ICU- வின் கதவை திறந்துகொண்டு ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி வேகமாக வந்தாள்.
"பேஷண்ட்டுக்கு நினைவு வந்துடுச்சு... அவருக்கு ப்ளட் குடுத்துக்திட்டு இருக்காங்க; அவரு சுகன்யா, சுகன்யான்னு முனகறார். இங்க சுகன்யாங்கறது யாரு? டாக்டர் அவங்களை மட்டும் உள்ளே கூப்பிடறார். யாரு அவங்க? அவங்களை சீக்திரமா உள்ளே அனுப்புங்க" சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.
சுகன்யா மருத்துவமனையிலிருந்து விருட்டென நடக்க ஆரம்பித்ததும், சுந்தரியும், ரகுவும் எதுவும் பேசாமல் மவுனமாக அவளைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் போவதை பார்த்துக்கொண்டுருந்த சீனுவுக்கு மல்லிகா மீது தலைக்கு மேல் கோபம் வந்தது. வந்த கோபத்தை அடக்க தன் பற்களை கடித்துக்கொண்டான்.
மல்லிகாவை அவன் அம்மா என்றுதான் கூப்பிடுவான். அவள் பேசியதை பொறுக்கமுடியாமல், "கொஞ்சம் நேரம் பேசாம இருங்கம்மா: இப்படியெல்லாம் பேசற நேரமா இது?" என்று அடிக்குரலில் பேசிய அவன், உரிமையுடன் அவள் கையை பிடித்து இழுத்து சென்று சற்று தள்ளி இருந்த நாற்காலியில் அவளை உட்க்கார வைத்தான்.
மல்லிகா, நடராஜன் இருவருமே அவனைத் தங்கள் வீட்டில் பிறக்காத இன்னொரு பிள்ளையாகத்தான் நினைத்தார்கள். அவன் செல்வாவின் வீட்டிற்கு இரவு பகலென நேரம் காலம் இல்லாமல் வருவான்; குளிப்பான்; சாப்பிடுவான்: தூங்கி, கண் விழித்தெழுந்து திரும்பிப் போவான். அந்த வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது என்று எந்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக நிற்பவன் அவன்.
அந்த நேரத்தில் அதற்கு மேல் மல்லிகாவிடம் வேறு எதுவும் சொல்ல முடியாமல் தன் பல்லைக் கடித்துக்கொண்டு பின்னால் திரும்பியவன், அங்கு தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கும் மீனாவைப் பார்த்தான். 'ஏன் இந்த பொம்பளைங்க எல்லாம் சட்டு சட்டுன்னு எமோஷனலா ஆவறாளுங்க' என யோசித்தான்.
நடராஜன் தன் கைகளைப் பிசைந்துகொண்டு தன் மனைவியை முறைத்தவர், சட்டென விரைந்து சுகன்யாவின் பின்னால் நடந்து கொண்டுருந்த ரகுவின் கையை பிடித்து நிறுத்தினார்,
"சாரி சார்... நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்... என் மனைவி பேசினது தப்புத்தான்; அவள் ஏன் அப்படி பேசினான்னு எனக்குப் புரியல; இப்ப அவளை எதுவும் கேக்கற நிலைமையில நான் இல்ல; உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்: புள்ளை அடிபட்டு கிடக்கிறானேன்ற மன வேதனையில, ஏதோ கோபத்துல கன்னா பின்னான்னு பேசிட்டா. அவ பேசினதை மனசுல வெச்சிக்காதங்க" என்றார்.
பின் சுந்தரியிடம் சென்று, "அம்மா; என் பொண்டாட்டி கொஞ்சம் முன் கோபக்காரி; ஆனா கெட்டவ இல்லை: முதல் தடவையா நீங்க அவளைப் பாக்கறீங்க, உங்க மனசுல அவளைப் பத்தி ஒரு தப்பான எண்ணம் உருவாகலாம். அவ மனசுல எந்த காரணம் இருந்தாலும், பொது இடத்துல இப்படி நடந்துகிட்டு இருக்கக்கூடாது; நான் இதுக்கு ரொம்ப வருத்தப்படறேன்;: நீங்க உங்க பொண்ணு சுகன்யாவை இப்ப திரும்பி போக வேண்டாம்ன்னு சொல்லுங்க... ப்ளீஸ்..." என்று கெஞ்சலாக பேசினார்.
சுகன்யா பேரை செல்வா முனகுகிறான், டாக்டர் அவளை கூப்பிடுதிறார் என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும் மீனாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, வேகமாக மருத்துவமனை வாசலை நோக்கி சென்ற சுகன்யாவை நிறுத்த வெளியில் ஓடினாள். சீனுவுக்கும் சுகன்யாவை, கெஞ்சி கூத்தாடி திரும்ப கூப்பிட்டுக்கொண்டு வருவதுதான் முக்கியம், என மனதில் தோன்ற மல்லிகாவை விட்டுவிட்டு மீனாவின் பின்னால் ஓடினான்.
