முழு தொடர் படிக்க"என்னங்க ... எழுந்திருங்க ... கிளம்ப வேண்டாமா? மணி அஞ்சாவ போகுதுங்க, நாங்க ரெடியாகிட்டோம்!" கட்டிலின் அருகில் நின்று அரைத் தூக்கத்தில் இருந்த குமாரை உலுக்கினாள் சுந்தரி.
எப்போதும் விடியலில் ஐந்து மணிக்கு முன்னரே விழித்து விடும் குமார் அன்று வழக்கமான நேரத்தில் எழ முடியாமல், படுக்கையில் புரண்டு கொண்டுருந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு, பின்னிரவு வரை, பெண் சுகத்தை மனமுவந்து அனுபவித்ததால், மனதில் விஷய சுகத்தின் திருப்தி இருந்த போதிலும் அவர் உடல் சற்றே சோர்ந்து இருந்தது.
'ம்ம்ம் ... சுந்தரி சளைக்காம என் ஆசைக்கு ஈடு கொடுத்தா; அவளும் சந்தோஷமா இருந்தா: என்னையும் சந்தோஷப் படுத்தினா' அவர் மனதில் இரவின் நினைவுகள் இன்னும் மிச்சமிருந்தது.
"என்னங்க ... உடம்பு முடியலையா?" அரக்கு நிறப் பட்டு சேலை உடுத்தி, கருப்பு நிற ரவிக்கையில், சந்தன வாசனையுடன் கூந்தலில் ஈரத் துண்டும், நெற்றியில் விபூதி கீற்றும், வகிட்டின் நடுவில் சிறிது குங்குமமும் துலங்க, மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் அழகிய அப்ஸரஸாக நின்றாள் சுந்தரி.
குமார் தன் கண்களை மெதுவாக திறந்தார். கண்களைத் திறந்ததும், முகத்தில் நள்ளிரவு வரை போதும் போதுமெங்கிற அளவுக்கு அனுபவித்த காம சுகம் மனதுக்கு தந்த நிறைவும், மனம் நிறைந்ததால், முகத்தில் உண்டாதகியிருந்த மகிழ்ச்சியுடனும், உதடு நிறைய புன்னகையுடனும் எதிரில் நின்ற சுந்தரியைப் பார்த்ததும், உள்ளத்தில் கட்டுக்கடங்காத ஆனந்தமும், பரவசமும் பொங்கியது.
"கொஞ்சம் டயர்டா இருக்கும்மா... ராத்திரி ரொம்ப லேட்டா தூங்தினோம் இல்லயா?"
"ராத்திரி கொஞ்சமான ஆட்டமா ஆடினீங்க!... போதும்... போதும்ன்னு சொன்னேன்.. கேட்டாத்தானே; சுந்து இளமை இப்பதாண்டி ஊஞ்சலாடுதுன்னு ரெண்டாவது ரவுண்டு வந்தீங்க. உங்களுக்கு வயசாகிப் போச்சு; ஞாபகத்துல இருக்கட்டும்..." சுந்தரி தன் சிவந்த ஈறுகளும் வெள்ளைப் பற்களும் பளிச்சிட மனம் விட்டு சிரித்தாள்.
அறைக்கதவு முழுவதுமாக திறந்திருந்தது. ஹாலில் கண்ணாடியின் முன் நின்று சுகன்யா, தன் தலையை வாரிக்கொண்டுருந்தாள்.
கட்டிலில் எழுந்து உட்க்கார்ந்த குமார், சுந்தரியின் இடுப்பில் தன் கரங்களை கோர்த்து, அவளைத் தன் புறம் இழுத்து நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள் இடுப்பிலிருந்து, இடுப்புக்குக் கீழ் நழுவ, சுந்தரி வேகமாக அவர் பிடியில் திமிறினாள். சுந்தரியின் திமிறலில் அவள் சேலை முந்தானை சிறிதே விலக, அன்று அவள் அணிந்திருந்த கருப்பு நிற பிளவுசுக்குள்ளிருந்த இடது புற மேடும், மேட்டின் வனப்பும் அவர் கண்களை தாக்கியது. இரவு துணியில்லாமல் பார்த்த அந்த செழுமை மனதில் வந்து ஆட, குமாரின் தொடை நடுவில் அவருடைய தம்பி நான் தயார் என துள்ளினான்.
