மயக்கமென்ன 27

முழு தொடர் படிக்க

 (சுலோச்சனா பார்வையில்)

 அன்றைக்கு சுந்தருடன் பேசிய பிறகு ஒவ்வொரு நாளும் பதற்றத்தில் போனது. ஒவ்வொரு நாள் முடிய அவன் இங்கே வருகிற நாள் நெருங்கிக்கொண்டு இருந்தது. ஒரு பெண்ணுக்கு தப்பான எண்ணங்கள் மனதில் ஊடுருவினால் அவளுக்கு இந்த பதற்றமான நிலைதான் நீடிக்குமா? எனக்கு தெரிந்து ஆண்கள் தப்பு செய்ய நினைத்தால் அல்லது தவறில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகம் பதற்றம் ஏற்படுவதில்லை. தன் செயல்கள் அம்பலமானால் எப்போதும் பெண்ணுக்குத்தான் இழப்பு அதிகம் ஆகும் என்பதாலா? ஒரு ஆண் மனைவிக்கு துரோகம் செய்யும் செயலில் ஈடுபட்டு பிடிபட்டால், ஆரம்பகால கண்டனங்கள் மற்றும் தண்டனைகளுக்குப் பிறகு, அவனைச் சுற்றியுள்ள சமூகமமே அவன் செயலுக்கு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிக்கும்.


'எதோ ஒரு பலவீனத்தால் தப்பு செஞ்சிட்டான்'

'வீட்டில் அவன் மனைவி அவனை 'ஒழுங்காக' கவனித்தால் அவன் ஏன் தப்பு செய்ய போறான்.'

'ஆண்கள் என்றால் அப்படி இப்படி தான் இருப்பார்கள்'

கடைசியில் அவன் கள்ள உறவு வைத்திருந்த பெண்ணை தான் அதிகம் குற்றம் கூறுவார்கள். 

'இவன் திருமணமானவன் என்று தெரிந்தும் இவனுக்கு தன்னை கொடுத்துவிட்டால், அவ புத்தி எங்கே போனது. அவளே இடம் கொடுக்கும் போது ஆணாக இருக்கும் இவன் எப்படி சும்மா இருக்க முடியும்.'

அவர்கள் செய்த தவறுகள் மறக்கப்பட்டு மன்னிக்கப்படும், இந்த அனைத்து சாக்குகளுடன். இதையே திருப்பி போட்டு பாருங்கள். ஒரு திருமணமான பெண் ஒரு திருமணமாகாத ஆணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தது அம்பலமானால், அதே சமூம் இவளை எப்படி நடத்தும்.

'ச்சே, பெரிய தேவடியால இருப்பா போல, புருஷன் இருக்கும் போதே வேற ஒருவன் கேட்குதா?'

'சரியான அரிப்பு எடுத்த வேசி.'

'மானம்கெட்டவ, அவ ஆசைக்கு எவன் கூடையும் படுப்பா.'

'அறிவுகெட்ட நாயி, புருஷனையும், பிள்ளையும் பற்றி கொஞ்சம் கூட நினைக்கல.'

இப்படி மாட்டிக்கொண்ட பெண்களுக்கு மன்னிப்பு கிடைப்பது அரிது. குடும்பத்தில் இருந்து தள்ளிவைக்க படுவார்கள். குடும்ப மானத்தை வாங்கிவிட்டாள் என்று அவளின் பெற்றோரோ, அல்லது கூட பிறந்தவர்களோ அவளை தள்ளி வைத்திடுவார்கள். அதற்க்கு பிறகு அவளே அவள் வாழ்க்கையை தனிமையில் தொடரவேண்டியது தான். ஏனென்றால் அவளை மயக்கி அவளை அனுபவித்தவனும் அத்துடன் காணமால் போய்விடுவான். அவனுக்கு வேண்டியது அவள் உடல் மட்டுமே, பொறுப்பு எதுவும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கமாட்டான். அவனை பொறுத்தவரை அவனுக்கு ஓசியில் இன்னொருவன் மனைவி அனுபவிக்க கிடைத்தது. அந்த கிளுகிளுப்பான செக்ஸ் மட்டும் தான் அவன் நோக்கம்.

