சுகன்யா காலையில் கண் விழித்தப்போது மணி ஒன்பதாகிக் கொண்டுருந்தது. நேற்று மாலை, சங்கர் மற்றும் வேணியின் காதல் விளையாட்டை எதேச்சையாகப் பார்த்து, பார்த்ததின் விளைவாக மனம் நிலையில்லாமல் அலைந்து, இரவு சரியாக தூங்காததால் அவள் கண்கள் சிவந்து, இமைகளின் கீழ் மெல்லிய வீக்கம் தென்பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன் என்று கண்கள் கெஞ்சின.
அவள் மெதுவாக எழுந்து அறையை விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கு மொட்டை மாடியில், வேணி குளித்தப்பின் துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.
அவள் காலையிலேயே எழுந்து தலை குளித்திருக்க வேண்டும். ஈரத்தலையில் மெல்லிய காட்டன் துணியை கட்டியிருந்தாள். அவளின் வளிப்பான உடலின் வடிவமைப்பு மெல்லிய நைட்டியின் ஊடே, அவள் உள்ளே எதுவும் அணிந்திருக்கவில்லை என தெளிவாக காட்டியது. அவள் கொடியில் ஈரத்துணியை போட எம்பிய ஒவ்வொரு முறையும் அவளின் திரட்சியான மார்புகளும், அளவாக பூரித்திருந்த பின் மேடுகளும், அசைந்தாடின.
சுகன்யா அவள் அருகில் சென்று வாளியில் இருந்த ஈரத்துணியொன்றை எடுத்து உதறினாள். சுகன்யாவின் கண்கள், வேணியின் உடலழகை அளவெடுக்கத் தவறவில்லை. கூடவே பெண்ணிற்கே உரிய பொறாமை உணர்ச்சியும் வேணியின் மீது உண்டானது.
'சங்கர் கொடுத்து வைத்தவன், அவன் பாடு கொண்டாட்டம்தான், இவ்வளவு அழகான பெண், கட்டான உடலமைப்புடன், அவனுக்கு மனைவியாக வாய்த்திருக்கிறாள். அவனுக்கு இசைந்து நடந்து கொள்கிறாள். அவனும் வாட்ட சாட்டமாக இருக்கிறான். அவளை சந்தோவமாக வைத்திருக்திறான். பொருத்தமான ஜோடி அவர்கள். எனக்கு எவன் வந்து வாய்க்கப் போறானோ தெரியலை.'
'ச்சை... இது என்ன ஒரே நாளில் என் மனசுக்கு என்ன ஆச்சு? ஏன் என் மனசு பைத்தியம் போல இப்படியெல்லாம் சிந்திக்கிறது.'
இந்த மூன்று மாதத்தில் அவள் வேணியை எப்போதும் இந்த கோணத்திலிருந்து பார்த்ததில்லை.
"குட்மார்னிங் சுகு... நீ வைம்மா, நான் காய வெச்சுக்திறேன், காலையில் உன் ரூம் கதவை இரண்டு மூன்று தரம் தட்டினேன்... நீ அசந்து தூங்கிட்டிருந்தே..."
வேணி அவளை பார்த்து முறுவலித்தாள். அவர்கள் இருவரும் சனி, ஞாயிறு நாட்களில் காலையில் வாக்கிங் செல்லுவது வழக்கம்.
"சாரிக்கா, ராத்திரி நான் சரியா தூங்கலை... ரொம்ப நேரம் தூக்கமே வரலை, எப்ப தூங்கினேன்nஉ எனக்கே தெரியலைக்கா, என்னால நீங்களும் வாக்கிங் போகலயா?" அவள் சுரத்தையில்லாமல் சிரித்தாள்.
"என்னடி... உடம்பு கிடம்பு சரியில்லயா, ராத்திரி சாப்பிட்டியா இல்லயா?" உண்மையான பரிவுடன் கேட்டாள் வேணி.
