Featured post

என் தங்கை 40

Image
முழு தொடர் படிக்க நான் புது துணி எல்லாம் எடுத்து போட்டுட்டு ரூம்விட்டு வெளிய வந்தேன். அம்மா புது புடவை கட்டி இருந்தாங்க. தலைல மல்லி பூ... ரொம்ப அழகா இருந்தாங்க.  அடுத்து கீர்த்தி பெட்ரூம் கதவ திறந்தது வெளிய வந்தா. தீபாவளினு அவளும் புடவை கட்டி இருந்தா. என் கண்ணே படுற அளவுக்கு அவளோ அழகா இருந்தா. அவளே நல்லா புடவை கட்ட கத்துக்கிட்டா போல. என்ன ஒரு குறை... அம்மா மாரி அவ தலைல இன்னும் பூ வைக்கல. நானும் அம்மாவும் கீர்த்தியோட அழக ரசிச்சு பாத்துட்டு இருந்தோம். கீர்த்தி எங்க கிட்ட வந்து "நல்லா இருக்கா,"னு கேட்டா. "கல்யாண பொண்ணு மாதிரி ரொம்ப அழகா இருக்கடி," அம்மா சொன்னாங்க. "தல தீபாவளில" சொல்லிட்டு மெதுவா சொல்லி சிரிச்சா. அப்போ அம்மா கீர்த்திக்கு எடுத்து வச்சிருந்த மல்லி பூ எடுத்து என் கைல தந்தாங்க. நான் அத வாங்கி, கீர்த்தி தலைல வச்சி விட்டேன். பூ வச்சதும், அவளோட அழகு இன்னும் கூடி, ரொம்பவே அழகா இருந்தா. அப்பா அவரோட ரூம்ல இருந்து வெளிய வந்து, கீர்த்தி புடவை கட்டி இருக்குற அழகா பாத்ததும், "நல்லா இருக்கு"னு சொல்லிட்டு போய் சோபால வந்து உட்காந்தாரு. எல்லாரும் கால...

காதல் பூக்கள் 45

முழு தொடர் படிக்க

 சுகன்யா வீட்டுக்குள்‌ நுழைந்த போது சுந்தரி, தன்‌ தலை முடியைப்‌ பிரித்து உதறி சிக்கெடுத்துக்‌ கொண்டிருந்தாள்‌. வெகு நாட்களுக்குப்‌ பிறகு, தன்‌ கணவனிடமிருந்து பெற்ற முத்தத்தால்‌, தழுவலால்‌, அதனால்‌ உண்டான உடல்‌ சுகத்தால்‌, மனதில்‌ மகிழ்ச்சி பீறிட பொங்கிய சந்தோஷத்தை அடக்க முடியாமல்‌ அவளையும்‌ அறியாமல்‌, அவளுக்குப்பிடித்த சினிமா பாடலை, வாய்‌ விட்டு பாட ஆரம்பித்தாள்‌.


“தேர்‌ கொண்டு வா தென்றலே... 
இன்று நான்‌ என்னைக்‌ கண்டேன்‌... 
சீர்‌ கொண்டு வா சொந்தமே... 
இன்றுதான்‌ பெண்மை கொண்டேன்‌... 
பிள்ளை பெற்றும்‌ பிள்ளை ஆனேன்‌... 
பேசி பேசி திள்ளை ஆனேன்‌... 
கோவில்‌ விட்டு கோவில்‌ போவேன்‌... 
குற்றம்‌ என்ன ஏற்று கொள்வேன்‌?”

வீட்டினுள்‌ நுழைந்த சுகன்யா, வாய்‌ விட்டு பாடிக்கொண்டுருக்கும்‌ சுந்தரியைப்‌ பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள்‌. தன்‌ தாயின்‌ இடது கையை பிடித்து அவளை தன்‌ புறம்‌ திருப்பினாள்‌. அவள்‌ கன்னத்தில்‌, குமார்‌ சற்று முன்‌ கடித்ததால்‌ ஏற்பட்ட, பளிச்சிடும்‌ சிவந்த பற்களின்‌ அடையாளத்தைக்‌ கண்டவுடன்‌, தன்‌ உதடுகளில்‌ எழுந்த புன்னகையை, மிக சிரமத்துடன்‌, உதடுகளை கடித்து அடக்கிக்கொண்டாள்‌.


“அம்மா... அப்பா மேல இருக்கற கோபமெல்லாம்‌ போயிடிச்சாம்மா” சுந்தரியின்‌ சந்தோஷம்‌ அவளையும்‌ தொற்றிக்கொள்ள, தாயின்‌ கன்னத்தில்‌ மென்மையாக முத்தமிட்டாள்‌.

“அம்மா.. நீ இப்ப ரொம்ப அழகா இருக்கேம்மா”

“ஏய்‌... சும்மா இருடி...” தன்‌ பெண்‌ சொன்னதைக்‌ கேட்டு சுந்தரி வெட்க்கப்பட்டாள்‌.

“நிஜம்மா சொல்றேம்மா... இனிமே நீ எப்பவும்‌ இப்படியே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்மா.”

“தேங்ஸ்டி கண்ணு...” 

சுகன்யா, தன்‌ தாய்‌ சுந்தரி வாய்‌ விட்டு பாடி எப்போதும்‌ பார்த்ததேயில்லை. 

'வெகு நாட்களாக வீட்டில்‌ இல்லாதிருந்த அப்பா வீட்டுக்கு திரும்பி அரை மணி நேரம்‌ முழுசா ஆகலே; அவர்‌ கூட தனியா ஒரு ராத்திரியை கழிக்கல; அவ்வளவு தூரம்‌ ஏன்‌? கூட உக்கார்ந்து மனம்‌ விட்டு பத்து நிமிஷம்‌ நிம்மதியா பேசலை. அதுக்குள்ள அம்மா எவ்வளவு சந்தோஷமா ஆயிட்டாங்க!' 

தன்‌ தாயின்‌ மகிழ்ச்சியை கண்ட சுகன்யாவின்‌ மனசும்‌ மயிலிறாக மாறியது.

