காதல் பூக்கள் 59

முழு தொடர் படிக்க

 சினம்‌ கொண்ட மனம்‌, சீக்கிரத்தில்‌ குளிர்ந்து தன்‌ இயல்புக்கு வருவதில்லை. சம்பத்தின்‌ மனம்‌ சினத்துக்கும்‌ அடுத்த கட்டமான வஞ்சினத்தின்‌ வசத்திலிருந்தது. 

'ஏண்டி சுகன்யா, நீ என்‌ கையைத்‌ தொட்டு குலுக்க முடியாத அளவுக்கு எந்த விதத்துல நான்‌ மட்டமா போயிட்டேன்‌? நான்‌ கொஞ்சம்‌ கருப்பா இருக்கேன்‌. நீ என்‌ கையை தொட்டா என்‌ கருப்பு உன்‌ கையில ஒட்டிக்குமா? என்‌ உடம்பு கருப்பு உன்‌ கண்ணை உறுத்திடிச்சா? அது என்‌ தப்பு இல்லடி.'

'சுகன்யா.. நீ கொஞ்சம்‌ செவப்புத்‌ தோலோட பொறந்திருக்கே? ஒத்துக்கறேன்‌. அதுல உன்‌ ரோல்‌ என்ன இருக்கு? என்ன... உனக்கு கொஞ்சம்‌ மார்‌ சதை புடைச்சுக்கிட்டு நிக்குது. உன்‌ வயசுல யாருக்குத்தான்‌ குத்திக்கிட்டு நிக்கல? உனக்கு தூக்கி கட்டாமேயே நிக்குது.' 


'நீ கண்ணுக்கு அழகா இருக்கே? சரி. சந்தோஷம்‌! அதுக்காக இப்படி ஒரு அல்டாப்பா உனக்கு? எல்லாம்‌ இருந்தும்‌ என்னடி பிரயோசனம்‌? உனக்கு மேனர்ஸ்‌ இல்லையே?'

'உனக்கு இன்னும்‌ புள்ளை பொறக்காததாலே வயிறும்‌, சூத்தும்‌ ஷேப்பா இருக்குது. நீ ஸ்கூட்டர்‌ ஓட்டறே. ஒத்துக்கறேன்‌. உனக்கு படிப்பு இருக்கு? அப்புறம்‌ உன்‌ கிட்ட பணமும்‌ இருக்கு? ஒத்துக்கறேன்‌. நீ உன்‌ சொந்த கால்லே நிக்கறே? உன்‌ கையாலே சம்பாதிக்கறே! ஒத்துக்கறேன்‌. அவ்வளதானேடி? இது எல்லாத்துலயும்‌ எனக்கு என்னம்‌ கொறைச்சல்‌? நான்‌ உனக்கு எந்த விதத்துலேயும்‌ தாழ்ந்து போயிடலை!' 

'நான்‌ உனக்கு அத்தைப்‌ புள்ளை! நீ எனக்கு மாமன்‌ பொண்ணு! நான்‌ உன்‌ முறை மாப்பிள்ளை. ஒண்ணு விட்ட முறைதான்‌. ஓத்துக்கறேன்‌. உன்‌ கையைப்‌ புடிக்கற முதல்‌ உரிமை எனக்குத்தாண்டி. இதுக்கு மேல என்னாடி வேணும்‌? இதுக்கு மேல நான்‌ உன்னைத்‌ தொடறதுக்கு எனக்கு என்ன உரிமை வேணும்‌? ஒரு உறவுக்காரன்‌ முன்னாடி எப்படி நடக்கணும்ன்னு உனக்குத்‌ தெரியலையே.' 

'நீ நெனைக்கறப்ப, கிழிச்சி கப்பை கூடையில தூக்கி போடறதுக்கு நான்‌ என்னா காலண்டர்ல, காத்துல ஆடிகிட்டு இருக்கற தேதி ஷீட்டா? அப்படித்தான்‌ நீ என்னை கிள்ளு கீரையா நெனைச்சுக்கிட்டு ரூமுக்குள்ள போயிட்டியா? இந்த குருட்டு கெழவி, உறவுக்காரன்‌ கிட்ட பழகறது எப்படின்னு உனக்கு சொல்லிக்‌ குடுக்காம, காப்பி குடிக்கிறியாடான்னு எனக்கு உபசாரம்‌ பண்ணி என்னை வெறுப்பேத்தறா?' 