சுகன்யா, ஒரு மரத்தடியில், கான்கரிட் பெஞ்சில், தன் நெஞ்சு பதைபதைக்க, தாடைகள் இறுகி, சுருங்திய கண்கள் கலங்கி, வெறித்த பார்வையுடன், தன் கைப்பையின் "ஜிப்"பை காரணமில்லாமல் திறப்பதும் மூடுவதுமாக உட்க்கார்ந்திருந்தாள்.
"சாரி சுகன்யா: வெரி வெரி சாரி: எங்க அம்மா அப்படி பேசினதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன்: அவங்க ஏன் அப்படி பேசினாங்க, என்ன காரணத்தால பேசினாங்கன்னு சத்தியமா, எனக்கோ, எங்க அப்பாவுக்கோ தெரியாது."
மீனா கெஞ்சும் குரலில் பேச, சுகன்யா தன் முகம் சுருங்கி பதிலுக்கு முகத்தில் வேதனையுடன் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.
"சுகன்யா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க; உங்களுக்கு இப்ப நிச்சயமா கோபம் வரும்; எங்கம்மாவை கோச்சுக்கறதுக்கு உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு; அதுக்கு மேல உங்களுக்கு உரிமையும் இருக்குன்னு நான் நினைக்கிறேன்; நீங்க சொல்ல நினைக்கற அவ்வளவையும் நான் பொறுமையா கேக்கத் தயார்: ஆனால்... ப்ளீஸ்... இப்ப நீங்க எழுந்து உள்ள வாங்க; செல்வாவுக்கு நினைவு வந்துடுச்சாம்; அவன் உங்க பேரைத்தான் திரும்ப திரும்ப சொல்றானாம். இப்ப உங்களை பாத்தா அவனுக்கு மனசு நிம்மதியா இருக்கும். டாக்டர் உங்களை மட்டும்தான் உள்ள கூப்பிடறார். அடிபட்டு கிடக்கற இந்த நிலைமையிலும் என் அண்ணன் உங்கப் பேரைத்தான் சொல்றான்: எங்க யார் பேரையும் சொல்லலை; உங்களுக்கு நீங்க நேசிக்கற செல்வா முக்தியமா? இல்ல எங்க அம்மா மேல கோபப்படறது முக்தியமா?' கண் கலங்கி பேசிய மீனா சுகன்யாவின் கைகளை பற்றிக் கொண்டாள். எந்த நேரத்திலும் அழுதுவிடுவது போல் இருந்தாள்.
"சுகன்யா, நான் சீனு, செல்வாவோட ஃப்ரெண்டு: அவனுக்கு அடிபட்டுதுன்னு தெரிஞ்ச உடனே, யாரைப்பத்தியும், எதைப்பத்தியும், கவலைப்படாமா ஓடுவந்து ரத்தம் குடுத்து பணத்தைக்கட்டி, எல்லாம் பண்ணிட்டு, அவன் உங்களை பார்க்கணும்ன்னு சொல்ற நேரத்துல, அவன் அம்மா அர்த்தமில்லாம எதையோ பேசினாங்கன்னு, திரும்பி போனா, நீங்க பண்ண அத்தனைக்கும் அர்த்தமில்லாம போயிடும்; ப்ளீஸ், சீக்திரமா உள்ள வாங்க" சீனு அவளை நோக்தித் தன் கையை கூப்பினான்.
"சீனு, ப்ளீஸ் கையை கீழ போடுங்க முதல்ல; நான் வரேன்: என் செல்வாவுக்காக நான் வர்றேன்: எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை." சுகன்யா தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு உள்ளே வந்தாள்.
மல்லிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உட்க்கார்ந்திருந்த தன் தாயிடம் தன் கைப்பையையும், செல் போனையும் கொடுத்தவள், தன் மாமாவின் முகத்தைப் பார்த்தாள்: அவள் பார்வையில் உள்ளே போகட்டுமா என்ற கேள்வி தொத்தியிருந்தது. அவரும் தன் கண்ணாலேயே விடைக்கொடுக்க, அவள் தன் ஜீவனைப் பார்க்க படபடக்கும் நெஞ்சுடன் உள்ளே விரைந்தாள்.
