முழு தொடர் படிக்க அன்றிரவு சாவித்திரிக்கும் வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் அடித்துப்போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தான்.
'பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணணுமேன்னு இந்த மனுசனுக்கு ஏதாவது கவலை இருக்கா..? எங்கேருந்து தூக்கம் வருது இவருக்கு', அவள் தன்னை நொந்துகொண்டாள். செல்வா, அன்று மாலை, அவள் வீட்டுக்கு வந்தபோது அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அவளை வெகுவாக நிலைகுலையச் செய்துவிட்டன.
'ஜானகியா இப்படி நடந்து கொண்டாள்? காலையில கூட உற்சாகமாகத்தானே இருந்தா? எந்த புடவை கட்டிக்கம்மான்னு கேட்டாளே? அவ மனசைக் கலைச்சது யார்? செல்வா வர்றதுக்கு முன்னாடி, அவனுக்கும், சுகன்யாவுக்குமிடையிலிருந்த நட்பு அவளுக்கு எப்படி தெரிய வந்தது? இந்த விஷயத்தில் மல்லிகாவை வழிக்கு கொண்டுவர நான் எடுத்த முயற்சிகள்தான் எத்தனை எத்தனை? சுகன்யாவிடமிருந்து செல்வாவை பிரிக்க அவனை சென்னையிலிருந்து மாற்ற நான் பட்ட பாடுதான் எவ்வளவு? இதற்காக நான் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சயில்லையே? எல்லாத்தையும் சொடுக்கு போடற நேரத்துல வீணாக்கிட்டாளே இந்த புத்தி கெட்ட ஜானகி.' அவள் தன் பெண்ணை நொந்துகொண்டாள்.
'ம்ம்ம் ஜானகிக்கு என்னத் தெரியும், செல்வாவைப் போல் ஒரு பிள்ளை, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து கிடைப்பது எவ்வளவு கஷ்டம்? நான் நினைச்ச மாதிரி செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல இருந்தது வெறும் நட்பில்லையா? அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்திறார்களா? சுகன்யாவே ஜானகியிடம் அவர்கள் காதலைச் சொல்லியிருப்பாளா? செல்வா, மல்லிகாவை, திருப்தி செய்வதற்காகத்தான் என் வீட்டிற்கு வந்தானா?'
'சாவித்திரி, இதுவரைக்கும் நீ ஆரம்பிச்ச எந்த காரியத்திலும் நீ தோத்ததில்லைடி. உனக்கு முன்னால, நேத்து பொறந்த இந்த சுகன்யா எம்மாத்திரம்? நீ அவளை முதுகுல குத்தினே. அவளோ உன்னை உன் முகத்தில அறைஞ்சிருக்கா?'
'ஜானகி என்னைக் கொண்டு பொறந்திருக்கா: சரியான மூர்க்க குணம்; என் பொண்ணு, அந்த சின்னப்பய செல்வா முன்னால, என்னையே கீழத்தள்ளி மிதிச்சாளே. நானும் ஆத்திரத்துல தோளுக்கு மேல வளந்த பொண்ணை, இன்னொரு ஆம்பிளை முன்னாடி அடுச்சது தப்புத்தானே? இனிமே என் பொண்ணையோ, செல்வா மனசையோ மாத்தறதுங்கறது சாதாரண காரியமில்லையே.'
'ஆனா இவ்வளவுக்கும் காரணம் அந்த பொட்டை நாய் சுகன்யாதானே? அவளை சும்மா விடலாமா? அவளுக்கு ஒரு பாடம் கத்துக்குடுத்தே ஆவணும்.'
'வசதியுள்ளவங்க வாழ்க்கையை வாழற விதமே வேற; அவங்களுக்கான வாழ்க்கை விதிகளும், நியதிகளும் வேற; சுகன்யா நீ உன் வர்க்கத்துக்குள்ள, உன்னுடைய மட்டத்துக்கள்ள ஒரு பையனை பாத்து ஆசைப்பட்டு இருக்கணும். நீ உன் தகுதிக்கு அதிகமா ஆசைப்படறே; என் பொண்ணுக்கு கிடைக்காதவன் உனக்கும் கிடைக்கக்கூடாது.'
'சுகன்யா, இப்ப நீ என்னை ஜெயிச்சிருக்கலாம்? வர்றேண்டி, ஆபீசுல வந்து வெச்சிக்கிறேன் உன்னை? அங்க நீ என் கீழதான் இருந்தாகணும்? நீ என் ஆசையில மண்ணை வாரி போட்டுட்ட; நான் உன் சோத்துல மண்ணைப் போடறேண்டி. உன்னை இந்த வேலையிலிருந்தே தூக்கறேன். அப்பத்தான் நான் யாருன்னு உனக்கு புரியும். ஆபிசுல நான் எப்பவும் உனக்கு மேலதான்; அதை மறந்துடாதே?'
சாவித்திரி தன் உள்ளத்தில் இருமானதாக குமுறிக்கொண்டுருந்தாள்.
