"ரகு, எழுந்திருப்பா, மணி ஒன்பதாச்சு; நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க; அந்த தம்பி வரும் போது, சுகன்யா சொன்ன மாதிரி சூடா தோசையோ, ஊத்தப்பமோ நான் ஊத்தி கொடுத்துடறேன்."
ரகு நிமிர்ந்து சுகன்யாவைப் பார்த்தார்.
"சுகு வாம்மா சாப்பிடலாம்" ரகு அவளை அழைத்தார்.
"நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க மாமா: எனக்கு பசிக்கலை. நான் இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்றேன். நான் அவரை இங்க சாப்பிடச் சொல்லிட்டு, நானே சாப்பிட்டா நல்லாருக்குமா? நான் ஒரு கப் காபி மட்டும் குடிச்சுக்கறேன்."
ரகுவும் சுந்தரியும் மவுனமாக சாப்பிட்டுக்கொண்டுருந்தார்கள். சுகன்யா தனக்கு ஒரு கப் காஃபியை கலந்து கொண்டு, மீனாவுக்கு போன் பண்ணலாமா என பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவள் செல் ஒலித்தது. "கால்" நம்பர் அவளுக்கு பரிச்சயமில்லாததாக இருந்தது.
"ஹல்லோ..."
"ஹல்லோ" சுகன்யா குழப்பத்துடன் பேசினாள்.
"நீங்க சுகன்யாவா...?"
"ஆமாம் நீங்க யாரு"
"அரை மணி நேரத்துக்கு முன்னாடி நீங்க இந்த ********* செல் நெம்பர்க்கு நாலு அஞ்சு தடவை "கால்" பண்ணியிருக்கங்க; இது யாரோட நம்பர்: நம்பருக்கு சொந்தகாரர் பேர் சொல்லமுடியுமா?"
"ம்ம்ம்ம்... நீங்க யாரு பேசறீங்க"
"சொல்றேம்மா... இப்ப நீங்க எங்க இருக்கீங்க... இந்த செல் நம்பர் யாருது? இவருக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்?" குரல் மிடுக்குடனும் அதிகாரத்துடனும் ஒலிக்க சுகன்யா தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள்.
"இது செல்வாவோட நம்பர்... அவரை எனக்கு நல்லாத் தெரியும்... முதல்ல நீங்க யாருன்னு சொன்னா நல்லாயிருக்கும்" அவள் குரலில் எரிச்சல் ஒலித்தது.
"நான் திண்டி போலீஸ் ஸ்டேஷன்லேருந்து ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் கணேசன் பேசறேன்... 'யோவ்... அந்த பையன் டிரைவிங்க் லைசென்ஸ்ல என்ன பேர் இருக்குன்னு பாருய்யா? பாவம்... சின்னப்பொண்ணு யாரோ லைன்ல வருது... அவன் அம்மாவா இருக்க முடியாது" பக்கத்தில் யாருடனோ பேசும் அந்த கணேசன் குரல் இந்த பக்கம் சுகன்யாவுக்கு தெளிவாகக் கேட்டது.
சுகன்யாவின் மனதில் இப்போது பட்டென உறைத்தது. செல்வாவுக்க என்னவோ ஏதோ தப்பாக நடந்திருக்கிறது: அதனால் தான் அவன் என்னுடைய "கால்ஸை' அட்டெண்ட் பண்ணலயா? இப்ப வேற யார்கிட்டயோ அவன் செல் போன் இருக்கு: அவங்க என்னை கூப்பிடறாங்க; அவள் உடல் இலேசாக நடுங்கியது.
"ஹலோ... ஹலோ..." அவள் பரபரப்புடன் கூவினாள்
"சொல்லுங்கம்மா... ஓகே... ஓகே... அந்த பையன் பேர் செல்வாதான் ... கன்ஃபார்ம் ஆயிடுச்சு... யோவ் கந்தசாமி நீ அப்படியே ராமச்சந்திரனுக்கு "கால்" பண்ணி செல்வான்னு எண்ட்ரி போட்டு கேஸ் ஷீட் எழுத சொல்லிடுயா... மிஸ் சுகன்யா... செல்வாவுக்கு நீங்க என்ன உறவும்மா, உங்க வீட்டுல வேற யாரும் பெரியவங்க... ஆம்பளைங்க இல்லையா? இருந்தா அவங்க கிட்ட போனை குடும்மா?"
