முழு தொடர் படிக்க மாதங்கள் கடகடவென்று ஓடிக்கொண்டிருந்தன. மோகன், பத்மாவை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னொருபுறம், அபர்ணாவை கோவிலில் சந்தித்து, அவள் காலில் விழுந்தார்.
"என்ன மன்னிச்சுடு அபர்ணா..... நான் உன்ன ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். உன்னை குழந்தையோடு தனியா தவிக்கவிட்டுட்டேன். என்ன தயவு செஞ்சி மன்னிச்சிடு அபர்ணா" என்று கண்கலங்கி அழுதார்.
அபர்ணாவோ, அவரிடம் பேச விருப்பம் இல்லாதவளாய், துக்கம் தொண்டையை அடைக்க, அவரை அலட்சியம் செய்துவிட்டுப் போய்விட்டாள். மோகன், தன் ஈகோவையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, அவள் போகும் இடங்களிலெல்லாம் அவளுக்காக காத்துக்கிடந்தார். மன்னிப்பு கேட்டுக்கொண்டேயிருந்தார்.
ஒருகட்டத்தில், மனமிரங்கி, அபர்ணா தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்து அவர் முன்னால் கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்க, மோகன் அவளை அணைத்துக்கொண்டார்.
"நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.
அபர்ணாவுக்கு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் இருந்தது. வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதுபோல் இருந்தது. தனக்கு யாருமே இல்லையே என்கிற வேதனை மறைந்தது. அவரை ஏற்றுக்கொண்டாள்.
"சீக்கிரமே உன்னை ஊரறிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்" என்றார்.
"காயத்ரியிடம் அதற்குப் பிறகு சொல்லிக்கொள்ளலாம் அதுவரைக்கும் அவளுக்கு தெரியவேண்டாம்" என்றாள் இவள்.
"எனக்கு உடனே என் மகளை பார்க்கணும் அபர்ணா"
"இல்ல மோகன் உங்க குடும்பத்துக்குள்ள குழப்பம் வேண்டாம். நாங்க இப்படியே இருந்துட்டுப் போறோம். அவளுக்கும் தெரியவேணாம்."
"நோ நோ... நான் சீக்கிரமே பத்மாவை சமாதானப்படுத்துறேன்" என்றார் அவர்.
நாட்கள் இப்படியே ஓடின.
ஒருவழியாக பத்மா சமாதானம் ஆகி, அபர்ணா, மோகனின் வீட்டுக்கு வந்தாள். அபர்ணாவும் மோகனும் சேர்ந்து போன் செய்ய...... காயத்ரி, இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். அபர்ணா அவளிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி அழ...... அவளுக்கு நம்பவே முடியவில்லை.
'என் உயிர்த் தோழி நிஷா என்னுடைய அக்காவா?'
காயத்ரிக்கு, சந்தோஷத்தில், கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றியது. "நான் கர்ப்பமா இருக்கிறேன்ப்பா.." என்று சொன்னாள். .
"இங்க வாங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. நான் உங்களை உடனே பார்க்கணும். உடனே பார்க்கணும்...."
மோகன் பாசத்தில் உருக, சீனுவுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம். தலை சுற்றியது.
'என்ன நடக்கிறது என் வாழ்க்கையில்? மோகன், என்னுடைய மாமனாரா?? நிஷா என்னுடைய மச்சினியா?'
'அடிப்பாவி அத்தை! உன்னை சாதாரணமா நெனச்சேனே. பெரிய ஆளா இருந்திருக்கியே. உன்னால நான் நினைக்க முடியாததெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குதே'
"உன் அம்மா சாதாரண ஆள் இல்லைடி!" என்றான் காயத்ரியிடம்.
"என்னால நம்பவே முடியலைங்க"
"எனக்கும்தாண்டி. நிஷா எனக்கு இவ்வளவு க்ளோஸா வருவான்னு நான் நெனச்சே பார்க்கல."
அவனுக்கு அந்த hangover-லிருந்து வெளி வருவதற்கே ஒரு வாரம் ஆனது. அதற்கப்புறம்தான் அவன் தலைசுற்றல் நின்றது.