'அடியே சாவித்திரி, உன் வயசென்ன? அந்த பொண்ணு வயசென்ன? அவளும் உன் பொண்ணு மாதிரிதானே? அவ பண்ண தப்புத்தான் என்ன? அவ என்ன உன் புருஷனையா தன் கையில போட்டுகிட்டா? அவ மனசுக்கு புடிச்சவனை, அதுவும் ஒரு கல்யாணமாகாத பையனை விரும்பினா? அவனுக்கும் அவளை புடிச்சிருக்கு: அவனும் அவளை விரும்பறான்: முதல்ல நீ அந்த பையனை, உன் அதிகாரத்தை வெச்சு இடமாற்றம் பண்ணதே தப்பு. உன் ஆசைக்காக நீ பெத்த பொண்ணுக்காக, அந்த சின்னஞ்சிறுசுகளை பிரிக்க நெனைக்கறது ரொம்ப பாவம். இதுக்கு மேல சுகன்யாவை உன் சொந்த விவகாரத்துக்காக ஆபீஸுல பழிவாங்கப் பாக்திறியே? இது நியாயமாடி? இதோட இந்த விளையாட்டை நிறுத்துடி. எப்பவும் உன் கையே ஓங்கியிருக்காதுடி; நல்லா யோரிச்சு இந்த காரியத்துல இறங்கு: அவளை அசிகப்படுத்த நெனைச்சு, நீ அசிகப்பட்டுடாதேடி. அவ வேலைக்கு உலை வெக்கப் போறதா நெனைச்சுக்கிட்டு, உன் வேலைக்கு நீயே உலை வெச்சுக்காதே? ம்ம்ம்ம்...'
'என் மனசு ஏன் ரெண்டு பக்கமும் பேசுது? ஆனாலும் நியாயத்தைத்தானே பேசுது? இதுவும் சரிதான். என் பொண்ணுக்குத்தான் செல்வா கிடைக்கல. அந்த பொண்ணாவது அவளுக்கு புடிச்சவனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே'
சாவித்திரி மெல்ல மெல்ல தன் நினைவுகளில் காணாமல் போனாள். கடைசியில் இமைகள் தன்னால் செருக தூக்கத்திலாழ்ந்தாள்.
*****************************
ரகுவும், கீழ் வீட்டில் இருக்கும் அவர் நண்பர் மாணிக்கமும் விடியலில் எழுந்து வாக்கிங் போனவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. சுகன்யா, தன் உள் தொடை பளிச்செனத் தெரிய, முழங்கால் வரை ஏறியிருந்த நைட்டியுடன் இன்னும் பாயில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள்.
சுந்தரி, ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, சிம்பிளாக ஒரு வாயில் சேலையும், வென்னிற ரவிக்கையும் அணிந்து, காலை காபிக்கு பாலை காய்ச்திக் கொண்டிருந்தாள். அவளையும் சுகன்யாவையும் ஒன்றாக பார்த்தால், பார்ப்பவர்கள் அவளை, சுகன்யாவின் அக்கா என்று சொல்லுவார்களே தவிர, சுகன்யாவின் அம்மா என்று சத்தியம் பண்ணாலும் ஓத்துக் கொள்ள மாட்டார்கள்.
சுந்தரியின் உடலில் இளமை இன்னும் முழுதாக பாக்கியிருந்தது. நாற்பத்தாறு வயதுக்கு இன்னும் அவள் தலை நரைக்கவில்லை. முகத்தில் சுருக்கமில்லை. மார்புகள் தளரவில்லை. இடுப்பில் அனாவசிய சதை விழவில்லை. அவள் தெருவில் இறங்கி நடந்தால், அசையும் அவள் திரட்சியான பின்னழகை, எதிரில் வருபவன் திரும்பி பார்க்காமல் போவதில்லை. இன்றும் ரோட்டில் செல்லும் ஆண்களின் கண்கள் அவள் உடலை காம இச்சையுடன் மேய்ந்து கொண்டுதான் இருக்தின்றன.
அவ்வப்போது உடலில் தோன்றும் இயற்கையான சிற்றின்ப வேட்கை, அவள் வயதொத்த பெண்களைப் போல் அவளையும் விட்டு வைக்கவில்லை என்ற போதிலும், உடல் புழுக்கத்தை, மனப்புழுக்கமாக அவள் மாற்றிக் கொள்ளவில்லை. கணவன் வீட்டை விட்டு ஓடிய பின், இந்த பதினைந்து வருடங்களாக வைராக்தியத்துடன் தன் மனதுக்கு ஒரு வலுவான பூட்டை மாட்டி, கழுத்தில் கணவன் குமார் கட்டிய தாலியுடன் நெருப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.