அந்த அறையினுள் இரு கட்டில்கள் போடப்பட்டிருக்க ஒரு கட்டில் காலியாக இருந்தது. பக்கத்து கட்டிலில் செல்வா தலையில் கட்டுடன் கண்கள் மூடி படுத்திருந்தான். அவன் முகம் வீங்கியிருக்க இடது கை மணிக்கட்டில் கட்டுப்போடப்பட்டிருந்தது. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டுருக்க, ஒரு நர்ஸ் அவனுடய ரத்த அழுத்தத்தை அளந்து கொண்டிருந்தாள். வலது கையில் இரத்தம் ஏறிக்கொண்டுருந்தது. செல்வாவின் தலைப்பக்கத்தில், வயது முதிர்ந்த ஒரு டாக்டர் நின்றவாறே ஒரு பேப்பரில் வேகமாக கிறுக்திக் கொண்டுருக்க, காலையில் அவளுடன் பேசிய டுயூடி டாக்டர் நின்று கொண்டுருந்தார்.
சுகன்யா நுழைந்தவுடன் எழுதிக்கொண்டுருந்தவர் ஒரு முறை நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்துவிட்டுமீண்டும் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்ததும், சுகன்யாவை நோக்கி புன்முறுவலுடன் மென்மையாக பேசத்தொடங்கினார்.
"சுகன்யா, ஆர் யூ ஹிஸ் ஃபியான்சி?"
"எஸ் ஸார்.."
"யூ ஆர் வெரி வெரி லக்ஜி கேர்ள்... இவரை டயம்ல கொண்டு வந்து சேர்த்துட்டாங்க... ஹெல்மெட் போட்டுகிட்டு இருந்ததால பொழைச்சுக்கிட்டான். ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நவ்.. ஹீவில் பீ ஆல்ரைட் இன் ௭ வீக்.. அவனுக்கு நினைவு வந்ததுலேருந்து உன் பேரைத்தான் சொல்லிக்கிட்டிருக்கான்.."'
"செல்வா, மிஸ்டர் செல்வா, கண்ணைத் தொறங்க... உன்னைப்பார்க்க சுகன்யா வந்திருக்கா" சொல்லிவிட்டு அவன் கன்னத்தை லேசாகத் தட்டினார். அவன் மெதுவாக தன் கண்களைத் திறக்க அவர் வெளியே நகர ஆரம்பித்தார்.
"ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணதா டாக்டர் சொன்னார்... ப்ரெய்ன்ல்ல ப்ராப்ளம் ஒண்ணுமில்லேயே ஸார்?" கலக்கத்துடன் கேட்டாள் சுகன்யா.
"நத்திங்க் டியர், ஜஸ்ட், ஒரு சின்ன டெளட்... அதை ரூல் அவுட் பண்றதுக்காக ஸ்கேன் எடுத்தேன். ஒரு வாரத்துல அவன் எழுந்து பழையபடி உன்னை பின்னாடி உக்கார வச்சுக்கிட்டு பைக் ஓட்டுவான். ஸ்பீடா போனான்னா முதுகுல ஒண்ணு போடு; நீ அவன் கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டு அவனைத் தனியா விடு. ரெஸ்ட் எடுக்கட்டும்" அவர் சிரித்தபடியே நகர, டாக்டர் மாதவன் அவரைப் பின் தொடர்ந்தார்.
டாக்டர்கள் இருவரும் வெளியே வந்ததும், வெளியில் காத்திருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள, சீனியர் பேச ஆரம்பித்தார்.
"நீங்க சுகன்யாவுக்கு அம்மாவா, இவரு அவளோட மாமாவா. ஹ்ம்.. சுகன்யா ரொம்ப தைரியமான பொண்ணு. காலையிலடக் டக்குனு முடுவு எடுத்திருக்கா, மாதவன் சொன்னார்... "
"நீங்க தான் செல்வாவோட பேரண்ட்ஸ்ஸா? உங்க பையன் செல்வாவுக்கு நினைவு வந்திடுச்சி. பயப்படற மாதிரி ஒண்ணுமில்லே. தலையில ஒரு காயம் மட்டும் கொஞ்சம் நீளமாவும் ஆழமாவும் இருந்தது; அதுக்கு மட்டும் எட்டு தையல் போட்டிருக்கோம். மூளையில எந்த டேமேஜும் இல்ல... ப்ளட் லாஸ் மேக் அப் பண்ணியாச்சு... கடைசி யூனிட் ரத்தம் கொடுத்துதிட்டு இருக்கோம். மத்த படி உடம்புல அங்கங்க இருக்கிற ஸ்கேரச்சஸ், நார்மலா ஹீல் ஆயிடும்"
"இன்னைக்கும் நாளைக்கும் ரெண்டு நாள் செல்வா இங்க ICU-ல அப்சர்வேஷன்ல்ல இருக்கட்டும்: நாளைக்கு மறு நாள் அவனை ஜெனரல் வார்டுக்கு அனுப்பிச்சிடறேன். நாளைக்கு ஒண்ணு ரெண்டு எக்ஸ்ரே எடுக்கலாம்ன்னு இருக்கேன்... ஒண்ணும் அட்வெர்ஸா இல்லன்னா, இந்த வீக் எண்ட்ல அவனை பயுஸ்சார்ச் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல, அவன் நார்மலா பேச ஆரம்பிச்சுடுவான்னு எதிர்பார்க்கிறேன்."
