காதல் பூக்கள் 58

முழு தொடர் படிக்க

“என்னங்க... நம்ம ராணியோட பையன்‌ சம்பத்‌ வந்திருக்கான்‌...”

“வாப்பா... நல்லாயிருக்கதியா... நீ இப்ப பெங்களூர்லதானே வேலை செய்யறே? லீவுல வந்திருக்தியா?" கேட்ட சிவதாணு சோஃபாவில்‌ சாய்ந்திருந்தார்‌.

“நல்லாயிருக்கேன்‌ தாத்தா... நீங்க எப்படி இருக்கீங்க?" வீட்டுக்குள்‌ வந்தவுடன்‌, தனக்கென்னவோ சுகன்யாவிடம்‌ அதிக உரிமை கிடைத்துவிட்டது போல்‌, அவளை நேராகப்‌ பார்த்தான்‌. அவன்‌ பார்வை மீண்டும்‌ மீண்டும்‌ அவள்‌ மார்பில்‌ சென்று படிந்தது. 

அவன்‌ திருட்டுப்‌ பார்வையை கண்டதும்‌, எழுந்து சென்று அவனை ஓங்கி அறையலாமா என்றிருந்தது சுகன்யாவுக்கு. 


"சுகா, ராணின்னு நம்ம உறவுல உனக்கு ஒரு அத்தை இருக்கறதை நீ கேள்வி பட்டுருப்பே; ஆனா பாத்துருக்க மாட்டே. ராணியோட பிள்ளை இவன்‌; பேரு சம்பத்‌; பெங்களூர்ல இஞ்சனியரா வேலை செய்யறான்‌. உங்கம்மாவுக்கு ராணியை நல்லாத்‌ தெரியும்‌; ரெண்டு பேரும்‌ ஒரே காலேஜ்ல படிச்சவங்களாம்‌. பாம்பேல வேலையாய்‌ இருந்த இவன்‌ அப்பா இப்பத்தான்‌ ரிடையராகி இங்க வந்து செட்டிலாயிருக்கான்‌. சம்பத்‌, பாம்பேயில அப்பா அம்மா கிட்டவும்‌, இங்கே இவனோட தாத்தா வீட்டுலேயும்‌ அல்லாடிக்கிட்டு கிடந்தான்‌. இங்க ஊருக்கு வரும்‌ போதெல்லாம்‌ எங்களை ஒரு தரம்‌ தவறாம பாத்துட்டு போவான்‌.

டேய்‌ சம்பத்து, என்‌ பையன்‌ குமாரோட பொண்ணு இவ, எங்க பேத்தி, மெட்ராஸ்ல வேலை செய்றா..." கனகா அவர்களை ஒருவருக்கு ஒருவர்‌ அறிமுகம்‌ செய்தாள்‌. 

“அப்படியா பாட்டி; ராணி அத்தை ரெண்டு மூணு தரம்‌ எங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசிட்டு போறதை பாத்துருக்கேன்‌. நான்‌ அவங்ககிட்ட அதிகமா பேசினது இல்லே; இவரைப்‌ பத்தியும்‌ எனக்கு தெரியாது." சுகன்யா மையமாக பேசிக்‌ கொண்டே தன்‌ செல்‌ போனை ஜீன்ஸ்‌ பாக்கெட்டுலிருந்து எடுத்தவள்‌, திடுக்கிட்டு போனாள்‌.

'மை காட்‌. என்‌ செல்‌ ஆஃப்‌ ஆகி திடக்கு. நான்‌ எப்ப செல்லை ஆஃப்‌ பண்ணேன்‌? ரெண்டு நாள்‌ முன்னே செல்வா மேல இருந்த எரிச்சல்ல போனை டேபிள்‌ மேல விசிறி எறிஞ்சேன்‌. அதுக்கு அப்புறம்‌ இன்னைக்கு காலையிலத்தான்‌ அம்மா ஸ்கூலுக்கு போறாளே, அவசரத்துக்கு இருக்கட்டும்ன்னு தேடி எடுத்துக்கிட்டு வந்தேன்‌. அப்போ ரெண்டு நாளா இது ஸ்விட்ச்‌ ஆஃப்‌ ஆகிக்‌ கிடக்கா? என்னாச்சு இதுக்கு; ஆன்‌ ஆக மாட்டேங்குது; என்னப்‌ பிராப்ளம்‌ இதுல? சனியன்‌... கெட்டு கிட்டு போச்சா? நேத்து செல்வா எனக்கு போன்‌ பண்ணியிருந்தால்‌...?' 

'போனை கெடுத்து வெச்சுட்டு நான்‌ தேவையில்லாம செல்வாவை திட்டிக்கிட்டு இருக்கேன்‌.' 