"சுகன்யா"
"ம்ம்ம்ம் .. சொல்லும்மா"
"எழுந்திருடி... மணியாச்சு... நீ போட்டுகிட்டு இருக்கற நைட்டி விலகி தொடை தெரியது: அது கூட புரியாம பாயில உருண்டுகிட்டு இருக்கே, நீ என்ன சின்னக்குழந்தையா? ராத்திரியே சொன்னேன், இந்த மாதிரி மாரும், சூத்தாமட்டையும் வெளிய தெரியற மாதிரி மெல்லிசான நைட்டியெல்லாம் போடாதேன்னு. அந்த விஸ்வாமித்திரனே பொம்பளை ஒருத்தி உடம்பை பாத்து மயங்கித்தான் தன் தவம் கலைஞ்சு நின்னான். ஆயிரம் சொன்னாலும் உன் மாமனும் ஒரு ஆம்பிளைதாண்டி. அவனும் மனசோ, உடல் அலுத்தவனோ இல்லடி கண்ணு. அவன் கல்யாணம் பண்ணிக்கலையே தவிர, பொம்பளை சுகம் என்னன்னு தெரிஞ்சவண்டி அவன். கீழ் வீட்டுலயும் வாட்ட சாட்டமா ரெண்டு ஆம்பிளைங்க இருக்காங்க; சட்டுன்னு எழுந்து போய், குளிச்சிட்டு, நல்லதா ஒரு ட்ரெஸ்ஸை போட்டு ரெடுயாகுடி: அந்த பையன் போன் பண்ணா இங்கேயே வரச்சொல்லுன்னு உன் மாமன் சொல்லிட்டு வாக்கிங்க் போயிருக்கான்."
"அம்ம்ம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா.. சும்மா எனக்கு கிளாஸ் எடுக்காதே: எனக்கு நல்லாத் தெரியும் செல்வா காலங்காத்தால எழுந்துக்க மாட்டான்; அதே மாதிரி உன் தம்பியைப் பத்தி உனக்கு தெரிஞ்ச மாதிரி, எனக்கு என் மாமாவைப் பத்தியும் நல்லாத் தெரியும். உன் டீச்சர் வேலையை உன் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்க; புழுக்கமா இருக்குதுல்ல; வெந்து போவுதும்ம்மா: ராத்திரி தூங்கும் போதுதாம்மா இப்படி மெல்லிசு நைட்டி போட்டுக்குவேன், டே டயம்ல இப்படி போடறது இல்லம்ம்மா?"
"சரிடித் தங்கம், கோச்சிக்காதடி, எனக்குன்னு இருக்கற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நீ ஒருத்தி தானே, பெத்த மனசு கேக்கலடி: அதனாலதாண் சொல்றேன்."
"ஆமாம், செல்வா என்னமோ என்னை பொண்ணு பாக்கறதுக்கு வர்ற மாதிரி பேசறீயே? வந்தா ஒரு காப்பியை போட்டு குடு. அது போதும் அவனுக்கு. நேத்து என்னை சாப்பிட்டியாடின்னு ஒரு வார்த்தை கேட்டானா. நான் நாள் பூரா சாப்பிடலை. அவன் வரானாம்; நீ அவனுக்காக இட்லியும், தோசையும், பக்கோடா குருமாவும் செய்யப்போறேன்னு ராத்திரியிலேருந்து குதிக்கறே?" சுகன்யா சோம்பல் முறித்தவாறே எழுந்து உட்க்கார்ந்தாள்.
"ராத்திரி நீ தானேடி சொன்னே அவனுக்கு குருமா புடிக்கும்ன்னு. இப்ப என்னமோ என்னை மிரட்டறே?"
"அவனுக்கு என்ன பிடிக்கும்ன்னு நீ கேட்டே: நானும் பேச்சு வாக்குல சொன்னேன்; நான் அவனுக்காக உன்னை செய்யுன்னா சொன்னேன்?"
"அடியே சுகன்யா, நீங்க தனியா இருக்கும் போது உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க; ஆனா அந்த பையனை எங்க எதிர்ல 'அவன்' 'இவன்'னு பேசாதடி: மரியாதையா பேசு. அதாண் முறை... நாளைக்கு நீ அவங்க வீட்டுக்கு போனா சட்டுன்னு இதே பழக்கம்தான் வரும்... அவங்க என்னை காறி முழியக்கூடாது... இப்படி ஒரு மரியாதை தெரியாத பொண்ணா உன்னை வளத்து வெச்சி இருக்கேன்னு?"
"சரி சரி... எனக்கு அவன் இன்னும் தாலியே கட்டலை; இப்பவே அவனை நீ உன் மாப்பிள்ளையா பார்க்க ஆரம்பிச்சிட்டியா? எனக்கு முதல்ல காப்பியை குடும்மா... நான் காபி குடிச்சுட்டுத்தான் குளிக்கப் போவேன்.." அவள் செல்லமாக அம்மாவிடம் கொஞ்சினாள்.
அவள் காபியை ரசித்து உறிஞ்சிய போது, செல் சிணுங்கியது. பாய்ந்து எடுத்தாள் சுகன்யா. செல்வாவின் நெம்பர் பளிச்சிட்டது. அவள் மனதுக்குள் சட்டென மகிழ்ச்சி குமிழியிட்டது
"எம்ம்மா... அவன்தான்... செல்வாதான் லைன்ல இருக்கான்... நீ பேசறியா அவன் கிட்ட"
'மாமா சொன்ன மாதிரி போன் பண்ணிட்டானே?' சுகன்யாவின் முகம் பூவாய் மலர்ந்தது.
"நீயே பேசுடி... செல்லம் ... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசு" அவளும் தன் காபியை மெதுவாக உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள்.