"சாயந்தரத்துலேருந்து நார்மல் புட் குடுக்கச் சொல்லியிருக்கேன், உடம்பெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவான். பயப்பட வேண்டாம். செடேட்டுவ் குடுத்துடலாம். இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். சும்மா பேசி பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..."
"நீங்கள்ளாம் ரெண்டு ரெண்டு பேரா போய் செல்வாவை பாத்துட்டு குயிக்கா வெளியில வந்துடுங்க. உங்கள்ல்ல யாராவது ஒருத்தர் மட்டும் இங்க இருந்தா போதும். பேஷண்ட்டுக்கு இன்ஃபெக்க்ஷடன் ஆயிடக்கூடாது பாருங்க" மெலிதாக சிரித்தவாறு சொன்னார்.
"மத்ததெல்லாம் டாக்டர் மாதவன் பார்த்துக்குவார். ஓ.கே." அவர் நடராஜன் கையை குலுக்திவிட்டு நகர்ந்தார்.
அறையின் உள்ளே,
செல்வா மெதுவாகத் கண்ணைத் திறந்தான். அவன் முகத்தில் என்ன ஆகுமோ என்ற பயமும் பீதியும் இன்னும் பாக்கியிருந்தது. சுகன்யாவைப் பார்த்ததும், அவன் நிறையப் பேச நினைத்து, ஏதும் பேச முடியாமல், கலங்கிய அவன் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. நீண்டப் பெருமூச்சு அவன் உதடுகளில் இருந்து வந்தது.
"உன்... உன்ன்னை... உன்னைப்பாக்க வரும் போது... அவன் ட்ரக்கால மோதிட்டான் சுகு" கஷ்டப்பட்டு பேசிய அவன் முகத்திலும் உதட்டிலும் வலி அப்பட்டமாக தெரிந்தது. உணர்ச்சி மிகுதியால் தொடர்ந்து பேச முடியாமல், அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். கண்ணோரம் கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.
சுகன்யா விருட்டென அவனை நெருங்கி அவன் கண்களைத் தன் கைகளால் துடைத்தாள். தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் சட்டென அவன் நெற்றியில் தன் மெல்லிய உதடுகளை பதித்தாள். மூடியிருந்த அவன் இமைகளில் மென்மையாக முத்தமிட்டாள். செல்வா தன் விழிகளை மீண்டும் திறந்து சுகன்யாவின் முகத்தினை உற்று நோக்கினான்.
"அழாதடா செல்வா, உனக்கு ஒண்ணுமில்லே... தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சி." உணர்ச்சி மிகுதியால் பொங்கி பொங்கி எழுந்த அவன் மார்பை நீவி விட்டாள்.
"நான் தான் உன்னைப்பாக்கறதுக்கு ஓடி வந்துட்டேனே. நீ எழுந்துக்கறவரைக்கும் நான் உன் பக்கத்துல இருக்கறேண்டா. நீ அழாதடா செல்லம்... நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா" அவன் காதில் முணுமுணுத்தவாறு அவள் அவனுடன் சேர்ந்து தன் உதடுகள் துடிக்க ஓசை எழுப்பாமல் அழ ஆரம்பித்தாள்.
செல்வா மீண்டும் மெல்ல கண் திறந்து அவளை நோக்கி தன் உதடுகளை குவிக்க, சுகன்யா அவன் முகத்தின் மேல் குனிந்து தன் உதடுகளால் அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டு நிமிர, நடராஜனும் மல்லிகாவும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களைப் பார்த்தவுடன் சுகன்யா, அவன் மார்பில் சரிந்து திடந்த தன் துப்பட்டாவை அவசரமாக எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டாள். நடராஜனும், மல்லிகாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.
"ம்மா.. இவ... இவதான் என் சுகன்யாம்மா... அவகிட்ட நீ பேசிப் பாரும்ம்மா, அவ எவ்வளோ நல்லவன்னு உனக்கே புரியும்." மேற்கொண்டு பேசமுடியாமல் கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு நெற்றியும் தலையும் விண்விண்ணென்று தெறிப்பது போலிருந்தது.
நடராஜன் அவன் படுக்கையை நெருங்க, "அப்ப்பா உடம்பெல்லாம் வலிக்குதுப்பா," என்ற அவன் தன் உடலை நிமிர்த்த முயன்றான். நடராஜன் தன் மனதில் அவன் படும் வலியை உணர்ந்தார்.
மகன் படும் அவஸ்தையையும், வேதனையையும் பார்க்க முடியாமல் மல்லிகா தன் முகத்தில் வேதனையுடன் அவன் வலது கையை மெதுவாக வருடினாள்.