“அம்மா... நீ பாடற இந்த பாட்டு, இப்ப நம்ம வீட்டுல இருக்கற சிச்சுவேவனுக்கு பர்பெக்ட்டா சூட்‌ ஆவுதும்மா...” சொல்லிய சுகன்யா ஸ்டவை ஆன்‌ செய்து பாலை காய்ச்ச ஆரம்பித்தாள்‌. 

சுந்தரி தன்‌ மகளின்‌ கன்னத்தில்‌ மென்மையாக முத்தமிட்டாள்‌. சுகன்யாவைப்‌ பார்த்து ஆதுரமாக புன்னகைத்தாள்‌. அந்த கணத்தில்‌ தன்‌ பெண்ணுடன்‌ சுந்தரி தன்னை மிகவும்‌ சகஜமாக உணர்ந்தாள்‌. அவள்‌ கண்ணுக்கு, சுகன்யா தன்‌ சொந்த மகளாகத்‌ தெரியாமல்‌, தன்‌ வயதையொத்த, தன்‌ மனதை மிக எளிதாக புரிந்து கொள்ளும்‌ ஒரு சினேதிதியாக, கேட்க்காமலேயே தன்‌ நட்புக்கரம்‌ நீட்டுபவளாக தெரிந்தாள்‌. அவள்‌ மீது அவள்‌ மனதில்‌ எல்லையில்லா நட்பும்‌, நேசமும்‌ ஒருங்கே பொங்கியது. 

'டக்குன்னு என்‌ மன நிலையை புரிஞ்சுக்கிட்டாளே?, முத்தம்‌ குடுக்கறேன்னு குமருபாட்டுக்கு என்னை கடிச்சி வெச்சிட்டான்‌. சொன்னா கேட்டாத்தானே? இவ என்‌ புருவன்‌ என் கன்னத்துல பண்ண காயத்தை பாத்துட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சாளே?'

“எனக்கு எதுக்கும்மா தேங்க்ஸ்‌ சொல்றே?” கேட்டாள் சுகன்யா.

இடுப்பில்‌ லுங்கியும்‌, மார்பில்‌ பனியனுமாக, கழுத்தில்‌ மின்னும்‌ மெல்லிய தங்க சங்கிலியுமாக, உள்ளறையிலிருந்து, தாயும்‌ பெண்ணும்‌ பேசுவதைக்‌ கேட்டுக்கொண்டே, வெளியில்‌ வந்த குமார்‌, ஹாலில்‌ வசதியாக தரையில்‌ உட்க்காந்து, சுவரில்‌ சாய்ந்து கொண்டார்‌.

“எங்க மனசு புரிஞ்சி, சமயோஜசிதமா எங்களைத்‌ தனியா விட்டுட்டு, சட்டுன்னு தூக்கை எடுத்துக்கிட்டு தெருவைப்‌ பார்க்க நடந்தியே; அந்த தாராள மனசுக்குத்தாம்மா” சுந்தரியின்‌ குரல்‌ தழுதழுத்தது.

“சும்மா எமோஷனல்‌ ஆவாதேம்மா, உன்‌ சந்தோஷம்‌; என்‌ சந்தோஷம்ம்மா; நீ எனக்கு செய்றதுக்கு முன்னாடி நான்‌ பண்ணது ஒண்ணுமேயில்லம்மா” 

சுகன்யா காபியை, சுந்தரியிடமும்‌, தன்‌ தந்தையிடமும்‌ கொடுத்தாள்‌. சுகன்யாவும்‌ ஒரு கோப்பையில்‌ காபியுடன்‌ தன்‌ தகப்பன்‌ பக்கத்தில்‌ உட்க்கார்ந்து கொண்டாள்‌.

“சுந்து கோவில்‌ விட்டு கோவில்‌ போவேன்னு நீ பாடிக்கிட்டு இருந்தே? நான்‌ இப்பத்தான்‌ வீட்டுக்குள்ளே நுழையறேன்‌. நீ என்னடான்னா, என்னை விட்டுட்டு கோவிலுக்கு போறேங்கறே; நியாயமாடி இது?”

“குமரு, எப்பவும்‌ கோவில்‌, சாமி விஷயத்தை கிண்டல்‌ பண்ணாதீங்க: நாளைக்கு லீவுதானே: நீங்களும்‌ எங்க கூட வாங்களேன்‌, காஞ்சிபுரம்‌ பக்கத்துலதானே இருக்கு; எனக்கு காமாட்சியை கண்டிப்பா தரிசனம்‌ பண்ணனுங்க: சுகா, நாளைக்கு போறதுக்கு டிக்கட்‌ புக்‌ பண்ணிட்டியாம்மா?”

“சாரிம்மா.. அப்பா காலையில போன்‌ பண்ணதும்‌, எனக்கு தலை எது கால்‌ எதுன்னு புரியலை; அதுல எனக்கு நாம போட்ட புரோகிராம்‌ எல்லாம் மறந்து போச்சும்மா.”

“போடி இவளே... உன்னைப்‌ போய்‌ நம்பினேன்‌ பாரு: என்னங்க... நீங்க வீட்டுக்கு வரணும்‌; என்‌ பொண்ணு கல்யாணம்‌ நல்ல படியா நடக்கணும்‌னு அம்பாளைப்‌ பாத்து வேண்டிக்கணும்ன்னு நேத்துதான் நினைச்சேன்‌; இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க; அவ கருணையை நினைச்சா என்‌ உடம்பு சிலுத்து போவுதுங்க; நாளைக்கு என்ன ஆனாலும்‌ சரி, நான்‌ அம்பாளை போய்‌ பாக்கத்தான்‌ போறேன்‌.” தன்‌ கணவனைப்‌ பார்த்துக்‌ கொண்டே பேசியவள்‌, அவர்‌ வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை கிள்ளி ஒரு துண்டை தன்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டு இன்னொரு துண்டை, சுகன்யாவின்‌ தலையில்‌ செருகினாள்‌. 


ஒரு துண்டு பால்கோவாவையும்‌, சிறிது மிக்சரையும்‌, ஒரு தட்டில்‌ வைத்து குமாரிடம்‌ கொடுத்தாள்‌.

