுப்பைக் காட்டிக்கொண்டு நிற்கமாட்டாளா... என்று ஏங்கினான். அவன் நினைத்ததுபோலவே நிஷா இன்னொரு மாங்காயை பறிக்க எக்கிக்கொண்டு நிற்க...  இப்போது அவளது புடவை இன்னும் விலகி அவளது பாதி தொப்புள் குழி அவனுக்கு தரிசனம் கொடுக்க.... கதிர் எச்சில் விழுங்கினான். 

'ஐயோ நம்ம நிஷாவுக்கு தொப்புள் குழி செம செக்சியா இருக்கும்போலயே... நல்லா டீப்பா...' - அவனுக்கு சட்டென்று எதிர் நீச்சல் படத்தில் வரும் ப்ரியா ஆனந்த் ஞாபகத்துக்கு வந்தாள். 

'நிஷாவுக்கு அவளோடதைவிட அழகா இருக்குதே.... இறைவா....' - கதிர் தன்னை மறந்து நிஷாவின் இடுப்பழகை ரசித்துக்கொண்டிருக்க... இதைக் கவனித்த நிஷா, வெட்கத்தில் முகம் சிவந்தாள். 

அவனை முறைத்துக்கொண்டே... புடவையை இழுத்து, தெரிந்து கொண்டிருந்த பாதி தொப்புளை மறைத்தாள். 'ச்சே.. கதிர் மனசை அலைபாயவிடுறோமோ....' என்று உதட்டை லேசாகக் கடித்துக்கொண்டே முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகினாள். நாணத்தோடு.... கதிரின் ஏக்கப் பார்வையை நினைத்துப் பார்த்துக்கொண்டே மாங்காயைப் பார்த்துக்கொண்டு நின்றாள். 

"ஏய்.. ஏய்.. யார் அங்க மாங்காவை பறிக்கிறது?" என்ற ஒரு அதட்டலான பெண் குரல் கேட்க.... நிஷா சுயநினைவுக்கு வந்தாள். திடுக்கிட்டாள். 

"ஏய்... திருட்டுச் சிறுக்கி. யாருடீ நீ??"

கோபம் தெறிக்கும் கண்களுடன், ஒரு கிழவி வந்து அவள் முன்னால் நிற்க, நிஷா அதிர்ந்தாள். "ஐயோ கதிர்...." என்று பதைபதைப்புடன் சட்டென்று திரும்பிப் பார்க்க... அங்கே கதிர் காணாமல் போயிருந்தான். நிஷாவுக்கு பக்கென்று இருந்தது. முழித்தாள்.  

இதற்குள், "எந்த ஊர்க்காரிடி நீ? எத்தனை நாளா திருடிக்கிட்டிருக்க?" என்று கேட்டுக்கொண்டே அந்தக் கிழவி கையிலிருந்த குச்சியால் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுக்க...நிஷாவுக்கு சுள்ளென்று வலித்தது. அழுகை வந்தது.

"பாட்டி நான் திருடி இல்ல. இந்த ஊரு டீச்சரு"

"டீச்சரா... நீயா? திருடுறதும் இல்லாம பொய் வேற சொல்றியா?" என்று குச்சியை மறுபடியும் ஓங்க.. நிஷா பிடித்துக்கொண்டாள். பயந்துபோனாள். கிழவியின் உக்கிர பார்வையும், தண்டட்டியும் அவளை நடுங்க வைத்தன. 

"பாட்டி ப்ளீஸ்... நான் கதிரோட மாமா மக"

"அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவள் குண்டியில் இன்னொரு அடி விழுந்தது. பறிச்ச மாங்காய்களை போட்டுட்டு ஓடுடி திருட்டுக் கழுத... ஆளையும் மூஞ்சையும் பாரு டீச்சராம்"

நிஷா கையிலிருந்த மாங்காயைப் போட்டுவிட்டு வேகம் வேகமாக திரும்பி நடந்தாள். கிழவியிடம் அடிவாங்கியது அவமானமாக இருந்தது. அழுகை வந்தது. 

'வம்புக்குன்னேதான் என்ன மாட்டிவிட்டுட்டான்!' என்று கதிர் மேல் ஆத்திரம் பொங்கியது. 'இவனை நம்பி வந்தது தப்பு ச்சே....' என்று கையை உதறிக்கொண்டு வேகம் வேகமாக நடந்தாள். 

"அப்பாகூட என்ன இப்படி அடிச்சது கிடையாது. யாரோ ஒரு கிழவி திரும்பத் திரும்ப அடிச்சிட்டாளே... ச்சே நான் அடிவாங்கினது வெளில தெரிஞ்சா...."