நடராஜன் அமைதியாக செல்வாவின் முகத்தைப் பார்த்தார். தன் கண்களால் அவனுக்கு ஆறுதல் சொன்னார். பின் அவர் பார்வை படுக்கைக்கு மறுபுறம் நின்றிருந்த சுகன்யாவின் மீது படிந்து அவள் முகத்தில் நிலைத்து நின்றது.
'இந்த பொண்ணு பார்க்க லட்சணமா அழகா இருக்கா. வெளியில நிக்கற ரெண்டு பேரும் மரியாதைப்பட்டவங்களா தெரியறாங்க. என் பொண்டாட்டி பேசினப் பேச்சுக்கு எவனாயிருந்தாலும் இன்னேரம் இங்க ஒரு ரகளையே பண்ணியிருப்பான். மல்லிகா மனசுக்குள்ள அப்படி என்னத்தான் இருக்குன்னு தெரியலை. ராத்திரி நான் சொன்னதுக் கெல்லாம் சரின்னா. இப்ப இங்க வந்து துள்ளிக்குதிக்திறா. அவங்க ரெண்டு பேரும் அமைதியா இந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காக, பேசாம அவ பின்னாடி போனாங்களே? எதுக்காக போனாங்க; என் புள்ளையை அவங்க பொண்ணு விரும்பறாங்கற ஒரே காரணத்துக்காகத்தானே? அந்த டாக்டருக்கு சுகன்யாவை முன்ன பின்ன தெரியாது; அந்த மனுஷன் இவளை மனம் விட்டு பாரட்டி பேசிட்டு போறார். நம்மபையனுக்கு இவளை விட பொருத்தமானவ எங்கே கிடைக்கப்போறா? இவதான் என் மருமக' அவர் தன் மனதில் அக்கணமே முடிவு செய்துவிட்டார்.
அவர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியாமல் மல்லிகா மவுனமாக தன் மகனின் கையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
நடராஜனின் தீர்க்கமான பார்வையை சந்திக்கமுடியாமல் சுகன்யா தன் தலையை தாழ்த்திக்கொண்டு, தன் மனதுக்குள் யோசிக்க ஆரம்பித்தாள்.
'வெளியில நடந்தது தெரியாம என்னை இவன் தன் அம்மாக்கிட்ட அறிமுகம் பண்ணிவக்கிறான். அவங்களை எங்கிட்ட பேச சொல்றான். அவங்க மொத்தமா கூட்டிப் பெருக்கி எங்க ரெண்டு பேரு கதையையும் முடிச்சிட்டாங்கன்னு இவனுக்கு எப்படித் தெரியும். தன் மகனை என்னிடம் முழுசா விட்டுக் குடுத்துடுன்னு சித்த முன்னாடி சொன்ன மல்லிகா, நிச்சயமாக என்னிடம் இப்ப சமாதானமா பேசப் போறது இல்லை. மேற்கொண்டு சண்டை போடாம இருந்தா சரி; இப்ப மல்லிகா தன் புள்ளை கிட்ட தனிமையில ஏதாவது பேச நினைக்கலாம். நான் இங்கே அம்மவுக்கும் புள்ளைக்கும் நடுவுல நிக்கறது சரிதானா? சரியான நேரத்துல ரெண்டு பேரும் உள்ள வந்துட்டாங்க; நான் அவனுக்கு உதட்டுல முத்தம் குடுத்ததை கண்டிப்பா அவங்க பாத்து இருப்பாங்க; இந்த நேரத்தில இதை ஒரு பெரிய பிரச்சனையா ஆக்கி வெளியே போய் இவன் அம்மா கூச்சல் போட்டா என் மானம் கப்பல் ஏறிடும்? ஆனா இப்ப இதுக்கு என்ன பண்றது? எங்க ரெண்டு பேருக்கும் நேரமே சரியில்லை.' சுகன்யா தன் மனதுக்குள் தன்னையே நொந்து கொண்டாள்.