"சார்... எங்கிட்ட நீங்க தாராளமா பேசலாம்.. ஸார்... அவர் என் கூட வொர்க் பண்றார்... நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கிறோம்... அவர் காலையில எங்க வீட்டுக்குதான் வர்றதா இருந்தார்... மோஸ்ட்லி அவர் பைக்லதான் எங்கேயும் போவார்... அவரோடது கருப்பு பல்ஸர் பைக். என் வீடு சைதாப்பேட்டையில இருக்கு, இப்ப நான் வீட்டுலத்தான் இருக்கேன். இப்ப எங்க மாமா ரகுராமன் என் பக்கத்துலதான் இருக்கார். சொன்ன டயம்ல செல்வா வராததாலே நான் அவருக்கு தொடர்ந்து போன் பண்ணேன். என்னாச்சு ஸார் அவருக்கு..." அவள் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தாள். அவள் குரல் உடைந்து, தேய்ந்து தழுதழுக்க ஆரம்பித்தது.
"ஓ.கே. இப்ப புரியுது... சாரி மிஸ் சுகன்யா... அரை மணி நேரத்துக்கு முன்னாடி செல்வா கிண்டியிலேருந்து சைதாப்பேட்டை பக்கமா வரும் போது ஒரு ட்ரக் அவரோட பைக்கை இடுச்சிருக்குன்னு தெரிய வருது... அவர் பைக் நின்னுகிட்டிருந்த ஒரு கார் மேல மோதி, தலையில அடிபட்டு, மயக்கமா கிடந்தவரை நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியில அட்மிட் பண்ணியிருக்கு... இந்த இன்ஃப்ர்மேகஷனை முதல்ல உங்களுக்குத்தான் குடுக்கறேன்... நீங்க உடனடியா அங்க போகமுடியுமா.. அங்க ராமச்சந்திரன்னு ஒரு போலீஸ் ஆஃபிஸர் ரிஸப்ஷன்ல இருப்பார்... நீங்க அவரை போய் பாருங்க... ஓ.கே வா?"
"கண்டிப்பா ஸார்.. நான் இப்பவே போறேன் ஸார்.. ஸார் செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணும் ஆயிடலேயே சார்... இது அவங்க வீட்டுக்குத் தெரியுமா...?" அவள் பதைபதைத்தாள்.
"ம்ம்ம் ... சாரி சுகன்யா... இப்ப இதுக்கு மேல என்னால ஓண்ணும் சொல்லமுடியாது. விக்டிமோட செல் போன்லேருந்து மத்த நம்பர்களை செக் பண்ணி, அவங்க பேரண்ட்ஸை காண்டாக்ட் பண்ணணும்... அவன் வீட்டுக்கு தகவல் சொல்லணும் ... நீங்க அந்த பையனோட பேரண்ட்ஸ் நம்பரோ, வீட்டு நம்பரோ இருந்தா குடுங்க... தட் வில் பி ஹெல்ப்ஃபுல் ஃபார் மீ...?" இப்போது அவர் குரலில் கனிவு தெரிந்தது.
"சார், செல்வாவோட தங்கை மீனா நம்பர் எங்கிட்ட இருக்கு... நோட் பண்ணிக்குங்க... ஸார் நீங்க கால் பண்றீங்களா இல்லை நான் அவ கிட்ட பேசட்டுமா?" அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது.
"சுகன்யா, நீ குயிக்கா ஹாஸ்பெட்டலுக்கு போம்மா... அந்த பையன் அங்க தனியா ICU - ல இருக்கான்... நான் அவன் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்றேன்... டோன்ட் வொர்ரி..." கால் கட் ஆகியது.
