காலையிலிருந்து காய்ந்த வெய்யிலுக்கு, வானம் லேசாக கருத்து மேக மூட்டத்துடனிருந்தது. நடராஜன் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், மழை வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. நாளை திங்கள் கிழமை, ஆபீசுக்கு போயே ஆகணும். கடந்த ரெண்டு நாட்களாக செல்வாவால் வீட்டில் நடக்கும் கூச்சலையும், ரகளையையும், இன்று இப்படி ஆஸ்பத்திரிக்கு வந்து நிற்பதையும் நினைத்தப்போது அவருக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்து ஒரு காபி குடித்தால் தேவலையாக இருக்கும் என தோன்றியது.
சீனு ரெண்டு மணிக்கெல்லாம் தன் வீட்டுக்குப் போய்விட்டான். ராத்திரிக்கு செல்வாவுடன் அவன் இருப்பதாக சொல்லியிருந்தான். மாலை ஏழு மணிக்கு வரும்போது அவன் சாப்பிட தன் வீட்டுலேருந்தே டிபன் கொண்டு வருவதாகவும் சொல்லி சென்றிருந்தான். சீனு வந்ததும், மற்றவர்கள் வீடு திரும்பவும், போகும் வழியில் சுகன்யாவை பராப் செய்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.
நடராஜன் மருத்துவமனைக்குள்ளேயே இருந்த கேண்டீனுக்கு போகலாம் எனத் திரும்பிப்பார்க்க, மீனாவும், சுகன்யாவும் நெருங்கி உட்கார்ந்து, தாங்கள் இருக்குமிடத்தையே மறந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டுருந்தார்கள். இருவரின் முகத்திலும் ஒரு இனம் தெரியாத உற்சாகம் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டுருந்தது.
'ஒத்த வயசு பொண்ணுங்க; சட்டுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்னியோன்யமாயிட்டாங்க; தொடர்ந்து ஒரு மணி நேரமா வாய் ஓயாம பேசறதுக்கு அப்படி என்னத்தான் இருக்கும் இந்த பொண்ணுங்க நடுவுல?'
நடராஜன் மெல்ல நடந்து அவர்கள் பக்கத்தில் போக, அவரை பார்த்ததும் சுகன்யா மரியாதையாக எழுந்து நின்றாள்.
'பெத்தவளை காலையில பாத்தேன். பொண்ணை காலையிலேருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நூலைப் போலத்தானே சேலையிருக்கும்.' அவர் மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார்.
"வாங்கடா கண்ணுங்களா, கேண்டீனுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம்"
"அப்பா இந்த நேரத்துக்கு சுகன்யா சூடா பஜ்ஜியோ, வடையோ சாப்பிடுவாங்களாம்" மீனா சிரித்தாள்.
"பக்கத்துல ஏதாவது கிடைக்குதான்னு பாக்கலாம்..."
"சும்மா இரு மீனா, அதெல்லாம் எனக்கு வேணாம் மாமா. செல்வாவுக்கு வேணா எதாவது வாங்கிக்கலாம், காலையிலேருந்து அவர் ஒண்ணுமே சாப்பிடல; கண் விழிச்சா குடுக்கலாம்ன்னு நான் சொல்லிட்டிருந்தேன்."
மூவரும் ஹாஸ்பிடல் கேண்டீனுக்கு சென்றனர்.
"சுகன்யா, நாளைக்கு நீ ஆபீஸ் போகணுமில்லையாம்மா?" காபியை உறிஞ்சியவாறே நடராஜன் வினவினார்.
"ஆமாம்... அங்கிள், லீவு போடணுமுன்னா போட்டுக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்சனையில்லை" சுகன்யா, மெது வடையை கடித்துக்கொண்டே சொன்னாள்.
"நோ.. நோ... நான் சாதாரணமா கேட்டேன்ம்மா.. நீ லீவெல்லாம் எடுக்க வேண்டாம். மீனாவுக்கு இப்ப காலேஜ் செமஸ்டர் லீவு தானே: நாளைக்கு பகல்ல மீனாவும் அவங்க அம்மாவும் அவனைப் பாத்துக்குவாங்க... நீ சாயந்திரமா இவனை பாக்கறதுக்கு ஒரு நடை வந்து போயேன்..." புன்னகையுடன் பேசினார் நடராஜன்.
