இரவு எத்தனை மணிக்குத் தூங்கப் போனாலும் விடியற்காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் குமாரசுவாமிக்கு இருந்தது. சென்னைக்கு வந்த பின்னரும், அதே வழக்கத்தின் படி காலையில் எழுந்த குமாரசுவாமி கடற்கரை ஓரமாக சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தார்.
அரை மணி நேரம் நடந்தவரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து, கரையில் பெரும் ஓசையுடன் வந்து மோதி, பின் மீண்டும் கடலுக்கள் சென்ற அலைகளை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்யுருந்தார். மனம் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தது.
வழக்கமான அலுவலக வேலைகளை பனிரெண்டு மணிக்குள், லஞ்சுக்கு முன் முடித்தப்பின், சுந்தரியுடனும், சுகன்யாவிடமும் பேசவேண்டும். ரகு தன்னிடம் நேற்றிரவு சொன்னது போல், தன் தமக்கையிடம் எனக்கு முன் பேசிவிட்டால் என் வேலை கொஞ்சம் சுலபமாதிவிடும்.
நான் முதலில் யாரிடம் பேசுவது? என் பெண் சுகன்யாவிடமா இல்லை, என் மனைவி சுந்தரியிடமா? ரகுவைப் போல் சுந்தரி என்னிடம் சகஜமாக பேசுவாளா? அவளுக்கு என் மேலிருக்கும் கோபம் இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமாவது தணிந்திருக்காதா? ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், அவளை சந்திக்க விரும்பிய என் பெற்றோர்களை பார்க்க மறுத்தவள் தானே அவள்? என் சொந்த மனைவியிடம் பேசுவதற்கு நான் ஏன் இந்த அளவுக்கு தயங்குகிறேன்?
நேற்றிரவு என் மனைவியிடம் பேசி அவளைச் சந்தித்து பிளவு பட்டிருக்கும் உறவை மீண்டும் சுலபமாக புதுப்பிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. இன்று அவளை உடனடியாகப் பார்க்க வேண்டும் என என் மனம் தவிக்திற போதிலும், இந்த நிமிடத்தில் என் மனம் அவளுடன் பேசும் முயற்சியை ஏன் இத்தனை கடினமாக நினைக்கிறது?
இதை கஷ்டம்ன்னு நினைச்சா, முதல்ல நான் சுகன்யாவிடம் பேசலாம். அவளுக்கு சுந்தரி அளவிற்கு என் மேல் கோபம் இருப்பதற்கு வழியில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயம் தப்பாகவும் இருக்கலாம். ஆனால் அவளுடன் பேசுவது மூலம், சுந்தரியின் இன்றைய மன நிலமை ஓரளவிற்குத் தெரியவரலாம்.
ம்ம்ம்... இது சரியான வழியாகத் தோன்றுதிறது.
குமாரசுவாமி உடனடியாக சுகன்யாவிடம் பேச நினைத்து அவள் நம்பரை அமுத்தியவர், மனதில் திடீரென ஏதோ தோன்ற, சட்டென தொடர்பைத் துண்டித்தார். உள்ளத்தில் ஒரு தீர்மானத்துடன் கெஸ்ட் ஹவுஸை நோக்தி விறு விறுவென நடக்கத் தொடங்கினார்.
************************************
சுகன்யா தன் இருக்கைக்கு வந்தவள், காலையில் அனுப்பியிருந்த கோப்புகள் திரும்பி வராததால், தன் மாமா ரகுவிடம் பேச நினைத்து, தன் செல்லை எடுத்தப் போது, மிஸ்டு கால் லிஸ்டில், ஒரு புதிய எண் மின்னுவைதைப் பார்த்தாள்.
'யாருடைய நம்பர் இது? காலை ஆறு மணி வாக்திலே யாரோ எனக்கு கால் செய்திருக்திறார்கள். நான் இதை கவனிக்கவேயில்லையே? எதாவது ராங்க் நம்பராக இருக்குமோ' என யோசித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய போன் ஒலிக்க ஆரம்பித்தது.
'மீண்டும் அந்த நம்பரிலிருந்து தான் தொடர்பு கொள்ள நினைக்திறார்கள். யார் இது? செல்வா இருக்கற ஆஸ்பத்திரியிலிருந்து வருதிறாதா என்ன...' இந்த எண்ணம் வந்ததும்... மனதில் பதைப்புடன், காலை ஆன் செய்து பேசத் தொடங்கினாள்.
