முழு தொடர் படிக்க
"ஹலோ! ... மிஸ்டர் ரகுராமன் பேசறீங்களா"
"ஆமாம்.. நான் ரகுராமன் தான் பேசறேன்... நீங்க யாரு?"
"சாரி.. நான் ராத்திரி நேரத்துல உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்."
"பரவாயில்லை... சொல்லுங்க"
'பரிச்சயமான குரலாயிருக்கே? இந்த குரலை நான் எங்கே கேட்டிருக்கேன்? ம்ம்ம்...' ரகுராமன் தன் நெற்றியைச் சொறிந்து கொண்டான்.
"ரகு... நான் குமார்... குமாரசுவாமி பேசறேன்" குமாரின் குரலில் நடுக்கமிருந்தது.
"குமார்...!! எப்படியிருக்கீங்க? இன் எவே.. ஐயாம் ஹாப்பி... உங்ககிட்ட நானே ஒரு முக்தியமான விஷயமா பேசணும்ன்னு இருந்தேன். ஆனா நீங்க முந்திக்திட்டீங்க; எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்ன்னு சொல்றாங்களே: அது இதுதான் போல இருக்கு: சொல்லுங்க குமார்.. எத்தனை நாளாச்சு உங்க குரலைக் கேட்டு... எங்கேருந்து பேசறீங்க..." ரகுராமன் மனதில் மின்னலாக ஒரு மகிழ்ச்சியின் ஊற்று உதயமாகியது.
"நல்லாயிருக்கேன்... இப்ப சென்னையிலேருந்துதான் பேசறேன். உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையாயிருக்கு... நீங்க சரின்னு சொன்னா நான் உங்களை நேரில் வந்து பாக்க விரும்பறேன். நேரா வீட்டுக்கு வர்றதுக்கு எனக்திருந்த உரிமையை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடியே இழந்துட்டேன்... சுந்தரியும் நீங்களும் இப்ப அந்த உரிமையை எனக்கு திரும்பவும் குடுத்தா... எனக்கு சந்தோஷமா இருக்கும்... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க... அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேன்."
"நான் பழசையெல்லாம் மறந்துட்டேன் குமார்... நீங்க என்னைப் பாக்க எப்ப வேணா வரலாம். உங்க கல்யாணத்துக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு இருந்தப்பவும், நான் தனியாளா உங்களை சப்போர்ட் பண்ணது உங்களுக்கு ஞாபகமிருக்கும். உங்ககிட்ட இருந்த ஒரு சின்னக் குறையால, நம்ம குடும்பத்துல, நம்மளுக்குள்ள இருந்த உறவுல விரிசல் ஏற்பட்டது உண்மைதான். அந்த விரிசலுக்கான குறையும் இப்ப உங்கக்கிட்ட இல்லேன்னு இப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது."
"நீங்க பழசெல்லாம் மறந்துட்டு என்கிட்ட அன்பா பேசறதுக்கு ரொம்பத் தேங்க்ஸ் ரகு..."
"குமார்... போன வாரம்.. பேச்சுவாக்குல வேற ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல சுகன்யாகிட்டச் சொன்னேன்... 'தீராத கோபம் யாருக்கு லாபம்'ன்னு?"
"ரகு... என் குழந்தை சுகன்யா எப்படியிருக்கா?"
"ரொம்ப நல்லாயிருக்கா... எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை நல்லபடியா வளர்த்து இருக்கோம். நீங்க அவளைப் பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவீங்க. இப்ப அவளும் சென்னையிலதான் வேலை செய்துட்டு இருக்கா.. நீங்க அவளைப் பாத்தா உங்க சுந்தரியை பார்க்க வேண்டாம்... அப்படியே சின்ன வயசு சுந்தரி மாதிரியே இருக்கா." ரகுவின் குரலில் பூரிப்பு வெளிப்பட்டது.
"சுகன்யா... என் சுந்தரி வளர்த்த பொண்ணு... அவ கண்டிப்பா நல்லபடியாத்தான் வளர்ந்து இருக்கணும்" குமாரின் குரலில் எல்லையற்ற ஏக்கம் வழிந்தோடியது.