சுகன்யாவின் கால்கள் துணியாக துவண்டன. அவளால் நிற்கமுடியாமல் சுவரை பிடித்துக்கொண்டாள். உடலில் இருக்கும் அவ்வளவு இரத்தமும் ஒரு நொடியில் வடிந்துவிட்டது போல உணர்ந்தாள். அவள் அடிவயிறு கலங்கி, உடனடியாக பாத்ரூமுக்கு போக வேண்டுமென தோன்றியது.
"யாரும்மா போன்ல... என்னாச்சு..." பால்கனிக்கு வந்த ரகு, கன்னங்களில் கண்ணீர் ஒழுக நின்ற சுகன்யாவை கண்டு திடுக்கிட்டார்.
"மாமா.. செ... செல்... செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி... பைக்ல நம்ம வீட்டுக்கு வரும் போது... ட்ரக் ஒண்ணு மோதிடிச்சாம்... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஃபார்ம் பண்ணாங்க... எனக்கு செல்வாவை உடனே பார்க்கணும் மாமா... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியில அட்மிட் பண்ணியிருக்காங்களாம். அங்க அவன் தனியா கிடக்கறான் மாமா... இது இன்னும் அவங்க வீட்டுக்கு கூட தெரியாதாம்... ப்ளீஸ் போவலாம் வாங்க மாமா..."
அவள் அறைக்குள் பாய்ந்து இங்குமங்கும் ஓடினாள்... தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள்... அலமாரியை துறந்து கையில் கிடைத்த பணத்தை அள்ளிக்கொண்டாள்.
"அம்மா நீயும் வர்றியாம்மா..." சுந்தரியை கட்டிக்கொண்டு விம்மினாள்.
"செல்வா... என்னடா உனக்கு இப்படி ஆகிப்போச்சு... பாவி பாத்து வரக்கூடாதாடா... வண்டியை வேகமா ஓட்டா தேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... கேட்டியாடா பாவி... பைக்ல பறக்கும் போது கிக்கா இருக்குடின்னு சொல்லுவியேடா பாவி... நீ என்னைப் பாக்க வரும் போது உனக்கு இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா உன் அம்மா என்னை உயிரோட புதைச்சுடுவாளேடா? இப்ப நான் அவங்க மூஞ்சியில எப்படிடா முழிப்பேன்; இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு புரியலேயே?
டேய் செல்வா... எல்லாம் அந்த முண்டக்கண்ணி சாவித்திரி கண்ணுதாண்டா... உன்னை இப்படி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சு இருக்கு; நம்பளை உசுரோட திண்ணனும்ன்னு பாக்கறடா அவ... அவ கண்ணு தான் கொள்ளிக்கண்ணாச்சே... நல்லா இருப்பாளா அவ" அவள் தலையில் அடித்துக்கொண்டு கத்தினாள்...
"உனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சு; அவளை நான் சும்மா விட மாட்டேன்..." ஒவென கத்தி அழ ஆரம்பித்தாள்.
அவள் போட்ட கூச்சலையும் அதை தொடர்ந்து வந்த அழுகை சத்தத்தையும் கேட்டு கீழே வராண்டாவில் நின்று கொண்டுருந்த சங்கர் பதறியாவாறு மேலே ஓடி வந்தான்.
"சரிடா கண்ணு சுகா. நாம போகலாம்ம்மா... கிளம்பு. நீ இப்ப அழுவாதே... தைரியமாயிரு... ஒண்ணும் ஆகியிருக்காது..." ரகு தன் உடையை மாற்ற ஆரம்பித்தார்.
"என்னாச்சு சுகன்யாவுக்கு... ஏன் அழறா இப்படி?" சங்கர் திகைத்தான்.
சுகன்யா ஓடி வந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள். "சங்கர் உங்க கார்ல என்னை லட்சுமி ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறீங்களா? என் செல்வா அங்க சீரீயஸா கிடக்திறான்..."