“சுந்து... இதுக்குப்‌ போய்‌ ஏன்‌ குழந்தையை சலிச்சுக்கறே? நாளைக்கு உனக்கு அம்பாளை பாக்கணும்‌; அவ்வளவுதானே? நான்‌ ஏற்பாடு பண்றேன்‌. நாம எல்லோருமே ஒண்னா போய்‌ வருவோம்‌.”

“எப்படிப்பா... இதுக்கு மேல நாம மாம்பலம்‌ போய்‌ டிக்கட்‌ புக்‌ பண்ணி; நீங்க வேற ஈவீனிங்‌ யாரையோ பார்க்க போகணும்னு சொல்றீங்க: வேண்டாம்பா.” சுகன்யா முனகினாள்‌. 

குமாரசுவாமி, தன்‌ செல்லை எடுத்து பேச ஆரம்பித்தார்‌.

“மிஸஸ்‌ மாலதி, எனக்கு நாளைக்கு ஃபுல்லா ஒரு நல்ல அனுபவம்‌ உள்ள டிரைவர்‌ வேணும்‌"

"....................."

"நோ... நோ.. நம்ம கம்பெனி டிரைவர்கள்‌ யாரும்‌ வேண்டாம்‌"

"....................."

"தட்ஸ்‌ ஓ.கே.... நாளைக்கு லீவு; ஐ அண்டர்ஸ்டேண்ட்‌; நம்ம எம்ப்ளாயீஸ்‌ யாரும்‌ லீவு நாளைன்னக்கு எனக்காக டிஸ்டர்ப்‌ ஆகக்கூடாது. திஸ் ஈஸ்‌ ப்யூர்லி மை பர்சனல்‌ டிரிப்‌; நம்ம காண்ட்ராக்டர்ஸ்‌ யாருகிட்டவாவது கேளுங்க; ஐ வில்‌ பே ஹிஸ்‌ சார்ஜ்ஜஸ்‌; நான்‌ என்‌ சொந்த கார்ல, காஞ்சிபுரம்‌ போகணும்‌; நாளைக்கு எர்லி மார்னிங்‌ ஷார்ப்‌ அட்‌ ஃபைவ்‌ தர்டிக்கு கிளம்பணும்‌; என்‌ வண்டி நம்ம கெஸ்ட்‌ ஹவுஸ்ல்ல தான்‌ இருக்கு: ட்ரைவர்‌ ஃபிக்ஸ்‌ ஆன உடனே கெஸ்ட்‌ ஹவுஸ்‌ மேனேஜரை என்‌கிட்ட பேச சொல்லுங்க"

"....................."

"எஸ்‌... எஸ்‌.. மை வெஹிகல்‌ இஸ்‌ இன்‌ பர்பெக்ட்‌ கண்டீஷன்‌: காலைல நான்‌ ஓட்டிப்‌ பாத்துட்டேன்‌..."

"....................."

“பைதபை.. ஹெட்‌ ஆபீசுலேருந்து கால்ஸ்‌ எதுவும்‌ வந்தா என்‌ மொபைல்ல காண்டாக்ட்‌ பண்ணச்‌ சொல்லுங்க... ஓ.கே... நான்‌ இன்னைக்கு ஆபீசுக்கு இதுக்கு மேல வர்றது கஷ்டம்; என்‌ பீரிஃப்‌ கேஸை மட்டும்‌ உங்க கஸ்டடியிலே வெச்சுக்குங்க: அதுல கொஞ்சம்‌ முக்கியமான பேப்பர்ஸ்‌ இருக்கு; யூ மே லீவ்‌ அட்‌ யூவர்‌ கன்வீனியன்ஸ்‌; பை... பை...”

“டன்‌... நாளைக்க காலையில ஆறு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும்‌ தயாரா ஆகிடுவீங்க இல்லயா? நாம காஞ்சிபுரம்‌ போகலாம்‌; சுந்து இப்ப உனக்கு திருப்திதானே?” தன்‌ மனைவியைப்‌ பார்த்து ஒரு வெற்றிப்‌ புன்னகை பூத்தார்‌ குமார்‌.

“அப்பா நீங்க சொந்தமா கார்‌ வெச்சிருக்கீங்களாப்பா?” சுகன்யா ஆவலுடன்‌ கேட்டாள்‌.

“ஹேய்.. நான்‌ தான்‌ காலையிலேயே சொன்னேனே? எங்கிட்ட இருக்கறதெல்லாம்‌ உனக்குத்தான்; சோ இந்த காரும்‌ உன்னுதுதாண்டா செல்லம்‌.” அவர்‌ தன்‌ மகளின்‌ தலையை அன்புடன்‌ வருடினார்‌.

“நான்‌ கூட சுமாரா கார்‌ ஓட்டுவேம்பா,”

“உனக்கு கார்‌ ஓட்ட ஆசையா இருக்கா சுகா... ஆமாம்‌ அது என்னா சுமாரா ஓட்டுவே?”

“என்‌ ப்ரெண்ட்‌ ஒருத்தி ஹாஸ்டல்ல இருக்கும்‌ போது எனக்கு கார்‌ ஓட்ட கத்துக்குடுத்தாப்பா.. ஆனா அம்மா பயப்படறாங்கப்பா.”

“அம்மா பயந்துட்டே இருக்கட்டும்‌... இந்த வண்டியை நீயே வெச்சுக்கோ. தாராளமா ஓட்டி பழகு. நான்‌ பெர்மிஷன்‌ குடுக்கறேன்‌.”

“என்னங்க; ராத்திரிக்கு உங்களுக்கு டிஃபன்‌ பண்ணட்டுமா இல்லை, சமையல்‌ பண்ணட்டுமா? ராத்திரிக்கு இங்கேயே எங்க கூட இருங்க. உங்க கிட்ட கொஞ்சம்‌ முக்கியாமான விஷயம்‌ பேசணுங்க.” சுந்தரி அவர்‌ முகத்தை ஏக்கத்துடன்‌ பார்த்தாள்‌.

