சபலம் 4
"குட் மார்னிங் ஆண்ட்டி"
"குட்மார்னிங்" என்று சிரித்த முகத்துடன் சொன்னாள் மிருதுளா.
காபியை அடுப்பில் வைத்துச் சூடாக்கினாள்.
காபியை அடுப்பில் வைத்துச் சூடாக்கினாள்.
"இதான் நீ வழக்கமா எந்திரிக்கற நேரமா..?”
"இன்னிக்கு மொத நாள் அதான் விட்டுட்டேன். ஆனா நாளைலருந்து நீ சரியா ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சாகனும்..”
"ஓகே ஆண்ட்டி. பட் ஆறுமணிக்கு எந்திரிச்சு என்ன பண்றது.?”
”எவ்வளவோ பண்ணலாம். ஜாகிங் போகலாம். வீட்லயேகூட எக்சர்சைஸ் பண்ணலாம். அப்றம் யோகா கூடப் பண்ணலாம்..”
"கரெக்ட் ஆண்ட்டி. ஆனா இதெல்லாம் எனக்கு எதுமே பழக்கமேயில்லயே..”
"பழகிக்கோ. ஆரோக்ய வாழ்க்கை வாழக் கத்துக்கோ. ஒண்ணும் தப்பில்ல.”
"ம்ம்.. சரி. உங்க ஆரோக்யத்துக்குக் கூட அதான் காரணமோ..?”
மிருதுளா அவனைப் பார்த்துச் சிரித்தாள். "ஆமாப்பா..”
மிருதுளா அவனைப் பார்த்துச் சிரித்தாள். "ஆமாப்பா..”
"இப்பவும் கன்டினியூ பண்றீங்களா..?”
"ரெகுலரா பண்றதில்ல. நேரம் கெடைக்கறப்ப கண்டிப்பா பண்ணிருவேன். அதிகமா யோகா பண்ணுவேன்..” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு. சூடாகிவிட்ட காபியை டம்ளரில் ஊற்றி…அவனுக்கு ஆற்றிக் கொடுத்தாள்.
"நாளைலருந்து உன்கிட்ட ஒரு டிசிப்ளினை எதிர்பாக்கறேன்..”
பரிதாபமாகச் சிரித்தான் நந்தா.
பரிதாபமாகச் சிரித்தான் நந்தா.
காபிக்குப் பின் தன் அறைக்கு போய் காலைக்கடன்களை முடித்துவிட்டு குளித்துப் புத்துணர்ச்சியோடு கிளம்பிக் கீழே போனான். காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது. தினசரியை எடுத்துக்கொண்டு உணவு மேஜை முன் உட்கார்ந்தான்.
"சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி அற்புதமாகத் தோன்றினாள்.
"சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி அற்புதமாகத் தோன்றினாள்.
"ம்.. ம்..” அவள் அழகைக் கண்டு அதிசத்து தலையாட்டினான். அவள் அருகில் வந்தபோது அவளிடமிருந்து பரவின நறுமணம் அவனை உற்சாகமடையச் செய்தது. ஆண்ட்டி உணவைப் பறிமாற அவன் அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இந்த வயதிலும் எத்தனை அழகு..? இப்போதே இத்தனை அழகென்றால்… இளமையில் எப்படி ஜொலித்திருப்பாள்.?’
"ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல..
"ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல..
"அங்கிள் இல்லையா ஆண்ட்டி..?” எனக் கேட்டான்.
"போயாச்சு..”
"எப்ப போனார்…?”
"நீ குளிக்கப் போனப்பறம்..”
"டிபன் சாப்பிடலை..?”
"இல்ல..”
அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை. அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும். எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான்.
அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை. அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும். எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான்.
பறிமாறியபின் மிருதுளாவும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள். இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். மிருதுளா நேற்றை விட இன்றைக்கு கொஞ்சம் மகிழச்சியாக இருப்பதை கவனித்தான் நந்தா. சாப்பிட்டு முடித்தபின் அவன் வேலைக்கு கிளம்ப மிருதுளாவும் ஸ்கூலுக்கு கிளம்பினாள்.
மாலை நந்தா வேலை முடிந்து வருவதற்குள் மிருதுளா வந்திருந்தாள். அதன் பிறகு நந்தா வீட்டுக்கு வந்ததும் அவனுக்குக் காபி கொடுத்து உபசரித்தாள்.