"சரி அங்கிள்.. இன்னைக்கு மாமா மட்டும்தான் ஊருக்கு திரும்பி போறார்; அம்மா இன்னும் ஒரு வாரம் என் கூடத்தான் இருப்பாங்க, அதனால ஈவினிங் இங்க வரதுல எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்ல"
அவர்கள் மூவரும் கேண்டீனிலிருந்து செல்வா இருக்குமிடத்துக்கு சென்ற போது, ஐ.ஸி.யூ. விலிருந்து மல்லிகா வெளியில் வந்தாள்.
"செல்வா முழிச்சிக்கிட்டிருக்கான். உடம்பு வலி குறைஞ்சிருக்காம். விழுந்தப்ப அவன் பைக் ஹேண்டில் பார் மேல விழுந்தானாம். உள் காயம் பட்டிருக்கும் போல தெரியுது, மெதுவா பொரண்டவனைப் பாத்தேன்; செவப்பா ரத்தம் கட்டிகிட்டு இருக்கு; அதனால இப்ப இடுப்புல மட்டும் வலி அதிகமா இருக்குதுங்கறான். சாயந்திரம் ரவுண்ட்ஸ் வர்ற டாக்டர் கிட்ட சொல்லணும்; எல்லாம் அவன் நேரம் தான்: அவனை இப்படி படுத்தி எடுக்குது. இப்ப அவனுக்கு பசிக்குதாம்; டாக்டரிடம் கேட்டதுக்கு, லைட்டா எது வேணா சாப்பிடட்டும், படுத்துக்கிட்டே இருக்கணுமில்லயா, அதனால சுலபமா செரிக்கற மாதிரி குடுங்கன்னு சொல்றாங்க" என்ற மல்லிகா முகத்தில் கேள்விக்குறியுடன் நடராஜனைப் பார்த்தாள்.
"எங்கிட்ட பேசற மாதிரி நீ சும்மா அவன் கிட்ட நல்ல நேரம், கெட்ட நேரம்ன்னு பேசசிட்டு நிக்காத: நல்ல நேரம் நடக்கவேதான், இந்த மாதிரி ஒரு பொண்ணு சரியான நேரத்துல வந்து அவன் கூட நின்னா; புரிஞ்சுதா; இந்தா, இந்த பார்சல்ல ரெண்டு மெதுவடை தேங்காய் சட்னியோட இருக்கு; நல்லா மென்னு தின்னச் சொல்லு; எல்லாம் ஜீரணமாயிடும்; ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு: கொண்டு போய் குடுத்துட்டு வா. நீயும் காஃபியை குடி. சீனு வந்ததும், நாம கிளம்புவோம். நேரத்துல சுகன்யாவை அவ வீட்டுல விட்டுட்டு போகணும்." சொல்லிவிட்டு அவர் மீண்டும் மரத்தடிக்குச் சென்று சிமெண்ட் பெஞ்சில் உட்க்கார்ந்து கொண்டார். சுகன்யாவும் மல்லிகாவும் உள்ளே சென்றனர்.
"இப்ப எப்படி இருக்கு செல்வா... உடம்பு வலி பரவாயில்லயா?" சுகன்யாவின் குரலில் பரிவு நிரம்பி வழிந்தது. மல்லிகா பேப்பர் கப்பில் காஃபியை ஊற்றியவாறு அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகன்யாவைக் கண்டதும் தன் மகனின் முகத்தில் பளிச்சென்று ஏற்பட்ட மாற்றத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.
'இவ தான் என் வீட்டுக்குள்ள வந்து கரண்டு புடிக்கணும்ன்னு எழுதியிருந்தா அதை நான் தடுக்கவா முடியும்; நான் நிக்கறேன்னு கூட அவ தயங்கலை: உரிமையா தலை மாட்டில நின்னுகிட்டு அவன் நெத்தியை அழுத்தி விடறா: தலையை கோதிவிடறா; தாயும், தாலிக்கட்டிகிட்டவளும் தானே இப்படி நிக்கமுடியும். ஜோடிப் பொருத்தம் என்னமோ நல்லாத்தான் இருக்கு.'