"ம்ம்ம்... ஹலோ"
"செல்வா பேசறேன்.. சுகன்யா, உங்க மாமா என்னை நேர்ல பாத்து பேசணும்ன்னு போன் பண்ணார்: இது உனக்கு தெரிஞ்சு இருக்கலாம்"
"தெரியும்... இதுவும் தெரியும்... நீ என்னை தெரியாதுன்னு அவருகிட்ட டயலாக் வுட்டியாமே? அதுவும் நல்லாத் தெரியும்... உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா அப்படி சொல்லியிருப்பே; இப்ப உனக்கு என்ன வேணும் அதைச் சொல்லு" அவள் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் சுகன்யா"
"காலங்காத்தால என்னை போன் பண்ணி எழுப்பிவிட்டு இப்ப எதுக்கு தேங்க்ஸ் சொல்ற நீ?"
"இல்ல... என் நம்பரை பாத்துட்டு நீ எங்கிட்ட பேசுவியா மாட்டியான்னு சந்தேகமா இருந்தது; உன் கோபம் தீர்ந்து போச்சுன்னு நினைக்கிறேன்; பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போன நீ, என் கிட்ட பேசிட்டே, உன் குரலை கேட்டதும் மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்மா: அதுக்குத்தான் தேங்க்ஸ்." அவன் இழுத்தான்.
"ஆமாம், நேத்து ராத்திரி நான் யாருன்னு உனக்குத் தெரியாது; காலையில எழுந்தவுடனே என் செல் நம்பர், என் பேரு, என் ஊரு, என் குரல் எல்லாம் உனக்கு ஞாபகம் வந்திடுச்சா?"
"சாரிடி... சுகு... சும்ம்மா வெறுப்பேத்தாத.... நீ நேத்து எங்கிட்ட கொஞ்சமாவா பேசிட்டு போனே? தெரியாதுன்னு சொன்னது நீ பேசின டயலாக்தானே? நீ தானே முதல்ல மீனாகிட்ட அப்படி சொன்ன? நீ பேசினப் பேச்சுக்கு வேற எவனா இருந்தாலும் உங்கிட்ட இந்த ஜென்மத்துக்கு பேச மாட்டான். நானா இருக்கவே காலங்காத்தால உங்கிட்ட பேசறேன்."
"சாரி செல்வா... நேத்து நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமாத்தான் பேசிட்டேன்", குரலில் குழைவுடன் பேசியவள், "அது சரி... என் கிட்ட பேச உனக்கு இஷ்டமில்லன்னா, இப்ப வேண்டா வெறுப்பா எதுக்கு நீ எங்கிட்ட பேசணும் ... உனக்கு போன் பண்ணது என் மாமாதானே... அவருகிட்ட பேசிக்கோ; எனக்கு எதுக்கு போன் பண்ண? நீயாச்சு அவராச்சு: அவர் நம்பர் உன் செல்லுல இருக்குல்ல; இப்ப காலை கட் பண்ணிட்டு அவருகிட்ட பேசிக்கோ" என்று பொய்யாக அவனிடம் சீறினாள்.
'இந்த பொண்ணை புரிஞ்சுக்கவே முடியலையே! என்ன பேசறா இவ; ஒரு நிமிசம் அவனை கொஞ்சறா; அடுத்த செகண்ட் ஏறி மிதிக்திறா' என்ற புரியாத பாவனையுடன், 'புத்தி கெட்ட பொண்னை பெத்து வெச்சிருக்கேன் நான்' என்ற அலுப்பு கண்களில் தெரிய சுந்தரி தன் மகளின் தோளை அழுத்தினாள்.
"சுகன்யா, நேத்து நான் என்ன நிலமையில இருந்தேன்னு உனக்கு என்ன தெரியும்? எங்கம்மா கிட்ட நான் வாங்கின பேச்சு உனக்கு எப்படி தெரியும்? உனக்காக நான் எங்கம்மா கிட்ட எப்படியெல்லாம் பேசியிருக்கேன்னு உனக்குத் தெரியாது? நேத்து ஏதோ கடுப்புல உன் மாமா கிட்ட அப்படி பேசிட்டேன். அதுக்காக அவருகிட்ட நான் அவரைப்பாக்கும் போது சாரி சொல்லிக்குவேன். நான் உன்னை எவ்வளவு தூரத்துக்கு காதலிக்கறேன் தெரியுமா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது சுகு. நீ என்னை வெக்கமில்லாதவன்னு வேணா நினைச்சுக்க: அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை: நேத்து நடந்த நெறைய விஷயம் உங்கிட்ட பேசணும். நாம நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம்" அவன் கெஞ்சலாக சிரித்தான்.
"எங்கிட்ட இன்னும் சண்டை போடணுங்கற ஆசை வேற இருக்கா உனக்கு? உன் கிட்ட சண்டை போட எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லைப்பா... என் உடம்புல தெம்பும் இல்லை: நான் ஒண்ணும் என் மனசை மொத்தமா மாத்திக்கவுமில்லை. ஏதோ பழகின தோஷத்துக்கு உங்கிட்ட இப்ப பேசிட்டு இருக்கேன்: நீ தாராளமா ஜானகி இல்லன்னா அவ தங்கச்சி ஜெயந்தி பின்னால போகலாம். சரி இப்ப எதுக்கு போன் பண்ண? உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சீக்திரமா சொல்லு?"