மாலை நந்தா வேலை முடிந்து வருவதற்குள் மிருதுளா வந்திருந்தாள். அதன் பிறகு நந்தா வீட்டுக்கு வந்ததும் அவனுக்குக் காபி கொடுத்து உபசரித்தாள்.
"வேலை எப்படி இருந்துச்சு நந்தா..?”
"பிராப்ளம் எதும் இல்லையே.?”
"நோ பிராப்ளம். புதுசா ஒரு எடத்துல வேலை செய்ற உணர்வே இல்ல ஆண்ட்டி. ரொம்ப நாள் பழகின மாதிரிதான் இருநதுச்சு..”
"நல்லது. இன்னும் ஒரு வாரம் போனா எல்லாமே பழகிரும்..”
அன்று இரவு பத்து மணியிகியும் அவளது கணவர் வரக்காணோம். டிவி பார்த்துக் கொண்டிருந்த நந்தா கேட்டான்.
அன்று இரவு பத்து மணியிகியும் அவளது கணவர் வரக்காணோம். டிவி பார்த்துக் கொண்டிருந்த நந்தா கேட்டான்.
"அங்கிள் இன்னும் வல்லையே ஆண்ட்டி..?”
"வரமாட்டார்னு நெனைக்கறேன்.” என்றாள் மிருதுளா.
"வரமாட்டாரா..?”
"வாரத்துல ரெண்டு நாள் வந்தா.. அதுவே பெருசு..”
"ஓ..”
ஒரு பெருமூச்சுடன் சொன்னாள். "இதெல்லாம் வெளில சொல்லக்கூடிய விசயமில்லை நந்தா. ஆனா நெருக்கமானவங்களுக்கெல்லாம் ஓரளவுக்கு தெரியும்..”
"ஓ..” என அவளையே பார்த்தான்.
மிருதுளா கசப்பாகச் சிரித்தாள். பிறகு மௌனமாகி டிவியை வெறித்தாள்.
மிருதுளா கசப்பாகச் சிரித்தாள். பிறகு மௌனமாகி டிவியை வெறித்தாள்.
சிறிது இடைவெளி விட்டு "ஸாரி ஆண்ட்டி..” என்றான்.
மிருதுளா மறுபடி ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள். வேதனை மிகுந்த குரலில் சொன்னாள்.
மிருதுளா மறுபடி ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள். வேதனை மிகுந்த குரலில் சொன்னாள்.
"இது இன்னிக்கு நேத்தைய கதை இல்ல..”
"எத்தனை நாள் இப்படி..?”
"நாளா..?" அதே வேதனையுடன் சிரித்தாள். "வருசக்கணக்கா நடக்குது..”
"ரொம்ப வருத்தமா இருக்கு ஆண்ட்டி..”
"உனக்கே இத்தனை வருத்தம் இருந்தா அவரோட பொண்டாட்டி நான் எனக்கு எத்தனை வருத்தம் இருந்திருக்கும்..? மொதல்ல எனக்கு தெரிய வந்தப்ப தாங்க முடியாம எப்படி துடிச்சேன் தெரியுமா..? அந்தாளுமேல அந்தளவுக்கு நம்பிக்கை வச்சிருந்தேன். தவிற என் உலகமே அவருதான்னு இருந்துட்டேன்..”
"அப்போ அவரு என்ன சொன்னாரு ஆண்ட்டி..?”
"பெருசா என்னெல்லாமோ பேசினாரு” என வேதனையாகவும் அவனைப் பார்த்துச் சொன்னாள்.
"நா அழகா இருந்து என்ன பிரயோஜனம்..? அந்த அழகுதான் என்னை ஆணவக்காரியா மாத்திருச்சுன்னு சொன்னாரு. அவர நான் புருசனாவே மதிக்கறதில்லேன்னாரு. மொத்தத்துல அவரோட பார்வைல என்னை ஒரு மோசமானவளா சித்தரிச்சிட்டாரு. எனக்கு பல ஆண்களோட தொடர்பு இருக்குன்னும் சொன்னாரு”
"ச்சே..” என மனம் வருந்திச் சொன்னான் ”உங்களப் போயி அப்படி..?”