"மிஸ் சுகன்யாவோட நம்பர் தானே இது" அடுத்த முனையிலிருந்து ஆண் குரலொன்று வெகு மரியாதையுடன் வந்தது.
"ம்ம்ம்... நீங்க யாரு..." செல்வாவுக்கு எதாவது ஆகியிருக்குமா... ராத்திரி நல்லத்தானே இருந்தான்...' அலுவலக வேலையில் கவனமாக இருந்ததால், காலையிலிருந்து அவனிடம் பேசாதது அவள் மனதில் சுருக்கென உறைத்தது. அவள் மனதில் அவன் நினைவே மீண்டும் மீண்டும் வர சுகன்யா தவிப்புடன் பேசினாள்.
அவள் "ஆம்" என்றோ "இல்லை" என்றோ சொல்லாததால், ஒரு வினாடி அடுத்த முனையிலிருந்து பேசிக்கொண்டுருந்த குமாரசுவாமியும் தயங்கினார் ... 'நேற்றிரவு நான் ரகு குடுத்த நம்பரை சரியா நோட் பண்ணினேனா இல்லையா?'
"ரகு எனக்கு இந்த நம்பரைக் குடுத்தார்... நீங்க... நீ... 'சுகா' தானம்மா பேசறே...” குமாரின் குரல் தழுதமுப்புடன் வந்தது.
'இவன் என் மாமாவின் பெயரைச் சொல்றாரே... மாமா என் நம்பரை குடுத்தாருன்னும் சொல்றார். என் நம்பரை யாருக்கு குடுத்தாலும் உடனடியா மாமா என்னைக் கூப்பிட்டு சொல்லுவாரே? குரல் கொஞ்சம் முத்தின குரலா இருக்கு... ஆனா குரல்லே ஒரு மிடுக்கும், கம்பீரமும் இருக்கே? யாராக இருக்கும்?... ஈவன் செல்வாவுக்கு கூட என் செல்லப் பேர் தெரியாதே? "சுகா"ங்கற என் பெயர் இவருக்கு எப்படி தெரிஞ்சுது... சுகான்னு என்னைச் செல்லமா கூப்பிடறவங்களே ரெண்டு பேருதானே?... ஒருத்தர் என் மாமா: இன்னொருத்தர் என் அம்மா: மூணாவதா என் செல்லப் பேர்ல என்னை உரிமையோட கூப்பிடறது யாரா இருக்கும்?' சுகன்யா திகைத்தாள். சிறிய வயதில் தன்னை இப்படி கூப்பிட்டவரின் நினைவு அந்த நேரத்தில் அவளுக்கு சுத்தமாக உதிக்கவேயில்லை.
"ஆமா... நான் சுகா... சுகன்யாதான் பேசறேன்.. என்னை நீங்க... 'சுகான்னு' கூப்பிட்டீங்க; இந்த பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்..." அவள் தன் மேனி சிலிர்க்க, தன் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில், அந்த உணர்ச்சியுடன் சிறிது ஆச்சரியம் தொனிக்கப் பேசினாள்.
"ம்ம்ம்... சுகா! என்னை நீ மொத்தமா மறந்துட்டிருக்கேம்மா... பரவாயில்லே; உன் மேல எந்தத் தப்பும் இல்லேம்மா... தப்பெல்லாம் என் பேர்லதாம்மா.. நீ பொறந்து, உனக்கு சுகன்யான்னு பேரு வெச்சதும் அந்தப் பேரை சுருக்கி ஆசை ஆசையா 'சுகா'ன்னு உன்னை முதல்ல கூப்பிட ஆரம்பிச்சதே நான்தாம்ம்மா... அதுக்கப்புறம்தான் உங்கம்மாவே உன்னை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா!" அவர் குரலில் துக்கம் பொதிந்திருக்க, குரலில் அப்பட்டமான வருத்தத்துடன் பேசினார் குமாரசுவாமி.