குமாரின் கண்கள் புடவையில் சிறைபட்டிருந்த அவள் முலைகளையும், அவள் முகத்தையும் விழுங்குவது போல் மேலும் கீழுமாக பார்த்து அலைந்தன. கைகள், அவள் பின்னெழில்களில் தயக்கத்துடன் மெதுவாக மேய்ந்து கொண்டுருந்தன.
குமாரின் கண்கள் பயணித்த இடத்தையும், அவர் கண்களில் இன்னும் மிச்சமிருந்த வேட்க்கையையும், அவர் கைகள் தன் உடலில் தாறு மாறாக அலைவதையும் உணர்ந்த சுந்தரி வேகமாக தன் முந்தானையை இழுத்து தன் மார்பை மூடி மறைத்தாள்.
"என்ன குமரு... கிளம்ப வேணாமா?" அடிக்குரலில் முனகிய சுந்தரி தன் கணவனை கண்களால் விழித்து முறைத்தாள். மெதுவாக ஆனால் கண்டிப்பான குரலில் சொன்னாள்.
"ம்ம்ம்... குமரு விடு என்னை... சொன்னா கேளு."
"சுந்து ஒரே ஒரு கிஸ் குடேன். ப்ளீஸ்.." அவரும் கிசுகிசுப்பான குரலில் முனகி அவளைப் பார்த்து கண்ணடித்தார்.
"நீங்க முதல்ல உங்க கையை எடுங்க. நான் குளிச்சுட்டு வந்திருக்கேன். கோவிலுக்கு போறோம்ங்க நாம..." குமாரின் கைகள் மென்மையாக பட்டுப் புடைவையில் சிறைப் பட்டிருந்த அவள் புட்டங்களை, இதமாக பிசைந்து கொண்டிருந்தன.
"சட்டுன்னு ஒன்னு குடுத்துடுடி."
"கர்மம்... எழுந்துறிங்க... முதல்ல குளிச்சுட்டு வாங்க... அப்புறமா... ஒன்னுல்ல... ரெண்டு குடுக்கறேன்..."
"இப்ப குடுக்க மாட்டியா?" அவர் குரலில் ஏக்கம் தொனித்தது.
"'ஹூம்ம்ம்ம்... மாட்டேன்..."
"அம்ம்மா!... அந்த புதுசா வாங்கிட்டு வந்த செயினை எங்கேம்மா வெச்சே?" சுகன்யா ஹாலிலிருந்து கூவினாள்.
சுகன்யா உள்ளே வருகிறாளோ என நினைத்த குமார் தன் கையை அவசரமாக சுந்தரியின் பிருஷ்டங்களிலிருந்து விலக்கிக் கொள்ள, சுந்தரி தன் கணவனின் கன்னத்தை ஒரு முறை அழுத்தி திருகிவிட்டு சிறு பெண்ணைப் போல் ஹாலை நோக்கி ஓடினாள். ஓடியவள் ஒரு நொடி நின்று அவரை திரும்பிப் பார்த்து தன் நாக்கை நீட்டி அழகு காட்டி சிரித்தாள்.
'சுந்து நீ என்னை கொல்லாம கொல்றடி.. ம்ம்ம்.. எங்க போகப் போறே.. உனக்கு கச்சேரியை ராத்திரிக்கு வெச்சுக்கறேன்...' மனதுக்குள் மருகினார். முகத்தில் புன்னகையுடன் பாத்ரூமை நோக்கி நடந்தார்.