"எல்லாம் என் தலையெழுத்து நந்தா. அவரு பக்கத்தை நியாயப்படுத்தறதுக்காக என்மேல அபாண்டமான பழி சுமத்திட்டாரு. டைவோர்ஸ் பண்றதாக்கூட இருந்தேன். ஆனா என் பொண்ணுகதான் வயசான காலத்துல எதுக்கு வீண் பிரச்சினைனு சமாதானமா போக வெச்சிட்டாங்க.
ஆனா சொத்து பூராவும் அப்பவே பிரிச்சு எழுதியாச்சு. இப்ப இந்த வீடும் எனக்கு சொந்தம். அதுக்கப்பறம் அவர ஒரு மனுசனா மதிக்கவே நான் விரும்பல. ஒரு பார்மாலிட்டீஸ்க்காக அவரு கட்ன தாலி என் கழுத்துல கெடக்கே தவிற, அதுல நெஜம் இல்லை. மனசளவுல அவரை நான் என்னிக்கோ பிரிஞ்சிட்டேன்..”
ஆனா சொத்து பூராவும் அப்பவே பிரிச்சு எழுதியாச்சு. இப்ப இந்த வீடும் எனக்கு சொந்தம். அதுக்கப்பறம் அவர ஒரு மனுசனா மதிக்கவே நான் விரும்பல. ஒரு பார்மாலிட்டீஸ்க்காக அவரு கட்ன தாலி என் கழுத்துல கெடக்கே தவிற, அதுல நெஜம் இல்லை. மனசளவுல அவரை நான் என்னிக்கோ பிரிஞ்சிட்டேன்..”
"ரொம்ப கஷ்டமா இருக்கு ஆண்ட்டி...”
"நீயே சொல்லு, எனக்கு இப்படி ஒரு புருஷன் தேவைதானா..?” எனக் கேட்ட அவளது கேள்விக்கு பதில் சொல்லத் திணறினான் நந்தா.
மறுபடி மிருதுளா சொன்னாள், "முப்பது வருசமா அவரோட வாழ்ந்திருக்கேன் நந்தா. இப்படிப்பட்ட ஒரு மனுசனோட இத்தனை வருசமா குப்பை கொட்னத நெனச்சு நெனச்சே இப்பெல்லாம் வேதனைப் பட்டுட்டிருக்கேன்..”
மறுபடி மிருதுளா சொன்னாள், "முப்பது வருசமா அவரோட வாழ்ந்திருக்கேன் நந்தா. இப்படிப்பட்ட ஒரு மனுசனோட இத்தனை வருசமா குப்பை கொட்னத நெனச்சு நெனச்சே இப்பெல்லாம் வேதனைப் பட்டுட்டிருக்கேன்..”
நந்தா ஒன்றுமே பேசவில்லை. மென்மையாக அவள் கையை மட்டும் வருடிக் கொடுத்தான்.
சிறிது நேரம் மௌனமாக இருந்தவள் நெஞ்சகம் விம்மப் பெருமூச்செறிந்து விட்டுச் சொன்னாள்.
"அதுக்கப்பறம் அவரோட துணை இல்லாமயேதான் வாழ்ந்திட்டிருக்கேன்.. நந்தா. இப்பவும் நான் வாழ்றது லோன்லியான ஒரு வாழ்க்கைதான். நான் எனக்காக மட்டுமேதான் வாழ்ந்துட்டிருக்கேன்”
அதற்கும் அவன் பேசவில்லை.
அதற்கும் அவன் பேசவில்லை.
"இன்னும் கூட என் மனசு ஆறலை நந்தா. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், அந்தாளு செத்தாக்கூட என் கண்ணுலருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது.”
அவளது மனக்காயம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
அவளது மனக்காயம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
"ரிலாக்ஸ் ஆண்ட்டி..” என மெதுவாகச் சொன்னான்.
மனக் குமுறல்களை கொட்டி முடித்தபின் அவள் மனம் கொஞ்சம் இலகுவானது. அவனை பார்த்து புன்முறுவல் புரிந்து தன் நன்றியை சொல்லாமல் சொல்லிவிட்டு படுக்க சென்றால். நந்தாவும் தன் அறைக்கு சென்று உறங்கிப் போனான்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அவனை எழுப்பிவிட்டு விட்டாள் மிருதுளா. நந்தாவுக்கு ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கமில்லை என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.
