முழு தொடர் படிக்க அவன் வெகுளித்தனத்தை பார்த்தவளுக்கு அவனை மீண்டும் ஒரு முறை இறுக்கிக் கட்முக்கொண்டு அவன் முகமெங்கும் முத்தமிட வேண்டுமென அவள் மனதில் சட்டென ஒரு வெறி திளம்பியது. அந்தநேரம் 'டொக்... டொக்' என அறைக் கதவுத் தட்டப்பட்டது...
சுகன்யா எழுவதற்கு முன், கதவைத் திறந்து கொண்டு, சாவித்திரி உள்ளே நுழைந்தாள்.
“வாங்க மேடம்" சுகன்யா தன்னைச் சுதாரித்துக்கொண்டு விருட்டென எழுந்தாள்.
'இந்த நேரத்துலதானா இவ வரணும்? இவ இப்பவே போய் ஊருக்கெல்லாம், நான் செல்வா கூட தனியா ராத்திரி நேரத்துல, ஆஸ்பத்திரியில அடிபட்டு இருக்கறவன் கூட ஜல்சா பண்ணிக்கிட்டு இருக்கேறன்னு தண்டோரா போடுவாளே. இவ என் காலை சுத்திக்கிட்டு இருக்கற பாம்பு: என்னை கொத்தாம விடமாட்டா போல இருக்கே' சுகன்யாவின் மனதில் எரிச்சல் எழுந்தது.
“என்ன செல்வா, இப்போ எப்படி ஃபீல் பண்றே? உடம்பு வலியெல்லாம் கொஞ்சமாவது குறைஞ்சுதா? நீ எழுந்துக்க வேண்டாம். அப்படியே படுத்துக்கிட்டு இரு."
இரவு எட்டு மணிக்கு, செல்வாவின் அருதில் சுகன்யா தனியாக இருப்பாள் என்பதை சாவித்திரி எதிர்பார்க்கவில்லை. அது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
“இன்னைக்கு பரவாயில்லே மேடம்; இடுப்புல உள் காயம் பட்டதனால வலியிருக்கு; இடது கால் வீக்கம் சுத்தமா குறையல; அதனால எழுந்து நடக்க முடியலை; காதுக்குப் பின்னாடி ஸ்டிச்சஸ் போட்டு இருக்காங்க: தையல் போட்ட இடத்துல விட்டு விட்டு வலிச்சுச்சிட்டு இருக்கு: இடது கையில பிளாஸ்டர் இருக்கறது அசெளகரியமா இருக்கு; இன்னும் நாலஞ்சு நாள் இங்க இருக்கணும் போல இருக்கு; வீட்டுக்கு போனதுக்கு அப்புறமும் குறைஞ்சது ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்ன்னு டாக்டர் சொல்றார்."
“நீ டாக்டர்ஸ் சொல்றதை மட்டும் கேளு; அவசரப்பட்டு பாண்டிச்சேரிக்கு ஓட வேண்டாம். நேத்து அந்த ஆஃபிசுல உன் கிரேட்ல புதுசா ரெண்டு பேரு மல்லியிலேருந்து வந்து ஜாய்ன் பண்ணியிருக்காங்க: அதனால உன்னை திரும்பவும் சென்னையிலேயே போஸ்ட் பண்றதுக்கு கோபாலன், சீஃபுக்கு ஃபைல் எழுதி அனுப்பியிருக்கார். ஒரு வாரத்துல உனக்கு திருப்பியும் சென்னையிலேயே போஸ்டிங் வரலாம். நான் இருக்கும் போது நீ லீவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே. அந்த விஷயத்தை நான் பாத்துக்கறேன். நீ பொறுமையா ஜாயின் பண்ணிக்கலாம்." அவள் மூச்சு விடாமல் பேசினாள்.
“ரொம்ப தேங்க்ஸ்... மேடம்"
“ஏன்டியம்மா சுகன்யா, இவன் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்து ரெண்டு நாளாச்சு; நீ ரெண்டு நாளா இங்கேதான் இருக்கறேன்னு மல்லிகா சொல்லிண்டு இருந்தா: நீயாவது எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லக்கூடாதோ? உன்னை என் பொண்ணு மாதிரி நினைச்சிண்டுருக்கேன் நான். நோக்கு என் மேல அப்படியென்னடியம்மா கோபம்? சேதியை கேட்டதும் என் மனசு பதை பதைச்சு போயி இவனை பாக்கணுமின்னு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்." சாவித்திரி வழக்கம் போல் நீட்டி முழக்கினாள்.
“உங்க மேல எனக்கு ஒரு கோபமுமில்ல. நீங்க உக்காருங்க முதல்ல. உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? ஒரு வாய் தண்ணியை குடிங்க; உங்களுக்கு மூச்சு வாங்குது பாருங்க." வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் மரியாதை நிமித்தம் நீட்டினாள்.