அவள் ஒன்றும் தெரியாதவள் மாதிரி அவனிடம் நடித்து, அவனை தெரிந்தே வம்புக்கிழுத்தாலும், அவன் தன் தாயிடம் தனக்காக வாதாடியிருக்திறான், தன் மாமாவை பார்க்க அவன் தயாராகிவிட்டான், இன்னைக்கு அவன் இங்கே வரப்போகிறான், என தெரிந்ததும் அவள் மனதில் மகிழ்ச்சி கங்கை வெள்ளமாக பொங்கியது; உள்ளத்தில் எழுந்த மதிழ்ச்சி அவள் உதடுகளில் புன்னகையாக தவழத் தொடங்கியது.
"சரி... மிஸ் சுகன்யா.. மீதியை நான் உங்க மாமாவை பார்த்து பேசிக்கிறேன்: அவர் எங்க தங்கியிருக்காருன்னு மட்டும் சொல்லமுடியுமா?"
"நீங்க, வாங்க, போங்க, மிஸ், மேடம் இந்த டிராமால்லாம் எங்கிட்ட வேணாம்; அதெல்லாம் அந்த சாவித்திரிகிட்டவும் அவ பொண்ணுகிட்டவும் வச்சுக்க; என் மாமா என் ரூம்லதான் இருக்கார்" அவள் தன் அம்மாவைப் பார்த்து உதட்டில் சிரிப்புடன் கண்ணடித்தாள்.
"சரிடி செல்லம், நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வரேன்... போன வாரம் நீ புதுசா ஒரு சுரிதார் செட் வாங்கினேன்னு சொன்னியே அந்த ட்ரஸ்ஸை போட்டுக்கோ... வரும் போது மல்லிப்பூ வாங்கிட்டு வந்து குடுத்தா வச்சிக்குவ இல்லியா? போன வாரம் நான் வந்தப்ப என்னன்னவோ காமிச்சி நெறைய வாரி வாரி குடுத்த; இன்னைக்கு அது மாதிரி எதாவது ஸ்பெஷலா குடுப்பியா?.." அவன் குரலில் உல்லாசம் வழிந்தது.
'சனியன் புடிச்சவன் அம்மா பக்கத்துல இருக்கான்னு தெரியாம என் உயிரை எடுக்திறான்.' போனவாரம் அவன் ரூமுக்கு வந்த போது நடந்தவைகள் மனதில் வேகமாக ஓட அவள் மனம் கிளுகிளுத்து உடல் லேசாக சிலிர்த்து அவள் உதட்டில் விவஷமப்புன்னகை நடனமாடியது.
'அவனாவது ஒரு முத்தம் போன்ல குடுக்கிறானா அதுவும் இல்லை' அவன் முத்தத்திற்கு மனம் வெக்கமில்லாமல் அலைந்தது.
"............."
"என்ன சுகன்யா பேசமாட்டேங்கிற: ஆசையா கேக்கிறேண்டா, புரியுதுடி; இன்னைக்கு உன் மாமா, உன் கூட இருப்பார்: என்னை நீ பட்டினியாத்தான் திருப்பி அனுப்ப போற! போன்ல ஒரு கிஸ் கூட குடுக்க மாட்டியா, நேத்து தான் பாதியிலேயே நிறுத்திட்டுப் போயிட்டியே?" அவன் குரலில் தாபம் அலைபுரண்டது.
"ம்ம்ம்... எங்கம்மா தோசையும், உனக்கு புடிச்ச பக்கோடா குருமாவும் பண்ணிட்டு இருக்காங்க, வெறும் வயித்தோட வா, வந்து ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டுப்போ..." அவள் தன் உதட்டைச் சுழித்து அவள் பற்கள் மின்ன சிரித்தாள்.
"என்னாது... உங்கம்மாவும் வந்து இருக்காங்களா? உங்க மாமாதான் வந்திருக்காருன்னு பாத்தேன்... என்ன பிளான்ல இருக்கீங்கடி நீங்க மூணு பேரும்? சின்னப் பையனை தனியா கூப்பிட்டு, மடக்கி ரூம்ல கட்டிப்போட்டு தாலி கட்ட சொல்லபோறீங்களா? நான் என் சேஃப்டிக்குன்னு யாரையாவது கூட கூப்பிட்டுக்கிட்டு வரட்டுமா?" அவன் சிரித்தான்
"செல்வா நல்லா கேட்டுக்க: இப்பவும் நான் தெளிவா சொல்றேன்; எனக்கு திருட்டு தாலி கட்டிக்க இஷ்ட்டமில்லை; எத்தனை நாள் ஆனாலும் சரி, உனக்காக காத்துட்டு இருந்து, நாலு பேருக்கு முன்னாடி, அதுவும் உங்க அம்மா ஆசீர்வாதத்தோட, அவங்க தொட்டு குடுக்கற தாலியைத்தான், உன் கையால கட்டிக்குவேன்; உன்னை இப்ப யாரும் வற்புறுத்தி தாலி கட்ட வர சொல்லலை: நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உனக்கு பயமாயிருக்குன்னா வராதே; எங்க மாமா உங்கிட்ட சொன்ன மாதிரி நானும், எங்கம்மாவும் அவரோட உங்க வீட்டுக்கு வர்றோம். என்ன சொல்றே?" அவள் அவனை மிரட்டினாள்.