அவள் மனதில் அலை அலையாக எண்ணங்கள் படையெடுக்கத் தொடங்கின.
"பரவாயில்லே சுகு: தலைதான் பாரமா இருக்கு" வடையை மென்று கொண்டே பேசியவன் குரலில் தெளிவு வந்திருந்தது. நெற்றியில் அவள் கை படுவது அவனுக்கு இதமாக இருந்தது.
"தலையில இறுக்கி கட்டு போட்டு இருக்காங்களே, அதனால இ௫க்கும்" மல்லிகா குறுக்கிட்டு சொன்னாள்.
"நீங்க சொல்றது சரிதான் அத்தே" அத்தை என்ற சொல்லை அழுத்தி உச்சரித்தாள் சுகன்யா.
செல்வாவின் உதடுகளில் புன்முறுவல் தோன்றியது. 'அம்மாவை அத்தேன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாளா? சீக்திரமா நம்ம அம்மாவை தன் வழிக்கு கொண்டு வந்துடுவா போலேருக்கே; இவ கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டா போதும்; அதுக்கு அப்புறம் இவளாச்சு; நம்ம அம்மாவாச்சு.' அவன் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், மல்லிகா கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சினான்.
"செல்வா, நாளைக்கு நான் ஆபீஸ் போயிட்டு சாயந்திரம் வந்து உங்களைப் பாக்கிறேன். உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சுங்கற விஷயத்தை உங்க ஆபிசுக்கு இன்ஃபார்ம் பண்ணிடாவா? நார்மல் ஸர்கம்ஸ்டன்ஸ்ல நீங்க நாளைக்கு அங்க போய்த்தானே ஆகணும்?"
"ம்ம்ம்... சொல்லித்தான் ஆகணும்... அந்த கிறுக்கன் மாரிமுத்து முதல்ல நீ யார்ன்னு கேப்பான்? நாம சொல்ற விஷயத்தை புரிஞ்சுக்க மாட்டான். இவன்ல்லாம் அங்க ஆபீஸர்ன்னு குப்பை கொட்டிக்கிட்டு இருக்கறான்; எதுக்கு உனக்குத் தொந்தரவு? நானே நாளைக்கு காலைல போன் பண்ணிச்சொல்லிடறேன்; நீ இங்க கோபலன் சார்கிட்ட மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடு. அவர்தானே எங்க ஆபீசுக்கு லீவ் சேங்கூஷனிங் அத்தாரிட்டி: அவர் நல்ல மனுஷன்; நாளைக்கே என்னைப் பாக்க வந்தாலும் வந்திடுவார்."
"சரி செல்வா"
அவன் காஃபி குடித்த கப்பை வாங்கி மூலையில் இருந்த கூடையில் போட்டவள் திரும்பிய போது, மல்லிகா அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
"உங்கம்மா எங்க செல்வா" முகத்தில் விஷமம் தவழ செல்வாவை நோக்கினாள்.
"எங்கே போறேன்னு எங்கிட்ட சொல்லலை" அவனும் நமட்டுத்தனமாக சிரித்தான்.
"சுகு, கொஞ்ச நேரம் முன்னே அவங்களை அத்தேன்னு சொன்னே: இப்ப உங்கம்மான்னு சொல்ற?"
'நீ அப்படியே ஒண்ணும் தெரியாத பாப்பா... எல்லாம் நான் சொல்லித்தான் உனக்குப் புரியணும்? காலையில் மல்லிகா இவனைப் பாக்க வந்துட்டு நடத்திய டிராமாவைப்பத்தி இவனுக்கு என்னத் தெரியும்...' அவள் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
"சுகு... சுகும்ம்மா"
"ம்ம்ம்"
"கிட்ட வாடி... ஆசையா இருக்குடி: இன்னைக்கு இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா ஸ்வீட்டா இருக்கடி; ராத்திரிக்கு நீ இங்கேயே இருக்தியா? உடலில் சிறிது தெம்பு வர அவன் தன் ஆசைக் காதலியை கொஞ்ஜினான்"
"....."