சுகன்யா ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், தினமும் மாலையில் வீட்டு மொட்டை மாடியில் அரட்டை கச்சேரி நடத்துவது அவர்களின் வழக்கம். அவர்கள் இருவரும் இந்த கொஞ்ச நாட்களிலேயே நல்ல சினேதிதிகளாகிவிட்டார்கள்.
வேணி மனம் விட்டு பேசும் அளவிற்கு, சுகன்யா பேசுவதில்லை. இது அவளுடய சுபாவம். இது வேணிக்கும் புரிந்திருந்தது, ஆனாலும் அவள் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
"அதெல்லாம் ஒன்னுமில்ல, நேத்து என்னவோ தெரியல... ஆபீஸ்ல்ல காலையிலிருந்தே கொஞ்சம் தலைவலியா இருந்தது" வேணியின் பரிவைக்கண்டு, சுகன்யா நெகிழ்ந்தாள்.
"ஆமாம்.. நேத்தைக்கு நீ ஆபிஸிலேருந்து எப்ப வந்தே?... அத்தையும் மாமாவும் ஊர்லேருந்து வந்துட்டாங்க தெரியுமா... நானும் சங்கரும் சாயந்திரம் கோவிலுக்குப் போயிருந்தோமா... திரும்பி வரதுக்கு லேட்டாயிடுத்து... நேத்து நான் உன்னை பாக்கவே இல்ல... இல்லன்னா உனக்கு சூடா காப்பி போட்டு குடுத்திருப்பேன்." அவள் வெகுளியாக அடுக்கிக் கொண்டே போனாள்.
"நான், நேத்து... ஆபீஸிலிருந்து கொஞ்சம் சீக்கிரமாவே... ஒரு மூணு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன்க்கா.. அதான் சொன்னேல்ல தலைவலின்னு.. அதான் வந்து படுத்துட்டேன்." வேணியின் கரிசனத்தையும், அவள் தன் மேல் காட்டிய பாசத்தையும் கண்டு அவள் மனதில் குற்றவுணர்ச்சி தலை காட்டியது. சுகன்யாவால் பொய் பேச முடியவில்லை. தன் தோழி, தன்னை மறந்து தன் கணவனுடன் ஆசையுடன் கூடியிருந்ததை, அவர்களின் பரிபூரணமான அந்தரங்கத்தை, முழுவதுமாக ஒளிந்திருந்து பார்த்ததை அவளால் தன் தோழியிடமிருந்து மறைக்க முடியவில்லை. வேணியின் முகத்தை நேராக பார்த்து அவளால் பேசவும் முடியவில்லை. அவள் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது.
சுகன்யா, தன் வாழ்கையை முறையாக வாழ நினைப்பவர்களில் ஒருத்தி. அதன் பொருட்டு தனக்கென அவள் சில கொள்கைளை வைத்திருந்தாள். கல்லூரி நாட்களில் அவளுடன் படித்தவர்கள் அவளை, இதன் காரணமாக எத்தனை தடவை திண்டல் செய்த போதிலும் சுகன்யா அதற்காக கவலைப் பட்டதில்லை. அவள் இந்த தலை முறை பெண்ணாக இருந்த போதிலும், தன்னையொத்த இந்த தலைமுறையினரின் நடத்தையையும், காதல் மற்றும் காமத்தின் பால் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளையும், முற்றிலும் சரியென அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
இன்று காலையில், அவள் உணர்ச்சிகள், அவள் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, தனது நேற்றைய நடத்தையை நினைத்ததும், அவளுக்கு சிறிது அருவருப்பாக இருந்தது.
"என்னடி இது... இப்ப எதுக்கு கண் கலங்கறே.. என்னாச்சும்மா" வேணி பதறியவாறே, தன் கையிலிருந்த சங்கரின் சட்டையை கொடியில் போட்டுவிட்டு சுகன்யாவிடம் வந்தாள்.