"எம்மா தாயே, அப்படி எதுவும் பண்ணிடாதீங்க; நானே உங்களைப் பாக்கறதுக்கு வர்றேன்” அவன் முனகினான்.
"நேத்து உன்னைப் பாத்தப்ப தாடி மீசையோட கன்றாவியா இருந்த; எதாவது அழுக்கு ஜீன்ஸை எடுத்து போட்டுகிட்டு வந்திடாதே; ஒழுங்கா ஷேவ் பண்ணிட்டு, சுத்தமா டிரெஸ் பண்ணிட்டு வா, இல்லன்னா கீழ் வீட்டு மாணிக்கம் மாமா கதவை தொறக்க மாட்டாரு; இப்பவே சொல்லிட்டேன்" அவன் பதிலுக்கு காத்திராமல் சுகன்யா தன் செல்லை அணைத்தாள். அவள் முகம் பரவசத்தில் பொலிவாக மின்னியது.
"யாரு கிட்ட பேசிட்டு இருந்தே?" ரகு கேட்டவாறு உள்ளே நுழைந்தார்.
அவர் உள்ளே நுழைந்ததும், சுகன்யா ஒரு டவலை எடுத்து தன் நைட்டியின் மேல் தன் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். பக்கத்தில் நின்ற தன் தாயின் தோளில் கையை வீசி அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டாள்.
"மாமா, அவர்தான்.. செல்வா பேசினாரு; ஒரு மணி நேரத்துல உங்களை வந்து பாக்கிறேன்னாரு, அதுக்குள்ள நீங்களும் குளிச்சுட்டு ரெடியாகிடுங்க: அவரை இங்கேயே சாப்பிடச் சொல்லியிருக்கேன்" இப்போது அவள் குரலிலும் முகத்திலும் மெலிதாக வெட்கம் இழைந்தோடியது.
"ஏம்மா, வெறும் இட்லி மட்டும் தான் செய்யறியா? அவருக்கு வெங்காய ஊத்தப்பம் ரொம்ப பிடிக்கும், அவர் வந்ததும், பொடியா ஒரு மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை அரிஞ்சி போட்டு சூடா ஊத்திடேன்" சொல்லியவாறு அவள் கன்னத்தில் மென்மையாக தன் உதடுகளை பதித்தவள் குளியலறையை நோக்கி ஓடினாள்.
"நல்லாயிருக்குதே இவ ஞாயம்: சித்த முன்னாடி, அவனுக்கு காப்பி மட்டும் குடு போதும்; ரொம்ப அவனுக்காக உருகாதேன்னு என்னை அதட்டினா: இப்ப என்னடான்னா ஊத்தப்பம் ஊத்துங்கறா" அவள் தன் தம்பியை வியப்புடன் பார்த்தாள்.
"அதானே நேத்து ராத்திரியெல்லாம், அந்த பையனை 'அவன்' 'இவன்'னு வறுத்து கொட்டினா, இப்ப என்னமோ அவன் போன் வந்ததும், 'அவரு' 'இவரு'ன்னு அவனை தலை மேல தூக்கி வெச்சிகினு ஆடறா: என்னை சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகுன்னு ஆர்டர் போடறா? அக்கா, இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாமே சித்தம் போக்கு, சிவம் போக்குன்னு இருக்காளுங்க, எவளையும் புரிஞ்சுக்கவே முடியலை" ரகுவும் சிரித்தார்.
*****************************
சுகன்யாவிடம் பேசிவிட்டு, நிமிடங்களில் ஷேவ் செய்துகொண்டு செல்வா குளிக்க ஓடினான். குளியலறையில் குதூகலத்துடன் தன் கள்ளக்குரலில் பாடத் தொடங்கினான்.
"ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்... ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே... ஏ மச்சத் தாமரையே... என் உச்சத் தாரகையே... கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே"
"வெளியில வந்து பாடேண்டா.. காலங்காத்தால பாத்ரூமுல உன் கச்சரியை ஆரம்பிச்சிட்டே... அப்பா பாத்ரூம் யூஸ் பண்ணணுமாம்" மீனா வெளியிலிருந்து கத்தினாள்.
"ஒரு நிமிஷம்; இதோ வந்துட்டேண்டி...." வெளியில் வந்தவன் தன் தங்கையின் முதுகில் செல்லமாக குத்தியபடி சொன்னான், "இது உன் வருங்கால அண்ணிக்கு பிடிச்சப் பாட்டுடி.. அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும்” மனநிறைவுடன் சிரித்தான்.
*****************************
குளித்துவிட்டு வந்த சுகன்யா, போன வாரம் புதிதாக வாங்கியிருந்த ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற குர்தாவை அணிந்து, ரோஸ் நிற சுரிதார் அலங்காரத்தில் தங்கமாக மின்னிக் கொண்டிருந்தாள். தலையை கோதி முடியை இறுக்கமாக ரப்பர் பேண்டில் அழுத்தியிருந்தாள். சிறிய கருப்பு நிற பிந்தியை நெற்றியில் ஓட்டியிருந்தாள். ரோஜா நறுமணம் வீசும் டியோடரண்டை அக்குளில் அடித்துக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னுமாக தன் உடலை திருப்பி திருப்பி பார்த்து தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.