"என்ன சுகு பேச மாட்டேங்கிற?"
"எனக்கும் மட்டும் உன் கூடவே இருக்கறதுக்கு ஆசையில்லயா? ஆனா அதுக்குன்னு ஒரு நேரம் வர வேண்டாமா?"
"எப்ப அந்த நேரம் வரும்"
"ம்ம்ம்.. உங்கம்மாவை உள்ள கூப்பிடறேன்; நீயே அவங்களை கேளு: அவங்க சொல்லட்டும்; இன்னைக்கே உங்கூட இருக்கறதுக்கு நான் தயார்."
அவள் அவன் அருகில் நெருங்கி ஆசை பொங்கும் கண்களுடன் அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்துகொண்டாள்.
"நிஜமாவா சொல்றே?" அவள் கிண்டல் பண்ணுவதை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக பேசினான்.
செல்வாவின் கை சுகன்யாவின் இடது மார்பின் மேல் படிந்திருந்ததால், அவன் கை அவள் இதயத்துடிப்பை தெளிவாக உணர்ந்தது.
"மாமா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டார்"
"மாமா? எந்த மாமா? என்ன சொன்னார்?"
"ம்ம்ம்.. கிண்டலா, உங்கப்பா சீமான் நடராஜன்தான் சொன்னார்; லீவெல்லாம் எடுக்க வேண்டாம் சுகன்யா, நீ ஆபீசுக்கு போ: நாளைக்கு சாயந்திரம் வந்து செல்வாவை மீட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டார். அதோட நானே உன்னை உன் விட்டுல டிராப் பண்றேன்னும் சொன்னார்."
"அப்படியா: அப்ப நீ போறதுக்கு முன்ன ஒண்ணே ஓண்ணு குடுடி" அவன் குரலில் மிதமிஞ்சிய தாபமும் ஆசையும் கலந்திருந்தன.
"வேணாம் செல்வா உங்கம்மா வந்துடுவாங்க.. காலைலயே நான் உனக்கு முத்தம் குடுக்கும் போது அவங்க பாத்துட்டாங்க... அப்புறம் இது ஒரு விவகாரமாய் போச்சுன்னா? என்னை இங்க வர வேணாம்ன்னு சொல்லிட்டா? என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதுப்பா" கண்களில் மெல்லிய பயத்துடன் சுகன்யா கிசுகிசுத்தாள்
"நீ எங்கம்மாவை இன்னும் சரியா புரிஞ்சிக்கல"
"என்ன சொல்ற நீ: இப்ப நீ சொல்றதுதான் எனக்கு புரியலை"
"நாம சின்னஞ் சிறுசுங்க தனியா இருக்கட்டுமேன்னுத்தான் அவங்க வெளியே போயிட்டாங்கன்னு சொல்றேன்" சிரித்தவாறே அவன் அவளைப் பார்த்து தன் உதடுகளைக் குவித்தான்.
"ஏண்டா இப்படி அலையற; உனக்கு உடம்பு பூரா வலிக்குதுங்கற: நிம்மதியா சத்த நேரம் படுத்துகிட்டு இரேன்!"
சுகன்யா அறைக்கதைவைப் பார்த்தவாறே அவனை நெருங்கினாள். செல்வா அவள் இடுப்பில் தன் கையைத் தவழவிட்டு மனதில் ஆசை பொங்க அவளை தன் புறம் வலுவாக இழுத்தான். தன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டு சுகன்யா அவன் முகத்தில் குனிந்து, அவன் வாயைக் கவ்வினாள். அவன் கீழுதட்டை மென்மையாக உறிஞ்சியவளின் கை அவன் மார்பை இதமாக தடவியது. வினாடிகள் நகர்ந்து கொண்டுருக்க அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும் காலத்தையும் மறந்தனர்.