'ஆனா போன்‌ கெட்டுப்‌ போன கதையெல்லாம்‌ சனி, ஞாயிறு ரெண்டு நாளாத்தானே? அந்த தீவெட்டடி தடியன்‌தான்‌ ஒரு வாரமாவே எங்கிட்ட பேசலையே?' செல்வாவின்‌ நினைவு மனதுக்குள்‌ வந்த பின்‌, தன்‌ பாட்டி பேசியது எதுவும்‌ சுகன்யாவின்‌ காதில்‌ ஏறவேயில்லை.

“சுகன்யா... க்ளாட்‌ டு மீட்‌ யூ" சம்பத்‌ தன்‌ வலது கையை அவள்‌ பக்கமாக நீட்டிக்கொண்டு எழுந்தான்‌. 

சம்பத்தின்‌ கையை குலுக்குவதை விரும்பாத சுகன்யா, அவனை நோக்கி சட்டென தன்‌ கைகளை கூப்பினாள்‌. 

'இவன்‌ வீட்டுலேர்ந்து என்னைக்‌ கேட்டு வந்த ப்ரப்போசல்‌ எப்பவோ முடிஞ்சி போன விவகாரம்‌. எந்த உறவுகாரனைப்‌ பத்தியும்‌ எனக்கென்ன கவலை? எனக்கு எவன்‌ உறவு கெட்டாலும்‌ பரவாயில்லை. நான்‌ எவன்‌ முன்னாடியும்‌ நிக்க மாட்டேன்னு, என்‌ முடிவை அம்மாகிட்ட தீத்து சொல்லிட்டேன்‌. அப்பாவும்‌ நம்ம வீட்டு முடிவை ராணி அத்தைக்கிட்டே சொல்லியாச்சு: அப்புறம்‌ ஏன்‌ நான்‌ இப்ப இவன்‌ கையை குலுக்கணும்‌? அப்படி குலுக்கி எனக்கென்ன ஆவப்‌ போவுது? எனக்கு மேனர்ஸ்‌ இல்லேன்னு இவன்‌ நினைச்சா நினைச்சிட்டுப்‌ போறான்‌. அம்மா கிட்ட எவன்‌ எதிர்லேயும்‌ சீவி சிங்காரிச்சுக்கிட்டு இளிக்க மாட்டேன்னு சொன்னேன்‌. ஆனா என்‌ போதாத வேளை, நான்‌ அழகா டிரஸ்‌ பண்ணிக்கிட்டு நல்ல மூடுல இருக்கும்‌ போது இந்த பொறுக்கி வந்து என்‌ எதிர்ல நிக்கறான்‌. இவன்‌ முழியே சரியில்லைன்னு நினைச்சது ரொம்ப கரெக்ட்‌. சரியான பொம்பளை பொறுக்தி. வந்ததுலேருந்து பத்து தரம்‌, கண்ணாலேயே என்னை ரேப்‌ பண்ணிட்டான்‌. பாட்டி என்னமோ இப்பத்தான்‌ இவன்‌ ஹிஸ்டரி, ஜியாஜதிராஃபி எல்லாத்தையும்‌ என்‌ கிட்ட ஓப்பிக்கிறாங்க.'

“எக்ஸ்க்யூஸ்‌ மீ மிஸ்டர்‌ சம்பத்‌... பீ கம்‌ஃபர்டபிள்‌ ஹியர்‌!... நீங்க பாட்டிகிட்ட பேசிக்கிட்டு இருங்க..." என்ற ஒற்றை வரியுடன்‌ அவனை ஓதுக்கிவிட்டு, சுகன்யா விருட்டென ஹாலில்‌, சோஃபாவில்‌ கிடந்த தன்‌ டிராவல்‌ பேகை எடுத்துக்கொண்டு, ஹாலை ஓட்டியிருந்த தாத்தாவின்‌ படிக்கும்‌ அறைக்குள்‌ நுழைந்து கதவை மூடிகொண்டாள்‌. 

'மூஞ்சியில அடிக்கிற மாதிரி கையை கூட குலுக்காம எழுந்து போயிட்டாளே? போனதுதான்‌ போனா, ரூமுக்குள்ளே போய்‌ கதவையும்‌ மூடிக்கிட்டாளே? ரொம்ப திமிர்‌ பிடிச்சவளா இருக்காளே? இவ பண்ண காரியத்துக்கு என்ன அர்த்தம்‌? உன்னை எனக்கு பிமிக்கலைன்னுதானே சொல்றா?' சம்பத்துக்கு உடம்பில்‌ சடாரென சூடு ஏறி முகம்‌ சிவந்தது. 