'என்‌ ஆத்தாக்காரி திமிர்‌ பிடிச்ச உன்னை தன்‌ மருமகளா கொண்டாரணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கா. உன்‌ மூஞ்சியில இன்னும்‌ ஒரு இன்னசென்ஸ்‌ இருக்கு. உன்‌ கிட்ட இருக்கறதுலேயே அதுதாண்டி எனக்கு ரொம்பப்‌ பிடிக்குது!'

'இன்னும்‌ உன்‌ மேல என்ன மாதிரியான சரியான ஆம்பளை கை படலை. எவனும்‌ உன்னை அவுத்துப்‌ போட்டு, இழுத்து இழுத்து ரெண்டு இடி இடிக்கலைடி. அந்த திமிர்ல, உன்‌ ஓடம்பு துள்ளுதா? ஆட்டி ஆட்டி நடந்து காட்டறே? ம்ம்ம்‌.. தேவடியா முண்டை..'

'அலட்சியமா என்னைப்‌ பாத்து, உன்‌ கயவாளித்தனம்‌ எனக்குப்‌ புரியுதுன்னு சொல்ற மாதிரி ஒரு நமட்டு இரிப்பு சிரிச்சிட்டு, அகம்பாவமா எழுந்து போய்‌, கதவை மூடிக்கிட்டியே, ஒரு பொட்டை நாய்க்கு இவ்வளவு கொழுப்பா? அந்த கதவை உடைச்சுக்கிட்டு உள்ள வர எனக்கு எவ்வளவு நேரம்‌ ஆகும்‌?'

'இது உனக்கும்‌ பாட்டன்‌ வூடு. எனக்கும்‌ ஒரு விதத்துல பாட்டன்‌ வூடு. கிழப்பய அசந்து போய்‌ சோஃபாவில கிடக்திறான்‌. குடும்பத்துல மூத்தவனாச்சேன்னு மரியாதை குடுக்கறேன்‌. இல்லேன்னா இப்பவே அவனை எழுப்பி ஒரு பஞ்சாயத்து வெச்சிடுவேன்‌?'

'ம்ம்ம்‌... அவன்‌ கையில என்னா இருக்கு? உன்‌ ஆத்தாளையும்‌, அப்பனையும்‌ வீட்டை விட்டு தொரத்திட்டமே: கடைசி காலத்துல எவன்‌ தண்ணி ஊத்துவான்னு கிறங்கி போய்‌ கிடக்திறான்‌ அவன்‌. செத்த பாம்பை அடிச்சு என்னா பிரயோசனம்‌?'

'இதுவரைக்கும்‌ என்னை வேணாங்கற பொண்ணுங்க கிட்ட நான்‌ எந்த அழிச்சாட்டியமும்‌ பண்ணதில்லே. சாரின்னு எவளாவது சொன்னா, நானும்‌ ஜெண்டில்‌ மேனா கூலா போயிகிட்டே இருந்திருக்கேன்‌. ஆனா நீ, கெழவி கூட இருக்காங்கற தைரியத்துல என்னை எட்டி உதைச்சுட்டே இல்லே? இதை என்னால பொறுத்துக்க முடியாதுடி? நான்‌ பொறுத்துக்க மாட்டேன்‌?'

'நீ என்னை தேவையில்லாம சீண்டிப்‌ பாத்துட்டே? அதுக்குண்டானதை நீ அனுபவிச்சித்தான்‌ ஆகணும்‌.' 