“நீ எது பண்ணாலும்‌ நான்‌ சாப்பிடறேம்மா. டிரைவர்‌ யாராவது கிடைச்சா, காஞ்சிபுரம்‌ போகும்‌ போது, நான்‌ உன்‌ கூட ஜாலியா பேசிக்கிட்டு வராலாம்னு பாக்கிறேன்‌: இல்லன்னா, நானே கெஸ்ட்‌ ஹவுஸுக்குப்‌ போய்‌, வண்டியை எடுத்துக்கிட்டு, அப்படியே என்‌ ட்ரெஸ்ஸ எடுத்துக்கிட்டு வந்துடறேன்‌; காலையிலே இங்கேயிருந்தே போயிடலாம்‌. நீ பேசறதையெல்லாம்‌ ராத்திரி பூரா கேக்திறேன்‌.”

“அப்பா... நீங்க எங்க வொர்க்‌ பண்றீங்கப்பா?” சுகன்யா தன்‌ தந்தையிடம்‌ கேட்டாள்‌.

“எங்க கம்பெனி கல்கத்தாவுலேருந்து ஆபரேட்‌ ஆகுதும்மா; டெக்ஸ்டைல்‌ கூட்ஸ்‌, லெதர்‌ அயிட்டம்ஸ்‌ எக்ஸ்போர்ட்‌ பண்றோம்‌: எலக்ரானிக்ஸ்‌ அயிட்டங்கள்‌ இம்போர்ட்‌ பண்றோம்‌. இந்த கம்பெனியோட சதர்ன்‌ ரீஜன்‌ ப்ராஞ்ச்‌ சென்னையில இருக்கு. நான்தான்‌ இந்த பிராஞ்ச்க்கு இப்ப மேனேஜர்‌. எனக்கு கீழ நாற்பது பேர்‌ வேலை செய்யறாங்க. தமிழ்‌ நாட்டிலே நாலு ஃபீல்ட்‌ ஆஃபீஸ்‌ இருக்கு. நான்‌ இங்க மாத்தலாகி வந்து மூணு வாரமாகுது. கம்பெனி, எனக்குன்னு தனியா டிரைவரோட கார்‌ குடுத்திருக்கும்மா. உன்‌ தாத்தாவையும்‌ பாட்டியையும்‌ கிராமத்துல நம்ம வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்‌. இப்போதைக்கு நான்‌ கம்பெனி கெஸ்ட்‌ ஹவுசுல தங்கி இருக்கேன்‌.”

“அப்பா நீங்க காமர்ஸ்‌ தானே படுச்சீங்க”

“ஆமாம்‌. மொதல்ல நான்‌ எம்‌.காம்‌. படிச்சேன்‌. அப்புறம்‌ நம்ம வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம்‌ எம்‌.பீ. ஏ. படிச்சேன்‌. லா டிகிரியும்‌ வாங்கினேன்‌. எல்லாத்துக்கும்‌ உங்கம்மா கொடுத்த ஒரே ஒரு நாள்‌ ஓதைதான்‌ மோட்டிவேஷன்‌. நான்‌ இன்னைக்கு இருக்கற நல்ல நிலைமைக்கு உங்கம்மாவுக்கத்தான்‌ நன்றி சொல்லணும்‌.” அவர்‌ உரக்க சிரித்தவாறு சுந்தரியைப்‌ பார்த்து கண்ணடித்தார்‌.

“போங்க... பழசெல்லாம்‌ இப்ப எதுக்குங்க இவ கிட்ட சொல்லிட்டிருக்கீங்க: எனக்கு கஸ்டமாயிருக்குங்க.” சுந்தரி ஒரு குற்ற உணர்வுடன்‌ சிரிக்க, அவள்‌ கண்களில்‌ தெரிந்த, காதலின்‌ தாபத்தையும்‌, ஏக்கத்தையும்‌ பார்த்த குமாருக்கு உள்ளுக்குள்‌ போதை ஏறியது.

“சுகா, என்னைப்‌ பத்தி வேற என்னத்‌ தெரியணும்‌ உனக்கு?”

“அவ எதுக்கு இதெல்லாம்‌ உங்ககிட்ட கேக்குறான்னு நான்‌ சொல்றேங்க...”

“அம்மா.. அப்பா இன்னைக்குத்தான்‌ வீட்டுக்கு வந்திருக்கார்‌: என்‌ கதையை சொல்லி, அவரை ஏம்மா டிஸ்டர்ப்‌ பண்றே?”

“நீ சும்ம்மா இருடி: அவருக்கு இதெல்லாம்‌ தெரிஞ்சுதான்‌ ஆவணும்‌. நான்‌ பட்ட கஸ்டத்தை அவரும்‌ கொஞ்சம்‌ படட்டுமே. பொண்ணை பெத்துட்டா மட்டும்‌ போதுமா?”

“சுந்தரி நீ சொல்லும்மா. எதுவாயிருந்தாலும்‌ சொல்லு.”

“யாரோ ஒரு எடுபட்டவ, சுகன்யாவுக்கு சொத்து பத்து ஒண்ணும்‌ கிடையாது.. ஏன்னு கேக்க, சொந்த பந்தம்‌ ஒன்னும்‌ கிடையாது, இவ உன்‌ குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்னு சொல்லிட்டா... அது இவளுக்கு தெரிய வந்ததுலேருந்து மனசுக்குள்ளவே மருகிக்கிட்டு கிடக்கிறா.” சுந்தரி கோபமாக பேசினாள்‌.

“சுகா என்னம்மா இது? யார்‌ அப்படி சொன்னது? உனக்கு எந்த குறையும்‌ இல்லேம்மா... நீயா உன்னை எந்த விதத்துலேயும்‌ தாழ்வா நெனைச்சுக்க வேண்டாம்‌”

“என்‌ ஆஃபீசர்ப்பா... சாவித்திரின்னு பேரு...”'

“அந்த அம்மா எதுக்க உன்னை அப்படி சொல்லணும்‌”

“பொறாமை தாங்க... வேறேன்னா..” சுந்தரி குறுக்கே பேசினாள்‌.

“புரியற மாதிரி சொல்லேன்‌... சுந்து...'