'சுகன்யாவோட ட்ரஸ் தான்‌ மாடர்னா இருக்கு. மனசால ரொம்ப ட்ரெடிஷனலா இருப்பாளோ? என்‌ பார்வையைப்‌ பாத்து பயந்துட்டாளா?' 

கனகாவுக்கும்‌ தன்‌ பேத்தி சுகன்யா, இப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளியை, உறவுக்காரனை, உதானப்படுத்திவிட்டு சட்டென அறைக்குள்‌ போனது மனதுக்கு சிறிது சங்கடத்தைக்‌ கொடுத்தாலும்‌, உள்‌ மனதில்‌ கிழவிக்கும்‌ ஏதோ கொஞ்சம்‌ புரிந்தது போல்தான்‌ இருந்தது. தன்‌ வாழ்க்கையில்‌ இது போன்று எத்தனை தருணங்களை அவள்‌ பார்த்திருப்பாள்‌? 

'இன்னைக்கு இந்த சம்பத்து பார்வையில ஒரு வித்தியாசம்‌ இருக்கே? என்னமோ பேண்ட்‌ போட்ட பொண்னை இன்னைக்குத்தான்‌ மொதல்‌ தரமா பாக்கற மாதிரி, கொஞ்சம்‌ வெறியோட பாத்த மாதிரியிருந்ததே? திருட்டு முழில்லா முழிக்திறான்‌. சுகன்யாவுக்கு அப்புறம்தான்‌ எனக்கு மத்த உறவெல்லாம்‌. என்‌ பேத்திக்கு இவனைப்‌ புடிக்கலைன்னா, இவனை முதல்ல வெளியில அனுப்பித்தான்‌ ஆகணும்‌.'

“என்னடா சம்பத்து... காஃபி குடிக்கிறியா?"

“வேணாம்‌ பாட்டி... இப்பத்தான்‌ குடிச்சிட்டு வந்தேன்‌... நீங்க ஏன்‌ சிரமப்‌ படறீங்க?"

“எனக்கென்னடா சிரமம்‌... ஏற்கனவே இறக்கின டிக்காஷன்‌ இருக்கு. பாலை காய்ச்சினா வேலை முடிஞ்சது... ஒரு நிமிஷம்‌ உக்காரு, இதோ வரேன்‌" கனகா கிச்சனில்‌ நுழைந்தாள்‌. 

சிவதாணு இன்று அவர்‌ பங்குக்கு மேல்‌, ருசிக்காக ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டதால்‌, உண்ட மயக்கத்தில்‌ வந்த சன்னமான குறட்டையுடன்‌ சோஃபாவில்‌ சாமியாடிக்‌ கொண்டிருந்தார்‌. அவருக்கு தன்‌ ஒன்று விட்ட சகோதரி லட்சுமி குடும்பத்துடன்‌ ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக ஓட்டுதல்‌ கிடையாது. ஆனாலும்‌ உறவு முறைக்காக அவர்கள்‌ தன்‌ வீட்டுக்கு வந்து போவதை சதித்துக்கொண்டிருந்தார்‌. 

சம்பத்‌ விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான்‌. சுகன்யா உள்ளே சென்று மூடிக்கொண்ட அறைக்‌ கதைவை ஒரு நிமிடம்‌ கண்களை அகல விரித்துப்‌ பார்த்தான்‌. 

'நடக்கறது நடக்கட்டும்‌. சட்டுன்னு உள்ளே போய்‌, சுகன்யாவை கட்டிப்புடிச்சி அவ ஒதட்டுல ஒரு கிஸ்‌ அடிச்சுட்டு வந்துடலாமா? அவன்‌ மனதில்‌ ஒரு நொடி மிருக வெறி கிளம்பியது. 

'இவ எனக்கு உறவு முறையா போயிட்டா, கதை இத்தோட முடியாதே?' இதை நினைத்து தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டவனின்‌ மனது மட்டும்‌ அலைய ஆரம்பித்தது. 

'நான்‌ பாம்பேயில, பெங்களூர்ல பாக்காத பிகருங்களா? ரங்கம்‌ ஜிகிடிலேருந்து பாம்பே சேட்டு பொண்ணுங்க வரைக்கும்‌ தொட்டு, தடவியிருக்கேன்‌. எவளாயிருந்தாலும்‌ மொதல்ல கொஞ்சம்‌ பீட்டர்‌ வுட்டு ஜுலும்பு காட்டுவாளுங்கதான்‌; ஆரம்பத்துல நாமதான்‌ கொஞ்சம்‌ மகுடியை அடக்கி வாசிக்கணும்‌.