அந்த குரல் தன் தாயை ஒருமையில் குறிப்பிட்டு பேசிய கணத்தில் அவளுக்கு விளங்கிவிட்டது... பேசுபவர் வேறு யாருமில்லை... யாரைத் தேட வேண்டும் என நினைத்திருந்தாளோ... அவர்தான் இவர்... 'இத்தனை சுலபமா என் வேலை முடயுஞ்சு போச்சா?.. அப்பா... என் அப்பாவா பேசறார்... இவர் நிச்சயமா என் அப்பாதான்' சுகன்யாவின் உடல் புல்லரித்தது. 'அம்மாவுக்கு உடனடியா போன் பண்ணி சொல்லணும்...' அவள் ஆடவில்லை; அவள் சதை தானாக ஆடியது; அவள் முகம் கோணிக்கொண்டது: உதடுகள் துடித்தன: சுகன்யாவின் கண்கள் சந்தோஷத்தில் கலங்க ஆரம்பித்தது; அவள் முழு உடலும் பரவசமானது: லைப் ஈஸ் ஸ்டேரேஞ்சர் தேன் பிக்ஷன்னு சொல்றாங்களே; இது எவ்வளவு உண்மையான ஒரு வார்த்தை... ஒரு வினாடி அவளுக்கு பேசுவதற்கு குரல் எழும்பவில்லை.
"சுகா... என்னம்மா பேசமாட்டேங்கற... உனக்கும் என் மேல கோவம்ன்னு நினைக்திறேன்..." அடுத்த முனையிலிருந்து குரல் தயக்கத்துடனும், தழுதழுப்புடனும் வந்தது.
"அப்... அப்பா... நீங்க... என் அப்பாதானே பேசறீங்க.. சாரிப்பா... என்னால சட்டுன்னு புரிஞ்சுக்க முடியலைப்பா.. உங்களை நான் யாருன்னு கேட்டுட்டேன்... வெரி வெரி சாரிப்பா... உங்களை பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா; நீங்க எங்கேருந்து பேசறீங்கப்பா?"
"நீ இருக்கற சென்னையிலேதான் நானும் இருக்கேன்: நானும் உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு கொஞ்ச நாளா துடிச்சுக்கிட்டிருக்கேண்டா செல்லம்; அதுக்காகத்தான் என் வேலையெல்லாம் மாத்திக்கிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கேன்; எனக்கு மேல உன் தாத்தாவும் பாட்டியும் உன்னைப் பாக்கணும்ன்னு தவிச்சிக்கிட்டிருக்காங்கம்மா: உன் அம்மா நல்லாயிருக்காங்களா? உன் அம்மா இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காளா?"
"இல்லப்பா... அப்படியெல்லாம் இல்லைப்ப்பா.. அம்மா ரொம்ப நல்லவங்கப்பா... உங்க மேல உயிரையே வெச்சிருக்காங்கப்பா... ஒரு வீம்புல... ஒரு வைராக்கியத்தோட அவங்க தன் வாழ்க்கையை எனக்காக வாழ்ந்துட்டு இருங்காங்கப்பா... உங்க மேல அவங்களுக்கு கோவம் இல்லப்பா... நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு.. எப்பவும் தன்னையேத்தான் அவங்க நொந்துப்பாங்க... என் எதிர்ல உங்களை எப்பவும் தப்பாவே பேசினது இல்லப்ப்பா... என் அம்மாவை சொல்றீங்களே: நீங்க மட்டும் இத்தனை வருவும் எங்களையெல்லாம் பாக்க வராமத்தானே இருந்தங்க?" சுகன்யா மேலே பேச முடியாமல் விம்ம ஆரம்பித்தாள்.
"சாரிடா ராஜா... உங்களையெல்லாம் நான் ரொம்பப் படுத்தி எடுத்துட்டேன்... உங்கம்மாவுக்கு நான் ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன். சாரிடா கண்ணு... நேத்துதான் உன் நம்பரையும், உன் அம்மா நெம்பரையும் உன் மாமாகிட்டேயிருந்து வாங்கினேன். உண்மையை சொல்லணும்ன்னா, நீ என்கிட்ட பேசுவியோ... மாட்டியோன்னு காலையிலேருந்து பயந்துகிட்டே இருந்தேம்மா." குமாரசுவாமியின் குரல் நொறுங்கியது.
"அப்பா... அழறிங்களாப்பா... அழாதீங்கப்பா" சுகன்யாவின் குரல் தேய்ந்து உணர்ச்சி மிகுதியில் மெல்லியதாகி விட்டிருந்தது.