'நான் ஏன் இன்னைக்கு என் உடைகளிலும், தலையை சீவிக்கொள்வதிலும் இவ்வளவு நேரம் செலவு பண்றேன். என் அலங்காரத்துக்கு ஏன் அதிக கவனம் செலுத்துதிறேன். செல்வா என்ன என்னை புதுசாவா பார்க்கப்போறான். இல்லையே?' அவள் தன் மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.
"நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே... அன்பே அன்பே நான் இங்கே.. தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே" சுகன்யா அவளையும் அறியாமல் செல்வாவுக்கும் தனக்கும் பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுக்கத் தொடங்கினாள்.
ரகு, தன் தமக்கையை அர்த்தமுடன் பார்த்து சிரித்தார். அவளும் நமட்டு சரிப்புடன், சுகன்யாவை பார்த்துவிட்டு தன் தலையை குனிந்து கொண்டாள்.
*****************************
மல்லிகாவும் நடராஜனும், இரவில் அவர்களுக்குள் நடந்த இன்ப விளையாட்டுக்குப்பின் களைத்து தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாகவே எழுந்து, மீனா போட்டுக் கொடுத்த காஃபியை குடித்தவாறு வெரண்டாவில் அமைதியாக உட்க்கார்ந்திருந்தனர். மீனா அவர்கள் அருகில் அமர்ந்து அன்றையை செய்தித் தாளை புரட்டிக் கொண்டிருந்தாள்.
செல்வா, வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெளிர் க்ரே நிற பேண்ட்டும் அணிந்துகொண்டு, ஓல்ட் ஸ்ஃபைஸ் வாசத்துடன், கண்ணில் மெட்டல் ஃப்ரேமில் கருப்புநிற கண்ணாடியும், வுட்லேண்ட் ஷூவுமாக வந்தான். அவன் முகம் முழு மலர்ச்சியுடன் இருந்தது.
"காலங்காத்தால காஃபி கூட குடிக்காம எங்கடா போற?" மீனா வினவினாள்.
"கேட்டுட்டில்ல.. கிளம்பும் போதே நான் எங்கே போறேன்னு கேட்டுட்டீல்ல? இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்?" அவன் எரிந்து விழுந்தான்.
"பெரிய வி.ஐ.பி. இவரு, மன்மோகன் சிங் இவரை ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்க்கு கூப்பிட்டிருக்காரு: நான் எங்க போறேன்னு கேட்டதால அது இப்ப கேன்சல் ஆயிடப் போவுது? நீ தான் ஞாயித்து கிழமைன்னா வாரம் தவறாம அந்த சீனு தடியன் பின்னால அலைஞ்சுட்டு ஏதாவது கையேந்தி பவன்ல ரோட்டுல நின்னு வயித்தை ரொப்பிக்குவியே: அதுக்காகத்தான் கேட்டேன்; உனக்கு இங்க வீட்டுல டிஃபன் பண்ணணுமா வேணாமா" அவள் பதிலுக்கு பொரிந்து தள்ளினாள்.
"மை டியர் சிஸ்டர், எனக்கு ஸ்பெஷல் டிஃபன் - தோசை, பக்கோடா குருமா - வேற ஒரு இடத்துல ரெடியாகிட்டு இருக்கு, நீங்க எனக்காக ஒரு சின்ன உதவி பண்ணுங்க; நான் கிளம்பின உடனே, இந்த காம்பவுண்ட் கேட்டை மட்டும் மூடிடுங்க ப்ளீஸ். பாய்.." என கையாட்டிவிட்டு தன் பல்சரை உதைத்து வேகமாக கிளம்பினான்.
*****************************
மணி எட்டரையாகியிருந்தது. செல்வா இன்னும் வந்து சேரவில்லையே என அந்த வீட்டிலிருந்த மூவரும் மனதுக்குள் மருகிக்கொண்டுருந்தனர். ரகுவும் குளித்துவிட்டு தயாராகி செய்தித்தாளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். சுந்தரியும் தான் செய்த இட்லியையும், குருமாவையும், தனித்தனி ஹாட்பேக்கில் வைத்து மூடிவிட்டு, காஃபிக்கு பாலை காய்ச்சி ஃப்ளாஸ்க்கில் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
சுகன்யா குட்டி போட்ட பூனையைப் போல் குறுக்கும் நெடுக்குமாக தன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். தன் கையை திருப்பி திருப்பி வாட்ச்சில் மணியைப் பார்த்தாள்.
'ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்னவனை இன்னும் காணோமே? என்னப் பண்றான் அவன்? நம்ம வீட்டுக்கு அவனுக்குத் வழி தெரியும்? அப்புறம் என்ன பிரச்சனை? இன்னும் ஏன் அவனை காணவில்லை. அவன் வீட்டுல ஏதாவது உளறி அவங்க அம்மா ஏதாவது டென்ஷன் குடுக்திறாங்களா?'
பால்கனியில் சென்று தெரு முனையை நொடிக்கொரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள்.