“தலைக்கு வந்த அம்பு தள்ளிப் போய் விழுந்ததுன்னு நினைச்சுக்கோடாப்பா; சாயங்காலம் உங்கம்மா கிட்ட ஒரு நிமிடம் பேசினேன். அப்பத்தான் எனக்கு நீ ஆஸ்பத்திரியில இருக்கற விஷயம் தெரிய வந்தது. அந்த பொம்மனாட்டி தவிச்சிப் போயிருக்கா. இருக்காதா பின்னே: பெத்து வளத்தவளாச்சே? கருவேப்பிலை கொத்தாட்டாம ஒரு பிள்ளையை பெத்து வெச்சிருக்கா. கெட்ட நேரம் சொல்லிட்டா வருது? நீ என்னடியம்மா ஆபிசுக்கு லீவு போட்டிருக்கியா? நீ டில்லிக்கு போறதா கேள்விப்பட்டேனே? டிக்கெட்டெல்லாம் புக் பண்ணிட்டியா?
“இல்லை மேடம்; இப்போதைக்கு நான் இவர் பக்கதுல இருக்கறதுதான் முக்தியம்ன்னு என் மனசுல பட்டுது: புக் பண்ண டிக்கட்டை கேன்சல் பண்ணிட்டேன்; கோபாலன் சார் கிட்ட அடுத்த பேட்ச்ல டில்லி போறேன்னு ரெக்வெஸ்ட் எழுதி கொடுத்துருக்கேன். அவரும் சரின்னு சொல்லிட்டார்"
'இப்ப இவ இதைப் பத்தி பேசலேன்னு யார் அமுதாங்க?' அவள் வேண்டா வெறுப்பாக புன்னகைத்தாள்.
“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; இவாத்துல இவனுக்கு நாலு மனுஷா இருக்கா: அவா இவனை கண்ணுல வெச்சு பாத்துக்க மாட்டாளோ? நீ ஏன் இப்படி தனியா கஷ்டப்பட்டிண்டுருக்காய்; ஆபீஸ்ல இந்த மாதிரி ஒரு நல்ல வாய்ப்பு உனக்கு அடிக்கடி வராது; வந்த சந்தர்ப்பத்தை விட்டுட்டு பின்னாடி வருத்தப் படக்கூடாது. என் மனசுல பட்டதை, அதுவும் உன் நல்லதுக்குத்தான் இதை நான் சொல்றேன்."
அவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்பது செல்வாவுக்கு புரியாததால் தன் கண்களில் கேள்வி குறியுடன் சுகன்யாவை பார்த்தான். சுகன்யா அந்த நேரத்தில் அவன் பார்வையைத் தவிர்த்தாள்.
“சாயந்திரம் கோவிலுக்குப் போயிருந்தேன். நேரா அங்கேருந்துதான் வர்றேன். உனக்காக விபூதி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். மேல இருக்கறவனை நெனைச்சு நெத்தியில இட்டுக்கோடாப்பா. எல்லாம் சரியாயிடும். நல்லபடியா இருப்பே நீ." சாவித்திரி எழுந்து அவனருதில் செல்ல முயற்றித்தாள்.
“எங்கிட்டே கொடுங்க மேடம்; அவருக்கு நான் வெச்சு விடறேன்."
சாவித்திரி தன் பர்ஸிலிருந்து எடுத்த பிரசாத பொட்டலத்தை அவள் கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிய சுகன்யா, அவள் பார்த்துக்கொண்டிருக்க, உரிமையுடன் தன் கையால் செல்வாவின் நெற்றியில் புருவங்களுக்கிடையில் தீட்டினாள்.
'இவ கண்ணுதான் இவன் இங்க வந்து படுத்துக்கிட்டான்; இன்னும் இவ அவனை தொட்டு விபூதி குங்குமம் வேற வெக்கணுமா?' சாவித்திரி அவனை தொடுவதை அவள் மனம் விரும்பவில்லை.
செல்வாவுக்கு நெற்றியில் விபூதியை இடும் போது, அவன் தலையை ஆட்டியதால் அவன் கண்ணில் சிதறி விபூதி துகள்கள் விழுந்தது. உடனே சுகன்யா வேண்டுமென்றே தன் மார்பை அவன் முகத்தில் உரசியவாறு, அவன் மேல் குனிந்து தன் வாய் எச்சில் அவன் முகத்தில் தெறிக்க அவன் கண்ணை ஊதினாள். தன் துப்பட்டாவால் அவன் முகத்தை துடைத்து விட்டாள். அவனை விட்டு விலகாமல் அவன் பக்கத்தில் நின்று அவன் தலையையும் நெற்றியையும் வருடிக்கொண்டிருந்தாள்.
'இந்த கல்லு மனசுகாரிக்கு இப்போதாவது புரியட்டும், எங்களுக்கு நடுவுல இருக்கற உறவு என்னான்னு? என் அப்பனை பத்தி சொல்லி இவன் அம்மா மனசை குழப்பி வெச்சிருக்காளே? நேரா போய் இவன் ஆத்தா மல்லிகா கிட்ட இங்க நடக்கறதை சொல்லி பொலம்பி சாவட்டும். என்னை ஒதுக்கணும்ன்னு நினைக்கறவங்களுக்கு, நான் எப்படி அவங்க புள்ளையை என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்னு தெரியும்? அப்பத்தான் என் அருமை அவங்களுக்குப் புரியும். ஆண்டவா, இங்க நடக்கறதை பாத்ததுக்கு அப்புறமாவது இந்த சாவித்திரி இனிமேல் எங்க வாழக்கைக்கு குறுக்க வந்து எந்த சதியும் பண்ணாம இருந்தா சரி?' சுகன்யா தன் மனதுக்குள் ஆத்திரத்துடன் பொருமிக்கொண்டாள்.