செல்வா தன் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். அவன் அப்பொழுதுதான் காஃபி குடித்திருந்ததால் அவன் உதடுகள் சுகன்யாவுக்கு இனித்தது.
பெண் மனம் எந்த சூழ்நிலையிலும் சற்று எச்சரிக்கையாகத்தான் இருக்திறது. யாரோ கதவை நெருங்கி வரும் ஓசை சுகன்யாவின் காதில் விழ ஆசையுடன் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி நின்று தன் உதடுகளை துடைத்துக் கொண்டாள். செல்வா தன் கண்களை மூடிக்கொண்டான். அடுத்த நொடி கதவை வேகமாக திறந்து கொண்டு டாக்டர் மாதவனும், சிஸ்டரும் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பின் மல்லிகாவும், நடராஜனும் வந்தனர். சுகன்யா அவர்கள் பின் நின்று கொண்டு செல்வாவைப் பார்த்து முகத்தில் கள்ளத்தனத்துடன் கண்களில் உல்லாசம் பொங்க சிரித்தாள்.
சில நிமிடங்களுக்கு பின் சீனுவும் வந்துவிட மற்றவர்கள் வீட்டுக்கு கிளம்பினர். கார் முதலில் சுகன்யாவின் வீட்டுக்கு சென்றது.
"மாமா, நீங்க மீனா, அத்தையோட ஒரு நிமிஷம் வீட்டுக்கு வந்துட்டு போங்களேன்." காரிலிருந்து இறங்கிய சுகன்யா அவர்களை அழைத்த போது மணி எட்டாகியிருந்தது.
"சுகன்யா, டயமாயிடுச்சில்லே, இன்னொரு நாள் கண்டிப்பா வர்றோம்மா" ... நடராஜன் வினயத்துடன் பேச, மல்லிகா மறுபுறம் கார் கண்ணாடியின் வழியே வெளியில் நின்ற சுகன்யாவை பார்த்துக் கொண்டிருக்க, மீனா கையை ஆட்டி விடை பெற்றாள்.
சுகன்யா மாடியில் ஏறி தன் வீட்டை அடைந்தாள். அவள் உள்ளே நுழைந்த போது வேணி சுந்தரியுடன் பேசிக்கொண்டிருக்க, ரகு தன் பெட்டி மற்றும் கைப்பையுடன் கிளம்பிக் கொண்டிருந்தார்.
"வாம்மா சுகன்யா, நான் கிளம்பிட்டேன். உனக்காகத்தான் காத்துட்டிருந்தேன், எப்படி இருக்கான் செல்வா"
"உடம்புல வலி குறைஞ்சு இருக்குன்னு சொல்றார். நாளைக்கு காலையில ஹிப்லேயும், இடது கால் வீங்கியிருக்கறதுக்கும், எக்ஸ்ரே எடுக்கப் போறாங்க... நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க மாமா: அம்மா இங்கேருந்து கிளம்பும் போது நானும் ஊருக்கு வர்றேன். செல்வா இப்படி இருக்கும் போது நான் டெல்லி ட்ரெய்னிங்கு போகப் போறது இல்லை. அடுத்த க்வார்ட்டர்ல போலாம்ன்னு இருக்கேன். நான் வேணா ஸ்டேஷன் வரைக்கும் வரட்டுமா?"
"வேண்டாம்ம்மா, நீ காலையிலேருந்து சாப்பிடக்கூட இல்ல... நிம்மதியா சாப்பிட்டு தூங்கு... இந்தா, இதை பத்திரமா வெச்சுக்க; இது காலையில 50,000/- பணம் கட்டினதுக்கான ஹாஸ்பெட்டல் ரெசிப்ட், செல்வா டிஸ்சார்ச் ஆகும்போது தேவைப்படும். நான் வர்றேன்" சொல்லிக்கொண்டு அவர் கிளம்பினார்.
மீண்டும் உள்ளே திரும்பிய சுகன்யா வேணியை கண்டு புன்னகைத்தாள்.
"எப்ப வந்த வேணி, உங்கப்பா எப்படி இருக்கார்... ஜீன்ஸ்ல டக்கரா தூள் கிளப்பறடி..." என்றவள் வேணியைக் கட்டிக்கொண்டாள்.