“நம்ம சுகா, ஒருபையனை லவ்‌ பண்றாங்க. அந்த பையனும்‌ இவ கூடத்தான்‌ வேலை செய்துட்டு இருந்தான்‌. அவனும்‌ நம்ம பொண்ணை ரொம்பவே ஆசை படறான்‌. ஆனா அவன்‌ அம்மா, புள்ளையை தன்‌ முந்தானையில முடிஞ்சு வெச்சிருக்கா. அவன்‌ அந்தம்மா உக்காருன்னு உக்காருவான்‌; எழுந்துருன்னா எழுந்துப்பான்‌. இவ ஆபீஸ்ல, இவளோட இம்மீடியட்‌ பாஸ்‌ சாவித்திரின்னு ஒருத்தி, அவ தன்‌ பொண்ணுக்கு, அந்த பையனை முடிக்கணும்ன்னு, இவங்க ரெண்டு பேர்‌ நடுவுல குழப்பம்‌ பண்ணிகிட்டு இருக்கா. இவளையும்‌ ஆபீசுல இண்டேரக்டா தொந்தரவு பண்றாளாம்‌. இவங்களை சந்திக்க விடாம பண்ணணும்ன்னு நெனைச்சு, தன்‌ அதிகாரத்தை யூஸ்‌ பண்ணி, அந்த பையனை வெளியூருக்கு மாத்திட்டா. அந்த பையனோட அம்மாவும்‌ இந்த சாவித்திரியும்‌ ப்ரெண்ட்ஸ்‌.”

“ம்ம்ம்‌... இன்ட்ரஸ்டிங்‌...”

“போங்கப்பா.. அந்த சாவித்திரி கிட்ட நான்‌ படற அவஸ்தை எனக்குத்தான்‌ தெரியும்‌” சுகன்யா அவரை முதுகில்‌ செல்லமாக அடித்தாள்‌.

“நம்ம சுகா, ஒரு வாழாவெட்டி வளர்த்த பொண்ணு; அப்பனும்‌ ஆத்தாளும்‌ வேற வேற ஜாதி. இப்ப அப்பா எங்கே இருக்காருன்னு கூட சுகன்யாவுக்கு தெரியாது. சுகா எதுவுமில்லாத அன்னாடங்காய்ச்சி குடும்பத்துலேருந்து வந்தவ. உறவுகாரங்கன்னு யாருமில்லாத அனாதை குடும்பம்‌. பாக்கறதுக்கு செவப்பா, உடம்பு எடுப்பா, மூக்கும்‌ முழியுமா இருந்தா போதுமா? வீட்டுக்கு வர மருமவளுக்கு, வீடு, சொத்து சுகம்‌, அப்படின்னு எதுவும்‌ வேணாமா? இவ பின்னால உன்‌ பையன்‌ சுத்தலாமானு அந்த சாவித்திரி நம்ம குழந்தையைப்‌ பத்தி இல்லாததையும்‌ பொல்லாததையும்‌, இவ லவ்வரோட அம்மாகிட்ட பேசி அவ மனசை குழப்பி வெச்சிருக்கா.”

“ட்ரான்ஸ்பர்‌ ஆகி போன அந்த பையன்‌ லீவுல சென்னைக்கு வந்தப்ப சுகாகிட்ட உங்கப்பா எங்க இருக்கார்‌? அந்த சாவித்திரி சொல்றதுல எந்த அளவுக்கு உண்மைன்னு? கேட்டிருக்கான்‌ போல, இவ பதிலுக்கு அவனை, நீ என்னை கட்டிக்குவியா மாட்டியா? உனக்கு நான்‌ வேணுமா இல்லை உன்‌ அம்மா வேணுமா? இப்பவே சொல்லுன்னு கேட்டு இருக்கா.”

“அவன்‌ தன்‌ அம்மாவுக்கு பயந்துகிட்டு, சாவித்திரியோட பொண்ணை ஒப்புக்கு பாக்கறேன்னு சொல்லிட்டு அவ வீட்டுக்குப்‌ போயிருக்கான்‌. அங்க என்ன நடந்ததுன்னு இவளுக்கும்‌ தெரியாது. அந்தப்‌ பையன்‌ வீட்டுக்கு திரும்பி வந்து, நீ சொன்னேன்னு அந்த பொண்ணைப்‌ பாத்துட்டு வந்துட்டேன்‌: ஆனா நான்‌ சுகன்யாவைத்தான்‌ கட்டிக்குவேன்னு, அம்மா கிட்ட பெரிய சண்டை போட்டானாம்‌.”

“ஏம்மா சுகா... நீயே உன்‌ லவ்வர்‌ கிட்ட சாவித்திரி வீட்டுல என்ன நடந்ததுன்னு கேட்டுட வேண்டியதுதானே?”

“ஏங்க முதல்ல நான்‌ பேசி முடிச்சிடறேன்‌; அப்புறமா நீங்க அவளை கேளுங்க.”

“சரி... சரி... நீயே சொல்லு”

“உங்களுக்கு ஞாபகமிருக்கா, நம்ம காலேஜ்ல நம்ம கூட வேலுன்னு ஒருத்தர் படிச்சாரே... ஆர்ட்ஸ்‌ படிச்சார்‌: அவங்களும்‌ உங்க குடும்பத்துக்கு தூரத்து உறவு தான்‌."

"யாரு..?"

"மாயவரத்துல பொண்ணு எடுத்தாருங்களே அவருங்க. அவர்‌ பொண்டாட்டி கீதா என்‌ கூடத்தான்‌ இப்ப பி.ஜி. டீச்சரா வேலை செய்யறா. நம்ம பொண்ணை அவங்க புள்ளைக்கு கட்டிக்கொடுக்கணும்ன்னு தினம்‌ என்னை நச்சரிக்கறா.”

“உங்க ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு சுகாவை தன்‌ புள்ளை சம்பத்துக்கு கேக்கறாங்க...”

“யாரு லட்சுமி அத்தை பொண்ணு ராணியா? அவ நார்த்ல பாம்பேயிலத்தானே இருந்தா?”

“அவளேதான்‌; ராணி திடீர்ன்னு ஒரு நாள்‌ நம்ம வீட்டுக்கு வந்தாங்க. சுந்தரி, உன்‌ மேல எனக்கு எப்பவுமே கோபம்‌ இல்லடி. நாங்கதான்‌ இந்த ஊர்லேயே இல்லயே? நான்‌ இருந்தா இப்படியெல்லாம்‌ ஆக விட்டிருப்பேனான்னு பிட்டு போட்டாங்க. அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு. இப்ப அவங்க பையன்‌ பெங்களூர்ல மாசம்‌ ஒரு லட்சம்‌ சம்பாதிக்கறானாம்‌. ஐ.டி.யில இருக்கானாம்‌. ஊருக்கு வந்தப்ப எப்பவோ நம்ம பொண்ணை பாத்திருக்கான்‌. அம்மா கிட்ட சொன்னானாம்‌; சுகாவை எனக்கு பிடுச்சிருக்கு; கேட்டுப்‌ பாருங்கன்னு சொல்லியிருக்கான்‌.”