இதுவெல்லாம் சரி தான் அனால் அனைத்தும் தெரிந்தும் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள். அதே போல மற்றவரின் மனைவியை மயக்குவதிலே குறியாக இருந்து அதில் வெற்றிபெறும் ஆண்களும் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி என்றால் செக்ஸ் உணர்ச்சிகளுக்கு அவ்வளவு பெரிய வலிமை இருக்கிறதா? அல்லது திருட்டுத்தனமான செக்சின் கிளிர்ச்சிக்கு அந்த வலிமையா. அல்லது ஆசை அதிகமாக தூண்டப்பட்டபின் நான் கவனமாக இருந்தால் மாட்டிக்கொள்ள வாய்ப்பில்லை என்ற அசட்டு தைரியம் வருவதினாலா? இதில் நான் எந்த வகை? செக்ஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவளா? சுந்தருடன் கிளுகிளுப்பான கள்ள செக்ஸ் அனுபவம் பெற ஆசைப்படுகிறவளா? அல்லது, என் கணவர் என் மீது அதிக நம்பிக்கை கொண்டவர், அவர் சந்தேகம் படும் ஆண் கிடையாது அதனால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பதால் புதுவித அனுபவம் பெற துணிந்தவளா? அடிப் பாவி நீ சுந்தருடன் படுக்க முடிவு செய்திட்டியா இப்படி யோசிக்கிற என்று என்னை நானே திட்டிகொண்டேன். நீ ஒரு நண்பனை சந்திக்க போற அவ்வளவு தான். இதற்கு மேலே எதுவும் இல்லை என்று நான் தீர்மானத்துடன் என்னிடம் சொல்லிக்கொண்டேன். இடையில் சுந்தர் மெஸேஜ் அனுப்பி இங்கு வருவதையும் என்னை சந்திக்க நினைப்பதையும் எனக்கு தெரியபடுத்தினான். அதற்க்கு முன்பு கன்யா வேற என்னை மொபைலில் அழைத்தாள்.

"ஹாய் எப்படிடி இருக்க, அன்றைக்கு கால் பண்ணினபிறகு கால் பண்ண நினைச்சேன் இப்போது தான் நேரம் கிடைத்தது," என்று படபடவென்று பேசினாள்.

"ஆமாம் சுந்தருடன் படுக்க நேரம் கிடைக்கும் ஆனால் என்னுடன் பேச நேரம் கிடைக்காது," என்றேன் சற்று கோபமாக. இரண்டு முறை அவளை அழைக்க முயற்சி செய்தேன் ஆனால் அவள் போனை எடுக்கவில்லை.

"கோவிச்சிக்காதடி உன் கிட்ட பேசறதுக்கு எனக்கு சங்கடமாக இருந்தது," என்றாள் செய்ததற்கு வருத்தம் கூறும் வகையில்.

"அப்புறம், நீ செஞ்ச காரியத்துக்கு கோப படமா கொஞ்சுவார்களா," என்றேன். இது எனக்கு போலி நடிப்புபோல இருந்தது. அவள் தைரியமாக செய்ததை நான் செய்ய டெம்ப்ட் ஆகியிருக்கேன்.

"இல்லைடி, என் நிலைமையை புரிஞ்சிக்கோ. அவன் போனில் இருந்ததை நான் உனக்கு அனுப்பியது கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருந்தது. அதை எல்லாம் படித்தால் யாருக்கும் ஆசை வரும். நானும் ஒரு சாதாரண பெண் தானே, எனக்கும் அதை அனுபவிக்க ஆசை வந்தது."

மேலும் நிறைய இருக்கா? அவள் அனுப்பின இரண்டு மெஸேஜ் மற்றும் அந்த போட்டோவை பார்த்தே எனக்கு ஆசை வந்துவிட்டது. கன்யா இதற்க்கு மேலே பார்த்திருக்காள். அவளை எப்படி குற்றம் சொல்வது. ஆனால் அவளிடம் காட்டிக்கொள்ளாமல் பேசினேன்.

"இருந்தாலும் உன் மணவாழ்க்கை பாதிக்கப்படும் என்று உனக்கு பயம் இல்லையா?"

இந்தக் கேள்விக்குக் காரணம், அவளின் நிலைமையில் நானும் திடீரென்று இருக்கலாம். அவளிடமிருந்து எனக்கு ஒருவித நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் தேவைப்பட்டன.