மனக் குமுறல்களை கொட்டி முடித்தபின் அவள் மனம் கொஞ்சம் இலகுவானது. அவனை பார்த்து புன்முறுவல் புரிந்து தன் நன்றியை சொல்லாமல் சொல்லிவிட்டு படுக்க சென்றால். நந்தாவும் தன் அறைக்கு சென்று உறங்கிப் போனான்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அவனை எழுப்பிவிட்டு விட்டாள் மிருதுளா. நந்தாவுக்கு ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கமில்லை என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை.
'வசமாக மாட்டிக்கொண்டாகி விட்டது. இவள் ஒரு ஆசிரியை என்பதால் மிகவும் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்வாள்.' என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டான்.
அவள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு வாக்கிங் என்ற பெயரில் நடந்துவிட்டு வந்தான். பிறகு மாடியில் நின்று கொண்டு கை, காலை அசைத்தான். அறைக்குள் தண்டால் எடுத்துப் பழகினான். அதன் பின் குளித்துவிட்டு சாப்பிடப் போனான்.
மிருதுளாவும் குளித்து முடித்து ஃபிரெஷாக இருந்தாள்.
மிருதுளாவும் குளித்து முடித்து ஃபிரெஷாக இருந்தாள்.
"தினமும் இது மாதிரி பண்ணனும். அப்பதான் ஒடம்பு ஆரோக்யமாவும் அழகாகவும் இருக்கும்..” என்றாள்.
"இனிமே பாருங்க.. உங்கள அசத்திக்காட்றேன்..” என்றான் ஜம்பமாக.
"ஒண்ணு சொல்லவா ஆண்ட்டி..?”
"ம்ம்.. சொல்லு..”
"உங்களப் பாத்தா வயசான மாதிரியே தெரியல. இன்னும் இளமையாத்தான் இருக்கீங்க.”
"ம்ஹூம்..” பெருமிதமாகச் சிரித்தாள் "தேங்க்ஸ்..”
"எங்கம்மாக்கும் உங்களுக்கும் ஒரே வயசுதான ஆண்ட்டி.?”
"ஆமாப்பா..”
"ஆனா எங்கம்மா வயசானவங்கன்றது பாக்கும்போது நல்லாவே தெரியும். முடி நரைச்சிருச்சு, முகத்துல லேசா சுருக்கம் விழ ஆரம்பிச்சிருச்சு”
"என்னைக் கூட நல்லாபாரு தெரியும். முடில நரை விழ ஆரம்பிச்சாச்சு, முகத்துல சுருக்கம் இருக்கு. என்ன நான் பியூட்டி பார்லர் போறதால அது அவ்வளவா தெரியறதில்ல”
சிறு வயது முதலே அவள் ஒரு அழகி என்ற எண்ணம் அவன் மனதில் உண்டு. அந்த பிம்பம் இன்னும் கூட அவன் மனதுக்குள் அப்படியே இருந்தது. இப்போதும் அவள் முகத்தைப் பார்ப்பதே அவனுக்குப் பிடித்தமான ஒரு விசயமாக இருந்தது. அவளது தோற்றத்தில் ஆசிரியை என்கிற கம்பீரம் மிளிர்ந்தது.
சமயத்திற்கு ஏற்றார் போல அவளது கண்களில் கண்டிப்பும், கருணையும் மாறி மாறி வரும். அது இரண்டுமே அழகானவைதான். சில சமயம் அவள் கண்களைப் பார்க்கும் போது ‘என்னையே பார்த்துக்கொண்டிரு' என அவளது காந்த விழிகள் மெஸ்மரிசம் செய்வது போலிருக்கும்.
அவள் மனதில் எவ்வளவோ ஆழமான காயங்களும் வேதனைகளும் இருந்தும் இவளால் எப்படி இயல்பாக நடந்து கொள்ள முடிகிறது? என்கிற வியப்பு அவனுள் எழுந்தது. இத்தனை துயரங்கள் இருந்தும் எப்படி இந்த முகம் இத்தனை அமைதியாக, இத்தனை தெளிவாக, அடக்கமாக பார்ப்பவர் மனதில் ஒரு மதிப்பும் மரியாதையும் உருவாகும் வண்ணம் கம்பீரமாக இருக்கிறது? என மனதில் எண்ணினான்.