"வேணி அக்கா.., ஐயாம் சாரி... நான் நேத்து ஒரு தப்பு பண்ணிட்டேன். அதை உங்ககிட்ட இருந்து மறைக்க விரும்பல. அதை உங்ககிட்ட சொல்லிட்டேன்னா என் மனசுல இருக்கற பாரம் இறங்கிடும்" அவள் முகம் சிவந்து உதடுகள் துடித்தன.
"என்னடி இது காலங்காத்தால, ஏதோ புதிர் போட்டு பேசற... முதல்ல கண்ணைத் தொடரச்சுக்கடி.. விஷயத்தை சொல்லு, அதுக்கப்புறம் பாக்கலாம், நீ பண்ணது தப்பா. சரியாண்ணு" சுகன்யாவின் கைகளை பற்றிக்கொண்டாள் வேணி.
"நேத்து, நான் ஆபீஸில் இருந்து திரும்பி வந்தப்ப, நீங்களும், சங்கரும் உங்க பெட்ரூம்ல இருந்தீங்க... நான் நேரா என் ரூமுக்குப் போயிருக்கணும்... உங்க ரூமிலிருந்து வந்த முனகல் சத்ததுல, என் நிலை தடுமாறி, அங்கயே நின்னுட்டேன்." சுகன்யா குரல் தழுதழுத்து, விசும்பினாள். அவள் வேணியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.
"ம்ம்ம். அப்ப... நான் முனகற சத்தத்தைதான் கேட்டியா... இல்ல..." வேணி தன் கேள்வியை முழுசாக முடிக்காமலே அவள் சுகன்யாவின் முகவாயையப் பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.
வேணியின் முகம் உணர்ச்சியற்று இருந்தது.
"இல்ல வேணிக்கா, என் புத்திக்கெட்டுப் போய், சன்னல்கிட்ட வந்து, நீங்க பண்ணதெல்லாத்தயும் பாத்துகிட்டு இருந்தேன், பிளீஸ்... என்னை மன்னிச்சுடுங்க" சுகன்யா அவளின் இருகைகளையும் பிடித்துக்கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. எந்த நேரத்திலும் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்துவிடும் போலிருந்தது.
"சரி...சரி... சுகு, முதல்ல உன் கண்ணைத் தொடச்சுக்கோ... நான் என்னவோ, ஏதோன்னு பயந்து போனேன். என்னப் பொறுத்த வரைக்கும் நீ எந்த தப்பும் பண்ணல, எனக்கு உன்னப்பத்தி நல்லாத் தெரியும்... நீ ரொம்பவே சென்ஸிடிவா இருக்க... நீ செக்ஸை பார்க்கறதுலயும், அதை அணுகறதுலயும், நிறைய மாத்திக்கணும். இது என்னுடைய சொந்த அபிப்ராயம்... அவ்வளதான்... நீ பண்ணது தப்புன்னா... அந்த தப்புல பாதிக்கு நான் தான் பொறுப்பேத்துக்கணும். இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம். சங்கருக்கு இன்னைக்கு வேலைக்கு போகணுமாம். மாமாவுக்கும், அத்தைக்கும் டிஃபன் கொடுக்கணும். அவங்க இரண்டுபேரும் ஏதோ சொந்தகாரங்க வீட்டுக்கு போறாங்க... நைட்தான் திரும்பி வருவாங்க. நீ போய் குளிச்சுட்டு ரெடியாகு... இன்னைக்கு நான் பொங்கலும், கொத்சும் பண்ணியிருக்கேன். அவங்க போனதுக்கு பின்ன இங்க மேலயே கொண்டு வர்றேன். நீ நேத்து ராத்திரியே சாப்பிடலல, நான் இன்னைக்கு உன் கூட தான் சாப்பிடபோறேன்." வேணி அவள் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த காலி வாளியை எடுத்துக்கொண்டு வேகமாக கீழிறங்கினாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு,
"சுகன்யா... சுகு.. கீழ இறங்கி வாயேன்... இங்க யாரும் இல்ல, எல்லோரும் வெளியில போயாச்சு... உன் ரூமை மூடிட்டு வா, இங்கயே சாப்பிடலாம்" வேணி மாடிப்படியின் கீழிருந்து குரல் கொடுத்தாள்.