“நம்ம பொண்ணு சுகா இப்ப கை நிறைய சம்பாதிக்கறா. பாக்கறவங்க கண்ணுக்கு நெறைவா இருக்கா. நான்‌ கஸ்டப்பட்டப்ப யாரும்‌ என்னை என்னான்னு ஒரு வார்த்தை கேக்கலைங்க. ஆனா இப்ப என்‌ பொண்ணு அழகா வளர்ந்து நிக்கறாளே... நாலு பேரு என்‌ கிட்ட வரத்தானேச்‌ செய்வாங்க?”

“ம்ம்ம்‌... அதெல்லாம்‌ இருக்கட்டும்‌; நீ என்ன பதில்‌ சொன்னே அவங்களுக்கு?”

“நமக்குள்ள ஆயிரம்தான்‌ இருந்தாலும்‌, பொண்ணை பெத்தவரு நீங்க; உங்களை ஒரு வார்த்தை கேக்காமா, அதுவும்‌ உங்க நெருங்கின உறவுகாரங்களுக்கு நான்‌ என்ன பதில்‌ சொல்லுவேன்‌? பொருமையா அவங்க சொல்றதையெல்லாம்‌ காது குடுத்து கேட்டுக்கிட்டேன்‌. வேற என்ன செய்வேன்‌ நான்‌?"

“ராணியோட வீட்டுக்காரர்‌ இப்ப ரிடையர்‌ ஆகி கிராமத்துல தான்‌ இருக்காரு. உங்க மச்சான்‌ ரகுவை மடக்கி மடக்கி, எப்பப்‌ பாத்தாலும்‌ ஒரே கட்ட பஞ்சாயத்து வெக்திறாரு. உன்‌ அக்கா கல்யாணத்தை நான்‌ எதுக்கவே இல்லைப்பா. எதுத்தவன்ல்லாம்‌ போய்‌ சேர்ந்துட்டாங்க. ஜாதின்னு சும்மா வெட்டியா பேசறவனைப்‌ பாத்தாலே எனக்கு புடிக்காது. உன்‌ அக்கா சுந்தரி கிட்ட எடுத்து சொல்லு. நம்ம குழந்தை ஏன்‌ தனியா மெட்ராஸ்ல கஸ்டப்படணும்‌; நான்‌ என்‌ பையனுக்கு கட்டிக்கறேங்கறாரு; உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு ரகு பதில்‌ சொல்லியிருக்கான்‌.”

“சுந்தரி, உன்‌ பொண்ணை அவ கட்டின புடவையோட என்‌ வீட்டுக்கு அனுப்பி வைடி: நான்‌ வேற என்ன கேக்கப்‌ போறேன்‌. குமாருக்குன்னு இருக்கற்தெல்லாம்‌ இவளுக்குத்தானே அப்படிங்கறா உங்க அத்தைப்‌ பொண்ணு.”

“ம்ம்ம்‌... இவங்களுக்கு சரியான பதில்‌ சொல்லித்தான்‌ ஆகணும்‌. இவங்க நமக்கு நெருக்கமா இருக்கற உறவாச்சே.”

“இந்த விஷயத்துல உங்க பொண்ணு என்‌ பேச்சை கேக்கறதே கிடையாது.”

“அம்மா சும்மா சொல்லாதேம்ம்மா... நான்‌ எப்பம்மா உன்‌ பேச்சை கேக்கலை? செல்வா கிட்ட சும்மா சும்மா பேசாதேன்னு நீ சொன்னே. ரெண்டு நாளாச்சு நான்‌ இன்னும்‌ அவன்‌ கிட்ட பேசவே இல்லை தெரியுமா உனக்கு?” சுகன்யா வெடிக்க ஆரம்பித்தாள்‌.

“சுகா... நீ சும்மா இரும்மா. இப்ப நானும்‌ அம்மாவும்‌ தானே பேசிட்டிருக்கோம்‌.”

“சுகா, நான்‌ என்ன சொல்றேன்னா, நம்ம உறவு காரங்க நம்ம வீட்டுக்கு வந்தா, முகம்‌ கொடுத்து பேசுன்னு சொல்றேன்‌. வேற என்ன சொல்றேன்‌? எப்பவாது நீ ராணி அத்தை கிட்ட சிரிச்சு பேசி இருக்கியா? பாக்கறவங்க உன்னைப்பத்தி என்ன நெனப்பாங்க? உன்னை திமிர்‌ பிடிச்சவன்னு நெனைச்சுடக்கூடாதும்மா.”

“என்னங்க, உங்க பொண்ணு, கல்யாணப்‌ பேச்சை எடுத்தா இந்த ஊருக்கே வரமாட்டேன்னு அடம்‌ புடிச்சா. என்ன இப்படி பேசறாளேன்னு இவ மாமன்‌ கேட்டதுக்கு, என்‌ கூட வேலை செய்யறவனை ஆசைப்படறேன்‌. நான்‌ அவனைத்தான்‌ கட்டிப்பேன்னு போன மாசம்‌ என்‌ கிட்ட அப்படி ஒரு சண்டை போட்டுட்டு இங்க வந்தா.”

“இவ மாமனும்‌ இவ கூட சேர்ந்துகிட்டு, அக்கா நீ சும்மாயிரு, நான்‌ அவளுக்கு புரிய மாதிரி சொல்றேன்னு சொல்லிட்டு, இப்ப இவ இஷ்டப்படியே இவ ஆசைப்படற பையனையே பண்ணி வெச்சுடலாம்ன்னு கூத்தடிக்கிறான்‌.”