சாவித்திரியும் அவள் செய்வதையெல்லாம் பிரமிப்புடன் வைத்த கண் வாங்கமால் பார்த்துக்கொண்யுருந்தாள்.
'என்னா இந்த பொண்ணு செல்வாவை கட்டின புருஷன் மாதிரி இவருங்கறா: அவருங்கறா; ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸாத்தான் இருக்கறாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்; இவ என்னடான்னா இங்கேயே இவன் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காளே? இவன் கையால தாலி கட்டிக்கிட்ட மாதிரியில்ல நடந்துக்கறா: பிரசாதத்தை எங்கிட்டேருந்து வெடுக்குன்னு புடுங்கி அவன் நெத்தியில வெக்கறா:
என் புள்ளை மாதிரி இவன்; இவனை நான் தொடக்கூடாதா? மார்த் துணி விலகறது கூட தெரியாம அவனைத் தொட்டுத் தூக்கறா: அவனை உரசி உரசிகிட்டு எல்லாத்தையும் செய்யறா? இவன் ஜாதி என்னா? இவ ஜாதி என்னா? இவளுக்கு அம்மா ஒரு ஜாதி; அப்பன் ஒரு ஜாதி; அப்பனும் இவங்களை விட்டுட்டு ஓடிட்டான். இப்ப எங்க இருக்கான்னு தெரியாது. விவரம் பத்தாத இந்த மல்லிகாவும் எதுக்காக ஒரு கன்னிப் பொண்ணை ராத்திரி நேரத்துல தன் புள்ளை கூட தனியா விட்டு வெச்சிருக்கா? நடராஜன் இவளை இவனுக்கே கட்டி வெச்சிடாலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரா? ஓண்ணும் புரியலேயே?
நான் என்னடான்னா இவன் திட்ட நேரடியா கடைசியா ஒரு தரம் என் பொண்ணைப் பத்தி பேசலாம்ன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன். அன்னைக்கு ஜானகி இவன்கிட்ட துப்பு கெட்டத்தனமா நடந்துகிட்டதுக்கு நான் இவன் கிட்ட மன்னிப்பு கேக்கலாம்ன்னு யோசனைப் பண்ணிட்டு இருக்கேன். சுகன்யா டெல்லியில இருக்கற நேரத்துல இவனை என் பக்கம் திருப்பணும்ன்னு காத்துக்கிட்டிருக்கேன். சுகன்யா என்னடான்னா டெல்லிக்கு போகலேங்கறா? இப்ப என்ன பண்றது? நேரா மல்லிகா கிட்டத்தான் போகணும். சாயந்தரம் எங்கிட்ட மல்லிகா பேசினப்பவும் என்னமோ கடனேன்னு பேசறது போலத்தான் பேசினா?'
செல்வாவையும், சுகன்யாவையும் அவ்வளவு நெருக்கமாக, அன்னியோன்யமாக பார்த்த சாவித்திரியின் மனதில், சட்டென பொறாமை எழுந்தது. தன் பொண்ணுக்கு இந்த குடுப்பனை இல்லேயே என்று அவள் மனதில் வெவ்வேறு விதமான எண்ணங்கள் எழுந்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்."
“எதுக்குடியம்மா?"
“இவருக்காக அக்கறையா விபூதி பிரசாதம் கொண்டு வந்தங்களே, அதுக்குத்தான் மேடம்; இந்த காலத்துலே உங்களுக்கு இருக்கற மாதிரி நல்ல மனசு எத்தனைப் பேருக்கு இருக்கு? என்னையும் உங்க பொண்ணு மாதிரின்னு வாய்க்கு வாய் சொல்றீங்க; இப்ப உங்க வாயால என்னையும் நல்லா இருன்னு சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் மேடம்?" சுகன்யா போலியாக சிரித்தாள்.
“நீ என்னை சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கேடியம்மா. உனக்கென்னடி குறைச்சல்? கோவில் செலை மாதிரி இருக்கே; கை நெறய சம்பாதிக்கறே; நீயும் நல்லபடியா இருப்பம்மா: உன் மனம் போல உனக்கு சீக்திரமே மாங்கல்யம் அமையட்டும்."
“செல்வா, நான் இப்ப கிளம்பறேன்; உன் கிட்ட கொஞ்சம் தனியா மனம் விட்டு பேசணும்ன்னு நெனைச்சிக்கிட்டிருக்கேன். நீ சீக்திரமா குணமாகி வீட்டுக்கு வா. அப்புறம் பேசிக்கலாம்." தன்பையை எடுத்துக்கொண்டவள், அவர்களை திரும்பி பார்க்காமல் விடு விடு வென்று கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.