சுகன்யா குளித்துமுடித்து முழுவதுமாக உடை மாற்றியிருந்தாள். அடர்ந்த நீல நிறத்தில் புடவையும், பளிச்சென வெள்ளை கலர் ப்ளவுசும் அணிந்திருந்தாள். தலையை இறுக்கமாக சீவி, முடியை ரப்பர் பேண்ட் போட்டு அழுத்தி முடிந்திருந்தாள். அவள் முகம் சற்றே தெளிவாகியிருந்தது.
"வாடி... உட்காரு" வேணி டைனிங் டேபிளின் மேல் இருந்த இரு தட்டுகளில், ஹாட் கேசிலிருந்து மிதமான சூட்டில் பொங்கலை அள்ளி வைத்தாள். பொங்கலில் நெய்யில் பதமாக வறுபட்ட முந்திரி துண்டுகள் மினுமினுத்தன. ஆவி பறந்து கொண்டிருந்த கொத்சை கொஞ்சமாக சுகன்யாவின் தட்டில் சாய்த்தாள்.
"ஸ்பூன் வேணும்னா எடுத்துக்கோ, நான் கையாலத்தான் சாப்பிடப் போறேன்" சிரித்தாள்.
வேணி கொத்சை மீண்டும் லேசாக சூடாக்கியிருக்கவேண்டும். பொங்கலும் அதனோடு சூடான கத்திரிக்காய் கொத்சும் சாப்பிட மிக சுவையாக இருந்தது.
"அக்கா, நீங்கதான் செய்தங்களா... டேஸ்ட் சூப்பராக இருக்கு" சுகன்யா அவர்கள் நடுவில் இருந்த மெளனத்தை கலைத்தாள்.
"ஆமாம்... தேங்க்யூ."
".."
"சுகு... நீ ரொம்ப ஃபார்மலா இருக்க, உனக்கும் எனக்கும் நடுவுல அப்படி என்ன பெரிய வயசு வித்தியாசம், நீ என்னை வாங்க போங்கன்னு கூப்பிடவேண்டாம். என்னை பேர் சொல்லியே கூப்பிடு" வேணி மிருதுவாக புன்னகைத்து, பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவின் தோளில் தட்டினாள்.
"உன்னால எப்படி வேணி எந்த விஷயத்திலும் சீக்திரமா ஓரு முடிவுக்கு வர முடியுது... எல்லாத்தையும் ரொம்ப லைட்டா எடுத்துக்க முடியுது... எப்படி எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கே.. ப்ப்ளீஸ் அதை எனக்கு சொல்லிக்கொடேன்" சுகன்யா அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல... என்னை ஓவரா தலைக்குமேல தூக்காத, நானும் ஒரு மொக்கை பார்ட்டிதான்... சங்கர் என்னை அப்பபடித்தான் சொல்லறார்... எழுந்து கையை கழுவிக்கோ... தட்டை அங்கேயே வெச்சுடு... நான் அப்புறமா கழுவிக்குரேன்."
அவள் தன் எச்சில் கையை கழுவ சிங்க்கை நோக்தி நகர்ந்தாள். "வேணி அப்ப உனக்கு உண்மையிலேயே, என் மேல கொஞ்சம் கூட கோபமோ வருத்தமோ இல்லயா, நான் உங்க அந்தரங்கத்துல ஒரு சாட்சியா இருந்தது உன்னை எந்த விதத்தலயும் பாதிக்கலயா?"
சுகன்யா, தன் வாயையை கொப்பளித்துக்கொண்டு, தன் உதடுகளை விரல்களால் துடைத்தாள். அவள் பூ போன்ற அதரங்களில் பனித்துளிகளைப் போல ஈரம் படிந்திருந்தது.
'இந்த பெண்தான் எவ்வளவு அழகா இருக்கா...' திடீரென்று வேணியின் மனதில் மின்னலைப் போல ஒரு எண்ணம் மின்னியது.