முதல்‌ நாள்‌ எல்லா பொண்ணுங்களும்‌ கண்ணகி, சீதா பிராட்டியார்‌ ரேஞ்சுலத்தான்‌ ஆக்டிங்‌ குடுப்பாளுங்க. ஒரு அம்பது ரூபாவுல, கண்ணாடி பேப்பர்ல சுத்தின ரோஜா கொத்து ஒண்ணு வாங்கி கையில கொடுத்து, யூ ஆர்‌ சோ க்யூட்‌, உங்களை பாத்ததுலேருந்து தூக்கமே வரலைன்னு அடுத்த சந்திப்புல சின்னதா பிட்டை போட்டு கோடு போடணும்‌. அப்பவே தெரிஞ்சு போயிடும்‌. இது படியுமா படியாதான்னு? 

படியற மாதிரி தெரிஞ்சா, அடுத்த மீட்டீங்க்ல, சிஸ்டருக்குன்னு இம்போர்டட்‌ ஜீன்ஸ்‌, வரவழைச்சேன்‌. சைஸ்‌ கொஞ்சம்‌ பெரிசா இருக்குதேன்னு என்‌ தங்கச்சி ஃபீல்‌ பண்றா: வேற யாருக்கும்‌ கொடுக்க மனசு வரலை. சட்டுன்னு உங்க நினைப்புத்தான்‌ வந்தது. நீங்க வேணா டிரை பண்ணுங்களேன்‌னு போட்ட கோட்டு மேல இன்னொரு கோடு கொஞ்சம்‌ அழுத்தமா போடணும்‌. 

குடும்ப பொண்ணா இருந்தா வேண்டாம்ன்னுதான்‌ சொல்லுவா... நடு நடுவுல நாம போடற கோடு கொஞ்சம்‌ கோணலா கூட போவும்‌. தளர்ந்து போவக்கூடாது. வேணாம்ன்னு சொன்னா விடக்கூடாது. ரெண்டு மூணு தரம்‌ ஸ்ட்ரெஸ்‌ பண்ணணும்‌. கொஞ்சம்‌ மூஞ்சை தேவதாஸ்‌ கணக்கல சோகமா வெச்சுக்கணும்‌; அதுல மடிஞ்சா, இவ முடிஞ்சான்னு அர்த்தம்‌. இப்ப நீ ஏற்கனவே போட்ட கோட்டை கொஞ்சம்‌ நீட்டா இழுக்கலாம்‌. 

ஆனா பொண்ணுக்கு புடிக்கலையா, இஷ்டமில்லையா, சட்டுன்னு சாரின்னு சொல்லிட்டு விட்டுடணும்‌. எப்பவும்‌ ரப்சர்‌ பண்ணக்கூடாது. சுத்தமா ஓதுங்கி நீ வேணாம்ன்னு சொல்றவளை தொடறதுல கண்டிப்பா சுகம்‌ இல்லே. 

அஞ்சாயிரத்துல, புஸ்தகம்‌ சைசுல, ஒரு சைனீஸ்‌ மேக்‌ செல்லை, பர்மா பஜார்ல வாங்கி கையில குடுத்துட்டு, இன்னைக்கு எனக்கு பர்த்‌ டே: நம்ம பசங்க கட்டிங்‌ வுடலாம்ன்னு சொன்னானுங்க: எனக்கு தண்ணியடிக்கறதெல்லாம்‌ புடிக்காதுங்க. நீங்க ஃப்ரியா இருந்தா, சொல்லுங்க ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்ல டிஃபன்‌ சாப்பிட்டு, படத்துக்கு போகலாம்ன்னு அடுத்த பிட்டு போடணும்‌. அவ உடனே ஹேப்பி பர்த்‌ டே டு யூன்னு கண்டிப்பா கையை புடிச்சி குலுக்குவா! புது செல்லுக்கு, அதுவும்‌ ஃப்ரீயா கிடைக்கற போனுக்கு, மயங்காதவ யாரு இருக்கா? 

அவ கேக்காமலே அவ சிம்முக்கு ரெண்டு தரம்‌ ரீஜார்ஜ்‌ பண்ணிடணும்‌. தயங்கி தயங்கி பைக்ல ஏறி உக்காருவா. நம்ம முதுகு மேல அவ உடம்பு பட்டாக்கூட, முன்ன தள்ளி ஓக்காந்து ரோட்டைப்‌ பாத்து வண்டியை ஓட்டணும்‌. தியேட்டர்‌ இருட்டுல தவறிப்‌ பட்டுட்ட மாதிரி கையை கழுத்துல போடு, இடுப்புல போடு இல்லே தொடையிலயே போடு; பரவாயில்லே ஆனா, ரோட்டுல நல்லப்புள்ள மாதிரி ஒரு சீன்‌ போடணும்‌. நம்மளால பொண்ணு பேரு கெட்டுப்‌ போவக்கூடாது. 