மூவரும் கிழம்பி குமாரசாமியின் காரில் புறப்பட்டனர். டிரைவர் கிடைக்காததால் குமாரசுவாமிதான் காரை ஓட்டிக்கொண்டிருந்தார். விடியல் நேரத்து குளிர்ந்த இளங்காற்று, கார் சன்னலுக்குள் நுழைந்து மறு சன்னல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது. முன் சீட்டில் அவருடன் அமர்ந்திருந்த சுந்தரி, காற்றில் தன் முடிக்கற்றைகள் பறக்க, முகம் முழுதும் சிரிப்புடன் கணவனை ஒரு கண்ணாலும், மறு கண்ணால் சாலையில் எதிர்த் திசையில் விரையும் மரங்களையும், வாகனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். வேகமாக முகத்தில் அடித்த குளிர் காற்று கண்களைத் தாக்கி, விழியோரத்தில் இலேசாக கண்ணீர் பெருதியது. அவள் மனம் ஆனந்தத்தில் கும்மாளம் போட்டது.
'எம்மா! போதும் போதும்; இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. ஒரே நாளில் என் வாழ்க்கையில் இத்தனை மாறுதலா? ஒரே நாளில் இத்தனை சந்தோஷமா? பதினைஞ்சு வருஷத்து தனிமையும், ஏக்கமும், ஒரு ராத்திரியிலே இவன் கை என் உடம்புல பட்டதும் காணமல் போயிடுச்சே?'
தன் கணவனின் இடது கரம், காரின் இயர் மாற்றப்படும் போதெல்லாம், தன் தொடையில் லேசாக உரசுவதும், அப்படி உரசும் போதெல்லாம், தன் கணவன் உதடுகளில் புன்னகையுடன் தன்னை திரும்பி பார்ப்பதும், அவள் மனதில் கிளுகிளுப்பைத் தந்து கொண்டிருந்தது. தன் கணவனின் கை தன் தொடையை உரசும் வண்ணம் அவள் அவனுடன் இன்னும் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது சுந்தரிக்கு. அவளுக்கு மனதில் சந்தோஷம் திகட்டிக்கொண்டுருந்தது.
சுகன்யா, பின் சீட்டில் வசதியாக படுத்துக்கொண்டு, அவளுக்குப் பிடித்த சினிமா பாடல்களை ஐ பாடில் ஓடவிட்டு, தானும் உடன் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.
சுந்தரி ஒரக் கண்ணால் பின் சீட்டில் படுத்திருந்த மகளைப் பார்த்தாள். அவள் கண் மூடி சங்கீதத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்.
சுந்தரி தன் கணவனை நெருங்கி அவர் தோளில் தன் தலையை உரிமையுடன் சாய்த்துக் கொண்டாள். சுந்தரியின் கண்கள் தூக்கம் தூக்கமென கெஞ்ச அவள் விழிகள் இயல்பாக மூடிக்கொண்டன. முடிய விழிகளின் பின்னால், சுந்தரியின் மனதில், இரவு தங்கள் படுக்கையறையில், தனக்கும் தன் கணவனுக்குமிடையே நடந்த காதல் விளையாட்டுகள் அலையாய் வந்து மோதின.
"சுந்து..."
"சொல்லு குமரு ..."
"உன் புடவையை அவுத்துடவா...?"
"ம்ம்ம் ... குமர்ர்ரு. எல்லாத்தையும் என்ன கேட்டு கேட்டுத்தான் செய்யப் போறியா?" அவள் வெட்கத்துடன் சிரித்தாள்.
குமாரசுவாமி, தன் முகத்தில் புன்னகையுடன், சுந்தரியின் சேலை முந்தானையை அவள் உடலிலிருந்து விலக்கினார். வியர்வையில் மெலிதாக நனைந்திருந்த அவள் கழுத்து வளைவில் தன் முகத்தினை ஒரு நொடி அழுத்திப் பதித்தார். மஞ்சள் பூசிய தாலியின் வாசனையும், அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசனையும், அவள் மெலிதாக வியர்த்திருந்ததால், வந்த அந்த வியர்வை வாசமும், அவளுக்கே உரித்தான சிவந்த மேனியின் பெண்மை நறுமணமும் ஒன்று சேர்ந்து குமாரசுவாமிக்கு போதை ஏற்றியது.