"ஒருமுறை தானடி நான் அவனுடன் படுத்தேன். நான் என்ன வார வாரமாகவா அவனுடன் படுக்கப்போறேன். ஆசை ரொம்ப வந்து கட்டுப்படுத்த முடியாட்டி எப்போதாவது ஒரு முறை, சோ மாட்டிக்க சான்ஸ் இல்லை."

ரொம்ப நம்பிக்கையோடு சொல்லுறா. புருஷனுக்கு துரோகம் செய்வது என்ன அவ்வளவு சர்வசாதாரணமா? ஆனாலும் கன்யா சொல்வது சரி தான். எப்போதாவது ஒரு முறை என்றபோது பிரச்சனை வருவதற்கு வாய்ப்பில்லை.

"அது சரி நீ எப்போதாவது என்று சொல்லுற, அனால் ஆண்கள் அப்படி இருப்பார்களா? சுந்தர் அடிக்கடி உன்னை அழைத்து தொந்தரவு செய்தால் நீ என்ன பண்ணுவ?"

கன்யா சிரித்தாள், "உனக்கு சுந்தர் பற்றி தெரியாதா. நான் ஒருத்திதானா அவனுக்கு. அவன் ஒரு பிளேபாய். பல பெண்களை லைனில் வெச்சிருக்கான். அவளுகளை கவனிச்சிக்கவே அவனுக்கு நேரம் போதாது."

"அவன் பிளேபாய் என்று தெரியுது தான அப்புறம் அவனுடன் உறவு வெச்சிக்கலாமா?" என்றேன்.

"பிளேபாய் தான் ஸேஃப். புருஷனை விட்டு என்னோடு ஓடிவா என்றல்லாம் பிரச்னை கொடுக்க மாட்டான். ஸ்ட்ரிக்ட்லி செக்ஸ், வேறு எந்த பிரச்னையும் வராது."

கள்ள உறவு வைத்துக்கொள்வதற்கு அவன் தான் பாதுகாப்பானவன் என்கிறாள் கன்யா.

"ஆனாலும் உன் புருஷனை நினைச்சி பாரு. அவருக்கு துரோகம் செய்வது பாவம் இல்லையா?"

அவள் அப்படி எதுவும் இல்லை என்று மறுப்பால் என்று நினைத்தேன். அப்படி சொன்னால் அவள் தன்னை பற்றி மட்டும் நினைக்கும் சுயநலவாதி என்று உறுதி ஆகிவிடும். அவள் சொன்னது அனைத்தும் பொய் என்று அர்த்தம், அவள் இன்பமாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா வகையான காரணங்களையும் கொண்டு வருகிறாள். ஆனால் அவள் பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.

"ஆமாம் சுலோ, அவர் முகத்தை பார்க்கும் போது எனக்கும் சங்கடமாக இருக்கு. நான் ஏன் இப்படி செய்தேன் என்று வர்த்தப்படுவேன்.. என்னையே திட்டிக்கொள்வேன்."

"அப்போ நீ சுந்தருடன் இதோடு நிறுத்திக்கப்போறியா?" அப்படி அவள் செய்தால் நல்லது என்று மனதுக்குள் நினைத்தேன். இது அவள் குடும்ப நலனுக்காகவா அல்லது என் பொறாமையாலா என்று தெரியவில்லை.

"அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. எனக்கு தெரியும் அவனுடன் மீண்டும் செக்ஸ் வைத்துக்கொள்வேன்."

"நீ செஞ்சதுக்கு வருத்தப்படுற, உன் புருஷனை பார்த்து சங்கடப்படுற அப்புறம் ஏன் இந்த முடிவு?"

"சுந்தர் எனக்கு அன்றைக்கு காட்டின சொர்கம் அப்படி இருந்தது. நான் அவன்கூட படுக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, அந்த பரவசம் அறியாமல் இருந்திருப்பேன். ஆனால் அதை அனுபவிச்ச பிறகு அதை ஒரு முறையோடு நிறுத்த என்னால் முடியவில்லை. என் கணவர் நல்லவர் தான் ஆனால் அவரால் ஒரு போதும் சுந்தருக்கு ஈடுகொடுக்க முடியாது."

"அப்படி என்றால் இங்கே உன் கணவர் தான் ஏமாளி, உனக்கும், சுந்தருக்கும் லாபம், எல்லா இழப்பும் உன் புருஷன் ஒருவருக்கு மட்டுமே," நான் அவளை வெட்கப்படவைக்க விரும்பினேன்.