இப்ப இன்னா ஆவும்‌? நீ போட்ட சிம்பிள்‌ கோடு ரோடாயிடும்‌! எப்பவும்‌ தார்‌ ரோடு, சிமிண்ட்‌ ரோடு போடாதே. மண்ணு ரோடுதான்‌ சவுகரியம்‌. கொஞ்சம்‌ ரப்சர்‌ ஆயிடிச்சின்னா, இந்த கோட்டை அழிச்சிட்டு, அடுத்த கோடு போட்டுக்கலாம்‌. 

அடுத்த வாட்டி மீட்‌ பண்ணும்‌ போது, அவளா வண்டியில ஏறி உக்காந்து, ரோட்டுல மேடு பள்ளம்‌ வர்றதுக்கு முன்னாடியே, அப்ப அப்ப நம்ம முதுகுல தன்‌ உடம்பை அழுத்தி உனக்கு சிக்னல்‌ குடுப்பா. ஒவ்வொருத்திக்கு ஒரு வலை இருக்கு. ஒரு வலையில சிக்கற மீன் அடுத்த வலையில சிக்காது. சின்ன மீன் சிக்கலன்னா, போவட்டும்ன்னு வுட்டுட்டு பெரிய மீனா புடிக்கணும்‌. எத்தனை பேரை இப்படி ப்ளான்‌ பண்ணி கவுத்து இருப்பேன்‌? 

ஜாக்திரதையா இருக்கணும்‌, சட்டுன்னு உன்னையே கவுக்கறவளும்‌ இருக்காளுங்க? எனக்கென்னமோ இந்த கல்யாணத்துல எல்லாம்‌ அவ்வளவா நம்பிக்கை இல்லே. மனசுக்கு புடிச்சுதா, பொண்ணை பட்டுன்னு கேட்டமா, அவ ஓ.கே. ன்னா, தொட்டு பாரு; கட்டிபுடிச்சி அனுபவி... வுட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்‌. ரொம்ப கமிட்மெண்ட்ஸ்‌ வெச்சுக்கக்கூடாது. 

இங்கே என்னடான்னா, பூவை தொடவேயில்லை. அதுக்குள்ள கையில முள்ளு குத்தும்‌ போல இருக்குது. அம்மா ரொம்பவே சொன்னாளேன்னு வந்தேன்‌.'

அவள் அம்மா ராணி சொன்னது அவனுக்கு நியாபகம் வந்தது. 

'சுகன்யா நம்ம உறவுகார பொண்ணுடா. சிவதாணு தாத்தாவோட பேத்தி. குமார்‌ மாமாவுக்கு இருக்கற ஒரே பொண்ணு; தாத்தா சொத்து, குமார்‌ சம்பாதிச்சு வெச்சிருக்கறது எல்லாத்துக்கும்‌ ஒரே வாரிசு. அதுமட்டுமில்லே; அவளோட அம்மா சுந்தரியும்‌, ஸ்கூல்‌ டீச்சரா கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா. சுகன்யாவோட தாய்‌ மாமன்‌ கல்யாணம்‌ பண்ணிக்கலை. அவன்‌ அக்கா வீட்டுலதான்‌ கூடவே இருக்கான்‌. அவனுக்கும்‌ வீடு, நீர்‌, நில புலன்னு எல்லாம்‌ இருக்கு. அவனுக்கு பின்னால அதெல்லாமும்‌ இவளுக்குத்தான்‌. எல்லாத்துக்கும்‌ மேல சுகன்யாவே நிரந்தரமான கவர்ன்மெண்ட்‌ உத்தியோகத்துல, நல்லா கை நெறைய சம்பாதிக்கறா. இவளை கட்டிக்கறவனுக்கு நல்ல தனயோகம்தான்‌. 

நான்‌ உன்‌ அம்மாடா; உன்‌ திட்ட நான்‌ இப்படி பேசக்‌ கூடாது? ஆனாலும்‌ சொல்றேன்‌. சுகன்யா சும்மா ஜவுளி கடை பொம்மை மாதிரி எடுப்பா இருப்பாடா. சுகன்யாவை உனக்கு குடுக்கறீங்களான்னு கேட்டு இருக்கேன்‌. சுந்தரி பிடி கொடுத்து பேசமாட்டேங்கிறா. அவ புருஷன்‌ குமாரும்‌, என்‌ பொண்ணுக்கு அப்படி ஒண்ணும்‌ வயசாயிடலயே? ஒரு ரெண்டு வருசம்‌ போகட்டும்‌... அதுக்கப்புறம்‌ பாக்கலாம்ன்னு நினைக்கிறோம்‌... ராணி, நீ வேணா வேற எடம்‌ பாக்கறதுன்னா பாரேன்னு நாசுக்கா தட்டிக்‌ கழிக்கறாரு. 