'எஸ். மோகன் என்னுடைய மாமனார். ராஜ் என்னுடைய மச்சான். நிஷா என்னுடைய மதினி. எனக்கு நெருங்கிய சொந்தக்காரி. என் மனைவி காயத்ரியின்... அழகு அக்கா.'
அவன் அதற்கு பிறகுதான் நிஷாவின் குடும்பத்துக்குள் ஒருவனாக தன்னை உணர ஆரம்பித்தான்.
"என்னை ராசியில்லாதவ-ன்னு சொன்னான்ல மகேஷ், அவனுக்கு இந்த விஷயம் தெரியணும்ங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவனுக்கு"
"காயத்ரி என்னால நம்பவே முடியலடி"
"எனக்கும்தாங்க. நிஷா என்னோட அக்கா. ஐயோ என் அக்காவா நிஷா?"
"எனக்கு உடனே அப்பாவை பார்க்கணும்ங்க. அம்மா அவர்கூட மொத்தமா சந்தோஷமா நிக்குறதை பார்க்கணும். நிஷாவை பார்க்கணும்."
சீனுவும் காயத்ரியும் கிளம்பி வர, அவர்களுக்கு சரியான வரவேற்பு. "என்னை மன்னிச்சிடுங்க மாமா இனிமே எந்த தப்பும் மண்ணமாட்டேன்..." என்று மோகனின் காலில் விழுந்தான் சீனு.
"நல்லதுப்பா. நல்லதுப்பா."
"நீங்க ஆசைப்படுற மாதிரி உங்க பொண்ணு காயத்ரியை நல்லா பார்த்துப்பேன்." என்றான்.
அடுத்ததாக ராஜ்ஜிடமும் அவன் மன்னிப்பு கேட்க... ராஜ் அவனிடம் பேருக்கு கைகொடுத்தான். 'இனிமேல் காமினியை இவன்கிட்ட இருந்து காப்பாத்தணுமா? இப்போதான் மலரை டேனியல் கிட்டயிருந்து காப்பாற்றினேன்!.'
காமினி சீனுவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.
'இவன் எனக்கு தம்பி முறையா...? விளங்கும்'
சீனுவும் காமினியும் கைகொடுத்துக்கொண்டார்கள். அப்பாவுக்காக... ராஜ் சீனுவை ஏற்றுக்கொண்டான். அவனோடு சகஜமாக பேசினான்.
"எனக்கு சொத்து சுகம் பணம் எதுவும் வேண்டாம். இப்போ என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு. நானே சொந்தமா ஒரு தொழில் தொடங்கிக்கொள்கிறேன்" என்றான் சீனு.
அவனை சோதிப்பதற்காக, சரி என்றுவிட்டார் மோகன்.
சீனுவும் காயத்ரியும் கடகடவென்று வீட்டு வேலைகளை முடித்தார்கள். சீனு, ராஜ்ஜிடம் "ஒரு உதவி செய்யமுடியுமா ஸார்?" என்றான்.
"என்ன சீனு?"
"ஒருத்தன் காயத்ரிகிட்ட வம்பு பண்ணினான். அவனை நாலு போடு போட்டாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்."
அவன் ஷர்மாவையும் ஆட்களையும் அனுப்பி வைக்க, சீனு, மேஸ்திரியை ஆசை தீர போட்டு அடித்தான். இனிமே "காயத்ரி லைன்லேயே நீ குறுக்கே வரக்கூடாது" என்றான்.
சில நாட்களில் - நிஷாவின் மூத்த மகள் ரூபாவுக்கு காது குத்து விழா வர, "நம் குடும்பத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்" என்றார் மோகன்.
"நான் எதுக்கு? அது கதிருக்கும் நிஷாவுக்கும் தர்மசங்கடமாக இருக்கும் என்றான்" இவன்.
இதை காயத்ரி, மோகனிடம் சொல்ல, அவரோ, "நோ நோ... நீங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" என்றுவிட்டார். வேறு வழியில்லாமல், அனைவரும், குடும்பமாக கிராமத்துக்கு போனார்கள்.