"ஒரு வினாடி உன் மேலே கோபம் வந்தது... ஒரே ஒரு வினாடி தான்... அது உண்மைதான். நானும் ஒரு சராசரி பொம்பளை தான்... பட் நிச்சயமா இப்ப அந்த கோபம் இல்லை. எங்களுக்கு கல்யாணம் ஆதி ஒரு வருஷம் தானே ஆகுது... பத்து நாள் வெளியூரில் இருந்துவிட்டு வந்த என் புருஷன் என்னை ஆசையா தொட்டதும், அவனை சந்தோவஷபடுத்தணும், நானும் குஷியா இருக்கணும், இதுதான் என்னுடைய அந்த நேரத்து தேவை... அந்த அந்த தருணங்களில் வாழணும்... உனக்கு கல்யாணம் ஆதியிருந்தா இது சுலபமா புரியும். பத்து நாள் பிரிவுங்கறது ரொம்ப கொடுமைடி... அவர் ஒரு நாள் படுக்கையில என் கூட இல்லன்னா, தவிச்சு போயிடுவேன். சங்கருக்கு என்னை கட்டி புடிச்சுக்கலன்னா தூக்கமே வராது... வீட்டுல யாரும் இல்லாதது எங்களுக்கு சவுகரியமாப் போச்சு... நீ எந்த விதமான முன்னேற்பாட்டுடன் எங்களோட பஜனையை பாக்கணுமுன்னு வரல்ல. எங்களுடைய அன்னியோன்யத்தை நீ எந்த விதத்திலும் கொச்சைப்படுத்தல... நீ எங்களை போட்டோ எடுக்கல... அதை எதுவும் நெட்ல அப்லோடு பண்ணிடல... நான் வெளி கதவை மூடி இருந்திருக்கணும், அட்லீஸ்ட் எங்க படுக்கை அறை சன்னலையாவது மூடி இருந்திருக்கணும்... இதுல உன் தப்பு என்ன இருக்கு?"
"............"
"உன் வயசு, உன் இளமை, ஒரு இளம் பெண்ணுக்கு இருக்கக்கூடிய நியாயமான மன உணர்ச்சிகள், உன் உடல் தேவைகள், அதன் காரணமா நீ எங்களுடைய கூடலை நின்னு பாத்துருக்கே... நான் சொன்ன இந்த காரணிகள் எல்லாம் உன் கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் இருக்கணுங்கறது முடியாத ஓன்று"
".........."
"எல்லாத்துக்கும் மேல இப்போதைக்கு, உன்னுடைய வாழ்க்கையின் முதன்மையான அடுத்த நடவடிக்கை திருமணம்தானே?"
"..........."
"இயல்பான, வழக்கமான சூழ்நிலைகளில், செக்ஸ் திருமணத்தின் அடுத்தப்படிக்கட்டு"
"..........."
"அந்த அடுத்தப்படியில நேத்து நீ உன்னையும் அறியாமல் கால் வெச்சுட்ட... அவ்வளவுதான்.. நேரடியா இந்த பிரச்சனையில சம்பந்தபட்ட என்னிடமும் நீ பண்ணதை சொல்லிட்ட. இதை நாம் இந்த இடத்திலேயே நிறுத்திவிடுவோம்...நீயும் இதை மறந்துவிடு" அவள் சுகன்யாவின் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தாள்.
"தேங்க்யூ, வேணி... தேங்க்யூ... என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறங்கிப்போச்சு. நீ எப்படி இவ்வளவு சுலபமா என்னுடைய சிக்கலை விடுவிச்சுட்ட... ஆனாலும் உன் கிட்ட ஒரு வேண்டுகோள், இதைப்பத்தி நீ சங்கர்கிட்ட எப்பவும் சொல்லிடாத... சங்கர் இந்த விஷயத்தை நீ எடுத்துதிட்ட மாதிரி சுலபமா எடுத்துப்பாரோ என்னமோ...என்னதான் இருந்தாலும் அவர் ஒரு ஆண் மகன்... நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்." சுகன்யா, வேணியின் கண்களை ஆழ்ந்து நோக்தினாள்.