"நான் எல்லாம் விவரமா சொல்றேன்.. நீ கொஞ்சம் வண்டியை எடுப்பா சங்கர்... உனக்கு இப்ப வேலை ஒண்ணும் இல்லையே... நீ கொஞ்சம் எங்க கூட வரலாம் இல்லே? வேணி சாயந்திரம் தானே வர்றா... அக்கா, நான் என் ஏ. டி. எம் கார்ட எடுத்துக்கிட்டேன்; நீ உன் கிட்ட இருக்கற பணத்தை மொத்தமா எடுத்துக்கோ... சுகா நீங்க ரெண்டும் பேரும் சீக்கிரம் கிளம்புங்க..." சங்கருடன் ரகு கீழே இறங்க ஆரம்பித்தார்.
செல்வாவின் வீட்டில்,
மீனாவின் செல் சிணுங்கியது...
"இந்த நேரத்துல யாராக இருக்கும்... ஜெயந்திதான் காலையில கால் பண்றேன்ன்னா; ஆனால் போனில் தெரியாத நம்பராக இருக்கே..." மீனா தயங்கினாள்...
அடித்து அடங்கிய போன் மீண்டும் சிணுங்கியது.
"ஹலோ... யாரு?"
"நான் டிராஃபிக் இன்ஸ்பெக்டர் பேசுறேன் மா.. செல்வா உன் அண்ணனா? சுகன்யாதான் இந்த நெம்பரை குடுத்தாங்க... செல்வா பைக்ல போறப்போ கிண்டிக்கு கிட்ட ஒரு ட்ரக் இடிச்சு ஆக்சிடென்ட் ஆகிட்டு. இப்போ அவன் நந்தனம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்... சுகன்யாவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கேன்... நீங்க அங்க உடனடியா அங்க போங்க... இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவார்.."
"அப்பா.. நம்ம செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். சீரியஸா இருக்கானாம். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்திட்டு இருக்காளாம் ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டலாம் ... போலீஸ்லேருந்து போன் பண்ணி சொல்றாங்க ... நீ பேசுப்பா இன்ஸ்பெக்டர் கிட்ட..." அவள் தந்தியடிக்க... நடராஜன் அவள் செல்லை வாங்கி "ஹலோ" "ஹலோ" என கத்த... பதில் வரவில்லை.
"யாரும் லைன்ல இல்லடி மீனா" அவர் நடுக்கத்துடன் கூச்சலிட்டார்.
குளித்துவிட்டு தலையை உலர்த்திக்கொண்டுருந்த மல்லிகா அரையும் குறையுமாக மீனா பேசுவதை கேட்டுவிட்டு "என்னாச்சு...? அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டங்களா உங்க சண்டையை?" என்று விஷயம் தெரியாமல் தன் போக்கில் உளறினாள்.
மீனா கண் கலங்க அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு, "அம்மா செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம். இப்பத்தான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நீயூஸ் தெரிஞ்சுது. வா போலாம்"
"அய்யோ..!! என்னடி சொல்ற? கடவுளே..!!" என்று காதரியவள் "எனக்கு நல்லாத் தெரியுண்டி: அந்த சுகன்யா என் புள்ளையை முழுசா தின்னுட்டுத்தான் மூச்சு விடப்போறா: இந்த பாவி மனுஷன் என் பேச்சை கேட்டாத்தானே? செல்வா கிட்ட சொல்லி அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிடுவோம். அவகிட்ட ஒரு தரம் பேசி பாருடி: பேசி பாத்துட்டு முடிவெடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா ஒரே புலம்பல்; இந்த புத்தி கெட்ட மனுஷன் எனக்கு புத்தி சொல்றாரு... இப்பவாது உங்களுக்கெல்லாம் புரிஞ்சா சரிடி.. அவ நல்ல அதிர்ஸ்ட கட்டைடி... என் உயிரை எடுக்க பொறந்து இருக்கா" பெண்ணின் கையை உதறியவள் கத்திக்கொண்டே இலக்கில்லாமல் தெருவுக்கு ஓடினாள்.
அவள் பின்னால் ஓடிய நடராஜன்... "மல்லிகா.. முதல்ல என் புள்ளையை காப்பத்தணும், நீ ஆஸ்பத்திரியில வந்து இதேமாரி சாமியாட ஆரம்பிச்சே உன்னை அங்கேயே பொலி போட்டுடுவேன்... அங்க வந்து பொத்திகிட்டு சும்மா இருக்கறதா இருந்த எங்க கூட வா... இல்லயா நீ இங்கேயே கத்திக்கிட்டு கிட, சொல்லிட்டேன்" நடராஜன் பதிலுக்கு கூவினார்.