"குமார்... நான் அக்காவோட செல் நம்பரும், சுகன்யாவோட நம்பரும் தரேன். நீங்க என்கிட்ட பேசினதையும் அக்காகிட்ட சொல்றேன். முதல்ல நீங்க அக்காகிட்ட ஒரு தரம் பேசுங்க. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சிக்கறது ரொம்பக்கஷ்டம்... நான் சொல்றது உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்... எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்பறேன்."
"ரொம்பத் தேங்க்ஸ் ரகு... நாளைக்க காலையில நான் சுந்தரிகிட்ட பேசறேன். பை தி பை... எங்கிட்ட நீங்க பேசணும்ன்னு இருந்ததா சொன்னீங்க... என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"எல்லாம் நல்ல விஷயம் தான்... பிளீஸ்... முதல்ல நீங்க சுந்தரியக்கா கிட்ட பேசுங்க... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். குட் நைட்"
"குட் நைட்..." குமாரசுவாமியிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.
************************************
காலையில் வழக்கம் போல் படுக்கையை விட்டு எழுந்த சுகன்யா, இரவு மழையில் நனைந்து, விடியற்காலையில் அயர்ந்து உறங்க ஆரம்பித்த சுந்தரியைப் பார்த்துவிட்டு, 'அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்' என்று மனதில் நினைத்துக்கொண்டே, கேஸில் பாலை ஏற்றிவிட்டு, இரண்டு தம்ளர் அரிசியை கழுவி, இன்னொரு பக்கம் அடுப்பில் ஏற்றினாள். பல் துலக்தி தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். பிரிஜ்ஜை திறந்து நேற்றைய தோசை மாவு இன்னும் மீதமிருப்பதைப் பார்த்தவள், 'காலை டிபனுக்கு இந்த மாவு போதும், இதை ஊத்தப்பம்மா ஊத்திக்கலாம். ஆபிசுக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் கொண்டு போய்விடலாம். மீதி சமையலை அம்மா பாத்துக்குவாங்க.' என மனதுக்குள் திட்டமிட்டாள்.
மனதில் திருப்தியுடன், சர்க்கரை குறைவாக தனக்கு மட்டும் காபியை கலந்து கொண்டு, கட்டிலில் உட்க்கார்ந்து நிதானமாக ரசித்து குடித்தாள்.
"சுகா, மணி என்னடி ஆச்சு, ஏண்டி என்னை எழுப்பலை?" குக்கரின் விசில் சப்தம் கேட்டு, மனதில் குற்ற உணர்வுடன் விருட்டென எழுந்த சுந்தரி தன் தலை கேசத்தை இறுக்கி முடிந்துகொண்டாள்.
"ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் மழையில நின்னே? அப்புறம் எப்பத் தூங்குனியோ? இப்ப எந்த பட்டினம் எங்க முழுகிப்போச்சுன்னு இப்படி அடிச்சுப் புடிச்சிக்கிட்டு எழுந்திருச்சிட்ட நீ?... இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க வேண்டியதுதானே?.." ஆசையுடன் தாயின் கழுத்தில் தன் கையைப் போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சுகன்யா.
"நாள் பூரா எனக்கு இங்க என்ன வேலையிருக்கு; நீ ஆபிசுக்கு போனதுக்கப்பறம் தூங்கிட்டுப் போறேன்... எனக்கும் காபியை கலக்குடி சுகா. காபியில ஒரு துளி அதிகமா சக்கரையைப் போடு; ஒரு நிமிஷத்துல வர்றேன்..." சொல்லியாவாறே அவள் பாத்ரூமில் நுழைந்தாள்.
"என்னப் பண்ணியிருக்கே இப்ப நீ" சுகன்யா கொடுத்த காஃபியை வாங்கி உறிஞ்சினாள் சுந்தரி.
"ரெண்டு டம்ளர் சாதம் ஏத்தியிருக்கேன்... வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியா அரிஞ்சு நேத்து மிஞ்சின மாவுல கலந்து வெச்சிருக்கேன்: காலை பபனுக்கு அதை ஊத்திக்கலாம்; தொட்டுக்க தக்காளிச் சட்டினி அரைச்சுக்கலாம். உனக்கு மதியத்துக்கு என்ன வேணுமோ சூடா பண்ணிக்கிறியா?"
"தயிர் நெறய இருக்கு. ஒரே வழியா எனக்கும் சேத்து தயிர் சாதமா கிளறிடலாம்; ஒரு நாளைக்கு சிம்பிளா நானும் அதையே சாப்பிட்டுக்கிறேன்," சுந்தரி எழுந்து குளிப்பதற்காக குளியறைக்குள் நுழைந்தாள்.