நிஷா கசங்கிய முகத்தோடு, கலங்கிய கண்களோடுமுகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு நடந்தாள். ஹைஹீல்ஸ் செருப்பு வேறு மணலுக்குள் புதைந்து புதைந்து அவளை நடக்கவிடாமல் செய்தது. செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாள். காலில் முள் குத்தியது. 

"ஆஆ...."

ஆத்திரத்தோடு முள்ளை பிடுங்கி வீசினாள். ரத்தம் வந்தது. தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. "ச்சே...ச்சே..." என்று எரிச்சல்பட்டுக்கொண்டு அழுகையோடு நடந்துவந்தபோது கதிர் சிரித்துக்கொண்டே ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து வந்தான். 

"என்ன டீச்சர், திருட்டு மாங்கா டேஸ்ட்டா இருந்துச்சா?"

நிஷாவால் அதற்குமேல் கோபத்தை அடக்கமுடியவில்லை. செருப்பு இரண்டும் அவன்மேல் வந்து விழுந்தன. "என்ன அங்க விட்டுட்டு ஓடி வந்துட்டேல்ல? என் மூஞ்சிலயே முழிக்காத...." என்று கத்திவிட்டு அவனைக் கடந்து வெடுக் வெடுக்கென்று நடந்துபோனாள். 

"நிஷா... நிஷா... ஏய்...."

அவள் ஆத்திரத்தோடு நடந்துகொண்டேயிருந்தாள். 

"ஏய்.. திருட்டுக் கழுத... நில்லுடி..."

நிஷா கோபத்தோடு திரும்பினாள். எரிக்கும் கண்களால் அவனைப் பார்த்தாள். "யார்ரா திருட்டுக் கழுத... யார்ரா திருட்டுக் கழுத..." என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளிலும் நெஞ்சிலும் தோளிலும் மாறி மாறி அடிக்க.... கதிர் அவளைக் கட்டிப்பிடித்து சட்டென்று அவள் உதடுகளைக் கவ்வினான். 

"ஹக்.....!!!!"

கதிர் அவள் உதடுகள் இரண்டையும் ஒவ்வொன்றாக வாய்க்குள் இழுத்து வைத்துக்கொண்டு தன்னை மறந்து ரசித்து... அனுபவித்து சுவைக்க.... நிஷாவுக்கு மார்புகள் பலமாக ஏறி இறங்கின. இதயம் டங்க் டங்கென்று அடித்துக்கொண்டது. முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் சட்டென்று கிடைத்த முத்தம்... அவளை நிலைகுலையைச் செய்ய... கண்களை அகலமாக திறந்து பார்த்தாள். 

"ம்ம்ம்ம்ம்...... ம்ம்ம்ம்ம்ம்ம்......." என்று திமிறினாள். 

கதிரோ, அவளது உதடுகளை விடவே இல்லை. நன்றாக தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான். 

நிஷாவுக்கு... மார்புகள் இன்னும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. மூச்சு வாங்கினாள். உடம்புக்குள் பலவிதமான மாற்றங்கள். அவன் முதுகுக்குப் பின்னால்... அவன் சட்டையை நன்றாகப் பிடித்துக்கொண்டாள். அவளது ஆத்திரமும் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்துகொண்டிருந்தன. கண்களை மூடிக்கொண்டாள். 

கதிர், அவளது கீழுதட்டை... நன்றாக சுவைத்துவிட்டு, விட்டான். நாக்கால் தன் உதடுகளை நனைத்தான். அவள் மூக்கு, கண்ணம், கண்கள் என்று மாறி மாறி முத்தமிட்டான். நிஷா, "ம்ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்..." என்று மெலிதாய்.. கிறக்கத்தோடு முனக... நிதானமாக அவன் அவளது மேலுதட்டை வாய்க்குள் கவ்விக்கொண்டு சுவைத்தான். 

நிஷா, அவனுக்கு உதட்டைக் கொடுத்துக்கொண்டு... பனியாக உருகிக்கொண்டிருந்தாள். அதற்கேற்றாற்போல்... கதிர் அவளது பின்னிடையை சேர்த்தணைத்துப் பிடித்து அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான். அவளது முந்திரி மூக்கில் மாறி மாறி முத்தம் கொடுத்தான். 

நிஷா, தனக்குள் நடக்கும் மாற்றங்களை... புரிந்துகொள்ள முடியாமல் நின்றாள். அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் சுகம்... அந்த உணர்வு.... அவளுக்கு அநியாயத்துக்குப் பிடித்திருந்தது. 

கதிர், தன் பிடியை லேசாகத் தளரவிட, நிஷா தன் கைகளை மடக்கி... தன் மார்புகளுக்கும் அவன் நெஞ்சுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு... தலைகுனிந்து நின்றாள். உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. 

அவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டான்.  

"நான் வேணும்னேதான் பண்ணேன். என்மேல கோவமா...?"