“நான்‌ ஆசைப்பட்ட பையனைத்தான்‌ கட்டிப்பேன்னு சொல்லிட்டு வந்தவ, போன வாரம்‌ அந்த பையனை சரியான சண்டைக்கு இழுத்து இருக்கா. என்னை லவ்‌ பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி நீ என்‌ அப்பனைப்‌ பத்தி கவலைப்‌ பட்டயா? என்‌ கையை புடிக்கறதுக்கு முன்னாடி என்‌ அப்பன்‌ யாருன்னு கேட்டியா? இப்ப உங்க அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு என்‌ அப்பா யாரு? என்‌ சொத்து சுகம்‌ என்னான்னு ஏன்‌ கேக்கறேனு இவங்களுக்குள்ள ஒரே வாக்கு வாதம்‌, சண்டை. எனக்கு இதையெல்லாம்‌ கேட்டா உடம்பு நடுங்கி போவுது.”

“ஏண்டி, நீ உன்‌ வயசுல உங்கப்பா அம்மாவை என்னமா சண்டைக்கு இழுத்தே? உன்‌ பொண்ணு இப்ப உன்னை இழுக்கறா: ஹிஸ்டரி ரிபீட்ஸ்‌ அவ்வளதானே?” குமார்‌ சிரித்துக்கொண்டே சுந்தரியை சீண்டினார்‌.

“அப்பா. அம்மாகிட்ட நான்‌ வேணும்ன்னு சண்டைப்‌ போட்டதே இல்லப்பா”

“நீ சும்மா இருடி: ஒரு வாரம்‌ முன்னாடி, நானும்‌ ரகுவும்‌ இவளைப்‌ பாக்கறதுக்கு இங்க வந்தோம்‌. அன்னைக்குத்தான்‌ இவங்களுக்கள்ள சண்டை நடந்திருக்கு; என்னை மறந்துடு; உனக்கும்‌ எனக்கும்‌ ஒத்து வராது; நீ ஒரு பயந்தாங்கோளி: உங்கம்மா கூடவே போய்‌ நீ இருடான்னு, அவன்‌கிட்ட வீராப்பா சொல்லிட்டு வந்துட்டா: அந்த பையன்‌ தங்கச்சி இவளுக்கு போன்‌ பண்ணா, நீ யாருடி நடுவுல நாட்டாமை; உங்க அண்ணனை எனக்கு யாருன்னே தெரியாதுன்னு அவளை வேற போட்டு வாங்கியிருக்கா உங்கப்‌ பொண்ணு.”

“ம்ம்ம்‌... தமிழ்‌ சினிமா கதை மாதிரில்ல போகுது நம்ம சுகா கதை”

“இவளால தொட்டு பழகனவனை எப்படிங்க அவ்வளவு சீக்திரம்‌ மறந்துட முடியும்‌? நாள்‌ பூரா அமுது அழுது இவ மூஞ்சி வீங்கி போய்‌ கிடக்குது. வீட்டுக்கு வந்த இவளைப்‌ பாத்ததும்‌ என்‌ வயிறு அப்படியே பத்தி எரிஞ்சுது. என்னாடின்னு கேட்டா மெதுவா ஒண்ணு ஓண்ணா சொல்றா.”

“நம்ம ரகு, அந்த பையன்‌கிட்ட பேசி பாக்கறேன்னுட்டு, அவனை நம்ம வீட்டுக்கு வாப்பான்னு கூப்பிட்டான்‌. நம்ம போறாத காலம்‌, பாவம்‌ அவன்‌ இங்க வர்ற நேரம்‌ பாத்து, வழியில ஒரு ட்ரக்ல அடிபட்டு, ரோட்டுல கிடந்து இருக்கான்‌. போலீஸ்‌ அவனை ஆஸ்பத்திரியில அட்மிட்‌ பண்ணிட்டு, நம்ம சுகன்யாவுக்கு தகவல்‌ சொன்னாங்க. அவங்க அப்பன்‌ ஆத்தா ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள, இவ தட தடன்னு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவனுக்கு இவ ரத்தத்தை குடுத்து பொழைக்க வெச்சி, அம்பதாயிரம்‌ பணத்தையும்‌, ஆஸ்பத்திரியில அட்வான்ஸ்ஸா கட்டினா.."

“இவளைத்‌ தனியா அனுப்ப முடியுமா? நாங்க ரெண்டு பேரும்‌ இவ கூடவே ஆஸ்பத்திரிக்கு போனோம்‌. அவன்‌ கண்ணை தொறந்து பாத்ததும்‌, அவன்‌ அம்மா இவளை பாத்து என்‌ புள்ளையை நீ பொழைக்க வெச்சிட்டே! உனக்கு ரொம்ப நன்றி; ஆனா இங்கேயிருந்து போயிடு. என்‌ புள்ளையை என்‌கிட்டே குடுத்துடுன்னு, எங்க எதிர்லேயே இவளை கை எடுத்து கும்பிட்டு டயலாக்‌ பேசினா. உங்கப்‌ பொண்ணாச்சே? இவளும்‌ ரோஷமா உன்‌ புள்ளைக்கும்‌ எனக்கும்‌ எந்த உறவும்‌ இல்லே. நான்‌ அவனை உனக்கே தாரை வாத்து கொடுக்கறேன்னு உளறி கொட்டிட்டு வெளியில வந்துட்டா.”

“சும்மா இருடி நீ; அந்த காலத்துல நீ என்னை காதலிக்கறேன்னு காலையில சொல்லுவே: மதியானம்‌ இல்லேன்னு சொல்லுவே: எத்தனை வாட்டி இந்த மாதிரி பேசி பேசி, என்னை தாளிச்சு எடுத்துருப்பே? எத்தனை வாட்டி திரும்பி வந்து ஐ லவ்‌ யூன்னு சொல்லியிருப்பே? எல்லாம்‌ உனக்கு மறந்து போச்சா? ரெண்டு நாளு, நான்‌ உன்‌ கிட்ட பேசாமா இருந்தா, எத்தனை பேரு மூலமா நீ தூது விட்டேங்கற கதையெல்லாம்‌, நான்‌ என்‌ பொண்ணுகிட்ட சொல்லவா? நீ ஓண்ணும்‌ என் பொண்ணை கொறை சொல்ல வேணாம்‌, சொல்லிட்டேன்‌... ஆமாம்‌.”