'அடியே சுகன்யா, நீ செல்வாவுக்கு முத்தம் கடுத்ததை யார் பாத்தா உனக்கு என்னடி: என்னைக்கு இருந்தாலும் இவன்தான் உன் புருஷன். அவன் கிட்ட காலையில போன்ல என்ன சொன்ன. எவ்வளவு நாளானாலும் காத்திருந்து அவன் கையாலதான் தாலி கட்டிக்குவேன்னு சொன்னல. அப்படின்னா இந்த மல்லிகாதான் உன் மாமியார், எதிர்ல நிக்கற நடராஜன்தான் உன் மாமனார்: இந்த ரெண்டு பேரும் செல்வாவுக்கும் உனக்கும் ரொம்ப ரொம்ப வேண்டியவங்க தானே. நீ முத்தம் கொடுக்கறதை உனக்கு வேண்டியவங்க தானே பாத்தாங்க; பாத்தா பாத்துட்டு போறாங்கடி: இதைப் பாத்ததுக்கு அப்புறமாவது நம்ம புள்ளைக்காக இவ இப்படி உருகிப் போறாளேன்னு மல்லிகா மனசு மாறாதா? நீ ஒண்ணும் திட்டம் போட்டுப் பண்ணல; அவங்க உள்ளே வர நேரத்துக்கு, அவன் உதட்டை கவ்வல. மல்லிகா எதாவது கேட்டா: உன் ஆசை புள்ளைதான் முத்தம் குடுன்னு உதட்டை காமிச்சான்: ஆசையா கேக்கறவனுக்கு நான் எப்படி மாட்டேங்கறதுன்னு தீத்து சொல்லு. நீங்களும் ரெண்டு புள்ளையை பெத்த பொம்பளைத்தானே உங்களுக்கு உங்க புள்ளையோட அவஸ்தை புரியலயான்னு, சிரிச்சுக்கிட்டே கேளுடி.'
'மீனா சொன்ன மாதிரி இவனுக்காக நான் எல்லாத்தையும் ஓடி ஓடி பண்ணிட்டு, இப்ப நான் ஏன் வெளியில போவணும்? நான் ஆசை பட்டவன் அடி பட்டு ரோடுல கிடக்திறானே; என்ன ஆகுமோ: ஏது ஆகுமோன்னு மனசு குழம்பி கிடந்தப்ப, நாலு பேரு நிக்கற இந்த இடத்துல எதாவது பிரச்சனை ஆயிட வேணாமேன்னு, உன் புள்ளையை உனக்கு முழுசா திருப்பிக் குடுக்கறேன்னு மடத்தனமா உளறிட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி: எமோஷனல் ஆயிட்டா என்னப் பேசறோம், ஏது பேசறோமுன்னு தெரியாம உளறிடறேன். காரணம் எதுவும் கேக்காத, உன்னை நான் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லேன்னு நாலு பேரு எதிர்ல என் மூஞ்சியிலே அடிச்சாங்களே இவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரது? முகத்தைப் பாத்தா அப்பாவியாதான் தெரியறாங்க; ஆனா சொல்லால அடிச்சாங்களே: என்னைப்பாத்து ஏன் பயப்படறாங்க: செல்வா என்ன சின்னக்குழந்தையா? நான் என்ன அவங்க புள்ளையை தூக்கிட்டு எங்கயாவது கண்காணாத இடத்துக்கா ஓடிட போறேன்? அவங்க புள்ளையை நான் சந்தோஷமா வெச்சுக்கமாட்டேனா?'
'அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிடேன் நான்? என்னை மருமகளா ஏத்துக்கமாட்டேங்கிறாங்க? அவங்க பார்வையில அவனை நான் காதலிச்சதே தப்பா? உன் புள்ளையை நான் காதலிக்கப்போறேன்; நீங்க பர்மிஷன் குடுங்கன்னு நான் கேட்டிருக்கணுமா? குற்றவாளிக்கு அவ பண்ண தப்பைக்கூட சொல்லாம தண்டிப்பேங்குறது என்ன நியாயம்?'
'இதைத்தானே செல்வா அன்னைக்கு எங்கிட்ட கேட்டான். இந்த பாவி செல்வா கூட சேர்ந்து, அவன் எப்படி குழம்பி குழம்பி பேசுவானோ, அப்படியே அவனை மாதிரி நானும் ஆயிட்டேன்; ஆனா இவன் தங்கச்சி மீனா என்னா லாஜிக்கா பேசறா? வெளியில ஓடின என்னை ரெண்டு நிமிஷத்துல உள்ள கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாளே: அவகிட்டத்தான் நான் பேசறதுக்கு ட்ரெயினிங்க் எடுக்கணும் போல இருக்கு' அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை விரிந்தது.
'காலையிலேருந்து, இவனை நான்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு, போலீஸ் இன்ஸ்பெக்டர்லேருந்து, ஆஸ்பத்திரி டாக்டர் வரைக்கும் எல்லார்கிட்டவும் தண்டோரா போட்டுட்டு, இப்ப உன் உரிமையை நீ ஏண்டு விட்டுக்குடுக்கறே? நீ இங்கேயே நில்லு. மல்லிகா என்ன பேசினாலும், வாயை மூடிகிட்டு பொறுமையா கேட்டுக்கோ. அவளுக்கு பதில் எதுவும் சொல்லாதே. எதுவா இருந்தாலும் இனிமே நீ நடராஜன் கிட்ட பேசு. அவரு பார்வையே சொல்லுது. அவருக்கு உன்னைப் பிடிச்சுப்போச்சுன்னு'
சுகன்யா கட்டிலுக்கு மறுபுறம் நின்று கொண்டுருந்த நடராஜனிடம் சென்றாள். மல்லிகாவின் பார்வை சுகன்யாவை பின் தொடர்ந்தது. சுகன்யா ஓரக்கண்ணால் மல்லிகாவைப் பார்த்தவாறு பேசினாள்.