"மீனா, முதல்ல கார் சாவியை எடு, அலமாரியை திறந்து இருக்திற பணத்தை எல்லாம் எடுத்துக்கோ, நான் வண்டியை எடுக்கிறேன்: வீட்டை பூட்டிட்டு சீக்கிரமா வா... உங்கம்மாளுக்கு இப்ப எது சொன்னாலும் புரியாது."
நடராஜன் லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினார்.
தலையில் கையை வைத்துக்கொண்டு பிரம்மை பிடித்தவள் போல எங்கேயோ பார்த்து புலம்பிக்கொண்டு, தெரு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த மல்லிகாவின் தோளைப் பிடித்து இழுத்த மீனா, "அம்மா, வண்டியில ஏறும்மா" என இழுத்து பின் சீட்டில் உட்க்காரவைத்து கதவை அடித்து மூடினாள்.
வண்டி கிளம்பியதும், செல்லை எடுத்து செல்வாவின் ஃப்ரெண்ட் சீனுவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி நேராக அவனை ஹாஸ்பெட்டலுக்கு வரச்சொன்னாள்.
"மீனா இப்ப ஏம்மா எல்லாருக்கும் போன் பண்ணி கலவரப்படுத்திட்டு இருக்கே?"
"இல்லப்பா... நமக்கு அண்ணன் நிலைமை என்னன்னு சரியா தெரியலை: உதவிக்கு கூட ஒரு ஆம்பிளை இருக்கறது நல்லது தானேப்பா; அதுவும் இல்லாம செல்வாவுக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன், அவனுக்கு சொல்லலன்னா அவன் அப்புறமா வீட்டுக்கு வந்து சண்டை போடுவான்."
அந்த இக்கட்டான நேரத்திலும் நடராஜன் தன் மகளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து மனதுக்குள் சிலாகித்து கொண்டு பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணின் கையை அழுத்திக் கொண்டார்.
"அப்பா வண்டியை கவனமா ஓட்டுங்கப்பா" அவள் சுரத்தில்லாமல் அவரைப்பார்த்து சொன்னாள்.
******************************
ஹாஸ்பிடல் வாசலில் சங்கர் வண்டியை நிறுத்தியதும் சுகன்யா பாய்ந்து ஓடினாள். மூச்சிரைக்க ஓடிச் சென்று ரிசப்ஷனில் செல்வாவின் பேரை சொல்லி விசாரிக்க, அங்கிருந்த ராமச்சந்திரன் பேசினார்.
"மெதுவாம்மா... நீ யாரு... உன் பேரு என்ன?"
"நான் சுகன்யா"
தான் யார் என அவள் சொல்ல அவர் அவளை ட்யூட்டி டாக்டரிடம் அழைத்து சென்றார்.
"செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே சார்" சுகன்யா கேட்டுக்கொண்டுருக்கும் போது சீனுவும் பதைபதைப்புடன் அங்கு வந்து சேர்ந்தான்.
"ஃப்ர்ஸ்ட் எய்ட் குடுத்தாச்சு. இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாதும்மா. பேஷண்ட்டுக்கு இன்னும் நினைவு வரல. பையன் ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில காயம் அதிகமில்லை. ஆனா ஹெல்மெட் உடைஞ்சு தலையில காதுக்கு பக்கத்துல ஆழமா குத்தி ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. காயத்துக்கு எக்ஸ்டர்னலா ஸ்டிச் போட்டாச்சு. ரெண்டு யூனிட் ப்ளட் ஏத்தியிருக்கோம். மத்தபடி உடம்புல அங்கங்க ஸ்க்ராட்ச்சஸ் இருக்கு. இப்ப ப்ரெய்ன் ஸ்கேன் நடந்துட்டு இருக்கு. முதல்ல ஸ்கேன் முடியட்டும். பையன் முழிச்சதுக்கு பின் டீட்டெய்லா செக் பண்ணாத்தான் எதுவும் சொல்ல முடியும்." என்றவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு எழுந்தார்.