சுகன்யா பால்கனியில் நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். வீதியில் ஆண் பெண், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல், நடந்தும், சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும், மக்கள் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டுருந்தார்கள்.
'இவ்வளவு காலையில் இவ்வளவு பேர் எங்கே வேகமாக ஓடிக்கொண்டுருக்கதிறார்கள். யாராவது காரணமில்லாமல் இத்தனை பரபரப்புடன் ஓடுவார்களா? இவ்வளவு பேருக்கும் அப்படி என்ன அவசர வேலை இருக்க முடியும்.' அவள் வியப்புடன் தன் மனதில் சிரித்துக்கொண்டாள்.
சுகன்யா வீதியை எந்த வித இலக்குமின்றி பார்த்துக்கொண்டுருந்த போதிலும் அவள் மனம் தன் தாயை நினைத்து புழுங்கிக்கொண்டிருந்தது. நேற்றிரவு தான் தூங்கியபின் வெகு நேரம் தூங்காமல் மன உளைச்சலுடன் இருந்த தன் தாயை நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
'நான் நல்லா இருக்கணும்; நான் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும்ங்கறதுக்காக, தன் கணவனை விட்டுட்டு, இவ்வளவு நாளா ஒண்டியா எனக்காக வாழ்க்கையில போராடியிருக்காங்க. தனியா நின்னு கஷ்டப்பட்டு என்னை சொந்த கால்ல நிக்கற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க: என் மனசுக்கு புடிச்ச ஒருத்தனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு சுதந்திரமும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்காங்க. நான் அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னதுலேருந்து, அவங்களுக்கு அவங்க மனசாழத்துல தூங்கிட்டிருந்த என் அப்பாவோட நினைவு வந்துடுத்து. தனிமை அவங்களை கஸ்டப்படுத்துது. இன்னைக்கெல்லாம் பாத்தாலும் அம்மாவுக்கு நாற்பத்தாறு வயசுதான்: அந்த வயசுக்கு இருக்கற உடம்பின் ஏக்கமும், மனசின் தவிப்பும் அவங்களை நிலை குலய வெக்குது: இதுக்கு ஒரே வழி அப்பாவை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து வைக்கிறதுதான். எனக்காக தன் வாழ்க்கையையும், தன் இளமையையும், தூசா நினைச்சவங்களுக்கு நான் செய்ய வேண்டிய முதல் காரியம் அப்பாவைப் பத்தி மாமா கிட்ட விசாரிக்கறதுதான். ராத்திரியெல்லாம் நல்லா மழை பேஞ்சுருக்கு; நல்லாத் தூங்கி எழுந்தா அவங்க உடல் தவிப்பு தற்காலிகமா அடங்கிப் போகாலாம். ஆனா அவங்க மனப்புழுக்கம் அவ்வளவு சீக்திரம் அடங்கிடுமா? இன்னைக்கு வெயிலைக் காணோம்; குறைஞ்ச பட்சம் இன்னைக்கு உடல் புழுக்கம் இல்லாம நானும் ஆபிசுக்கு போகலாம்' அவள் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி பிறந்தது.
"சுகா... கண்ணு... கொஞ்சம் உள்ளே வர்ரயாமா... அந்த நீலக் கலர் ஸாரியை என் பெட்டியிலேருந்து எடுடி கண்ணு."
தன் தாயின் இடுப்பு வரை புரளும் நீண்ட கருத்த கூந்தலையும், திருத்தமான முகத்தையும், கருத்த கண்களையும், மெல்லிய ரோஜா நிற உதடுகளையும், சீரான வென்னிற பல் வரிசையும், நீண்ட தீர்க்கமான மூக்கையும், வாளிப்பான மார்புகளையும், கட்டியிருந்த பாவாடைக்கும், ரவிக்கைக்கும் நடுவில் வழவழவென சுருக்கமில்லாமல், அதிகமாக மேடிடாமல் பளிச்சிடும் அவள் இடுப்பையும், பாவாடைக்குள் அசையும் பருத்த பிருஷ்டங்களையும், நீளமான செழித்த வலுவான தொடைகளையும், பாவாடைக்கு வெளியில் பளிச்சிட்ட வெள்ளை நிற பாதங்களையும், பாதங்களை அழகு செய்யும், மெல்லிய தங்கக் கொலுசையும் பார்த்த மகளின் வயிற்றில் ஒரு சங்கடமான உணர்வு எழுந்தது.