அங்கே கதிருக்கு பெரிய பிரச்சினை காத்திருந்தது. விவசாயிகளை ஏமாற்றிக்கொண்டிருந்த தரகர் ஒருவன், கொள்முதல் வியாபாரி, கதிரின் மேல் வெறுப்பில் இருந்தான். கதிர் இருக்கும்வரை தனக்கு பிரச்சினைதான் என்று அவனை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தன் தம்பி திருவுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டினான்.
"கதிர் மேல போலீசுக்கும் வெறுப்பு இருக்கு. அவனை செஞ்சிடுவோம்" என்றான் திரு.
காதுகுத்து விழாவில், சீனு, யாரிடமும் ஒட்டாமல் தனித்தே நின்றான். அவனால் அவர்களோடு mingle ஆக முடியவில்லை. நிஷாவும் அவனிடம் ஆஹா ஓஹோவென்று பேசவில்லை. பங்க்சனுக்கு அவன் வந்ததுக்கு நன்றி சொன்னாள். பின், கதிர் மனசை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று, அவனிடம் லிமிட்டாகவே பேசிக்கொண்டிருந்தாள். கதிரும் அவனோடு கடமைக்கு பேசிக்கொண்டிருந்தான்.
பங்க்சன் முடிந்ததும், "காயத்ரி நாம கிளம்புவோமா?" என்றான்.
"என்னங்க ஆச்சு? ஏன் அதுக்குள்ள?"
"இல்ல. கதிரை என்னால face பண்ண முடியல."
"இருங்க. கதிர் கிட்ட நான் பேசுறேன். உங்க சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன். அவர் நல்ல டைப்!" என்றாள் காயத்ரி.
அன்று இரவு - திருவின் அண்ணனிடமிருந்து (தரகரிடமிருந்து) போன் வர, கதிர் போன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வெளியே.. இருட்டில் பின்புறம் போக... காயத்ரி, கதிரிடம் தனியாக பேசுவதற்காக சீனுவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அவன் போன் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். அப்போது எதிர்பாராவிதமாக திருவும் அவன் அண்ணனும் கதிரை தாக்க.... காயத்ரி அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.
சீனு செய்வதறியாமல் தவித்து, நடுங்கிப்போய் நின்றான். சுதாரித்து, கதிரை காப்பாற்றுவதற்காக அவனிடம் ஓடினான். திருவை பிடித்துத் தள்ளினான். இதற்குள், திரு, அவன் அண்ணன், இருவருமே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்கள்.
வீட்டிலுள்ள அனைவரும் ஓடிவரும்போது, கொலை செய்ய வந்தவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, வேகம் வேகமாக அவர்களை தூக்கிக்கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள்.
அவர்கள் பிழைத்துக்கொண்டார்கள். ஆனால் கதிர் மேல் கம்ப்ளெயிண்ட் கொடுக்க, போலீஸ் கதிரை தேடி வந்தது.
"நான் ஜெயிலுக்கு போறதுல எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. நான் போறேன். அவனுங்களை கொல்லாம விட்டுட்டேனே..." என்றான் கதிர்.
நிஷா அழுதுகொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள். "ஐயோ கதிர் என் கண்ணால உங்களை எப்படி நான் ஜெயில்ல பார்ப்பேன்.....??"
"ஐயோ அவரு சிவில் சர்வீஸ்க்கு படிச்சிட்டு இருந்தாரே இனிமே அதுல சேரவே முடியாம போயிடுமே"
நிஷா ஓவென்று அவனை நினைத்து அழ, அனைவருமே நிலைகுலைந்து போய்விட்டார்கள். சந்தோஷமாக பங்க்சன் முடிந்த நிலையில்.. கதிரின் நிலைமை.. நிஷாவின் அழுகை... மோகனை சோகமாக்கியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
நிஷா அழுவதையே பார்த்துக்கொண்டிருந்த சீனு, கண்கலங்கி நின்றான். அவள், தன் இடுப்பு செயினை கழட்டி தன் முகத்தில் விட்டெறிந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே உட்கார்ந்த காட்சிதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.