சாவித்திரி கிளம்பிய ரெண்டு நிமிடங்களில் டிபனுடன் வந்த சீனு, சுகன்யா வேண்டாம் வேண்டாமென வெகுவாக மறுத்தப்போதிலும், அவளைத் தன் பைக்கில் அவள் வீட்டு வாசல் வரை அழைத்து வந்து விட்டுவிட்டு திரும்பிப்போனான்.
*************************
“என்னம்மா செல்வாவுக்கு உடம்பு எப்படியிருக்கு?" அவர்களிருவரும் சாப்பிடுவதற்காக தட்டுகளை எடுத்து வைத்தவாறு கேட்டாள் சுந்தரி.
“கால் வீக்கம்தான் சுத்தமா குறையல; மத்தப்படிக்கு அவர் இப்ப பெட்டரா ஃபீல் பண்றார்: ஒன்றிரண்டு நாள்ல வீக்கம் குறைய ஆரம்பிக்கும்னு டாக்டர் சொல்லிருந்தார்: சனிக்திழமை வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு தோணுது; உனக்கு வீட்டுல தனியா இருக்கறது போரடிக்குதாம்மா?" சுகன்யா தன் தாயின் கழுத்தை ஒரு சிறு குழந்தையைப் போல் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடினாள்.
“சுகா... எனக்கு கழுத்து வலிக்குதுடி: நீ என்னடான்னா சின்ன குழந்தையாட்டாம் விளையாடறே?"
“வலிச்சா வலிக்கட்டும்; எனக்கு உன் மேல ஆசை ஆசையா வருது; நான் அப்படித்தான் கட்டிக்கிட்டுத் தொங்குவேன்" தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்.
'ம்ம்ம்ம்... ராஜாத்தியாட்டம் ஒரு பொண்ணு எனக்கு பொறந்திருக்கா? இந்த வயசுல தன்னைப்பத்தி மட்டும் கவலைப்படாம, தன் அம்மாவோட மன உணர்ச்சிகளைப் பத்தியும், அவ உடல் உணர்ச்சிகளையும் பத்தியும் கவலைப்படற பொண்ணு.' சுந்தரியின் மனதில் மகிழ்ச்சி பீறிக்கொண்டு வந்தது. ஆனால் மறுபுறம் அவள் மனம் வெதும்பியது:
'இவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணைப் பெத்துட்டு, பக்கத்துல இருந்து புத்திர சுகத்தை அனுபவிக்கர கொடுப்பனை இல்லாம, அந்த குடிகாரப் பாவி எங்களையும் தவிக்கவிட்டு, அவனும் எங்க கிடந்து தவிக்கிறானோ தெரியலையே? காலையிலேருந்து பாழாப் போற மனசுல அவனைப் பத்திய நெனப்பு ஏன் வந்து வந்து போகுது?'
“நான் உனக்கு குழந்தையில்லையா?" சுகன்யா சிணுங்கினாள்; ஆசையுடன் கொஞ்சினாள்.
“நீ என் குழந்தைதான்; யார் இல்லேன்னது; ஆன இப்ப நீ வளர்ந்த குழந்தை... அதுக்கு ஏத்த மாதிரி நீ பிஹேவ் பண்ணணும்... பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க;" பெத்த மனம் அவளைப் பார்க்க பார்க்கப் பூரித்தது....
"சரி சரி... என்னை கொஞ்சினது போதும்: வந்து சாப்பிடு, அப்புறம் நேரத்துக்கு படுத்து தூங்கு... திருப்பியும் போனை எடுத்து வெச்சுக்கிட்டு அந்த பையன்கிட்ட ராத்திரி பூரா பேச ஆரம்பிச்சிடாதே." சொன்னவள் சிரித்தவாறு சுகன்யாவின் கையை ஆசையாகப் பற்றிக்கொண்டாள்.
“நொய் உப்புமா... சூப்பரா இருக்கு... சரி நீ நாள் பூரா என்னப் பண்ணம்மா?" தேங்காய் சட்டினியுடன் சேர்த்து உப்புமாவை மென்றுவாறே கேட்டாள் சுகன்யா.
“காலையில வீட்டு வேலையெல்லாம் முடிச்சதும், வேணி வந்திருந்தா: அவ கூட பேசிட்டிருந்தேன்; உன்னைத் தங்கமான பொண்ணுன்னு கொண்டாடினா: எனக்கு மனசு நெறைஞ்சு போச்சுடி; பெத்தவளுக்கு வேற என்ன வேணும்? அப்புறம் செத்த நேரம் தூங்கினேன்: ரொம்ப நாளாச்சு இப்படி மதியானத்துல நிம்மதியா படுத்து தூங்கி; அப்புறம் டிஃபன் பண்ணி வெச்சுட்டு மாணிக்கம் அண்ணாச்சி கூட கோவிலுக்கு போய்ட்டு வந்தேன்."
“அம்மா, நாளைக்கு நைட் நான் தான் உனக்கு சமையல் பண்ணி போடப்போறேன்."