அன்று காலை எழுந்ததிலிருந்தே தன் மனம் அவசியமில்லாமல் பரபரத்துக் கொண்டிருப்பதாக சுகன்யாவுக்கு பட்டது.
'இதுக்கு என்ன காரணம், நான் என்ன எதிர்பார்க்திறேன். இந்த செல்வா இன்னும் ஏன் வரல? எப்பவும் பங்க்சுவல வர்றவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?'
சுகன்யா அமைதியுடன் இருக்க முடியாமல் மாடி பால்கனியில் நடை போட்டுக்கொண்டிருந்தாள்.
"சுகன்யா, வந்து உக்காரும்மா அவர் வந்துடுவாரு, இல்லன்னா ஒரு தரம் போன் பண்ணி பாரேன்." பெண்ணின் தவிப்பை உணர்ந்த தாய் மெதுவாக பேசினாள்.
"அஞ்சு தரத்துக்கு மேலப் பண்ணிப்பாத்துட்டேன்ம்மா, நாட் ரீச்சபிள்ன்னு வருதுமா.. என்னமோ தெரியலமா ... என் வலது கண்ணு துடிச்சிக்கிட்டே இருக்கு... நீ அப்படி துடிக்கக் கூடாதுன்னு சொல்லுவியேம்மா" அவள் தன் மனம் கலங்கப் பேசினாள்.
*****************************
செல்வா வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக தெருவை விட்டு வெளியே வந்தவன் ரெண்டு நிமிடத்தில் அடையாறு டிப்போவை தொட்டான். அடுத்த மூன்று நிமிடங்களில் சர்தார் பட்டேல் ரோடில் காலியான சாலையில் விர்ர் என என்பது கிலோமீட்டரில் பறந்து அண்ணா சாலையை அடைந்தான்.
மனதுக்குள் தன்னை சூர்யாவாக கற்பனை செய்து கொண்டு "என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய்.. வான் மழையாக எனைத் தேடி மண்ணில் வந்தாய்.. என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்திறாய்" என பாடியவாறு சர்ர்ரென அண்ணா சாலையில் நுழைந்தவன் வலது பக்கத்திலிருந்து வேகமாக வந்து கொண்டுருந்த டிரக்கை, கடைசி வினாடியில் ஓரக்கண்ணால் பார்த்து ஒரு நொடி பதறினான்.
"கம்மயினாட்டி குடிச்சுட்டு ஓட்டறானா... ஆடி ஆடி வர்றான்... தாயிழி..."
'என்னால முன்ன போற பஸ்ஸை ஒவர்டேக் பண்ணிட முடியுமா, முடியாது போல இருக்கே, நேரா போனா முன்ன போற பஸ்ஸை இடிக்க வேண்யியதுதான். வேகத்தை குறைச்சா, ட்ரக் கீழேயே நமக்கு சமாதி கட்டவேண்டியதுதான்..' மனதில் அலாரம் அடிக்க...
'லெஃப்ட்ல போலாமா... போனா தப்பிக்கலாமா... முருகா ஒரே ஒரு சான்ஸ் குடுப்பா... நான் என் சுகன்யாவை பாக்கணும்...' என்றவனின் மூளை 'போடா லெஃப்ட்ல' என சொல்ல, செல்வா இடப்புறம் தன் பைக்கை திருப்பும் முன், பக்கத்தில் வேகமாக வந்த ட்ரக்கின் இடது புற முன் சக்கரம் அவன் வண்டியின் பின் சக்கரத்தை முத்தமிட்டுவிட்டது.
ட்ரக் வந்த வேகத்தில், அந்த மெல்லிய உரசலிலேயே அவன் வண்டி தட்டு தடுமாறியது, அவன் தன் பைக்கை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், ஏற்கனேவே அங்கு நின்று கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசையரின் பின்னால் தன் பைக்கை முட்டினான்.
முட்டிய வேகத்தில் பைக்திலிருந்து மூன்றடி உயரம் பறந்து, கார் டிக்கியின் மேல் விழுந்து உருண்டு, முடிவாக தரையில் டஃப் என்ற சத்தத்துடன் தன் பைக்கின் மீதே விழுந்தான். தளர்வாக போட்டிருந்த அவன் ஹெல்மெட் தலையிலிருந்து கழன்று அவன் பக்கத்திலேயே விழுந்தது. விழுந்தவன் இடது காதுக்குப்பின்னால் இருந்து இரத்தம் மெல்லிய கோடாக வழிய ஆரம்பித்தது. மெல்ல கண்களை மூடியவன் அசைவில்லாமல் கிடந்தான். அப்போது அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல் போன் ஒலிக்கத் தொடங்கியது. நின்றது... மீண்டும் மீண்டும் ஒலித்து அடங்கியது...
தொடரும்...
சகோ இதையும் அதிர்ச்சியோட முடிக்கிற ஐடியா எதாவது இருக்கா
ReplyDeleteஅப்படி எதுவும் பண்ணிடாதீங்க
இது பெரிய கதை அவ்வளவு சீக்கிரம் முடியாது... ஆனால் செல்வா..?
Deleteசகோ வேண்டாம் செல்வா வை முடிச்சிராதீங்க
Delete