'நான்‌ துரியோதனன்‌. துரியோதனன்‌ இளவரசன்டி. மகாபாரதம்‌ தெரியுமா உனக்கு? நானும்‌ ஒரு ராஜகுமாரன்தாண்டி. திரெளபதி துரியோதனனை அலட்சியமா பாத்து சிரிச்சா. நீ என்னைப்‌ பாத்து கிண்டலா சிரிச்சுட்டுப்‌ போறே? நெறைஞ்ச சபையில அவன்‌ அவ துணியை அவுத்தான்‌. அதுக்கப்புறம்‌ பதினெட்டு நாள்ல ஊரே அழிஞ்சுது. அதெல்லாம்‌ சரிதான்‌! நான்‌ ஒரு ரோஷமான ஆம்பிளை. என்‌ ஆம்பிளை ஈகோவை நீ குத்திப்‌ பாத்துட்டே? அந்த குத்தலை என்னால தாங்கிக்க முடியலை. என்‌ மனசு தவிக்குது. அந்த மாதிரி நீயும்‌ தவிக்கணும்‌. தவிச்சு தவிச்சு அந்த வலியை நீயும்‌ என்னை மாதிரி அனுபவிக்கனும்‌.'

'நான்‌ நினைச்சா.. பத்து நியிஷத்துல உன்‌ அழகை அழிச்சு உன்‌ திமிரை அடக்க முடியும்‌. ஆனா ஆயிரம்‌ இருந்தாலும்‌ நானும்‌ படிச்சவன்‌. சமூகத்துல நல்ல அந்தஸ்துல இருக்கற குடும்பத்தை சேர்ந்தவன்‌. உன்னை அவமானப்படுத்தறதுக்காக பயித்தியக்காரன்‌ மாதிரி புத்திக்கெட்டுப்‌ போய்‌ ஒண்ணு கடக்க ஒண்ணு பண்ணிட மாட்டேன்‌. நான்‌ புத்திசாலி. உன்‌ உடம்புக்கு நான்‌ எந்த தீங்கும்‌ பண்ணப்‌ போறதில்லே. நீ உன்‌ மனசால துக்கப்படணும்‌. நீ உன்‌ மனசுக்குள்ளவே வெளியில சொல்ல முடியாம அழுவணும்‌. நான்‌ நல்லவனுக்கு நல்லவன்‌. கெட்டவனுக்கு கெட்டவன்‌.'

'நான்‌ ஒரு விதத்துல கயவாளிதான்‌. என்‌ கயவாளித்தனத்தை நீயும்‌ பாக்கணும்‌. அடியே சுகன்யா, உன்னை என்னால தொட்டுப்பாக்க முடியலை:; பரவாயில்லை. என்ன ஆனாலும்‌ சரி.. நான்‌ உன்னை அழவைக்காம விடப்போறதில்லை... என்னாலத்தான்‌ நீ அழறேன்னும்‌ உனக்குப்‌ புரியணும்‌.' 

'என்னச்‌ செய்யலாம்‌?' சம்பத்தின்‌ மனம்‌ சக்ர வீயூகம்‌ வகுக்க ஆரம்பித்தது. 

'காப்பி கொண்டாறேன்னு உள்ளப்‌ போனக்‌ கிழவியை காணோம்‌? எவ்வளவு நேரம்‌ இன்னும்‌ நான்‌ மோட்டு வளையையேப்‌ பாத்துக்கிட்டு உக்காந்து இருக்கறது? இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும்‌ என்‌ இரத்தம்‌ அழுத்தம்தான்‌ அதிகமாகுது? ஒரு தம்மாவது அடிச்சுட்டு வரலாமா?' சம்பத்‌ யோசித்துக்கொண்டிருந்தான்‌.

“என்னடா சம்பத்து... கனகா எங்கடா?" சிவதாணு தன்‌ கோழித்‌ தூக்கத்திலிருந்து விழித்தார்‌.

“கிச்சன்ல இருக்காங்க; காஃபி போட போயிருக்காங்க தாத்தா..."

“உக்காரு நீ ஏன்‌ எழுந்துட்டே? ஒரு நிமிஷம்‌, நான்‌ பாத்ரூம்‌ போயிட்டு வந்துடறேன்‌..."

“ம்ம்ம்‌..." 

சிவதாணு கூடத்திலிருந்து நகர்ந்ததும்‌, செண்டர்‌ டேபிளின்‌ மேலிருந்த கேலக்ஸி போன் மெல்ல சிணுங்கியது. 

சிணுங்கி அடங்கியது. 

மீண்டும்‌ சிணுங்கத்‌ தொடங்கியது. 