சிறு வயது முதலே அவள் ஒரு அழகி என்ற எண்ணம் அவன் மனதில் உண்டு. அந்த பிம்பம் இன்னும் கூட அவன் மனதுக்குள் அப்படியே இருந்தது. இப்போதும் அவள் முகத்தைப் பார்ப்பதே அவனுக்குப் பிடித்தமான ஒரு விசயமாக இருந்தது. அவளது தோற்றத்தில் ஆசிரியை என்கிற கம்பீரம் மிளிர்ந்தது.
சமயத்திற்கு ஏற்றார் போல அவளது கண்களில் கண்டிப்பும், கருணையும் மாறி மாறி வரும். அது இரண்டுமே அழகானவைதான். சில சமயம் அவள் கண்களைப் பார்க்கும் போது ‘என்னையே பார்த்துக்கொண்டிரு' என அவளது காந்த விழிகள் மெஸ்மரிசம் செய்வது போலிருக்கும்.
அவள் மனதில் எவ்வளவோ ஆழமான காயங்களும் வேதனைகளும் இருந்தும் இவளால் எப்படி இயல்பாக நடந்து கொள்ள முடிகிறது? என்கிற வியப்பு அவனுள் எழுந்தது. இத்தனை துயரங்கள் இருந்தும் எப்படி இந்த முகம் இத்தனை அமைதியாக, இத்தனை தெளிவாக, அடக்கமாக பார்ப்பவர் மனதில் ஒரு மதிப்பும் மரியாதையும் உருவாகும் வண்ணம் கம்பீரமாக இருக்கிறது? என மனதில் எண்ணினான்.
அந்த சமயம் அவள் மீது அவனுக்கு உண்டான அன்புக்கும் பிரியத்துக்கும் அளவே இல்லை.
”ஸோ நீ சாப்பிடறதா இல்ல.?” அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள் மிருதுளா.
”ஸோ நீ சாப்பிடறதா இல்ல.?” அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள் மிருதுளா.
நந்தா சுய உணர்வு பெற்றவனாகப் புன்னகைத்தான்.
"ஓ.. ஸாரி ஆண்ட்டி..”
"அப்படி என்ன யோசனை? ம்..?” புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
"உங்களப் பத்திதான்..”
"என்னைப் பத்தி அப்படி என்ன தீவிரமான யோசனை..?”
"உங்கள பாக்கற யாரும் உங்க வயச கணிக்க முடியாது..”
"சரிதான்..” சிரித்தாள் "இவ்ளோ நேரம் இதவா யோசிச்சிட்டிருந்த..?”
"ஐயோ.. வெளையாட்டல, நெஜமாதான் ஆண்ட்டி” தலையாட்டிச் சொன்னாள்.
"உடற்பயிற்சி, யோகா எல்லாம் தினமும் பண்ணா ஒடம்பு ஆரோக்யமா இருக்கும். வயசையும் அனுமானிக்க முடியாது. சரி சாப்பிடு மொதல்ல”
"ம்ம்.. உங்க கிட்டேர்ந்து நெறையக் கத்துக்கனும்..” என்றுவிட்டு சாப்பிடத் தொடங்கினான்.
இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான், மிருதுளா மெல்லிய குரலில் கேட்டாள்.
இரண்டு வாய் சாப்பிட்டிருப்பான், மிருதுளா மெல்லிய குரலில் கேட்டாள்.
"நெஜமா நான் இன்னும் இளமையா அழகா இருக்கனா நந்தா..?”
லேசான வியப்புடன் அவள் முகம் பார்த்தான். உதடுகள் விரியச் சிரித்தான்.
லேசான வியப்புடன் அவள் முகம் பார்த்தான். உதடுகள் விரியச் சிரித்தான்.
"அழகா மட்டுமில்ல சூப்பர் பிகராவும் இருக்கீங்க. இப்பக்கூட நீங்க தெருவுல நடந்து போனா பலபேர் உங்கள சைட் அடிப்பாங்க..”
"ச்சீ.. நாட்டி பாய்..” எனச் சிரித்தாள்.
அவளது முகத்தை ஆவல் பொங்கப் பார்த்தான்.
"என்ன..?” மெலிதான புன்முறுவலுடன் கேட்டாள்.
அவன் கண்களைச் சிமிட்டிச் சொன்னான்,
"ஐ லவ் யூ ஆண்ட்டி..”
தொடரும்...



Comments
Post a Comment