குமார் அரைக் கண்ணால் சுந்தரியை கிறக்கத்துடன் பார்த்தபடி ரவிக்கைக்குள் பொங்கிக் கொண்டிருந்த அவள் மார்பழகை சுவைத்துக் கொண்டிருந்தார்.
"என்ன அப்படிப் பார்க்கறீங்க... எனக்கு கூச்சமா இருக்குங்க.." சுந்தரி தன் உருண்டு திரண்டிருந்த முலைகளை இரு கையாலும் மூடிக்கொண்டாள். முகத்தை நாணத்துடன் தாழ்த்திக்கொண்டாள்.
"என் அருமைப் பொண்டாட்டி அழகைப் பார்க்திறேன்... அப்படியே இருக்குடி உன் மொலைங்க... கொஞ்சம் கூட தளரமா இருக்குடி... நான் அந்த அழகை பார்க்கக்கூடாதா?" குமார் மெதுவாக தன் விழிகளை முழுவதுமாக திறந்து, அவர்களுக்கு இடையே நடந்து கொண்டுருந்த காதல் விளையாட்டால் சிவந்து சிரிக்கும், தன் மனைவியின் முகத்தை காதலுடன் பார்த்தார். அவள் கன்னத்தை ஆசையுடன் அழுத்தி அவளுக்கு வலிக்குமாறு திருகி கிள்ளினார்.
"ம்ம்ம் ... குமரு இப்படியே பாத்துக்திட்டேத்தான் இருக்கப் போறீங்களா... மதியானம் ரொம்பத்தான் அவசரப்பட்டீங்க..."
"சொர்க்கம்டி நீ... இந்த சொர்க்கத்தை அவசரப் படாமத்தான் அனுபவிக்கணும்..."
"ஆமாம் ... இவரு நாலஞ்சு தடவ சொர்க்கத்தை பாத்துட்டு வந்தாரு..." சொன்ன சுந்தரி குமாரை முரட்டுத்தனமாக இறுக கட்டி அணைக்க, சுந்தரியின் கழுத்தில் தொங்கும் தங்கத் தாலி அவர் மார்பில் குத்த, அந்த வலி தந்த இன்பத்தால், அவர் முனகினார். முனகியவர் அவள் இடுப்பை கிள்ளி முத்தமிட்டார்.
"ஆஆ.. என்ன இப்படி கிள்றீங்க, வலிக்க்க்க்குதுங்க" சுந்தரி முனகினாள். குமாரை அணைத்து அவன் தோளை தன் முன் பற்களால் கடித்தாள்.
"இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு முரட்டுத்தனம் போவல.." அவன் காதில் கிசுகிசுத்த சுந்தரி ஆசையுடன் தன் கணவன் முகத்தில் நொடிக்கு ரெண்டு முறை முத்தமிட்டாள், அவன் முகத்தை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டாள், அவனது உஷ்ணமான மூச்சுக் காற்று ரவிக்கையை தாண்டி மார்பில் மோத, இரண்டு நொடிகளில் சுந்தரி அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.
"ஏம்மா.."
அவள் விலக முயல அவர் பிடி இறுதியது.
"நீங்க என்னை விட்டாதானே ரவிக்கையையும் கழட்ட முடியும்..."
"புழுக்கமா இருக்காடிச் செல்லம்?"