"அந்த பையன் ப்ளட் ஒரு ரேர் க்ரூப். அதை வரவழைக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் பேஷண்ட்க்கு குறைஞ்சது ரெண்டு யூனிட் ப்ளட் குடுக்க வேண்டியிருக்கலாம். அதுக்காக நீங்க எங்களுக்கு இம்மிடியட்டா ப்ளட் ரீப்ளேஸ் பண்ணணும். முதல்ல ரிஸப்ஷன்ல 50,000 ரூபாய் அட்வாண்ஸா பணம் கட்டிட்டு வாங்க பையனோட பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லியாச்சா. சில ஃபார்ம்ஸ்ல அவங்க யாராவது ஒருத்தரோட கையெழுத்து வேணும்."
"நான் உடனடியா பணம் கட்டறேன்.. அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம். அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க டாக்டர்", அவள் அவரை கை கூப்பினாள்.
"மாமா டாக்டர் சொல்றதை கேட்டீங்களா... நீங்க முதல்ல பணத்தை கட்டிடுங்க மாமா.. அவங்க வரும் போது வரட்டும்" சுகன்யா பதறலுடன் சொன்னவள், "சார் என்னோட ப்ளட் க்ரூப் "ஓ". நான் எவ்வளவு ரத்தம் வேணா குடுக்க தயார் சார். நீங்க எப்படியாவது அவரை காப்பாத்திடுங்க சார்" என்று கண் கலங்க பேசினாள்.
"சிஸ்டர் இந்த பொண்ணோட இரத்தம் சேம்பிள் எடுத்துக்கோங்க... மத்த ஏற்பாடுகளையும் பண்ணுங்க"
"சார் நான் அந்த ஃபார்ம்ஸ்ல கையெழுத்து போடலாமா"
"நீங்க அந்த பையனுக்கு என்ன உறவு?"
"நான்... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறவ சார்... நான் அவரோட லவ்வர்"
"உன் பேரு என்ன சொன்னே?" டாக்டர் மெலிதாக புன்னகைத்தார்
"சுகன்யா"
"நான் நிறைய பொண்ணுங்களை பாத்து இருக்கேன். இந்த மாதிரி நேரத்துல அழுது புலம்புவாங்க; ஆனா நீ ரொம்ப தைரியசாலியா இருக்கே! நீ எதையும் யோசிக்காம பணம் கட்ட சொன்னே; ஒரு வினாடி கூட தயங்காம ரத்தம் கொடுக்க தயாராயிட்டே; ஐ அப்ரிஷியேட் யூ, ஆனா நீ அந்த ஃபார்ம்ஸ் சைன் பண்ணறதுல சில சிக்கல்கள் இருக்கு. பையனோட பேரண்ட்ஸ் வரட்டும்."
சீனு மவுனமாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
'சும்மா சொல்லக்கூடாது, நம்ம மச்சான் செல்வா ரொம்ப ரொம்ப குடுத்து வெச்சவன்.. இப்படி ஒரு பொண்ணு அவனுக்கு லவ்வரா கிடைச்சிருக்கா...' அவன் மனதுக்குள் வியந்தான்.. 'இவளையா செல்வாவோட அம்மா வேணாங்கிறாங்க?'
******************************
ரத்தம் கொடுத்துவிட்டு சுகன்யா வெளியில் வந்து அமர்ந்தாள். அதே நேரத்தில் செல்வாவின் குடும்பத்தினர் எதிரில் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். சீனு அவர்களிடம் சென்று செல்வாவின் உடல் நிலையை சொல்லி, சுகன்யாவின் பக்கம் கையை காட்டி, செல்வாவுக்காக அவள் ரத்தம் கொடுத்துவிட்டு வந்ததையும், ஸ்கேனுக்காவும் மற்ற டெஸ்ட்களுக்காகவும் அவர்களுக்காக காத்திராமல் பணம் கட்டிய விவரங்களையும் முழுவதுமாக சொல்ல, மீனா வேகமாக சுகன்யாவிடம் ஓடிச் சென்று கலங்கிய கண்களுடன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவள் காதில் முணுமுணுத்தாள்.