"நீ என்னுடைய ஃப்ரெண்ட், உன்னை நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டேன்" வேணி தன் நட்ப்பை உணர்த்தும் வகையில் சுகன்யாவை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
"வேணி, உன்னை நான் ஒண்ணு கேக்கட்டுமா, அது என்ன அதை 'பஜனைன்னு' சொல்லற... உனக்கு வேற எந்த சொல்லும் கிடைக்கலயா? நீ அதை சொல்லும் போது எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சிடி..."
அவள் குறும்புத்தனமாக சிரித்தாள். வயசு பெண்கள் தான் எவ்வளவு சீக்கிரம் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிவிடுதிறார்கள்! எதையும், எதைப்பற்றியும் சுலபமாக பேசிவிடுகிறார்கள்!
"ஆமாம்டி... என் புருஷன், ஏண்டி வேணி இன்னைக்கு பஜனையை வெச்சுக்கலாமான்னு கேட்டா, என் இடுப்பு உடைஞ்சுதுன்னுதான் அர்த்தம்"
வேணி சொன்னதை கேட்டு சுகன்யா தன் மனம் விட்டு உரத்த குரலில் சிரித்தாள்.
"அதனாலதான் சொல்றேன் சுகன்யா, நீ இப்பத்துலேருந்தே நல்லா எக்ஸ்ர்சைஸ் பண்ணி உன் இடுப்பை வலுவா வெச்சுக்க"
"ச்சீ.."
"இன்னொன்னும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ... என் மாமனார், என் அத்தையை, பூஜைக்கு வாடின்னு கூப்பிட்டா, அவங்க இடுப்பு உடைஞ்சுதுன்னு அர்த்தமாம். வெக்கம் கெட்ட குடும்பத்துல வாழ்க்கை பட்டிருக்கேன்..." வேணியும் அவளுடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்தாள். அவள் சிரிக்கம் போது அவளுடைய சேலை விலகி, அவளுடைய ரவிக்கையில் அடைபட்டிருந்த ஒரு பக்க முலை கவர்ச்சி காட்டியது.
"நீ சொன்ன சரியாத்தான் இருக்கும்... எனக்கொன்னும் இதுல சந்தேகமே இல்ல... உன் இடுப்பு பலமாத்தாண்டி இருக்கு..." சுகன்யா தன் வெட்க்கத்தை விட்டு சிரித்தாள்.
'வேணி குலுங்கி சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கா... நான் மட்டும் ஒரு ஆணாயிருந்தால்...' சுகன்யாவின் மனசு தறி கெட்டுப் பறந்தது.
"என்னடி... அதுக்குள்ள உனக்கு குளிர் விட்டுப் போச்சா... என்ன சொல்ற" வேணி அவளை போலியாக முறைத்தாள்.
"அதான் நேத்துப் பாத்தேனே... நீ உன் இடுப்பை தூக்தித் தூக்கி இடிச்சதை. என்ன வேகமா இடிச்சடி..." சுகன்யா விழுந்து விழுந்து சரித்தாள்.
"நீ என் திட்ட நல்ல ஓதை படபோறடி.. சொல்லிட்டேன்..." வேணி சொல்லிக்கொண்டே, சுகன்யாவின் புட்டத்தில் ஓங்கி அடித்தாள்.
"அம்மா.. தாயே... அடியே.. ராட்சி... அடிக்திற, கடிக்கிற வேலையெல்லாம் உன் புருஷன் கிட்ட வெச்சுக்க... உன் இடுப்பு மட்டும் இல்லடி, உன் கையும் பலமாதாண்டி இருக்கு" வேணி கொடுத்த அடியினால் லேசாக வலித்த தன் பின் மேடுகளை தடவிக்கொண்டே சிரித்தாள் சுகன்யா.
காலமும் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது....
தொடரும்...
Comments
Post a Comment