"ஆமாம்... ஒன்னும் தெரியாத பாப்பா நீ... இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சலில்லே... இதுல நான் ஸ்லோவாம்... பொண்டாட்டியே வெக்கத்தை விட்டு சொல்ல வேண்டியதா இருக்கு... என் ரவிக்கையை அவுருன்னு'" சுந்தரி தன் முகம் குங்குமமாக சிவக்க, குமாரின் கன்னத்தில் ஒரு முறை முத்தமிட்டு நிமிர்ந்து, தன் ரவிக்கையை அவிழ்த்து எறிந்தாள். இது வரை போட்ட காம ஆட்டத்தால் தன் ரவிக்கைக்குள் வீங்கிக் கொண்டுருந்த மார்புகளை சற்றே வெறியுடன் குமாரின் உதடுகளில் தேய்த்தாள்.
"ம்ம்ம்மா..." முனகிய குமார் தன் முகத்தில் வந்து உரசிய தன் மனைவியின் கச்சிதமான முலைகளை ஒவ்வொன்றாக கடித்தார். இவ்வளவு நேரம் ரவிக்கைக்குள் புதைந்து கிடந்ததால், சுந்தரியின் முலைகளில் ஏறி இருந்த அவள் உடல் சூடு குமாரின் முகத்தை தகித்தது. சற்றும் தளராமல், சுருக்கமேதுமில்லாமல், ஆடிய மார்புகளின் பக்கவாட்டிலும், முலைகளின் கீழும், சிறிதளவு சதை பூச்சு தெரிந்தது. சற்று முன் வரை குமார், சுந்தரியின் மார்புகளை ரவிக்கையுடன் சேர்த்து இதமாக கசக்கிக் கொண்டிருந்ததால், தேன் நிறத்திலிருந்த அவள் மார்க்காம்புகள், சற்றே உப்பி புடைத்து தெறித்துக் கொண்டிருந்தன. புடைத்த காம்புகளுடன், அவள் உடல் அசைவுக்கு ஏற்றவாறு ஆடி அசைந்து கொண்டிருந்த அந்த அழகிய மல்கோவா மாங்கனிகளை, அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். ஒரு நீண்டப் பெருமூச்சுடன், குமார், சுந்தரியின் மார்புக் கனிகளை தன் இரு கைகளாலும் அழுத்தமாக பற்றி கசக்கி, காம்புகளை ஒன்றன் பின் ஒன்றாக முத்தமிட்டார்.
"மெதுவாங்க ..."
"ஏம்மா ..."
"வலிக்குதுப்பா... இன்னும் இந்த முரட்டுத்தனம் உன் கிட்டேருந்து போவல..."
"நீ தானே கேட்ட"
"ம்ஹூம்ம்... கேட்டேன் ஆனா நீங்க நிப்பிளை கடிச்சா லேசா வலிக்கற மாதிரி இருக்கு..."
"அப்ப வேணாமா..."
"வேணுங்ங்க.. கடிக்காதீங்க... மெதுவாக சப்புங்க” அவள் தன் முலையை அவர் வாய்க்குள் அமுத்தி திணித்தாள்.
முலையை சுவைக்க கொடுத்தவளின் வலது கை குமாரின் தடியை உள்ளங்கையால் பற்றி அதன் நுனியை இதமாக கசக்கிக்கொண்டிருந்தது.
"ஏன்... வலிக்குதுங்கறே..."
"ரொம்ப நாளாச்சுல்லே... என்... காம்பு ரெண்டும் வரண்டு போயிருக்குங்க" அவள் சிரித்தாள்.
அவள் முலை காம்புகளிலிருந்து மஞ்சள் பூசிய தாலிக்கொடியின் வாசம் மெலிதாக வீசிக் கொண்டுருந்தது. தன் மகள் பசியாறிய மார்புகள் இன்னும் தொய்யாமல், துவளாமல் ஆடுவதைக் கண்ட, குமாரின் மனது வா சுந்தரி ... வா சுந்தரி என அர்ச்சனை செய்யத் தொடங்கியது...
"சுந்து..."
"ம்ம்ம்ம்.."
"என்னடி... எங்கப் பாத்தாலும் உனக்கு சதை போட்டுருக்கு?"