"ம்ம்ம்ம் ... உன் அம்மாவைப் பத்தி நீ சொன்னதும்... என்னால என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலடா செல்லம்..."
"அப்ப்பா"
"சுகா... நீ இப்ப நல்லா படிச்சு, பெரிய பொண்ணாகி, நீயும் வேலை செய்யறதா உன் மாமா சொன்னாரு; நீ உங்கம்மா மாதிரியே அழகாயிருக்கேன்னு சொன்னாரு; நேத்து ராத்திரி உன் மாமா உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசினாரு: நான் அவரோட பேசினதை அவர் உங்கக்கிட்ட சொல்லலியா?"
"இல்லப்பா."
"இட்ஸ் ஆல் ரைட்... நானே உங்ககிட்ட பேசணும்ன்னு அவரு நினைச்சிருக்கலாம். அதுல ஒன்னும் தப்பில்லே; நீ இப்ப எங்க இருக்கே?"
"ஆபீசுலதான் இருக்கேம்பா"
"உன்னை நான் இப்ப பாக்க வரலாமா? உனக்கு எப்ப லஞ்ச் டயம்? நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஒண்ணா லஞ்ச் சாப்பிடலாமா? நான் இப்ப அங்க வந்தா உனக்கு தொந்தரவா இருக்காதே?" குமாரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க, இன்னமும் குரலில் சிறு நடுக்கத்துடன் பேசிகொண்டிருந்தார்.
"என்னப்பா இப்படி கேக்கறீங்க? நான் வேலை செய்யற கவர்ன்மெண்ட் ஆபிசு பீச்சு ரோடுல ஆல் இண்டியா ரேடியோ பக்கத்துல இருக்குப்பா. என் ஆபீஸோட பேரு 'xxx' யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க; நான் உங்களுக்காக ஆஃபீஸ் ரிசப்ஷன்ல வந்து நிக்கறேன்: எனக்கு உங்களை இந்த நிமிஷமே பாக்கணும் போல இருக்குப்பா." இப்போது சுகன்யா தெளிவாக பேச ஆரம்பித்திருந்தாள். குரலில் அளவில்லாத மதிழ்ச்சி பொங்கி வழிந்தது.
"சரிம்ம்மா... நீ சொல்ற இடம் எனக்குத் தெரியும். நான் இருபது நிமிஷத்துல அங்கே வரேன்."
தன் தந்தையிடம் போனில் பேசமுடித்த சுகன்யாவுக்க கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மேஜையின் மேலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்தவள், வாட்டர் கூலரை நோக்கி ஓடி பாட்டிலை நிரப்பிக் கொண்டு, தன் ஹாண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு வெளிக்கதவை நோக்கி ஓடினாள்.
"அடியே சாவித்திரி... எங்கப்பா என்னை பாக்க வந்துட்டுருக்காருடி: சுகன்யாவுக்கு அப்பன் இல்ல; அவ வாழாவெட்டி வளர்த்த பொண்ணுன்னு, திரும்பியும் நீ போய் என் வருங்கால மாமியார் மல்லிகாகிட்ட தூபம் போட முடியாதுடி... நான் கும்பிடற அம்பாள் என் பக்கத்துல இருக்கா... தெரிஞ்சுக்கோ" அப்பாவை சந்திக்க ஓடியவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
லிப்ட்டுக்கு காத்திராமல் வேகமாக படியில் இறங்கத் தொடங்கியவள், 'கம்ப்யூட்டர் ஆன்ல இருக்கே! அப்படியே ஓடி வந்துட்டோம்; யார்கிட்டவும் சொல்லவும் இல்லே; நாளைக்கு ஆபீஸ் வேற லீவு' என்றெண்ணி போன வேகத்தில் திரும்பி தன் அறைக்குள் ஓடி கணிணியை ஷட் டவுன் செய்தாள், தன் ட்ராயரை மூடிப் பூட்டி சாவியை, கைப்பையில் போட்டுக் கொண்டவள், அதே மூச்சில் தன் மேலதிகாரி கோபலன் ரூமுக்கு ஓடினாள். ஆபீஸ் நேரத்தில் வெளியில் செல்ல அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரும்பவும் தன் அறைக்குள் நுழைந்து, சுந்தரி கொடுத்து அனுப்பியிருந்த மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனை நோக்கி மூச்சிரைக்க ஓடினாள்.