ஆத்தாளும்‌ அப்பனும்‌ ஒருத்தரை ஒருத்தர்‌ காதலிச்சு, ஜாதி வுட்டு ஜாதி கல்யாணம்‌ கட்டிக்கிட்ட மாதிரி, சுகன்யாவும்‌ யாரையாவது தன்‌ மனசுல நெனைச்சுக்கிட்டு இருப்பாளோன்னு நான்‌ சந்தேகப்படறேன்‌. இந்த காலத்துல வெளியில படிச்சுட்டு வேலைக்கு போற பொண்ணுங்களுக்கும்‌, கல்யாணத்துக்கு முன்னாடி ஒண்ணு ரெண்டு பாய்‌ ப்ரெண்ட்ஸ்‌ இருக்கத்தான்‌ செய்யறாங்க. நீயும்‌ தான்‌ கேர்ள்‌ ப்ரெண்ட்ஸ்‌ வெச்சிருக்கே. அவங்களையா கட்டிக்கப்‌ போறே? எவ்வளவு நாளைக்குத்தான்‌ இப்படியே இவகூட;: அவகூடன்னு சுத்துவே? காலாகாலத்துல கல்யாணம்‌ பண்ணி செட்டில்‌ ஆவணும்டா. கல்யாணம்ன்னு வரும்‌ போது சுகன்யா மாதிரி பொண்ணைத்தான்‌ பாக்கணும்‌. 

இப்பத்தான்‌ சுகன்யாவை, கனகா பாட்டி வீட்டு வாசல்ல பாத்தேன்‌. ஜீன்ஸ்‌, டாப்ஸ்‌ போட்டுக்கிட்டு செப்பு சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருந்தாடா. உனக்கு மட்டும்‌ என்னடா குறைச்சல்‌? ராஜா மாதிரி இருக்கே, ஒரு தரம்‌ நீ அந்த பொண்ணை நேரா பாத்து கொஞ்ச நேரம்‌ பேசிட்டு வாயேன்‌. நேருக்கு நேரா பாத்தா, அவ மனசுல ஒரு வேளை, உன்னைப்‌ பத்தி ஒரு இம்ப்ரஷன்‌ வரலாம்‌. அப்புறம்‌ உன்‌ இஸ்டம்‌...'

'காலங்காத்தாலே அம்மா என்‌கிட்ட இவளைப்‌ பத்தி ரொம்பவே புகழ்ந்து பேசவே, அப்படி என்னாத்தான்‌ இவகிட்ட இருக்கு? ஒரு லுக்கு விட்டுத்தான்‌ பாப்பமேன்னு வந்தேன்‌. சும்மா சொல்லக்கூடாது. க்ராஸ்‌ பிரீட்‌ ஆச்சே? சான்ஸே இல்லே... பின்னி எடுக்கறாளே. கொஞ்சம்‌ திமிர்‌ பிடிச்சவளா இருக்கா. 

நான்‌ இங்கிலீஷ்ல, நீ அழகாயிருக்கேன்னு போட்ட முதல்‌ பிட்டுக்கு, சுகன்யா ஓ.கே ஆன மாதிரிதான்‌ தெரிஞ்சுது. பொறுமையா இருந்திருக்கணும்‌. கொஞ்சம்‌ அவசரபட்டு கண்ணை அவ உடம்புல இங்க அங்க மேயவிட்டது, தப்பா போயிடுச்சின்னு நினைக்கிறேன்‌. சுகன்யா குட்டி டக்குன்னு முழிச்சிக்கிட்டா.

நான்‌ என்னப்‌ பண்ணுவேன்‌? மால்‌ டக்கரா இருக்கே? 

மாப்ளே! உனக்கு ராஜகளை! ஆனா திருட்டு முழின்னு - நம்ம நண்பணுங்க அடிக்கடி சொல்வாங்களே, என்‌ கண்ணு அலைச்சலால இப்ப காரியம்‌ கெட்டுப்‌ போயிடும்‌ போல இருக்கு? 

அம்மா பேச்சைக்‌ கேட்டுக்கிட்டு ஒரு சான்ஸ்‌ பார்க்கலாமேன்னு வந்தேன்‌. சுகன்யா நிஜமாவே லட்டு மாதிரி இருக்கா. இவ செட்‌ ஆனா, பைனலா கல்யாணத்தை பண்ணிககிட்டு லைப்ல செட்டில்‌ ஆயிடலாம்‌. எத்தனை நாளைக்குத்தான்‌ இப்படி தெருவுல கண்ட லோலாயிங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கறது? 