“ரெண்டு நாள்‌ கூட இருந்து பாருங்க, அப்புறம்‌ தெரியும்‌ உங்க பொண்ணு லட்சணம்‌.”

“யம்மா... நீ சும்மா பேசாதே!... நானும்‌ சொல்லிட்டேன்‌,” மீண்டும்‌ சுகன்யா அவர்கள்‌ பேச்சில்‌ குறுக்கில்‌ புகுந்தாள்‌.

“சுந்து.. அந்த பையனோட அப்பா என்ன சொல்றார்‌...'

“அந்த மனுஷன்‌ சாதுவா, நல்ல மனுஷனாத்தான்‌ தெரியறார்‌. ரகுவுக்கு கோபம்‌ பொத்துகிட்டு வந்துச்சு. நான்‌ தான்‌ சும்மா இருடான்னு அடக்கி வெச்சேன்‌. நம்ம பொண்ணு அவன்‌ கூட பழகிட்டாளேன்னு பாக்க வேண்டியதா போச்சு; அப்புறம்‌ அந்த மனுஷன்‌ எல்லார்‌ எதிர்லேயும்‌ எங்க ரெண்டு பேரையும்‌ கையெடுத்து கும்பிட்டு, என்‌ பொண்டாட்டி சார்பா நான்‌ மன்னிப்பு கேட்டுக்கறேன்‌. அவ இப்படி பேசி இருக்கக்‌ கூடாது. அவ நல்லவதான்‌. கொஞ்சம்‌ முன்‌ கோபி. நீங்க தப்பா நினைக்காதங்கன்னார்‌.”

“அதெல்லாம்‌ சரிம்ம்மா: அவரு இவங்க காதலுக்கு ஓத்து வராறா இல்லையா?”

“ம்ம்ம்‌. அவரு ஒத்து வர்ற மாதிரிதான்‌ எனக்கு படுது. என்‌ பையன்‌ கொஞ்சம்‌ உடம்பு தேறி வீட்டுக்கு வரட்டும்‌. உங்க கிட்ட நான்‌ நிதானமா பேசறேன்னு சொன்னார்‌. நாங்களும்‌ நீங்க சொல்றது சரி.. நீங்க ஒரு தரம்‌ முறைப்படி எங்க வீட்டுக்கு வாங்க அப்படின்னு சொன்னோம்‌. சரின்னவர்‌, எங்க ரெண்டு பேரையும்‌ தன்‌ கார்லே வீட்டுக்கு அனுப்பி வெச்சார்‌. அன்னைக்குத்தான்‌ ரகு ஊருக்கு போனான்‌.”

“இன்னைக்கு புதன்‌, இன்னும்‌ ரெண்டு நாள்‌ கழிச்சு வெள்ளிக்கிழமை, இவளை கூப்பிட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு போவலாம்ன்னு இருக்கேன்‌. ரகுவும்‌ ஊருக்கு வர்ரேன்னு சொல்லியிருக்கான்‌. இவ கிராமத்துக்கு வந்து ஒரு பத்து நாளு இருந்தா, இவ மனசுக்கு கொஞ்சம்‌ நிம்மதியா இருக்கும்ன்னு பாக்திறேன்‌. அங்க இவ ஊருல இருக்கும்‌ போது, அந்த பையனோட அப்பாவுக்கு போன்‌ பண்ணலாம்னு ரகு சொல்லியிருக்கான்‌.”

“ஆனா அங்க போனா உங்க அத்தை பொண்ணுக்கு என்ன பதில்‌ சொல்றதுன்னு தெரியலை. இந்த கதையெல்லாம்‌ அவங்களுக்குத்‌ தெரியாது. இப்பத்தான்‌ நம்ம உறவு காரங்க கொஞ்சம்‌ கொஞ்சமா நம்ம வீட்டுக்கு வந்து போறாங்க: இந்த விஷயம்‌ தெரிஞ்சா அவங்க என்ன டென்ஷன்‌ கொடுப்பாங்களோன்னு நெனைச்சா எனக்கு பயமா இருக்கு?”

“ஏண்டி சுந்து.. நீ என்ன பேசற? சுகன்யாவுக்கு ஒருத்தனை புடிச்சு போச்சு. அவங்க தொட்டு பழகினாங்கன்னு வேற சொல்றே. அப்புறம்‌ சம்பத்துக்கு எப்படி இவளை கட்டி வெக்கறது? எங்க அத்தை பொண்ணை நான்‌ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்‌. இன்னொரு தரம்‌ அவங்க உன்‌கிட்ட வந்தா என்‌ நெம்பரை குடுத்து என்‌கிட்ட பேச சொல்லு.”

“சரிங்க... அதைத்தான்‌ நானும்‌ சொல்றேன்‌; நம்ம குடும்பத்து ஆம்பிளை நீங்க வந்துட்டீங்க. இனிமே உங்க பாடு; உங்க பொண்ணு பாடு; நீங்க உங்க பொண்ணை யாருக்கு கட்டி வெக்கறீங்களோ, கட்டி வெய்யுங்க. அவ சந்தோ மா இருக்கணும்‌. அவ்வளவுதான்‌ எனக்கு வேணும்‌. இவ்வளவு நாள்‌ தனியா உங்க பொண்ணை வெச்சுக்கிட்டு சமாளிச்சுட்டேன்‌. இப்ப என்னால முடியல. இதுக்கு மேல என்னை விட்டுடுங்க.” சுந்தரி நீளமாக மூச்சு விடாமல்‌ பேசி நிறுத்தினாள்‌.


தொடரும்...

Comments

  1. அருமையான குடும்ப கதை சகோ - ஏற்கனவே நடந்ததை ஒரே வரியில முடிச்சிருக்கலாம். அது மட்டும் ரொம்ப இழுத்திடீங்க சகோ.
    தினமும் போடுங்க சகோ. உங்களில் ஒருத்தி மாதிரி பெருசா வரணும் சகோ.

    ReplyDelete
    Replies
    1. okey bro ana ithu verum kathal kathai perusa matter irukathu

      Delete
    2. பரவாயில்லை சகோ நல்லா இருக்கு

      Delete
    3. குடும்ப ரகசியம் அனுப்புங்க சகோ
      ரொம்ப நாள் ஆச்சு இன்னும் வரல

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2