'ம்ம்ம்... கடவுளே ஏன் இப்படி பண்ணிட்ட? என் அம்மா எப்ப பண்ணத் தப்புக்கு இப்படி அவங்களை தவிக்க விட்டுட்ட? பதினைஞ்சு வருஷமா, என் அம்மாவோட அழகெல்லாம் இப்படி விழலுக்கு இறைச்ச நீரா வீணாகிட்டு இருக்கே? நல்லா சுகமா வாழ வேண்டிய வயசுல என் அப்பாவை அவங்க கிட்டேயிருந்து பிரிச்சிட்டியே?' குளித்துவிட்டு சந்தன சோப்பின் மணம் கமழ பாத்ரூமிலிருந்து பாவாடையும், ஜாக்கெட்டுமாக ரூமுக்குள் வந்து நின்றிருந்த சுந்தரியின் குரல் கேட்டு, உள்ளே வந்து தன் தாயை நோக்கிய சுகன்யாவின் முகம் சுருங்கி அவள் மனம் பதை பதைத்தது.
"என்னடி சுகா... என்னாச்சு உனக்கு: ஏன் அப்படி என்னை உத்துப் பாக்கறே? குறுகுறுன்னு இருக்கு எனக்கு" புடவையை அவள் கையிலிருந்து வாங்கிய சுந்தரியின் குரலிலும் இனம் தெரியாத ஒரு தவிப்பிருந்தது.
"ஓண்ணுமில்லேம்மா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. முதல் காரியமா அப்பாவை கொண்டு வந்து அம்மாவின் முன் நிறுத்த வேண்டும் என்று நேற்றிரவு அவள் எடுத்த முடிவு மீண்டும் மனதில் உறுதியாக எழுந்தது.
************************************
சுகன்யா தன் அலுவலகத்தில் நுழைந்தவுடன், முதல் வேலையாக, வரும் திங்கள் கிழமையிலிருந்து ரெண்டு வாரத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி கையெழுத்திட்டு, தானே கையோடு எடுத்து சென்று தன் மேலதிகாரி கோபாலனுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.
தன் அறைக்கு திரும்பியவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து அன்று செய்யவேண்டிய வேலைகளை நோட்டமிட்டாள், மின்னஞ்சலில் அவளுக்கு ஏதும் புதிய வேலை வந்திராததால், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அவளுக்கு அன்று அலுவலகத்தில் வேலை செய்யவேப் பிடிக்கவில்லை. தன் மேஜையின் மேல் ரெண்டு நாட்களாக கிடந்த மூன்று கோப்புகளையும் விறு விறுவென படித்து, அந்த பிரிவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான குறிப்புகளையும், அடுத்து உரியவர்களுக்கு அனுப்ப வேண்டிய பதில்களையும் தயாரித்து, கடித நகல்களை அச்செடுத்து, கோப்புகளில் முறையாக சேர்த்து விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.
"ஏண்டி சுகன்யா... வாயேண்டி ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரலாம்" அவள் பின் சீட்டுக்காரி வித்யா தன் வயிற்றை சாய்த்துக்கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.
"ம்ம்ம்... போகலாம் வா... உன் உடம்பு எப்படியிருக்கு, பசிக்கலேன்னு சொல்லிக்கிட்டுருந்தியே... இப்பத் தேவலையா?"
"எனக்கென்னடி கேடு... நான் நல்லாத்தான்யிருக்கேன்... என் வயித்துல இருக்கறதை, கீழ எறக்கி வெக்கிற வரைக்கும்... உடம்பு தினம் ஒரு மாதிரிதான் இருக்கும்... அதை விடு.. உன் ஆளு செல்வா எப்படியிருக்கான்... இப்ப தேவலையா அவனுக்கு? நீ தான் அவன் கூடவேயிருந்து ராப்பகலா பாத்துக்கிட்டியாமே? வந்து அவனைப் பாக்கணும்ன்னு நினைச்சேன்... என் வீட்டுக்காரர் வேற ஊருல இல்ல; வாயும் வயிறுமா இருக்கற நான் தனியா எங்க வந்து பாக்கறது? தப்பா நினைச்சுக்காதடி என்னை: எல்லார்கிட்டவும் மரியாதையா பேசறவம்பா உன் ஆளு; இந்த ஆஃபீசுல யாரை வேணா கேளு; அவனைத் தங்கமான பையன்னுதான் சொல்லுவாங்க."