"மாமா, இவர் உடம்பு வலின்னு சொன்னா உடனே என்னை கூப்பிடுங்க; நான் வலிக்கு ஊசி மருந்து போடச்சொல்றேன்னு டாக்டர் மாதவன் சொல்லிட்டு போனார். நான் போய் அவரு எங்க இருக்காருன்னு பார்த்து கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்." என நயமாக பேசினாள்.
சுகன்யா, தன்னை மாமா என அன்புடன் அழைத்ததும் நடராஜன் ஒரு நொடி திகைத்து, தன் மனைவி மல்லிகாவை வியப்புடன் பார்த்தார்.
"சுகன்யா, நீ செல்வா பக்கத்துல இரும்மா, நான் போய் டாக்டரை கூப்பிட்டுட்டு வரேன்." நடராஜன் தன் மனம் நெதிழ்ந்து போனார்.
மல்லிகாவின் கண்கள் வியப்பால் விரிந்தது. அவள் முகம் லேசாக சுருங்கியது.
'இந்த பொண்ணு சித்த முன்னாடி எங்கிட்ட என்ன சொன்னா? மீனாவும், சீனுவும் போய் என்ன சொல்லி இவளை திருப்பி இழுத்துட்டு வந்தாங்கன்னு தெரியலேயே? வந்த வேகத்துல, உள்ள வந்து கட்டில்ல கிடக்கறவனை கட்டுப்புடிச்சி முத்தம் குடுக்கறா: மயக்கத்துல கிடக்கற என் புள்ளை இவ பேரைச் சொல்லி சொல்லி மாஞ்சு போறான். இவ அப்படி என்னாதான் சொக்கு பொடி போட்டு என் புள்ளையை மயக்கி வெச்சிருக்கான்னு தெரியலையே? பத்தாக்குறைக்கு நான் இவகிட்ட பேசி இவ எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சுக்கணுமாம்; பாக்கறதுக்கு லட்சணமா இருந்துட்டா போதுமா? போன வாரம் இவனை தன் ரூமுக்கு கூப்பிட்டு பாதி உடம்பை அவுத்து காட்டுனான்னு சொன்னான். இன்னைக்கு என் கண்ணாலேயே பாத்துட்டேன் அவ லட்சணத்தை. ச்சே.. ச்சே... பொண்ணுன்னா ஒரு அடக்கம் வேணாம்; கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அலையறாளே? என் புள்ளை இவ கழுத்துல இன்னும் தாலியை கட்டலை. அதுக்குள்ள இவ என்னடான்னா என் புருவனை மாமாங்கறா: என்ன தைரியத்துல இப்படி கூப்புடுவா? என் புருஷனுக்கு தலை கால் புரியல: அப்படியே உச்சி குளுந்து போய் நிக்கறாரு. அடுத்தது என்னை இவ அத்தைன்னு கூப்பிடுவாளா? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலையே? கொஞ்சம் விட்டா இங்கேயிருந்தே இவ என்னை மொத்தமா பார்சல் பண்ணி, காசி, ராமேஸ்வரம்ன்னு அனுப்பிடுவா போல இருக்கே? அப்புறம் இவகிட்டதான் நான் எல்லாத்துக்கும் கை ஏந்தி நிக்கணுமா?' மல்லிகா தன் கண் விரிய அவர்கள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள்.
"மாமா, அப்படியே வெளியில நிக்கறவங்களையும் கொஞ்சம் உள்ளே வர சொல்லுங்களேன்: இவரைப் பாத்துட்டா அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்" கண்களில் கனிவு பொங்க அவரைப் பார்த்தாள்.
நடராஜன் அறையை விட்டு வெளியில் போகத் தொடங்கியதும், மல்லிகா வெற்றுப் பார்வையொன்றை சுகன்யாவின் மீது வீசியவள், விருட்டென திரும்பி தன் கணவனின் பின் நடக்க,
மல்லிகா போன வேகத்தைப் பார்த்த சுகன்யா "அத்தைக்கு இன்னும் கோபம் தீரல போல இருக்கு" என்றெண்ணி தன் மனதில் சரித்துக்கொண்டாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு..,
மீனாவும், சீனுவும், செல்வாவை பார்த்துவிட்டு போன பின், முழுசாக ஐந்து நிமிடம் கூட தூங்க முடியாமல் உடல் வலியால் தவித்து கண் விழித்த செல்வாவுக்கு புரண்டு படுக்க வேண்டும் போலிருந்தது. செல்வாவுக்கு ரத்தம் ஏற்றி முடித்து, டிரிப்ஸையும் நிறுத்தி இருந்தார்கள்.