"என்னடி என்னை அவமான படுத்த நினைக்கிறியா? நான் ஏற்கனவே மனஉறுத்தலில் இருக்கிறேன், நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் என்கணவர் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்."

"என்ன சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியல?" கன்யா சொன்னதைக் கேட்டு நான் உண்மையிலேயே குழப்பமடைந்தேன்.

"அவரிடம் எதுக்குமே கோபபட மனசுவரல. அவரை ரொம்ப பாசமாக பாத்துக்குறேன்."

"கில்டியா பீல் பண்ணுறதுனால தான இது எல்லாம். பாவம் அந்த மனுஷன் அவர் மீது உள்ள அன்பாலே இதை நீ செய்யிற என்று நினைச்சிருப்பாரு," என்றேன்.

"ஹேய் அவர் மீது அன்பு இருக்குடி. சுந்தர் எதோ ஒரு தேவைக்கு பயன்படுறான், அவ்வளவு தான். என் புருஷனை அவன் ரிப்ளேஸ் பண்ண முடியாது."

"சுந்தர் வெறும் யூஸ் பண்ணுற ஒருத்தனாக இருக்கும் போது அவனுக்கு அது கேவலமாக தோன்றாதா?"

"அவனுக்கு அது கிடையாது. அவனை பெண்கள் யூஸ் பண்ணிக்கறதை தான் விரும்புவான்."

"எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிரு," என்றேன்.

"என் புருஷனின் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கு," என்று கூறி மெல்ல சிரித்தாள்.

"அது என்னடி?"

"இப்போது அவரை கட்டிலில் பிழிந்து எடுக்குறேன். அவரை இன்பத்தில் தத்தளிக்க செய்யுறேன்."

குற்ற உணர்வு ஒரு பெண்ணை என்னவெல்லாம் செய்யவைக்குது என்று மனதில் நினைத்துக்கொண்டேன். "இந்த ஒரு விஷயத்திலாவது உன் கணவருக்கு ஒரு நன்மை கிடைக்குதே." உண்மை தான் குற்றமாக உணர்ந்ததால் தான் ஈடாக அவள் புருஷனுக்கு அதிக இன்பம் கொடுக்க நினைக்கிறாள்.

"ஆமாம் சுலோ, சுந்தர் உன்னை இந்த வெள்ளிக்கிமை சந்திக்கிறானாமே... ஹ்ம்ம் என்ஜாய்," என்றாள் கன்யா நக்கலாக.

"என்னடி என்ஜாய்? என்ன உளறுற?'

"நீ அவனை தனியாக சந்திக்கிறியாமே, அவனும் உன் மீது பைத்தியமாக இருக்கிறான், பஞ்சும் நெருப்பும் ஒன்றாக இருக்கப்போகுது," என்று சொல்லி சிரித்தாள்.

"உன் புத்தியை சும்மா அலையவிடாதே, ஒன்னும் நடக்க போவதில்லை. அவன் பைத்தியமாக இருந்தால் அதற்காக நான் ஒன்னும் செய்ய முடியாது."

"உன்னை மீட் பண்ண போகிறான் என்று ரொம்ப ஏக்சைட்டடா இருக்கிறான். ரொம்ப ஆசையில் இருக்கிறான்."

இதை கேட்க என் மனதில் மகிழ்ச்சி தான் ஆனால் அதற்காக நான் என்னை கொடுத்திடனுமா? "இது ஒன்னும் புதுசில்லையே, அவன் எப்போதும் இப்படி தானே பேசுவான். எல்லாம் சும்மா."

"அப்படி இல்லைடி, அவன் உன்னை வர்ணிக்கும் போது உன் நெருங்கிய தோழி ஆனா எனக்கே பொறாமையாக இருக்கு."

நீயுமா? என்று மனதில் நினைத்துக்கொண்டேன். என்ன வர்ணித்தான் என்று கேட்க ஆசையாக இருந்தது ஆனால் என் ஆர்வத்தை எப்படி கன்யாவிடம் காட்டிக்கொள்வது. நல்லவேளை அவளே தொடர்ந்தாள்.

"அதில் ரொமான்டிக் காமம் இரண்டும் இருந்தது. உன் கண்களை பார்த்தால் அந்த ஆழமான குளத்தில் மகிழ்ச்சியுடன் மூழ்கிவிடுவானம்."