"என்ன சொல்றீங்க... நான் குண்டாயிட்டேனா?" அவள் போதையேறிய குரலில் முனகினாள்.
"ச்சே.. ச்சே.. முன்ன விட இப்ப நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்றேண்டி. இப்பத்தான் நீ கொஞ்சம் பூசின மாதிரி நெகு நெகுன்னு பார்வையா இருக்கேடி, சின்னப் பசங்க உன்னை உடம்புல துணியில்லாம பாத்தானுங்க, பந்தாடிடுவானுங்க; ம்ம்ம்... டக்கர் பிகரா இருக்கேடி?"
"குமரு, என்னை பிகர்ன்னு சொல்லாதப்பா... எனக்கு பிடிக்கல."
"ஏன்ன்ண்டி ராஜாத்தி.." கொஞ்சினார்.
"பிகருங்கறது காசுக்காக காலை தூக்கறவளுங்கள பாத்து வெக்கம் கெட்ட ஆம்பளைங்க சொல்ற வார்த்தை..."
"கோச்சிக்காதடி செல்லம்... காலேஜ் பசங்க சொல்றானுங்களே.. அப்போ சூப்பர் ஆண்டின்னு சொல்லவா?"
"ம்ம்ம்.. அப்படின்னா எனக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றியா குமரு..." அவள் போலியாக கோபித்துக்கொண்டு. அவர் மார்பில் தன் கைகளால் குத்தினாள்.
"சுகாவுக்கு கல்யாணம் ஆகி உன் மருமவன் உன்னை ஆண்டின்னு கூப்பிட்டா அப்ப என்ன பண்ணுவே?" குமாரசுவாமி உரக்க சிரித்தார்.
"அவன் உங்களை அங்கிள்ன்னு கூப்பிடுவான். அதனால என்னை அவன் ஆண்டின்னாலும் சரி.. அத்தைன்னாலும் சரிதான்." அவளும் மனம் விட்டு சிரித்தாள்.
"சுந்து, உண்மைய சொன்னா, இப்பத்தான் நீ என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியறேடி.." சுந்தரியின் கன்னக்கதுப்பை கடித்தவாறே முனகினார் குமார். சுந்தரியின் கன்னம் அவர் பற்கள் பதிந்த தழும்பால் மின்னியது.
"என்னங்க... சும்மா... சும்ம்மா கடிக்கறீங்க... கன்னத்துல இந்த பல்லு அடையாளத்தோட நான் வெளியிலே போனா... வயசுக்கு வந்த பொண்ணுங்க எல்லாம் என்னைப் பாத்து சிரிப்பாங்க.."
"கன்னதில் என்னடி காய..யம்: இது வண்ணக்கிளி செய்த மா.யயம்" அவர் கிசுகிசுப்பான குரலில் பாடினார்.
"குமரு... ஒரு நிமிஷம்..."
"என்னடி..."
"ஒரு செகண்ட் என்னை விடேன்... புடவையை மொத்தமா அவுத்துடறேன்..."
"இதை நீ எப்பவோ அவுத்துருக்கணும்... இப்பத்தான் தோணியிருக்கு" அவர் கைகள் தன் மனைவியின் புட்டங்களின் வழியாக அவளின் அந்தரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தன.
"ச்சீ... சீய்.. புது புடவைங்க.. ஒரு மாதிரி உடம்புல குத்துது... உங்களையும் குத்திடபோவுதுன்னு சொன்னேன்."
"ம்ம்ம் அவுத்துடு... செல்லம்... அவுத்துடு.. இன்னைக்கு எல்லாத்தையும் மொத்தமா பாத்துடலாம்..."
"போதும் ... போதும்..."
"என்னப் போதும், என் கையை எடுத்துடவா?"
"ம்ம்ம்... நீங்க வழிஞ்சது போதும்ன்னு சொன்னேன்.. கையை எடுக்க சொல்லலை..."