"ம்ம்ம்... அப்பா வீட்டுக்கு வந்துட்டார் சுகன்யா.. இப்ப நல்லாயிருக்கார்... ரெகுலர் மெடிசின்... நடைப்பயிற்சி செய்யணும். உப்பு கம்மியா சாப்பிடணும்னு எல்லாம் டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. இப்ப மெதுவா நடக்க ஆரம்பிச்சுட்டார்"
"ஹ்ம்.."
"சுந்தரி அத்தை எல்லாம் சொன்னாங்க... தைரியமா இருடி சுகன்யா... எல்லாம் நல்லபடியா நடக்கும்... இப்பத்தான் அவங்க வீட்டுக்கும் எல்லாம் தெரிஞ்சுப் போச்சு... அவங்க வீட்டுல எல்லோருக்கும் உன்னைப் பிடிச்சிருக்காமே. உங்க வீட்டுல அத்தையும், மாமாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க; இரண்டு பேரும் சம்பாதிக்திறீங்க. அப்புறம் என்னடடி தைரியமா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க; இப்ப நீ ஒருத்தி இங்க இருக்க; கல்யாணத்துக்கு அப்புறம் இங்க ரெண்டு பேரா இருக்கப் போறீங்க அவ்வளவு தான். உனக்குன்னு ஒரு புள்ளை பொறந்தா அந்த மல்லிகா தன்னால இங்க ஓடி வருவாங்க" வேணி சிரித்தாள்.
"இல்லை வேணி, நான் அவங்க அம்மா மனசு நோகமாத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இருக்கேன்... பாக்கலாம்."
"ஓ.கே. ஆல் த பெஸ்ட்.. காலையில பாக்கலாம்... எனக்கும் டயர்டா இருக்கு... சாப்பிட்டு தூங்கணும்... வரேன் அத்தே.." துள்ளி எழுந்த வேணியுடன், சுகன்யாவும் வெளியில் வந்தாள்.
"வேணி, நீ இந்த ஜீன்ஸ்ல இருக்கறதை உங்காளு பார்த்தாரா...?"
"ஏன்...?"
"சும்மா சொல்லக்கூடாதுடி... இந்த காட்டன் ஜீன்ஸ், குர்த்தாவிலே சினேகா மாதிரி சூப்பரா இருக்க நீ... பிட்டிங் பர்ஃபெக்ட்டா இருக்கு... நீ தூங்கணுங்கற... பத்து நாளா நீ இங்கே இல்ல... அவரு எங்க உன்னைத் தூங்க விடப்போறாரு... ஆல் த பெஸ்ட் அண்ட் குட் ட்ரீம்ஸ்" சுகன்யா அவள் காதில் கிசுகிசுத்தாள்.
"என்ன பண்றதுடி: பஸ்ல வந்தது உடம்பு ரொம்ப அலுப்பா இருக்கு... விட்டா இங்கேயே இப்படியே தூங்கிடுவேன்; ஆனா இந்த மனசு இருக்கே, அது என் புருவனோட நெருக்கத்துக்காக பைத்தியம் புடிச்சு அலையுது; என் வீட்டுல நாலு நாள் நிம்மதியா இந்த நெனப்பு இல்லாம இருந்தேன்: அதுக்கு மேல என்னால முடியலடி: அவனும் பாவம்... ஏங்கிப் போயிருக்கான்ம்பா... எல்லாத்துக்கும் மேல அவனை கட்டிப் புடிக்கலன்னா என்னாலயும் இன்னைக்கு நிம்மதியா தூங்க முடியாது; அதனாலதான் நான் உங்கிட்ட கூட சரியா பேசாம கீழ ஓடறேன்" கண்ணை சிமிட்டிக்கொண்டே கீழே ஓடினாள் வேணி.
தொடரும்...
சுகன்யா மாமா அத்தையை கரெக்ட் பண்ணிட்டா
ReplyDeleteஇந்த பிரச்சன முடிஞ்சது. அடுத்த பிரச்சன எதும் வராம இருந்தா சரி.
Delete