"செல்வாகிட்ட தனியா பேசணுமா? பேசுடி... நல்லா பேசு... இன்னைக்கே என் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லி என் கல்யாணத்தை பத்தி பேச சொல்லி அவரை நான் நடராஜன் கிட்ட அனுப்பறேன். உன்னால முடிஞ்சதை நீ பாரு; என்னால முடிஞ்சதை நான் பாக்திறேன்" அவள் முகத்தில் சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள்.
எதிரில் வந்து கொண்டுருந்த வித்யாவிடம், "கொஞ்சம் அவசரமா வெளியில போறேன்: முக்கியமான ஒருத்தரை பாத்தே ஆகணும். நான் மேல அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல்ஸ் திரும்பி வருது: அதுல கோபலன் சார் கையெழுத்து போட்டு இருக்கற லெட்டர்ஸை மட்டும் டெஸ்பேச்சுக்கு அனுப்பிடும்மா... ப்ளீஸ்" என்று அவள் கன்னத்தைக் மெதுவாகக் கிள்ளினாள். அவள் பதிலுக்கு காத்திராமல் மாடிப்படிகளை ரெண்டு ரெண்டாக தாவி இறங்கினாள்.
"ம்ம்ம்.. இந்த சுகன்யாவுக்கு என்னாச்சு? ஒழுங்கா இருந்த பொண்ணு; என்னைக்கு செல்வா இவளுக்கு நூல் விட்டானோ அன்னையிலேருந்து இவளுக்கு பித்தம் புடிச்சு போச்சு. நினைச்சா வர்றா; நினச்சா ஓடறா: கேக்க ஆளு இல்லாமப் போச்சு? கழுத்துல ஒரு தாலி ஏர்ற வரைக்கும்தான், இந்த காதல் கத்தரிக்கா பிஸினஸ் எல்லாம்... அப்புறம் என்னை மாதிரி வயித்தை ரொப்பிக்கிட்டு, ஓடுங்கிப் போய் ஓக்காந்துக்குவா..." அவள் தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள். சுகன்யாவின் டேபிளின் மீதிருந்த அவள் மொபைல் ஒலிக்க,
"செல்லை விட்டுட்டு போயிட்டாளா? அப்படி என்ன அவசரம் இவளுக்கு? இப்ப நான் வயித்தை சாய்ச்சுக்கிட்டு எங்கேயிருந்து இவ பின்னால அலையறது?" வித்யா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் போதே, சுகன்யா மூச்சிறைக்க வந்தவள், அவசரத்தில் விட்டுவிட்டு போன செல்லை எடுத்து ஹெலோ என்றாள்.
"அம்மா பேசறேண்டா கண்ணு; சாப்பிட்டியா?"
"இல்லம்மா... இனிமேத்தான்... ஏம்மா?"
"தயிர் சாதத்துல உப்பு கம்மியா இருக்கு... கொஞ்சம் போட்டுக்கோ" சுந்தரி குரலில் கரிசனத்துடன் பேசினாள்.
"சரிம்மா... நீ சாப்பிடு... நான் சாப்பிடத்தான் போயிட்டிருக்கேன்."
'அப்பா என்னைப் பாக்க வந்துட்டு இருக்காருன்னு அம்மாவிடம் சொல்லலாமா?' சுகன்யாவின் மனம் துடித்தது.
'வேண்டாம் முதல்ல அப்பாவை பாத்து ஆசை தீர பேசிட்டு, எப்ப வீட்டுக்கு வருவார்ன்னு கேட்டு, நேரா அழைச்சுக்கிட்டு போய் சஸ்பென்ஸா அவங்க முன்னாடி நிறுத்தணும். அதுக்கு முன்னாடி இப்ப அரை குறையா சொல்லிட்டா, அம்மா மனசுல நிம்மதியில்லாம இருப்பாங்க, இது தான் சரி' என மனதில் நினைத்துக்கொண்டு, வித்யாவை நோக்கி மீண்டும் ஒரு முறை கையசைத்துவிட்டு, வாசலை நோக்கி நடந்தாள்.