“ஆகட்டும்... நாளைக்கு அந்த பிள்ளையை பாக்க போவலையா நீ?"
“இல்லம்மா... இப்பதான் அவனுக்கு உடம்பு தேவலயா ஆயிடுச்சே? தினம் தினம் நான் அங்க போய் நின்னாலும் அவன் அம்மா என்னை தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு இருக்கு."
“சரியா சொன்னே: நானே உங்கிட்ட இதுபத்தி பேசணும்ன்னு நினைச்ச்சேன்."
“எனக்கு உன் கூட இருக்கணும்ன்னு தோனுதுமா? உன்னை எங்கயாவது வெளியில கூப்பிட்டுக்கிட்டு போய் உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா? நாளன்னைக்கு எங்களுக்கெல்லாம் ஆபீஸ் லீவு; பக்கத்துலதான் காஞ்சீபுரம்... மாபலிபுரம்ன்னு... காஞ்சீபுரத்துல நெறைய கோவில் குளம்முன்னு இருக்கு: நீ போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தியே? போய் வரலாமா; காலங்காத்தால எழுந்து குளிச்சுட்டு ஏஸி பஸ்ல போனா, ரெண்டு ரெண்டரை மணி நேரம் தான் ட்ராவல்... வரதராஜர் கோவில், அப்புறம் காமாட்சியம்மன்னை தரிசனம் பண்ணிட்டு, மதியம் அந்த ஊர்லேயே சாப்பிட்டுக்கலாம். சாயந்திரத்துக்குள்ள திரும்பி வந்துடலாம்?"
“ம்ம்ம்.. போய் வரலாம்" கையை கழுவிவிட்டு வந்த சுந்தரி தான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த தோல் பையைத் திறந்து, ஒரு புது தங்கச்சங்கிலியை எடுத்தாள்,
“சுகா... கண்ணு! இங்கப் பார், உனக்காக நான் என்ன வெச்சிருக்கேன்னு; வந்ததுலேருந்து இதை எடுத்து உன் கழுத்துல போட்டு பாக்கணும்ன்னு நினைக்கிறேன்; முடியலை; நீ ஒரே அலைச்சலா ஓடிக்கிட்டு இருக்கே; இன்னைக்கு நாள் நல்லா இருக்கு; இதை கழுத்துல போட்டுக்கடி."
“இப்ப எதுக்கும்ம்மா இதை வாங்கின?... எனக்கு வேணும்னா நான் கேக்க மாட்டேனா? எத்தனை பவுன்மா... நல்லா வெயிட்டா இருக்கு; நீ போட்டுக்கம்மா முதல்ல.. எங்கிட்ட இருக்கற செயினையே நான் போட்டுக்கறதில்ல" சுந்தரியின் கையில் பளபளத்தை தங்கச் செயினை கையில் வாங்கிய சுகன்யாவின் முகம் மதிழ்ச்சியில் மலர்ந்தது. நகையை விரும்பாதவள் ஒரு பெண்ணாகவே இருக்கமுடியாது!
“சுகா, நான் உனக்குன்னுத்தான் வாங்கினேன்ம்மா... உன் கல்யாணத்துக்கு ஒன்னு ரெண்டு உருப்படி தேவைதானே? நாலு பவுனு; இப்ப இதுல சின்னதா லட்சுமி டாலர் கோத்திருக்கு; வேணும்னா உன் கல்யாணத்துக்கு அப்புறமா நீ டாலரை கழட்டிட்டு தாலியை கூட இதுலயே கோத்துக்கலாம்.. வெளியே போய் வர பொண்ணு நீ; அது பாட்டுக்கு கழுத்துல கிடக்கும். எனக்கு புரமோஷன் கிடைச்சதுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கான அரியர்ஸ் வந்தது... அதை ஒரு நகையா மாத்திட்டேண்டி செல்லம்."
“அம்மா நீயே போட்டுவிடும்ம்மா"
சுகன்யாவின் கழுத்தில் செயினை மாட்டிய சுந்தரி தன் பெண்ணின் அழகை கண்ணும் மனமும் நிரம்ப பார்த்தாள்.
'அந்த குடிகாரனுக்கு இதெல்லாம் கூட இருந்து பாத்து அனுபவிக்க குடுத்து வெக்கலை.' சட்டென தன் கணவனின் நினைவு மீண்டும் வர அவள் திடுக்கிட்டாள்.
'எனக்கென்ன ஆச்சு? இத்தனை வருவுமா அவன் நெனப்பு இல்லாம நிம்மதியா வாழ்ந்துட்டேன். நேத்து இவ என் அப்பா எங்கேன்னு கேட்டா, அதுலேருந்து திரும்ப திரும்ப இவன் நெனப்பு என்னை அலைக்கழிக்குது.' அவள் மனம் சலித்துக்கொண்டது.
“தேங்க்ஸ்ம்ம்மா" சுகன்யா தன் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.
“பத்திரமா வெச்சுக்கடி சுகா..."