ஆனா இந்த சுகன்யா ரொம்பத்தான்‌ அல்டுக்கிறா...? இவளுக்கு எந்த வலையை விரிக்கறது? இன்னும்‌ ஒரு வாரம்‌ நாம இங்கதான் இருக்கப்‌ போறோம்‌. அதுக்குள்ள ஏதாவது ஒரு வலையை ரெடி பண்ணி விரிச்சுப்‌ பாக்க வேண்டியதுதான்‌. சுகன்யாவுக்கு என்னை கல்யாணம்‌ பண்ணிக்க இஷ்டமில்லன்னா அதுவும்‌ வசதிதான்‌. எனக்கு என்ன நஸ்டமாயிடப்‌ போவுது? பத்தோட பதினொன்னு: அத்தோட இதுவும்‌ ஒண்ணு. சும்மா வண்டியை ஒரு டிரையல்‌ பாத்துட்டு, டாட்டா... பைபை.. சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்‌.' 

சம்பத்‌ தன்‌ மனதுக்குள்‌ சுகன்யாவுக்கான வலையைத்‌ தேயிக்கொண்பயுருந்தான்‌. 

'ரூமுக்குள்ள போன சுகன்யா என்ன பண்ணுவா? கீ ஹோல்‌ வழியா பாக்கலாமா?' 

'டேய்‌... உறவு காரன்‌ வீட்டுல உக்காந்து இருக்கே. உடம்பை புண்ணாக்கிக்காதே? ஏதாவது எக்குத்தப்பா ஆச்சு... உன்‌ அப்பன்‌ ஆத்தா வெளியில தலை காட்ட முடியாம போயிடும்‌! உங்கிட்ட இன்னும்‌ ஒரு வாரம்‌ டயமிருக்கு. கொஞ்சம்‌ பொறுமையா இருடா. கல்லெடுத்து அடி. மாங்கா விழுந்தா சரி.. ஆனா கல்லு உன்‌ தலை மேல விழாம பாத்துக்கோ!' சம்பத்‌ தன்‌ கன்னத்தை சொறிந்து கொண்டான்‌. 

********************************

'அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட சந்தோஷமான சமாசாரத்தை சுகன்யா கிட்ட சொல்லனுமுன்னு நான்‌ துடிக்கிறேன்‌. என்னைத்தான்‌ சனி புடிச்சு ஆட்டறானே? என்‌ சனியன்‌ புடிச்ச நேரம்‌, நான்‌ எங்க போனாலும்‌ எனக்கு முன்னே அது போய்‌ நிக்குது? சுகன்யாவை லைன்ல புடிக்கறதே பெரிய பாடா இருக்கே? லீவுல இருக்கற அவளை, அவ பாஸ்‌ சாவித்திரி, ஆபீஸ் வேலை எதுக்காவது தொந்தரவு பண்ணப்‌ போறான்னு, செல்லை ஸ்விட்ச்‌ ஆஃப்‌ பண்ணி வெச்சிருக்காளா? ஆஃபீஸ்‌ வேலைக்கு அவ எப்பவுமே பயப்பட்டதே கிடையாதே? லீவு நாள்ல கூப்பிட்டா கூட முகம்‌ சுளிக்காம ஆஃபீஸுக்கு போறவளாச்சே? அவ செல்லு கெட்டு கிட்டு போயிடுச்சா? ம்ம்ம்‌... அப்படித்தான்‌ எதாவது ஆயிருக்கணும்‌. ஆனா எனக்கு இப்ப அவ கிட்ட எப்படியாவது பேசியே ஆகணும்‌.' எரிச்சலுடன்‌ தன்‌ தலையை சொறிந்து கொண்டுருந்த செல்வாவுக்கு, திடிரென சுகன்யாவின்‌, மாமா ரகுவின்‌ செல்‌ நெம்பர்‌ தன்னிடம்‌ இருப்பது நினைவுக்கு வந்தது. 

'நான்‌ கையில வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்யக்கு அலையறேன்‌; ரகுராமன்‌ கிட்ட பேசினா அவர்‌ கும்பகோணத்து நெம்பர்‌ ஏதாவது கொடுக்க மாட்டாரா? காலையிலேருந்து எனக்கு இது தோணவே இல்லையே? எப்பேர்‌ பட்ட மாங்கா மடையன்‌ நான்‌?'

உடனே ராகுவிற்கு போன் பண்ணினான்.

“சார்‌... நான்‌ செல்வா பேசறேன்‌" தயங்கி தயங்கி பேசினான்‌.

“சொல்லுங்க தம்பி... எப்படியிருக்கங்க... வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு உங்கப்பா சொன்னார்‌..”

“ஆமாங்க...” 