கன்யா சொல்வதை கேட்டு நான் இங்கே புன்னகைத்தேன். 

"உன் உதடுகளின் இனிமைக்கு இருப்பதிலியே மிகவும் இனிப்பான மாம்பழம் கூட ஈடாகாது என்றான். அதுவும் அந்த படுபாவி சொன்னான் மாம்பழத்தை விட உன் உதடுகளில் சாறு அதிகம் என்றான். அப்படி என்றால் நம்ம உதடுகள் எல்லாம் சும்மாவா?" கன்யாவின் ஆதங்கம் அவள் குரலில் தென்பட்டது.

நான் என் உதடுகளை என் விரல்களால் லேசாக தடவினேன். 

"உன் உதடுகளில் அப்படி என்னதான்டி இருக்கு," என்று கன்யா கேட்டாள்.

"அவன் எதோ உளறினான்னா அதற்க்கு நான் என்ன செய்ய முடியும்," என் குரலில் நான் அடைந்த மகிழ்ச்சியை மறைக்க முயற்சித்து பேசினேன்.

"அப்புறம் உன் ஹிப் ஷேப்பை வர்ணித்தான் பாரு... அது சரி ஒரு பிள்ளை பெற்றெடுத்தும் எப்படி உன் உடம்பை இப்படி வெச்சிருக்க?"

அவன் சொன்னதை சொல்லுடி இந்த ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் வைத்துக்கொள்ளலாம் என்று மனதில் ஆவலுடன் நினைத்துக்கொண்டேன்.

"உன் இடுப்பின் வளைவு மிகவும் கவர்ச்சியாக இருக்குதாம். அதில் அவன் முகத்தை புதைத்து படுத்திருந்தாலே அவனுக்கு மோச்சம் கிடைத்திடுமாம்.." அவள் குரல் இப்போது கிசுகிசுப்பாக இருந்தது.

"பொருக்கி, பொருக்கி எப்படி பேசுறான் பாரு," என்று கோபபடுவதுபோல பேசினேன்.

"இதற்க்கே கோபப்படுறியா? சும்மா படுத்திருப்பியா என்று நான் கேட்க என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னான்?" என்று என்னை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டுவிட்டேன்.

"கடிச்சி தின்னுடுவானாம்... நீயே வெள்ளையா இருக்க, அங்கே எப்படி சிவந்திடும். அவள் பாவம்டா என்று நான் சொன்னதுக்கு, பிறகு முத்தமிட்டு எச்சிலிலால் மருந்து பூசிடுவேன் என்று சொல்லுறான் அந்த எருமை."

"அதுவும் உன் தொப்புளை எங்கே பார்த்தான் என்று தெரியல... அதை அரைமணி நேரமாவது முத்தமிட்டு நக்குவானாம்."

இப்போது நிச்சயமாக என் புண்டை ஈரமாகியிருக்கும். என் முலைக்காம்பு புடைப்பதை உணர்ந்தேன். என் கால்களை பின்னி என் தொடைகளை அழுத்திக்கொண்டேன். "போதும்டி அந்த ராஸ்கல் சொன்னதை எல்லாம் நீ சொல்லவேண்டாம்," என்று அவளை தடுத்தேன்.

நான் இப்படி சொன்னது அவன் சொன்னதைக் கேட்க எனக்கு ஆவல் இல்லாததால் அல்ல, என் ஆர்வத்தை கன்யாவிடம் மறைக்க முடியாது என்று பயந்தேன் என்பதுக்காக.

"உண்மையை சொல்லுறேன் சுலோ, அவன் உன்னை எப்படியாவது மயக்கி போட்டுருவான் என்று நினைக்கும் போது எனக்கு பொறாமையாக தான் இருக்கு. நீ கிடைத்தால் என்னை மருந்திடுவான் என்ற பயம்... என்னை விடு, மற்ற பெண்கள் எல்லாரையும் மறந்துடுவான் போல."

கன்யா மறைக்காமல் பொறாமை படுகிறாள் என்று சொல்லிவிட்டாள், நான்தான் அவளிடம் இருந்து மறுத்துவிட்டேன்.