அவள் பதில் பேசாமல், அவனை நிமிர்ந்து பார்க்காமல், ஆமா என்பதுபோல் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள். 

"ரொம்ப திட்டிடுச்சா கிழவி?"

"அடிச்சிடுச்சி"

"எங்க?"

நிஷா பேசாமல் நின்றாள். 

"குண்டிலயா?"

"ம்.."

கதிர், அவளுக்குப் பின்னால் சென்றான். முழங்காலில் நின்றுகொண்டு அவளது இரண்டு குண்டிகளிலும் முத்தம் கொடுத்தான். 

நிஷாவுக்கு, உதட்டில் முத்தம் கொடுத்ததில் மலர்ந்துபோயிருந்த அவள் பெண்மை... இப்போது இன்னும் சுகமாக மலர்ந்தது. சூடேறியது. 

கதிர், அவளது குண்டிகள் முழுவதும்... அழுத்தி அழுத்தி ஒரு இடம் விடாமல் முத்தம் கொடுத்தான். நிஷா பெண்மை கொதிக்க நின்றுகொண்டிருந்தாள்.  

அவன் எழுந்து அவளிடம் கேட்டான். "முள்ளு கிடக்கும்னு தெரியும்ல? அப்புறம் ஏன் செருப்பை கழட்டுன?"

நிஷா பேசாமல் நின்றாள். கதிர் அவளை அங்கு கிடந்த ஒரு பெரிய துணி துவைக்கும் கல்லில் உட்காரவைத்தான். தரையில் உட்கார்ந்துகொண்டு, அவள் கால்களை ஏந்திப் பிடித்துக்கொண்டு அவளது அழகான பாதங்களைப் பார்த்தான். வலது காலில் ரத்தம் வந்திருப்பது தெரிந்தது. கையால் மண்ணை தட்டிவிட்டுவிட்டு, அந்த காயத்தில் முத்தம் கொடுத்தான். 

நிஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. தவித்தாள். 

"கதிர்... போதும்...."

அவனோ அவள் பாதம் முழுவதும் முத்தம் கொடுத்தான். முகத்தை அவள் பாதத்தின் வெப்பத்தில் புதைத்துக்கொண்டான். 
 

நிஷா இனம்புரியாத ஒரு சுகத்தில் உட்கார்ந்திருந்தாள். இடது காலிலும் முள் குத்தியிருக்கக்கூடாதா என்று நினைத்தாள். 

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். "திருட்டு மாங்கா வேணுமா நிஷா?" என்றான். நிஷா, தன் முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே நாணத்தோடு எழுந்து நின்றாள். 

"வேணும்.." என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டாள்.

கதிர் அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அந்தத் தோட்டத்தை நோக்கி நடந்தான். 

"ஐயோ கதிர்... மறுபடியும் ஏன் அங்க போற?" - நிஷா திமிறினாள். 'இவன் போய் பறிச்சிட்டு வருவான்னு பார்த்தா என்னையும் கூட்டிட்டுப் போறானே....' என்று கால்களை உதறினாள்.

"பேசாம வா நிஷா..." - சொல்லிக்கொண்டே கதிர் அவள் குண்டிகளுக்கு கீழே... பின் தொடையில் ஒரு அடி கொடுத்தான். நிஷாவுக்கு ஜிவ்வென்று இருந்தது. பெண்மையில் ஒருவிதமான tingling sensation... சுகமாக இருந்தது. அவனது கல் போன்ற தோள்பட்டையில் தன் முலைகள் நசுங்கிக்கொண்டிருப்பதுவேறு அவளை என்னென்னவோ செய்தது. 

பேசாமல் அவன் தோளில் கிடந்தாள். நாணத்தோடு கிடந்தாள். அவன் அவளை அதே மரத்தருகில் கொண்டுபோய் இறக்கிவிட்டான். 

"வேணாம் கதிர்..." என்று தயங்கினாள்

"கிழவி அந்த குடிசைலதான் இருக்கும். அதுக்கு ஊருக்குள்ள நடக்குற விஷயங்கள் தெரியாது. அதனாலதான் உன்ன தெரியல. நான் போய் பேசிட்டிருக்கேன். நீ உனக்கு எத்தனை வேணுமோ அத்தனை திருடிட்டு போ சரியா?" என்று தன் செருப்புகளை கழட்டிப்போட்டுவிட்டுப் போனான்.  

நிஷாவுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. நன்றாக எம்பி எம்பிக் குதித்து மாங்காய்களைப் பறித்தாள். 

 

தொடரும்...

Comments

  1. நிஷா எம்பி குதித்து மாங்காய்களை பறித்தாள். கதிர் எம்பி குதிக்கும் போது குலுங்கும் அவளின் மாங்கனிகளை ரசித்தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107