"செல்வா, ஒரு நிமிஷம் கண்ணைத் தொறந்து பாரேன்; எங்கம்மாவும், மாமாவும் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க".
தன் நெருங்கிய உறவினர்களை அவனுக்கு அறிமுகப்படுத்திய சுகன்யாவின் குரலில் மிதமிஞ்சிய அன்பும், பரிவும் ஒருங்கே தொனித்தன.
செல்வா, சுந்தரியைப் பார்த்ததும் சட்டெனத் திரும்பி சுகன்யாவை ஒரு முறை நோக்திப் புன்னகைத்தான்.
'அம்மாவும் பொண்ணும் ஓரே பிரஸ்ல அச்சடிச்ச மாதிரி இருக்காங்களே!!' ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான்.
"முதல் தடவையா உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்; என்னாலே எழுந்து விஸ் பண்ணமுடியலே" அவன் முகத்தில் உண்மையான வருத்தம் படர்ந்திருந்தது.
"பரவாயில்ல தம்பி, நீங்க சீக்திரமா குணமாகி வீட்டுக்கு வாங்க அது போதும் எங்களுக்கு" சுந்தரி மெல்லிய புன்னகையுடன் பேசினாள்.
"ஸார், அன்னைக்கு, இவ உனக்கும், எனக்கும் நடுவுல இனி எதுவுமே இல்லன்னு சொல்லிட்டு போனதால, உங்ககிட்டே சுகன்யாவை எனக்குத் தெரியாதுன்னு மடத்தனமா பேசிட்டேன்; அதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும்." செல்வா மெல்லிய குரலில் சுகன்யாவை பார்த்தவாறு பேசினான்.
"தம்பி, நான் அதை எப்பவோ மறந்துட்டேன்: வீட்டுக்கு வந்து உங்க குடும்பத்துல இருக்கறவங்களை நேரா ஒரு முறை பார்த்து பேசணும்ன்னு வந்தேன். துரதிருஷ்டவசமா, நாம ஒருத்தரை ஒருத்தர் இங்க மருத்துவமனையில சந்திக்க வேண்டியதாப் போச்சு. உங்க எல்லோரையும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு; பத்து நாள் போகட்டும்; சுகன்யாவோட அப்பாவைப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். இந்த விஷயத்துல உங்க அம்மாவுக்கு கொஞ்சம் மனக்குறை இருக்கலாம்ன்னு தோணுது. இதைத் தவிர அவங்களுக்கு வேற எந்த மனக்குறை இருந்தாலும் அதை சரி பண்ண நாங்க முயற்சி பண்றோம். நீங்க உங்க அம்மாவை சமாதானம் பண்ணுங்க; முறைப்படி எல்லோருமா ஒரு தரம் எங்க வீட்டுக்கு வந்து இவளைப் பாருங்க; நான் உங்கப்பா கிட்ட பேசணும்னு நீங்க விருப்பப்பட்டா அவரிடம் பேசத் நான் தயார். நீங்க இருக்கற நிலைமையில அவருகிட்ட உங்க கல்யாண விஷயத்தை பேசினா அது நல்லாயிருக்காது: எங்க வீட்டுப்பொண்ணு உங்களுக்காக மனசுல தவிப்போட காத்துட்டு இருக்காங்கறதை ஞாபகத்துல வெச்சுக்குங்க. என்னக்கா.. நீ வேற ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா?" இதமாக பேசியவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
"இவங்க ரெண்டு பேரும் சீக்திரமா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்குப்போதும்" சுந்தரி தன் குரல் தழுதழுக்கப் பேசியவள், பக்கத்தில் நின்றிருந்த சுகன்யாவின் தலையை ஆசையுடன் வருடினாள்.
சுகன்யா தன் மனம் விகளிக்க தன் அம்மாவையும் செல்வாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டயுருந்தாள்.
செல்வா, சுகன்யாவை தன் கண்களால் தன்னருகே வரும்படி அழைத்தான். அவள் வலது கையை தன் கையால் எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் நோக்கி முறுவலித்தான்.
"இது போதும் தம்பி" சொல்லியவாறு ரகு எழுந்த போது டாக்டர் மாதவனும், நடராஜனும் அறையினுள் நுழைந்தார்கள்.
"செல்வா, உங்களுக்கு நான் ஒரு இஞ்சக்ஷன் போடறேன், பத்து நிமிஷத்துக்கு அப்புறம் உங்களுக்கு நல்லா தூக்கம் வரும், உடல் வலியும் குறையும்.. ம்ம்ம்.." சொல்லிக்கொண்டே அவன் வலது கையில் ஊசியை குத்தி மருந்தை செலுத்தினார்.
தொடரும்...
Comments
Post a Comment