************************************
மணி பகல் ஒன்றாதஇயிருந்தது. சுந்தரிக்கு பசி எடுத்தது. நிதானமாக தயிர்சாதத்தையும், உடன் காலையில் அரைத்த தக்காளிச் சட்டுனியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
சாப்பிட்டு முடித்ததும், 'சுகன்யா வர இன்னும் அஞ்சு மணி நேரம் ஆகும், என்ன பண்றது வெட்டு வெட்டுன்னு முழிச்சிதிட்டு இருக்கணுமா?' என்று நினைத்துக் கொண்டே அறைக் கதவைக் மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள். கண்ணை மூடியவளின் மனது அடுத்த நொடி ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. மனதில் குமாரின் முகம் பளிச்சென்று வந்து உட்க்கார்ந்து கொண்டது.
"ஏ.. மனமே கொஞ்ச நேரம் சும்மா இரேன்..." அவள் தன் மனதை சலித்துக்கொண்டாள்.
வலுக்கட்டாயமாக மனதில் நின்ற தன் கணவன் முகத்தை அழிக்க முயற்சித்தும் முடியாமல், மெல்ல எழுந்து தன் பெட்டியைத் திறந்து புடவைகளின் அடியில் கிடந்த குடும்ப போட்டோ ஆல்பத்தை பிரித்தாள். குமார் அவள் தோளில் தன் இடது கையை போட்டு, தன் தோளோடு அவளை அணைத்துக்கொண்டிருக்க, சுந்தரியின் இடுப்பு வரை வளர்ந்திருந்த சுகன்யா, ரோஜாப் பூவாக கேமராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
ஆசையுடன் போட்டோவிலிருந்த சிறு வயது சுகன்யாவை ஒரு முறை முத்தமிட்ட சுந்தரி, புகைப்படத்தில் தன்னருதில் நின்றிருந்த தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டுருந்தாள்.
'என்னடி பார்க்கறே? உன் பொண்ணுக்கு மட்டும்தான் முத்தமா? எனக்கு திடையாதா? உன் உதட்டு ஈரத்துக்கு முதல் உரிமைக்காரன் நான்தான்டி' சிவந்த ரோஜா நிற உதடுகள்... மேலுதட்டின் மேல் கரிய அடர்த்தியான மீசை, தூக்கி வாரிய கிராப்புடன் அவன் புகைப்படத்தில் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டுருந்தான்.
'பாவி, இந்த சிரிப்புல தானேடா நான் உங்கிட்ட கவுந்து போனேன்...' சுந்தரியின் மனது மெல்லக் கூவ ஆரம்பித்தது.
தன் மனதுக்குள் கட்டிக் காத்து வந்த கற்கோட்டை இரண்டு நாட்களாக மெல்ல மெல்ல மணல் கோட்டையாக மாறி நாலாபுறமும் சரிவதை நினைத்து அவள் மனம் பதறியது.
'சுந்தரி... ஏன்டி பதறிப் போறே? அவன் உன் புருஷன்டி.... உனக்கு அவங்கிட்ட எல்லா உரிமையும் இருக்குடி; நீயா உன் மனசுக்கு ஒரு பூட்டு போட்டுக்கிட்டே? ஒரு முத்தம் குடுடி அவனுக்கும்; என்னடித் தப்பு. நீ அவனை மறந்துட்டேன்னு சொல்ற, இந்த ஆல்பத்தை மட்டும் எங்கப் போனாலும் கூடவே ஏன் சொமந்துக்கிட்டுப் போறே?'
'உன் பொண்ணு சென்னைக்கு வேலைக்காக வந்துட்டா? அவ படமும் இதுல தான் இருக்கு: அதனால நான் என் கூடவே இந்த ஆல்பத்தை வெச்சிருக்கேன்னு மட்டும் பொய் சொல்லாதே? பொய் சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதே? நீ உன் புருவனை உண்மையாவே மறந்திருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு: அவன் திரும்பவும் உன் மனசுக்குள்ள வந்தாச்சு: மனக் கதவை மொத்தமா தொறந்து உள்ள வாங்கன்னு ஆசையா கூப்பிடுடி. போதும்டி உன் தனிமை வாழ்க்கை... இன்னும் எதுக்கு வீம்பு, எதுக்கு இந்த பிடிவாதம்; அவன் மேல எதுக்கு இந்த தீராத கோபம்...'