“சரிம்ம்மா... நான் என்ன சின்னக்குழந்தையா ம்மா... இதெல்லாம் எனக்கு தெரியாதா? ம்ம்ம்... இன்னும் என் கல்யாணத்துக்குன்னு வேற என்னல்லாம் வாங்கி வெச்சிருக்கே?"
“முதல்ல அந்த மல்லிகா சரின்னு தலையாட்டட்டும்; உன் கல்யாணத்தை நல்ல படியா, உன் மனசுக்கு திருப்தியா, ஜாம் ஜாம்ன்னு நான் செய்து வெக்கிறேண்டு: எனக்கு உன் மனசு திருப்திதாண்டி எனக்கு முக்கியம். ரெண்டு ஜோடி வளையல் செய்து வெச்சிருக்கேன், ரெண்டு மோதிரம் உனக்குன்னு இருக்கு; ஒரு தாம்பு கயிறு செயின் பண்ணி வெச்சிருக்கேன். என் தம்பியும் உனக்குன்னு கொஞ்சம் காசா வாங்கி வெச்சிருக்கான். உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேற எது வேணுமோ செய்துக்கலாம்.. காதுக்கு உனக்கு புடிச்ச மாடலா நீயா பாத்து எதாவது வாங்கிக்கோ: இதுக்கெல்லாம் நான் பணம் குடுக்கறேன். நான் சொன்ன அயிட்டமெல்லாம் பத்திரமா பேங்க் லாக்கர்ல இருக்கு."
என் அப்பன் ஆத்தா போய் சேர்ந்தப்ப, அவங்க விட்டுட்டு போன வீட்டை ரிப்பேர் பண்ணி வாடகைக்கு விட்டு இருக்கு: உன் மாமன் அதுல வர வாடகையையும் உன் பேர்லதான் பேங்க்ல போட்டுக்கிட்டு இருக்கான். உன் பாட்டியோட பழைய நகையை எனக்கு குடுத்தான். உங்கப்பனை காதலிச்சுக் கட்டிக்கிட்டேன்னு என் மேல அவ்வளவு கோவமா இருந்து செத்தா என் ஆத்தாக்காரி. இப்பவாது வந்து என் கூட இருன்னு எங்கப்பனை கூப்பிட்டேன். அவன் என் பொண்டாட்டி இருந்த வீட்டை விட்டுட்டு வரமாட்டேன்னு புடிவாதம் புடிச்சான். அப்பறம் அவளையே நெனைச்சுக்கிட்டு, அந்த துக்கத்துலேயே இருந்து ஆறுமாசத்துல அவனும் போய் சேர்ந்தான்.
நான் உன்னை குழந்தையா வெச்சுக்கிட்டு கஷஸ்டப்பட்டப்ப என்னை ஒரு தரம் வந்து பாத்தாளா அவ? கல்லு மனசு அவளுக்கு. அவளுக்கு இருந்த ரோஷம் எனக்கில்லையா? அவ பெத்த பொண்ணுதானே நான்? அவ நகையை நான் எதுக்கு போட்டுக்கிட்டு மினுக்கணும்?" சுந்தரியின் குரல் கரகரப்பாக வந்தது.
“யம்மா.. ஆயாவை ஏம்மா திட்டறே... அவங்க ரெண்டு பேரும் என் கிட்ட எப்பவும் ஆசையாத்தான் இருந்தாங்க... வீட்டுக்கு வாம்மான்னு ஆசையா கூப்பிடுவாங்க."
“நீ ஸ்கூலுக்கு போவும் போது ஒளிஞ்சு நின்னு உன்னையே பாத்துட்டு நின்ன கதையெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? நீயும் அவங்க வாங்கிக் குடுக்கற சாக்லெட்டை மொத்தமா திண்ணுட்டு வீட்டுக்கு வந்து திருட்டுத்தனம் பண்ணதெல்லாம் எனக்கும் தெரியும்." சுந்தரி மூக்கை உறிஞ்சினாள்: தன் கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.
“அம்மா அழுவாதேம்ம்மா.. எனக்கும் அவங்களை நினைச்சா அழுகை வருதும்மா" சுகன்யா அவள் தலையைத் தடவினாள்.
“நான் சம்பாதிக்கிறேன். வேலையை விட்டாலும் எனக்கு பென்ஷன் வரும். எனக்கு அவங்க சொத்து எதுவும் வேணாம்ன்னு உன் மாமன் கிட்ட தீத்து சொல்லிட்டேன். அந்த வீட்டை என் தம்பி உனக்குதான்னு இப்பவே எழுதி வெச்சிட்டான். நீ எப்ப வேணா பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டு வா: உன் பேர்ல அந்த வீட்டை மாத்திக்கோ: அவனுக்கும் உன்னை விட்டா வேற யாரு இருக்காங்க? புத்தி கெட்டவன் எனக்காக வாழறானாம்; இப்படி வாழ்க்கையில ஓத்தையாவே இருந்துட்டான்.
சரி இத்தனை நாளா இல்லாம இப்ப எதுக்கு நீ எங்கிட்ட என் குடும்ப கணக்கை கேக்கிற?"