'கிழவன்‌ - கிழவிக்கும்‌ போன்‌ வருது? லேடஸ்ட்‌ மாடல்‌ வெச்சிருக்கான்‌... பணம்‌ கொழுத்துப்‌ போயிருக்குது கிழவன்‌ கிட்ட! பேத்தி துள்ளி விளையாடறா? எடுத்துப்‌ பாக்கலாமா? வந்த எடத்துல நமக்கு எதுக்கு வீண்‌ வம்பு? வேலிப்‌ பக்கம்‌ ஒண்ணுக்கு அடிக்கப்‌ போய்தான்‌ ஒரு ஓணாணை நம்ம ஜீன்ஷூக்குள்ள வுட்டுக்குட்டு அவஸ்தை படறேன்‌? இப்ப இந்த செல்லை எடுத்துட்டு இன்னொரு ஓணாணையும்‌ ஏன்‌ உள்ள வுட்டுக்குவானே?'

செல்‌ விடாமல்‌ மீண்டும்‌ மீண்டும்‌ சிணுங்கவே... சம்பத்‌ தயக்கத்துடன்‌ செல்லை எடுத்து பேசினான்‌.

“ஹெலோ..."

“மிஸ்டர்‌ சிவதாணு சாரோட நெம்பர்‌ தானே?"

“ஆமாம்‌ நீங்க யாரு?" சம்பத்‌ அலட்சியமாகப்‌ பேசினான்‌.

“ரகு.. சார்கிட்டேயிருந்து இந்த நம்பர்‌ திடைச்சுது..."

“அது சரிய்யா... நீங்க யாருக்கிட்ட நம்பர்‌ வாங்கினீங்கன்னா கேட்டேன்‌?.. உங்களுக்கு என்ன வேணும்‌?"

“சார்‌... நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நெனைக்கிறேன்‌?"

“யோவ்‌ இங்க யாருக்கும்‌ இன்ஸூரன்ஸ்‌ பாலிஸில்லாம்‌ தேவையில்லை... ஒருத்தன்‌ மாத்தி ஒருத்தன்‌ சும்மா தொந்தரவு பண்ணாதீங்க.."

“சார்‌... நான்‌ சொல்றதை கொஞ்சம்‌ முழுசா கேளுங்களேன்‌..”

“சொல்லுயா... உனக்கு யாருகிட்டே பேசணும்‌?" சுகன்யா மீது இருந்த எரிச்சலை இவனிடம்‌ காண்பித்தான்‌.

“சுகன்யா அங்க வந்திருக்கறாதா ரகு சொன்னார்‌. சுகன்யா இருந்தா அவளை... இல்லே அவங்களை கூப்பிடுங்களேன்‌...எனக்கு அவங்க கிட்டத்தான்‌ பேசணும்‌..."

சுகன்யாவின்‌ பேரைக்‌ கேட்டதும்‌, சம்பத்தின்‌ காதுகள்‌ சிலிர்த்துக்‌ கொண்டன. சுற்றும்‌ முற்றும்‌ ஒரு முறை பார்த்துக்கொண்டான்‌. குரலை தாழ்த்தி பேசினான்‌.

“சுகன்யா இங்கதான்‌ இருக்கா... நீங்க...?” 

“நான்‌ செல்வா... தமிழ்‌ செல்வன்‌ பேசறேன்‌.. நான்‌ சுகன்யாவோட குளோஸ்‌ ஃப்ரெண்ட்‌.." செல்வா தயங்கி தயங்கி பேசினான்‌.

“அப்படியா... சாரி சார்‌... இன்னும்‌ கூட அன்சொலிசிட்டட்‌ கால்ஸ்‌ வருது பாருங்க... அதான்‌ நான்‌ உங்களை தப்பா நெனைச்சுட்ட்டேன்‌" சம்பத்‌ பம்மினான்‌. 

சம்பத்துக்கு சுர்ரென்று ஏறியது... 'அடியே சுகன்யா.. என்னமோ ஆம்பிளை காத்தே உன்‌ மேல படாத மாதிரியும்‌, பெரிய பத்தினி மாதிரியும்‌ என்‌ கிட்ட ஃபிலிம்‌ காட்டுனே? “ங்கோத்தா" உனக்கு குளோஸ்‌ ஃபிரண்டு வேற இருக்கானா?' 