சில மணி நேரங்களுக்கு முன்னால்... தேவதை போல் வலம் வந்துகொண்டிருந்த நிஷா, இப்போது.. இப்படி...
'அன்று நான் பிரச்சினைக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். நிஷாவை கவனித்துக்கொள்ளவில்லை. இப்போது.. அதே மாதிரி நிஷா அழுதுகொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.'
அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ராஜ்ஜை தனியாக கூட்டிக்கொண்டு போனான். இறுகிய முகத்தோடு சொன்னான். "இந்த பழியை நான் ஏத்துக்கிடுறேன். கதிருக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன்."
ராஜ்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தடுமாறினான். "நீ இரு சீனு. நான் வேற யாரையாவது அரேஞ்ச் பண்றேன்" என்றான். ஆனால் ஷர்மாவும் சரி, வேறு யாரும் சரி, பழியை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. தவிர, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திலும் இருந்திருக்கவில்லை. ஹாஸ்பிடலில் கிடக்கும் திருவும் அவன் அண்ணனும் இதை ஈசியாக பொய்யென்று நிரூபித்து விடுவார்கள். கதிரை பழி வாங்குவார்கள்.
ராஜ் போய் மோகனிடம் சொல்ல, அவர், "காயத்ரியின் வாழ்க்கை?" என்றார்.
"தப்பு அந்த வியாபாரி மேலதான். சீக்கிரம் சீனுவை வெளியே எடுத்துடலாம்" என்றான்.
தீபா, காமினி, வினய், மலர் என்று அனைவரும் எது சரி என்ன செய்யலாம் என்று அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் பேச,
நிஷாவும் கதிரும், "வேணாம், சீனு ஜெயிலுக்கு போகவேணாம்" என்றார்கள். போலீஸ் விலங்கோடு வந்து நின்றார்கள்.
ராஜ் நிஷாவை சமாதானப்படுத்தினான். "கதிர் உன்கூட இருக்கணும் நிஷா. I cannot allow Kadhir to go Jail."
கதிர் ஒத்துக்கொள்ளவில்லை. "இல்ல ராஜ். இது அநியாயம். நான்தான் தண்டனை அனுபவிக்கணும்."
"கதிர் ப்ளீஸ்.... உன்ன பெரிய பதவில வச்சி பாக்கணும்கிறது நிஷாவோட கனவு. உணர்ச்சிவசப்படாதே."
அவன் கதிரை பிடித்துக்கொள்ள... காயத்ரி, அழுதபடியே நிஷாவை பார்த்துக்கொண்டு நிற்க, சீனு, நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியிடம், "நிஷாவை பார்த்துக்கோ காயு...." என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறினான்.
கதிரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "நோ... நோ... இது தப்பு..." என்றான். மோகன் எழுந்து வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டார். "நிஷா என்கிட்ட அடிக்கடி சொல்லுவா மாப்பிள்ளை. கண்ணன் அளவுக்கு உங்களை பெரிய ஆளா ஆக்கணும்னு. அவ ஆசையை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்...."
அவர் திரும்பி காயத்ரியை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் தட்டினார். "காயத்ரி... நாங்க சீக்கிரமே சீனுவை வெளிய கொண்டு வந்துடுவோம். நீ கவலைப்படாதேம்மா."
காயத்ரி, கண்ணீரோடு அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
அந்த இருட்டில்... கதிரை காப்பாற்றுவதற்காக, நான்தான் அவர்களை குத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்தான் சீனு.
நாட்கள் கடகடவென்று ஓடின. நிஷா, எவ்வளவுதான் சந்தோஷமாக, நார்மலாக இருக்க முயன்றாலும், அவளால் முடியவில்லை.
"ஏன் சீனு இப்படி பண்ண???"
ஜெயிலில் அவன் எவ்வளவு கஷ்டப்படுவானோ என்று அவள் அவனை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள், கதிர் அவள் முகத்தை ஏந்திக்கொண்டு கேட்டான்.
"என்னாச்சு நிஷா? உன் முகத்துல நிம்மதியே இல்லையே. உன் முகத்துல சிரிப்பே இல்லையே."