"கவலை படாதே, எனக்கு அவனுடன் படுக்கும் எண்ணம் கொஞ்சம்கூட இல்லை." என்றேன் எனக்கே முழு நம்பிக்கை இல்லாமல். 'ஐயோ அது என் குரலில் தெரிந்திடப்போகுது.'

"சுந்தர் எந்த பெண்ணையும் அவனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வற்புறுத்தியது இல்லை. அனால் உன் மீது உள்ள அதிக காமத்தால் அவன் தன்னை மறந்து ஏதாவது செஞ்சிரப் போறான், நீ பத்திரமாக இரு," என்று சொல்லி முடித்தாள்.

கன்யாவுடன் பேசியதில் இருந்து சில விஷயங்கள் எனக்குத் தோன்றின. ஒன்று, சுந்தர் கள்ள உறவு வைத்துக்கொள்ள ஒரு பாதுகாப்பான நபர். இரண்டாவதாக, அவன் அடிக்கடி உடலுறவுக்கு வலியுறுத்தி பிரச்சனையை ஏற்படுத்த மாட்டான். எனவே கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் சிறியது. மூன்றாவதாக, அவன் ஒரு பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் தலையிட மாட்டான். இறுதியாக, முக்கியமாக, அவனுடன் உடலுறவு கொள்ளும் பெண் இன்பம் கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைந்து வறுத்தப்பட மாட்டாள். கன்யா சொல்வதை பார்த்தால் அது சாதாரணமான இன்பம் கிடையாது. உண்மையில் அது எப்படித்தான் இருக்கும் என்று மீண்டும் அந்த எண்ணம் என்னை உறுத்தியது.

அடுத்த நாள் டின்னர் சாப்பிடும் போது நான் மெதுவாக என் கணவரிடம் சொன்னேன். 

"நாளைக்கு என் பிரென்ட் ஒருவன் கோவையில் இருந்து வாரான். நான் அவனோட லஞ்சுக்கு போறேன். உங்களுக்கு ஓகேவா?"

"ஓ.. எப்போ போற?"

"ஒரு 11.30 போல போறேன், லன்ச் முடிச்சி கொஞ்சம் பேசிட்டு 2.30.. 3.00 மணிக்கெல்லாம் வந்துடுவேன்."

"ஒகே தாராளமா போய்ட்டுவா, இத என் கிட்ட கேட்கவா வேணும்?"

"இல்லங்க உங்ககிட்ட சொல்லாம எப்படி."

"நான் உன்னை எதுக்காவது ரெஸ்ட்ரிக்ட் பண்ணி இருக்கேனா? கோ மீட் யுவர் பிரென்ட்."

"நானும் வெளியூர் போகிறேன், சனிக்கிழமை மதியம் திருப்பிடுவேன்."

"தனியாவா போறீங்க?"

"இல்லை இம்பார்ட்டண்ட் க்ளைன்ட், லதாவும் வருகிறாள்."

நான் ஒரு ஆண் நண்பனை சந்திக்க போகிறேன் என்று சொல்லும் போது அவருக்கு சந்தேகமோ, பொறாமையோ வரவில்லை ஆனால் லதா அவருடன் போகிறாள் என்று கேட்டபோது எனக்கு இரண்டும் வந்தது. 

நான் சொல்வதை கேட்டு என் அம்மா மகிழ்ச்சி அடைவதை நான் கவனிக்க தவறவில்லை. 


ராஜா மற்றும் என் அம்மாவின் காமப்பசிக்கு நாளைக்கு சரியான தீனி கிடைக்க போகுது.

நான் அடுத்த நாள் கேப் புக் செய்து கிளம்பும் போது என் அம்மா என்னை சிரித்தமுகத்துடன் வழி அனுப்பினால். இன்னும் சற்று நேரத்தில் ராஜா இங்கே வந்திடுவான். இன்றைக்கு என் அம்மாவுக்கும் ராஜாவுக்கும் உல்லாசமாக இருக்க எந்த தடையும் இருக்காது. ஒரே நேரத்தில் என் தாயும், அவள் மகளான நானும் அவர்களின் காதலர்களுடன் புணர போகிரோம என்று தான் இன்னும் தெரியாது. நான் கேப் உள்ளே நுழைவதற்கு முன்பு சில வினாடிகள் யோசித்தேன் பின்பு முடிவுக்கு வந்து என் புடவையின் கொசுவத்தை தொப்புள் தெரிவது போல கீழே இறக்கினேன்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107