"தேங்க்யூ வெரி மச் சுகன்யா... செல்வா ட்ருலீ லவ்ஸ் யூ வெரி மச்... அவன் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான்..." அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் கண்கலங்கினாள்.
நடராஜன் சுகன்யாவிடம் சென்று மவுனமாக நின்றார். மனதில் பொங்கும் பலவித உணர்ச்சிகளையும் உதட்டில் காட்டாமல் அவள் தலையை மெதுவாக வருடினார். ரகுவையும் சுந்தரியையும் பார்த்து கை கூப்பி நின்றார்.
அதுவரை எல்லாவற்றையும் பேசாமால் கேட்டுக்கொண்டுருந்த மல்லிகா சுகன்யாவை நோக்தி சென்றாள். அவள் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
"சுகன்யா... நீ என் புள்ளைக்காக ரத்தம் குடுத்தியாம்... என்ன ஏதுன்னு கேக்காம பணத்தை அள்ளி கட்டினாயாம்... நீ அவனுக்காக ரொம்ப பண்ணியிருக்கே... அதுக்கு ஒரு தாயா உனக்கு நான் என் முழு மனசோட நன்றி சொல்றேன்... உனக்கு நான் பதிலுக்கு என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன். ஆனா செல்வாவை என் மனசார உனக்கு கட்டி வச்சு உன்னை என் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லே... ஏன்... என்ன காரணம்ன்னு என்னை எதுவும் கேக்காதே? என் புள்ளையை நீ முழுசா எங்கிட்ட விட்டு குடுத்துடு... தயவு செய்து நீ இங்கேயிருந்து போயிடு.. ப்ளிஸ்.." என்றவள் அவளை நோக்கி கை எடுத்து கும்பிட்டாள். மல்லிகாவின் முகம் உணர்ச்சிகள் ஏதுமின்றி வரண்டு கல்லாக இறுதியிருக்க அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.
சுற்றி நின்றவர்கள் வாயடைத்து நிற்க சுகன்யா ஒரு நிமிடம் மல்லிகாவை கூர்ந்து நோக்தினாள்.
"எனக்கு என் செல்வா நல்லபடியா பிழைச்சு எழுந்தா போதும்... வேற எதுவும் வேண்டாம்... அவன் உயிரோட இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம்... நீங்க கேட்டுக்கிட்ட படி இந்த நிமிடத்துலேருந்து எனக்கு உங்க புள்ளை கிட்ட எந்த உரிமையும் இல்ல... நான் எல்லாத்தையும் விட்டுக் குடுத்துடறேன். நீங்க நிம்மதியா அவன் கூட இருந்து அவனை பாத்துக்குங்க." என்றவள் கூப்பிய அவள் கைகளை பிரித்து தன் வலது கையை அவள் கையில் வைத்து அமுத்தினாள்.
"அம்மா, மாமா... வாங்க நாம போகலாம்... நாம வந்த வேலை முடிஞ்சு போச்சு..."
யாரையும் திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
தொடரும்...
சகோ இது காமக்கதைகள் போல இல்லாம ஒரு காதல் கதை படிக்கிற மாதிரி நல்லா போகுது
ReplyDeleteசெல்வா சுகன்யா வை பிரிச்சிராதீங்க சகோ 🤝
நல்லா இருந்த சரி.
Deleteசெல்வாவுக்கு தேவையே இல்லாமல் ஒரு விபத்து ஏற்படுத்திட்டீங்க! பணம் கட்டி, ரத்தம் கொடுத்து, செல்வா வைக் காப்பாற்ற தைரியமா நடவடிக்கை எடுத்த சுகன்யாவை நன்றி யுடன் மீனா, நடராஜன் பார்க்க, அவன் அம்மா மட்டும் எதிர்ப்பது செயற்கை, மிகை
ReplyDeleteமல்லிகாவோட குணமே அதுதான். பிடிவாதம். முன்கோபம். யோசிக்காம பேசுவது.
Delete