'அப்பாவும்‌ இவரும்‌ ஒருத்தரோட ஒருத்தர்‌ பேசிக்கிறாங்களா என்ன? அப்பா என்‌ கல்யாணத்தை கிடப்புல போட்டு வெச்சிருக்காருன்னுல்ல நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்‌?' அவன்‌ மனதுக்குள்‌ மகிழ்ச்சி மத்தாப்பொன்று மின்னியது.

“கேக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க தம்பி... சுகன்யா கிட்ட உங்களுக்கு என்ன கோபம்‌?"

“நோ... நோ... எனக்கென்ன சார் கோபம்‌? அப்படியெல்லாம்‌ ஒண்ணுமில்லையே?” அவசரமாக மறுத்தான்‌.

“ம்ம்ம்‌... நீங்க நல்லபடியா வீட்டுக்கு திரும்பி வந்ததை, சுகன்யா கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்‌... அவளுக்கு இந்த விஷயத்துல உங்க மேல கொஞ்சம்‌ வருத்தம்தான்‌...” 

அவர்‌ குரலில்‌ சிறிது ஏளனமிருப்பதாக செல்வா உணர்ந்தான்‌.

“சாரி சார்‌... நான்‌ சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க.. காலையிலேருந்து நூறு தரம்‌ சுகன்யா செல்லை டிரை பண்ணிட்டேன்‌..."

“அப்படியா..."

“ஆமாம்‌ சார்‌... சுகன்யா நெம்பர்‌ எனக்கு கிடைக்கவே இல்லே..."

“ம்ம்ம்‌..."

“அதான்‌ இப்ப உங்களுக்கு சிரமம்‌ கொடுக்கிறேன்‌..."

“நான்‌ என்ன பண்ணணும்‌ தம்பி?"

“இன்‌ ஃபேக்ட்‌, சுகன்யா கிட்ட ஒரு முக்கியமான விஷயம்‌ பேசணும்ன்னு நான்‌ துடிச்சிக்கிட்டிருக்கேன்‌.." அவன்‌ தன்‌ நிலையை அவருக்கு புரிய வைக்க முயன்றான்‌.

“ம்ம்ம்‌... அப்படி என்ன... முக்கியமான... சாரி தம்பி... என்‌ கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சா சொல்லுங்களேன்‌?"

“கண்டிப்பா... சார்‌... எங்கம்மாவும்‌ எங்க கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்லிட்டாங்க! இது பத்தி எங்கப்பா உங்ககிட்ட மேல்‌ கொண்டு பேசுவார்ன்னு நினைக்கிறேன்‌.”

“அப்படியா..."

“கல்யாண விஷயம்‌ கொஞ்சம்‌ நேரானதும்‌, சுகன்யா கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளா வெய்ட்‌ பண்ணிகிட்டிருந்தேன்‌ சார்‌...

“நல்லது தம்பி..."

“மத்தபடி என்‌ சுகன்யா மேல எனக்கென்ன கோபம்‌..சார்‌?”

“ம்ம்ம்‌... உன்‌ சுகன்யா... ம்ம்ம்‌..."

ரகுவின்‌ குரலில்‌ மீண்டும்‌ சிறிய கேலி தொனிப்பதாக செல்வா நினைத்தான்‌.

“சாரி சார்‌... தப்பா எடுத்துக்காதீங்க சார்‌... கொஞ்சம்‌ உணர்ச்சி வசப்பட்டுட்டேன்‌..”

“செல்வா... ரொம்ப சந்தோஷமான விஷயத்தை சொல்லியிருக்கேப்பா! சுகா இதை கேக்கணும்னுதான்‌ காத்துக்கிட்டு இருக்கா!"

“சரிங்க சார்‌...”

“சுகா இன்னைக்கு அவங்க தாத்தா வீட்டுக்குப்‌ போயிருக்கா: நான்‌ அவ தாத்தா சிவதாணுவோட செல்‌ நெம்பர்‌ தரேன்‌...”

“குடுங்க சார்‌... ரொம்ப நன்றி சார்‌.."

“தம்பி... இன்னும்‌ நீங்க என்னை 'சார்.. சார்‌'ன்னு வேத்து மனுஷனாத்தான்‌ நெனைக்கிறீங்களா?"

“இல்லே சார்‌.. சாரி சார்‌... இல்லே மாமா... ரொம்ப தேங்க்ஸ்‌ மாமா..." செல்வா ஒரு மன நிறைவும்‌, உதட்டில்‌ புன்னகையுமாக பேசினான்‌. 


தொடரும்...

Comments

  1. மாமா இல்லப்பா சித்தப்பா செல்வா சொந்தத்தை ஒழுங்கா கூப்பிடுப்பா

    ReplyDelete
    Replies
    1. அட ஆமால்ல... நானே கவனிக்கல

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60