'என்‌ அம்மா சொன்னது சரியாதான்‌ இருக்கு? ஜோக்கர்‌ இல்லாம இவ்வள நேரம்‌ சும்மா உக்காந்து இருந்தேன்‌. இனிமேல எடுக்கற சீட்டெல்லாம்‌ ஜோக்கர்‌ தான்‌. சம்பத்துக்கு கொஞ்ச்சம்‌ கேப்பு கிடைச்சா போதும்‌. வெச்சிடுவான்‌ ஆப்பு... இப்ப வெக்கிறேண்டி உனக்கு!' டீ.ஆர்‌ பாணியில்‌ சிலிர்த்து எழுந்தான்‌ சம்பத்‌.

“சார்‌..." செல்வாவின்‌ குரல்‌ சற்றே உயர்ந்தது.

“மிஸ்டர்‌ செல்வா.. சுகன்யா ஈஸ்‌ நாட்‌ ஃபீலிங்‌ வெல்‌... ஷீ இஸ்‌ டேக்கிங்‌ ரெஸ்ட்‌... அவங்க எழுந்ததும்‌ நான்‌ உங்களை கூப்பிட சொல்லட்டுமா?"

“சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லையா? என்னாச்சு அவளுக்கு... ரகு இதைப்‌ பத்தி என்‌கிட்ட ஒண்ணும்‌ சொல்லலியே? அவகிட்ட நான்‌ கொஞ்சம்‌ அர்ஜண்டா பேசியே ஆகணும்‌... கொஞ்சம்‌ அவளை கூப்பிடுங்களேன்‌..." 

சம்பத்‌ ஒரு வினாடி திகைத்துத்தான்‌ போனான்‌. 

'சுகன்யாவோட மாமனுக்கு வேண்டியவனா இவன்‌? சுகன்யாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னதும்‌, அப்படியே துடிச்சுப்‌ போறான்‌. அதுக்கு மேல என்னமோ சுகன்யாவுக்கு தாலி கட்டிட்டவன்‌ மாதிரி “அவங்கறான்‌... இவங்கறான்‌" நிஜமாவே இந்த செல்வா யாரா இருப்பான்‌? நிதானமா பேசி விஷயத்தை தெரிஞ்சுக்கணும்‌.'

“மிஸ்டர்‌ செல்வா நீங்க ரொம்பவே உரிமையோட சுகன்யாவை “அவ" “இவ"ன்னு பேசறதைப்‌ பாத்தா... நீங்க அவங்க ப்ரெண்ட்‌ மட்டும்‌ இல்லேன்னு தோணுதே?"

“ஆமாம்‌ சார்‌... நாங்க ரெண்டு பேரும்‌ கூடிய சீக்திரம்‌ கல்யாணம்‌ பண்ணிக்கப்‌ போறோம்‌...” சொன்னபின்‌ செல்வா தன்‌ நாக்கைக்‌ கடித்துக்கொண்டான்‌. 

'சுகன்யாகிட்ட பேசணுங்கற அவசரத்துல, என்‌ கூட பேசறது யாருன்னு கேக்காம நான்‌ பாட்டுக்கு பேசிகிட்டே போறேன்‌? நான்‌ ஒரு மடையன்னு சுகன்யா சொல்றது சரியாத்தான்‌ இருக்கு...' செல்வா தன்‌ கன்னத்தை சொறிய ஆரம்பித்தான்‌.

“ம்ம்ம்‌...” சம்பத்‌ ஒரு வினாடி யோசிக்க ஆரம்பித்தான்‌. 

'ஆப்பை வெச்சுட வேண்டியதுதானா?' 

'டேய்‌ சம்பத்‌ ஒரு தரம்‌ முடிவெடுத்ததுக்குப்‌ பின்னாடி என்னடா யோசனை? வெக்கறதை வெச்சுட்டு, கிழவி காப்பி குடுத்தா குடிச்சுட்டு சீக்கிரமா எடத்தை காலி பண்ணுடா...'