தன் கணவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென தன் இதழ்களை அவன் உதடுகளில் பதித்தாள். அவள் உடல் நேற்றிரவு சிலிர்த்ததைப் போல், தலை முதல் கால் வரை மீண்டும் இப்போது ஒரு முறை சிலிர்த்தது. நினைவுகளுக்கு இத்தனை பலமா? அவள் அடிவயிறு குழைவதையும், இலேசாக அவள் அந்தரங்கம் நெகிழ்வதையும் உணர்ந்த அவள் உதடுகளிலிருந்து நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து தன் மார்புடன் இறுக்திக்கொண்டாள்.
"அம்மா! என் அப்பா எங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு அவரைப் பாக்கனும் போல இருக்கும்மா? இத்தனை நாள்ல அவ குடிக்கறதை விட்டுட்டு திருந்தியிருக்கலாமே?"
'என் பொண்ணு கேட்ட ஒரு கேள்வியில, என் வாழ்க்கையில நான் முடிஞ்சுப்போச்சுன்னு நினைச்ச அத்தனைக்கும் திரும்பவும் உசுரு வந்துடுத்தா?' சுந்தரி திகைத்துத்தான் போனாள்.
நேத்தைய அமைதியான இரவின் இருட்டு, எதிர்ல இருக்கற பார்க்குலேந்து காத்துல மெதந்து வந்த மதிழம் பூக்களின் வாசம், மெல்லிசா தூறின மழை, அந்த மழையின் சாரல், அந்த சாரல் என் ஓடம்புல உண்டாக்கின குளிர்ச்சி, அந்த குளிர்ச்சி என் மனசுல ஏற்படுத்துன வெப்பத்துக்கான தவிப்பு, இருட்டும் தனிமையும் குடுக்கற இனம் தெரியாத ஏக்கம்; இதெல்லாம் ஒரு வினாடியில ஒன்னாகி என் மனசுக்குள்ள, அடியாழத்துல விதையாக உறங்கிக்ட்டிருந்த ஒரு நிகழ்ச்சியை, என் நெனவோட மேல் தளத்துக்கு கொண்டு வந்து, என் புருஷன் என்னை பின்னாலேருந்து கட்டிப்புடிச்சு, என் மாரை தடவுன மாதிரி, என் மனசே நேத்து ஒரு நாடகத்தை, உண்மையாக நடக்கற மாதிரி நடத்திக்காட்டிடுச்சே?'
'அந்த நாடகத்தை என் மனசும், வெக்கமில்லாமே அணுவணுவாக ரசிச்சி, ருசிச்சி: அந்த சுவையை முழுசா என் ஒடம்புலேயும் காட்டிடுச்சே? நான் என் உள்ள ஈரமாயி எவ்வளவு காலமாச்சு? நேத்து ஒரு செகண்ட்ல ஈரமாயி நின்னேனே? ம்ம்ம்... இவ்வளவுக்கும் காரணமான இந்த மனசுக்கு இத்தனை வலுவா? அனுபவங்கள் அழிவதில்லையா? ஓடம்பு என்னைக்கோ நுகர்ந்த அனுபவங்களுக்கு இத்தனை பலமா? இந்த அனுபவங்கள் என்னை மட்டும் தான் வாட்டுதா? இல்லை அவனும் இப்படித்தான் எங்கேயோ தனியா கிடந்து அலைக்கழியறனா? என்னை மாதிரி ராத்திரியில தூக்கம் வராம என்னை நெனைச்சுக்கிட்டு தவிப்பானா?'
'நேத்து நான் தூக்கத்துல இருந்திருந்தா கனவுல இதெல்லாம் சாத்தியம்; என் புருஷன் என்னை கட்பியணைக்கறதா நான் கனவு கண்டிருக்கலாம்; ஆனா நான் நேத்து முழிச்சுக்கிட்டு இருந்தேனே? இது எப்படி சாத்தியம்? நேத்து இது எப்படி நடந்தது? மனசுக்கு தூக்கம், விழிப்புன்னு ஒரு வித்தியாசமும் கிடையாதா?'
'ஆண்டவா, என் ஆசைகளையெல்லாம், சுட்டு பொசுக்திட்டேன்னு, ரெண்டு நாள் முன்னத்தான் என் பொண்ணுக்கிட்ட கர்வமா சொன்னேன்? அதுக்கு என்னை நீ இப்படி அடிக்திறியா?'