"ச்சே ச்சே... உன் நிலைமை எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்கு நான் தப்பா நெனைக்கப் போறேன்? நான் அவன் கூட இருந்து பாத்துக்கறதை உனக்கு சொன்னவங்க, அவன் எப்படி இருக்காங்கற சேதியை உங்கிட்ட சொல்லலியா?" அவள் குரலில் கேலி தொனித்தது.
"என்னடி என் கிட்டவே கிண்டலா?" வித்யா அவள் முதுதில் செல்லமாக அடித்தாள்.
"நான் ராத்திரியும் பகலும் அவன் கூட குடும்பம் நடத்தறேன்னு யார் சொன்னது உனக்கு...?"
"வேற யாரு... நம்ம பெண்கள் சங்கத் தலைவி குண்டு சாவித்திரி தான்... அவ பேங்க் பாஸ் புக்கை எடுக்க நேத்து சாயங்கலாம் இங்க வந்திருந்தா... மறந்து இங்க வெச்சிட்டு போயிட்டாளாம்; 'அடியே வித்யா! அந்த செல்வா குடுத்து வெச்சவன்னு நினைக்கிறேன்; தாலி கட்டிக்கிட்டவ கூட தன் புருஷனை இப்படி பாத்துக்க மாட்டா; உன் ஃப்ரெண்ட் சுகன்யா ஆஸ்பத்திரியே கதியா அவன் பக்கத்துலேயேதான் இருக்காளாம்'ன்னு சங்கு ஊதினா" சொல்லிய வித்யா சிரித்தாள்.
"வேற என்ன சொன்னா அவ?"
"நீ கூடிய சீக்திரம் கல்யாண சாப்பாடு போடுவேன்னு சொன்னா"
"நிஜமா அப்படியா சொன்னா... இல்ல... இது நடுவுல நீ போடற பிட்டா?"
"நிஜமாத்தாண்டி சொல்றேன்... அப்படித்தான் சொன்னா அவ."
"இல்ல வித்யா.. சாவித்திரி இன்னும் கூட செல்வாவை தன் பொண்ணுக்கு எப்படியாவது முடிக்கணும்ன்னு முயற்சி பண்றா.. செல்வாவோட அம்மாவைப் பத்தி தீர்மானமா ஒண்ணும் சொல்ல முடியலை; அவங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியலை; இன்னும் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறாங்க... அவங்க அப்பாவுக்கு என்னை பிடிச்சுப் போச்சு: அவர் எங்க பக்கம்ன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு... இதை நான் உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன்... இப்போதைக்கு இதை நீ யாருக்கிட்டேயும் சொல்லாத... உன் மனசோட வெச்சுக்க... உனக்கு தெரியாமலா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்?" சுகன்யா புன்னகைத்தாள்.
"சுகன்யா... எல்லா வீட்டுலயும், கடைசியா ஆம்பிளை சொல்றதுதான் நடக்குது: அவன் அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கற பட்சத்துல, உன் கல்யாணம் எல்லோருடைய ஆசீர்வாதத்துடன் நடக்கும்ன்னு நம்புவோம். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; செல்வாவோட அம்மா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஜாதி பிரச்சனையை கிளறலாம். உன் ஆளோட அப்பாவும் இந்த விஷயத்துல சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரல்லேன்னா, ஆபிசுல நாலு பேரு நாலு விதமா பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, செல்வா ஆஸ்பத்திரியிலேருந்து வந்தவுடனே, ரெண்டு பேருமா காதும் காதும் வெச்ச மாதிரி அம்பாள் சன்னதியில உன் கல்யாணத்தை முடிச்சுக்கற வழியைப் பாருங்க; கல்யாணத்தையும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணிட்டீங்கன்னா அதுக்கப்புறம் சாவித்திரி மாதிரி எந்த நாயும் உன்னைப் பாத்து கொலைக்க முடியாது. என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன்: நாளைத் தள்ளிப் போடாதே" வித்யா தன் வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள்.
தொடரும்...
Comments
Post a Comment