'சுகன்யா... உன் ஆட்டம்‌ முடிஞ்சு போச்சு; ஆப்பை வெச்சுடறேன்‌; நேரடியா உனக்கு இல்லே? உன்‌ தமிழ்செல்வனுக்கு வெக்கிறேன்‌... அவன்‌ அந்த ஆப்பை உருவி உனக்கு வெப்பான்‌... அப்பத்‌ தெரியுண்டி உனக்கு சம்பத்து யாருன்னு?' அவன்‌ மனசு அவனை அவசரப்படுத்தியது.

“ஆமாம்‌ நீங்க யாரு? இவ்வளவு தூரம்‌ என்னை கேள்வி மேல கேள்வி கேட்டு ஸ்கிரீனிங்க்‌ பண்றீங்க?" செல்வாவின்‌ குரல்‌ சற்றே எரிச்சலுடன்‌ வந்தது.

“நானா?" கேள்வியை கேட்டுவிட்டு பதில்‌ சொல்லமால்‌ வேண்டுமென்றே கிண்டலாக சத்யராஜ்‌ பாணியில்‌ சிரிக்க ஆரம்பித்தான்‌ சம்பத்‌.

“உங்களைத்தான்‌ கேட்டேன்‌... பதில்‌ சொல்லாம சிரிக்திறீங்க?" செல்வா தன்‌ பொறுமையை இழக்க ஆரம்பித்தான்‌.

“சுகன்யா எத்தனை பேரை கல்யாணம்‌ பண்ணிக்கப்‌ போறான்னு நெனைச்சேன்‌!.. சிரிப்பை அடக்க முடியலை!... அதான்‌ சிரிச்சேன்‌!...” சம்பத்‌ தன்‌ ஆப்பை மெதுவாக கூராக்க ஆரம்பித்தான்‌.

“மிஸ்டர்‌... நீங்க என்னப்‌ பேசறீங்க? இது சிவதாணுப்பிள்ளையோட நெம்பர்தானே? ராங்க்‌ நம்பர்‌ ஒண்ணுமில்லேயே?" 

'சுகன்யாவோட தாத்தா வீட்டுல யாரு இப்படி சுகன்யாவைப்‌ பத்தி தப்பா பேசுவாங்க?' செல்வாவால்‌ தன்‌ காதுகளை நம்ப முடியவில்லை.

“தமிழ்‌ செல்வா... நீங்க சரியான நெம்பர்லதான்‌.. அதுவும்‌ சரியான ஆள்‌ கிட்டதான்‌ பேசறீங்க... என்‌ பேரு சம்பத்குமார்‌... என்னை ஆசையா எல்லாரும்‌ சம்பத்துன்னு கூப்பிடுவாங்க; சுகன்யாவோட அத்தைப்‌ பையன்‌ நான்‌.. சுகன்யாவோட முறை மாப்பிள்ளை கிட்டத்தான்‌ பேசிட்டு இருக்கீங்க..." கூராக்திய ஆப்பில்‌ சிறிது தேங்காய்‌ எண்ணையையும்‌ பூச ஆரம்பித்தான்‌.

“சார்‌... நீங்க சுகன்யாவைப்‌ பத்தி தப்பா பேசற மாதிரி தெரியுது?"

“நான்‌ என்ன தப்பா பேசிட்டேன்‌? கேக்கற உனக்கே கோவம்‌ வருதா? சுகன்யாவை ஸ்கூல்‌ டேஸ்லேருந்தே என்‌ மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு மருகிக்கிட்டு இருக்கேனே? அது தப்பாய்யா?"

“ம்ம்ம்‌..." செல்வா முனகினான்‌.

“என்னப்‌ பண்றது? நான்‌ கொஞ்சம்‌ கருப்பா பொறந்துட்டேன்‌... தமிழ்‌ நாட்டுல கருப்பா இருக்கறவன்‌தாய்யா பெரிய மனுஷனா, வெள்ளையும்‌ சொள்ளையுமா உலாவறான்‌. செத்த நேரம்‌ முன்னாடிதான்‌ சுகன்யாகிட்ட கிளாட் டு மீட்‌ யூ-ன்னு கை நீட்டினேன்‌. சுகன்யாவுக்கு என்‌ கருப்பு கையை புடிச்சு குலுக்கறதுக்கு இஷ்டயில்லே?"