அவள், கண் கலங்கியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
"ஸாரிங்க... என்னால சீனுவை நினைக்காம இருக்க முடியல. என்ன மன்னிச்சிடுங்க கதிர்"
"இட்ஸ் ஓகே நிஷா. இட்ஸ் ஓகே... இங்க பாரு... நான் உன்ன தப்பாவே எடுத்துக்க மாட்டேன்."
"என்னங்க.. எனக்காக...."
அவள் சொல்லுவதற்கு தயங்க... கதிர் அவள் நெற்றியில் முத்தமிட்டான். "உன்கூட இவ்வளவு நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கேன். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாதா?"
நிஷா பாவமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கதிர் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே சொன்னான்.
"வா. ரெண்டு பேரும் போய் சீனுவை பார்த்துவிட்டு வரலாம்."
அவன் சொன்னதும், அதை எதிர்பார்க்காத நிஷாவின் முகத்தில்... பல நாட்களுக்கு பிறகு சிரிப்பு அரும்பியது.
கதிரோடு போனாள். மறுபடியும் தாடியோடு அவனைப் பார்த்து.... மனம் கலங்கினாள்.
"ஏன் சீனு இப்படி பண்ண?"
ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த சீனுவின் கைகளை ஆறுதலாக பற்றி பிடித்துக்கொண்டே நிஷா கேட்க, அவன், கதிர் முன்னால் அவளை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கி, தலையை குனிந்துகொண்டான்.
நிஷா, தன்னருகில் நின்ற கதிரைப் பார்த்தாள். பின் சீனுவிடம் குரல் தழுதழுக்கக் கேட்டாள்.
"காயத்ரியைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா சீனு?"
"அவளை பார்த்துக்கத்தான் நீ இருக்கியே நிஷா"
அவன் சட்டென்று சொல்ல... நிஷாவின் கண்ணீர் துளிகள் அவளையும் அறியாமல் சீனுவின் கைகளில் விழுந்தன.
அதன்பிறகு, நிஷா நார்மலாக தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். கதிருக்கு நிம்மதியாக இருந்தது.
அவன், சீனுவும் காயத்ரியும் மாறி மாறி தன்னிடம் பழைய நிகழ்வுகளுக்காக மன்னிப்பு கேட்டதை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ராஜ்க்கு போன் பண்ணினான்.
"காயத்ரிக்கு டெலிவரி டேட் நெருங்கிட்டு இருக்கு ராஜ். அதுக்குள்ளே சீனுவை வெளியே கொண்டுவந்துட முடியுமா?"
"நீ கவலைப்படாதே மாப்ள. காயத்ரிக்கு குழந்தை பிறக்கும்போது நாம எல்லோருமே மொத்தமா சேர்ந்து இருக்கப்போறோம்."
"தேங்க்ஸ் ராஜ்."
இதைக் கேட்டுக்கொண்டிருந்த நிஷா, தன் கணவனையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
"தேங்க்ஸ் கதிர்!" என்று அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
கதிருக்கு.... நடப்பது அனைத்தையும் பார்த்து வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
நாட்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க, ஒருநாள் - கதிர் வயலிலிருந்து வரும்போது, வாசலில் தீபாவின் கார் நின்றுகொண்டிருந்தது.
தீபாவை நினைத்ததுமே அவனுக்கு... மனதுக்குள் சில்லென்று இருந்தது. தீபா அவனோடு ஜாலியாக விளையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவளிடத்தில் இருக்கும் பிரச்சினை எல்லை தாண்டி போவதுதான். அவள் எப்படி இருந்தாலும், நாம லிமிட் தாண்டி போய்விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். நிஷா மட்டும்தான் எனக்கு! என்கிற முடிவோடு இருந்தான். இதனாலேயே காயத்ரியை இழுத்துப் போட்டு ஓக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும்... வேணாம் என்று விட்டுவிட்டான்.
இவன் வீட்டுக்குள் நுழைந்ததும், மேல் ரூமிலிருந்து நிஷா எட்டிப்பார்க்க, பின்னாலேயே தீபா வந்தாள். இவனைப்பார்த்து கைகாட்டினாள்.
Comments
Post a Comment