“அம்மா... ஏம்மா நீ என்னை தப்பா நினைக்திறே? நான் கணக்கு கேக்கலைம்ம்மா... மாமா என்னை கேட்டார்... உனக்கு என்ன மாதிரி நகை வேணும்ன்னு நான் போன தரம் ஊருக்கு வந்தப்ப கேட்டாரு.. நான் உன்னை கேளுன்னு சொல்லிட்டு வந்தேன்?"
“சரிடி... உண்மையைச் சொல்லு: அந்த பையன் செல்வா உன்னை எதாவது கேட்டானா? இல்லை அவன் தங்கச்சி மீனா கேட்டாளா? என் புருஷன் என் கூட இல்லேன்னு தெரிஞ்சதும், அந்த மல்லிகா உன்னை ஒண்ணுமில்லாத ஓட்டாண்டின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கா போல இருக்கு; நீ சொல்ற அந்த சாவித்திரி பேச்சைக் கேட்டுக்கிட்டு குதிக்திறான்னு நினைக்கிறேன். அந்த மல்லிகா கிட்ட ஜாடை மாடையா சொல்லி வை; நான் ஒண்ணும் பஞ்சையோ பராரியோ இல்லை. எங்க குடும்பமும் மரியாதையுள்ள குடும்பம்தான். என்கிட்டயும் சொத்து சுகம் எல்லாம் இருக்குன்னு தலையை நிமிர்த்தி சொல்லு! நீ யாருக்கும் குறைஞ்சு போயிடலடி இங்க.
சுகா, உன் அப்பன் உன் கூட இல்லாத குறையைத் தவிர வேற எந்த குறையும் உனக்கு இல்லடி.. என் கூட வேலை செய்யற ரெண்டு பேரு எப்ப எப்பன்னு காத்துகிட்டு இருக்காளுங்க: என்னை தினமும் நச்சரிக்கறாளுங்க; உன்னை அவங்க புள்ளைக்கு கட்டிக்கறோம்ன்னு. உன் பொண்ணுகிட்ட பேசிட்டியா; பேசிட்டியான்னு. நீ இவனை ஆசை பட்டுட்டியே.. சரி அவ மனசுக்கு புடிச்சவனையே கட்டிக்கட்டுமேன்னு உன் மாமன் உன் பக்கம் சேந்துகிட்டு குதிக்கறான். அதனால ஆசை பட்டவனையே நீ கட்டிக்கோன்னு நான் சும்மா இருக்கேன். இல்லேன்னா உனக்காக பசங்களை லைன்ல கொண்டாந்து நிறுத்துவேன்."
“எம்மா... எனக்கு இவன் ஒருத்தனே போதும்... நீ புதுசா எவனையும் கூப்பிட்டுக்கிட்டு வரவேணாம்: மீனா சொல்லிக்கிட்டிருந்தா: செல்வா, குணமாகி வீட்டுக்குப் போனதும் எங்க கல்யாணத்தைப் பத்தி அவங்க அம்மா கிட்ட பேசி முடிவு எடுக்கறேன்னு நடராஜன் சொன்னாராம்.
செல்வா, ஒரு பயந்தாங்கொள்ளி, எங்கம்மா நம்ம மேரேஜ்க்கு சம்மதம் குடுப்பாங்களான்னு எனக்கு சந்தேகமாயிருக்கு: அவங்க மாட்டேன்னுடா என்னப் பண்றதுன்னு என்னை இன்னைக்கு கலக்கமா கேட்டான்; நான் சொன்னேன் உங்கம்மாவை நீ தான் சரிகட்டணும்... இல்லன்னா நீ என் வீட்டுக்கு வந்திடு, மத்ததை நான் பாத்துக்கறேன்னு ஜம்பமா சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பயமா இருக்கும்மா. இப்படியே நாளைத் தள்ளறதுக்கு எனக்கு இஷ்டமில்லேம்மா. நான் அவன் கிட்ட சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையேம்ம்மா? அவன் நம்ம வீட்டுக்கு வந்துட்டா; மாமவும் நீயும் ஓண்ணும் சொல்ல மாட்டீங்களே?" சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள்.
“அந்த சாவித்திரி இன்னைக்கு செல்வாவை பார்க்க வந்தா: அவ போறப்பா சொல்றா, செல்வா உன் கிட்ட நான் தனியா பேசணும்ன்னு, அவ வேற எதைப் பத்தி பேசுவா? எனக்குத் தெரியாதா? திருப்பி திருப்பி அவ பொண்ணைப் பத்தி அவன் கிட்ட பேசி எங்க நடுவுல குழப்பத்தை உண்டு பண்ணப் பாக்திறான்னு நினைக்கிறேன்?"
“சுகா நீ கொஞ்சம் பொறுமையா இரு: அன்னிக்கு செல்வா ஆஸ்பத்திரியில உன் எதிர்லதானே எங்ககிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்திறேன்னு சொன்னான் இல்லியா?"
“ஆமாம்"
“நடராஜனும், உன் மாமா கிட்ட ரெண்டு வாரம் கழிச்சு பேசறேன்னு சொன்னாரா இல்லையா? தன் பொண்டாட்டிகிட்டவும் பேசறேன்னு இப்ப சொல்றாரா இல்லையா?"