"சுந்தரிச் செல்லம், உன் மாரு ரெண்டும் பெரிசாயிருச்சுடி.. அப்பல்லாம் ரெண்டும் என் கைக்கு அடக்கமா இருக்கும்.. இப்ப அதுங்களை புடிக்க முடியலை..." அவள் அந்தரங்கத்திலிருந்து தன் கையை விலக்கி மீண்டும் இதமாக அவள் முலைகளை கசக்கிக்கொண்டிருந்தார்.
"ஏண்டா பேசியே என் உயிரை எடுக்கிறே? பண்றதை பேசாம பண்ணேன்” அவள் சிணுங்கினாள்.
"ச்ச்ஸ்ர்ர்ர்ர்ர்ர் க்க்க்.." குமார் போட்ட சடன் ப்ரேக்கினால் சீராக ஓடிக்கொண்டிருந்த கார் குலுங்கி நின்றது. சுந்தரி தன் நினைவுகளிலிருந்து சட்டென விடுபட்டு கண்களைத் திறந்தாள்.
"என்னங்க ... ஆச்சு"
"ஒண்ணுமில்லே... நீ அப்படியே என் தோள்ல சாய்ஞ்சுக்கோடிச் செல்லம்... ரோடு நடுவுல ரிப்பேர் வொர்க் நடக்குது போல இருக்கு... சின்ன ரோடு டைவர்ஷன்..." குமார் தன் மனைவியின் தொடையை வருடினார். சுந்தரி அவரை போலியாக முறைத்து அவர் கையை விலக்கினாள். பின் சீட்டில் சுகன்யா இருக்கிறாள் என கண்களால் சைகை செய்தாள்.
சுந்தரி அணிந்திருந்த செண்டின் நறுமணம், அவள் கூந்தலில் செருதியிருந்த மல்லி சரத்திலிருந்து கிளம்பிய சுகந்தம், தன் மனைவியின் பிரத்யேக உடல் வாசனை, இரவு முழுவதும் அவளிடம் பெற்ற அளவில்லாத தேக சுகம், என குமாரசுவாமியின் மனமும் மகிழ்ச்சியில் பொங்க, "உன்னை நான் பார்த்தது வென்னிலா வேளையில்" என அவருக்குப் பிடித்த பழைய பாடலை சீட்டியடித்துக்கொண்டே, அவர் காரை காஞ்சிபுரத்தை நோக்கி விரட்டிக்கொண்டுருந்தார்.
'ச்சே.. ச்சே... வரவர என் மனசுக்கு ஒரு கட்டுப்பாடுங்கறதே இல்லாமப் போச்சு... கோவிலுக்கு போற நேரத்துல... இந்த மனசு எப்படியெல்லாம் என்னைப் படுத்தி எடுக்குது... ராத்திரி நடந்தது, நடந்து முடிஞ்சது... ஆனா அந்த முடிஞ்சு போன கதையை இந்த மனசு திரும்பி திரும்பி ரீவைண்ட் பண்ணிப் பாக்குது...? ராத்திரி இந்த உடம்பு அனுபவிச்ச சுகத்தை விட அதை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு அசை போட்டு பாக்கும் போது அந்த சுகத்தோட இனிமை இன்னும் கூடுதலா இருக்கே?' சுந்தரி தன் மனதை நொந்து கொண்டாள். மீண்டும் அவள் உடல் மெல்ல மெல்ல தன் கணவனை நோக்கி நகர்ந்தது. அவளையுமறியாமல் அவள் தலை குமாரின் தோளில் சென்று அமர்ந்தது. குமார் வண்டியை ஓட்டியவாறே அவள் உச்சந்தலையை மென்மையாக முத்தமிட்டார்.
தொடரும்...
இந்த கதையின் speciality பெற்றோர் காமம்! ஐம்பதிலும் ஆசை வரும்! ஆசையுடன் பாசம் வரும் னு! ஹும்! ஹும்! ஜமாய்ங்க!
ReplyDeleteநல்ல அருமையான காதல் கதை சகோ
ReplyDelete