'என் மனசுக்கு என்ன ஆச்சு? என் உடம்புக்கு என்ன ஆச்சு? பதினைஞ்சு வருவுமாயிடுச்சு, ஒரு ஆம்பளை ஒடம்பை ஆசையா, மனசாரத் தொட்டுத் தழுவி; எவனும் என்னை; நான் பூட்டி வெச்சிருக்கிற என் மனக்கோட்டையை உடைக்க முடியாதுன்னு இறுமாந்து இருந்தேனே? எவனுடைய பார்வையும், எவனுடைய அழகும், எவனுடைய பேச்சும், எவனுடைய சிரிப்பும், என்னை பாதிக்கலைன்னு என் பொண்ணுக்கிட்ட நான் சொன்னது எல்லாம் என் ஆணவத்தாலேயா? உண்மையில என் உடம்பு இன்னும் முழுசா மரத்துப் போகலையா? என் உடல் ஆசைகளும், தேவைகளும், விருப்பங்களும், ஏக்கங்களும், இன்னும் உசுரோடத்தான் இருக்கா? எல்லாமே முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சதெல்லாம் பொய்யா? என்னுடைய வைராக்கியம் அத்தனையும் நொடியிலே சுக்கு நூறாப் போயிடுச்சே?'
'உடம்பால அனுபவிக்கனுங்கறதுக்கு என்ன அவசியம்? மனசால அனுபவிச்சா போதாதா? நேத்துத்தான் அனுபவிச்சி முடிச்சாச்சே? நானும் எல்லோரையும் போல ஒரு சாதாரண ஆசாபாசங்களுள்ள பொம்பளைதானா? நேத்து இந்த உடம்பு அனுபவிச்ச சுகம், என் புருஷன் உடம்பு வாசனை கூட அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கே? நான் அனுபவிச்சதெல்லாம் இறுகி இறுகி, விதைகளாகி மனசுக்குள்ளேயே இருந்திருக்கே? காய்ஞ்சு போன புல்தரையில, ரெண்டு தூறல் பட்டதும், பசுமையை காட்டற அருகம்புல் தானா நானும்?'
சுந்தரி மீண்டும் நீண்ட பெருமூச்சு விட்டாள்.
'என் புருஷன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இருக்கு? அவன் அநியாயம் பண்ணா அவனை அடிச்சு விரட்ட எனக்கு உரிமை இருக்கு? வீம்பா நான் எவ்வளவு நாள் வேணா இப்படியே இருக்கலாம்? ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாவை பாக்கணும்ன்னு ஆசை வந்துடுத்தே? அவளுடைய நியாயமான ஆசையை நான் தடுக்க முடியாதே? இப்ப இதுக்கு நான் என்ன பண்ணணும்? நீ உன் அப்பாவை பாக்கறதுல எனக்கு ஆட்சேபனையில்லைன்னு நேத்தே சொல்லிட்டேன். அது பத்தாதுடி சுந்தரி; உருப்படியா நீ இதுக்கு முயற்சி பண்ணணும். சுகன்யா சாயந்திரம் ஆபிசுலேருந்து வந்ததும் முதல் வேலையா ரகு கிட்ட பேச சொல்லணும்... என் கதையை கேட்டு அவன் சிரிப்பான் ... சிரிச்சுட்டுப் போறான்... நான் என் புருவுனைத்தானே பாக்கணும்ன்னு சொல்றேன்... என் தம்பி என்னைப் புரிஞ்சுக்குவான்...'
அலைந்த அவள் மனது மெல்ல மெல்ல ஓய, சுந்தரி சன்னமான குறட்டை ஒலியுடன் உறங்க ஆரம்பித்தாள்.
தொடரும்...
சகோ குடும்பத்தை சேர விடுங்க பிரிச்சிடாதீங்க
ReplyDeleteரெண்டு மூணு நாளா பிளாக் removed னு வந்தது என்ன problem சகோ
ஆமா சகோ கூகிள் பிளாக்க ரிமூவ் பணணிட்டாங்க இன்னைக்கு தான் ரிலீஸ் ஆச்சு.
Deleteபிற கதைகளில் இல்லாத முதிர் காமம் இக் கதையின் ஸ்பெஷல்! தொடருங்கள்
ReplyDelete