“ம்ம்ம்ம்"
“பின்னே நீ ஏன் இப்ப நடுவுல குழம்பறே... ? நாங்க சீன்ல வந்தாச்சு இல்லயா? பெரியவங்க நாங்க பேசி ஒரு முடிவுக்கு வர வரைக்கும் சும்மாயில்லாம நீ ஏன் நடுவுல எல்லாத்தையும் தூக்கி உன் தலையில போட்டுக்கிட்டு குதிக்கறே?"
“....."
“நான் சொல்றதை கேளு... உன் மாமாகிட்ட சொன்ன மாதிரி பத்து நாள் நீ லீவு போட்டுட்டு என் கூட ஊருக்கு வா... அங்க வந்து நிம்மதியா இரு: உன் மனசு அலைபாயறதும் குறையும். இப்ப அவனுக்கு சீரியஸா ஓண்ணுமில்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க; சும்மா சும்மா தினம் அவனைப் பாக்கறதுக்கு போவாதே. போன்ல அவன் கிட்ட தேவைக்கு மேல தொணதொணன்னு பேசிக்கிட்டு இருக்காதே. பழகப் பழகப் பாலும் புளிக்கும்டி கண்ணு; நான் சொல்றதை புரிஞ்சுக்கோ: அவனை பாத்துக்கறதுக்கு அவனைப் பெத்தவங்க இருக்காங்க."
“ம்ம்ம்..."
“தினம் தினம் நீ எதுக்கு அங்க போய் அவன் எதிர்ல நிக்கணும்? அந்த சாவித்திரி மாதிரி நாலு பேரு அவன் உறவு காரங்க ஆஸ்பத்திரிக்கு அவனைப் பாக்க வருவாங்க; உன் கூட வேலை செய்யறவங்க வரலாம்; உன்னைப் பத்தி நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. நீ இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது? அப்புறம் உன் மேல, எங்க மேல அந்த நடராஜனுக்கு இருக்கிற மரியாதைதான் கெட்டுப்போகும். கல்யாணத்துக்கு முன்னாடி கையளவு தூரத்துல நீ தள்ளி நிக்கணும்.
செல்வா கிட்ட சும்மா மூச்சுக்கு முன்னூறு தரம் பேசி பேசி அவனையும் குழப்பாதே, நீயும் குமம்பாதே; உனக்கு அவன் மேல ஆசை இருக்கற மாதிரி, உண்மையிலேயே அவனுக்கு உன் மேல ஆசை இருந்தா, ஆத்தாளை விட்டுட்டு அவன் உன்னைத் தேடிக்கிட்டு நம்ம ஊருக்கு வரட்டும். அப்ப பாத்துக்கலாம் அந்த கதையை.
உண்மையா என்னை கட்டிக்கணுங்கற ஆசை இருக்கவே தானே உன் அப்பன் என் பின்னால வந்தான். சொல்லுடி... வந்தானா இல்லையா?"
“ம்ம்ம்"
“நான் அவனுக்கு எந்த குறையும் வெக்கல. வந்ததுக்கு அப்புறம் அவன் குடிக்க கத்துக்கிட்டு கெட்டு குட்டி சுவரா போனான். அது வேற விஷயம். திருத்தப் பாத்தேன். முடியலை. அடிச்சி வெரட்டினேன். அதுக்கு மேல நான் என்னப் பண்ணமுமயுயும்?
இவன் எங்கப் போயிடப் போறான்? இன்னைக்கு நான் சொல்றேன். இதை நீ எழுதி வெச்சுக்கோ. இவன் உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டான்: அவனுக்கு அவன் அப்பா அம்மா இருக்கற மாதிரி, உனக்கு நாங்க இருக்கோம் இல்லையா? எங்கக்கிட்ட நீ சொல்லிட்டேல்ல; இனிமே நாங்க பாத்து எல்லாத்தையும் நல்லபடியா செய்து முடிக்கிறவரைக்கும் பொருத்துக்கிட்டு இரு. நீயா உள்ள பூந்து எதாவது குட்டையை குழப்பினே எனக்கு கெட்ட கோவம் வரும் புரியுதா?" குரலில் கோபத்தை காட்டுவது போல பேசினாலும் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள்.
“சரிம்மா... என்னை எதுக்கு இப்ப கோச்சிக்கறே.. நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?" அவள் சிணுங்கினாள். அம்மாவை விட்டு தள்ளிப் படுத்துக்கொண்டாள்.
தன் கையைத் தள்ளிவிட்டு தன்னை விட்டு நகர்ந்து படுத்துக்கொண்ட தன் பெண்ணை நினைத்து மனதுக்குள் சரித்துக்கொண்டாள் சுந்தரி.
“உன் மேல எனக்கு என்னடா கோபம்... நீ நல்லா இருக்கணும்ன்னு தான் சொல்றேண்டா: இப்ப பேசாம தூங்கு" பக்கத்தில் படுத்திருந்த சுகன்யாவின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தாள் சுந்தரி.
தொடரும்...
Comments
Post a Comment