“சார்‌... நீங்க சுகன்யாவை கூப்பிடுங்க ப்ளீஸ்‌.."

“கண்டிப்பா கூப்பிடறேன்‌... நீங்க தாராளமா உங்க லவ்வர்‌ கிட்ட பேசுங்க... நான்‌ சொல்றதை கொஞ்சம்‌ கேளுங்க..."

“ம்ம்ம்‌.." செல்வா 'இது என்னடா இது ஒரு பைத்தியக்காரன்‌ கிட்ட மாட்டிக்கிட்டேன்‌ போல இருக்கே...' என்று விழித்தான்‌.

“நடுவுல என்‌ தங்கம்‌... காலேஜ்‌ அது இதுன்னு வெளியூர்லல்லாம்‌ போய்‌ படிச்சாளா? மெட்றாஸ்ல்ல வேலை வேற கிடைச்சிடுத்து... இப்ப நம்பளைப்‌ பாத்தா பாக்காத மாதிரி ஒதுங்கறா சார்‌... நீங்களே சொல்லுங்க இது ஞாயமா? எல்லாத்துக்கும்‌ மேல, என்‌ கிட்டயே, நீங்க என்‌ மாமன்‌ பொண்ணை கட்டிக்கப்போறேன்னு நோட்டீஸ்‌ குடுக்கறீங்க... இது ரைட்டா?"

“அயம்‌ சாரி மிஸ்டர்‌ சம்பத்‌... ஆனா இதுல நான்‌ என்னப்‌ பண்றது?.. சுகன்யா விருப்பம்‌ தானே இதுல முக்கியம்‌? இப்ப உங்க கிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு புரியலை?"

“நான்‌ தெளிவா சொல்றேன்‌ நைனா. நீ நல்லா கேட்டுக்கோ... காத்திருந்தவன்‌ பொண்டாட்டியை நேத்து வந்தவன்‌ அடிச்சுட்டு போனானாம்‌... இந்த கதை உனக்குத்‌ தெரியுமா? எட்டு வருசமா நான்‌ அவளை காதலிக்கறேன்‌!. நேத்து வந்த நீ என்‌ சுகன்யாவை கல்யாணம்‌ பண்ணிக்கிட்டு சீர்‌ வரிசை வாங்கிட்டு போவே? நான்‌ என்ன உன்‌ பஸ்ட்‌ நைட்ல பக்கத்துல நின்னு வெளக்கு புடிக்கவா?” சம்பத்‌ தன்‌ ஆப்பை அழுத்தமாக செருகினான்‌.

“ம்ம்ம்‌...”

“என்னம்ம்மா கண்ணு... சத்தத்தையே காணோம்‌...? ஹார்ட்‌ அட்டாக்கா? போய்‌ கீய்‌ தொலைச்சுடாதே? சுகன்யா அப்புறம்‌ ரொம்ப வருத்தப்படப்‌ போறா?"

“மிஸ்டர்‌ சம்பத்‌...” செல்வாவின்‌ குரல்‌ நிஜமாகவே அவன்‌ தொண்டையிலிருந்து எழவில்லை...

“கடைசியா ஒரே ஒரு வார்த்தை... உன்‌ தோலு என்ன செவப்பா?... இல்லே கருப்பா? சுகன்யாவோட அப்பனும்‌ ஆத்தாளும்‌ அவளை எனக்கு கட்டிக் குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே? அதுக்கு காரணம்‌ நீதானா?"

“உங்களால சுகன்யாவை கூப்பிட முடியுமா... முடியாதா?"

“டேய்‌... செல்வா... நான்‌ என்ன மாமா வேலையா பாக்கறேன்‌, சுகன்யாவை கூப்பிட்டு உன்‌ கையில தாரை வாத்து குடுக்கறதுக்கு? மாசம்‌ முழுசா சொளையா ஒரு லட்சம்‌ சம்பாதிக்கற எஞ்சினீயர்டா! அமெரிக்காவுலேருந்து வாடா வாடான்னு நாலு கம்பெனிக்காரன்‌ கூவுறான்‌! இப்பலைனை கட்‌ பண்ணு... ரெண்டு நிமிஷம்‌ கழிச்சி திருப்பியும்‌ போடு! கிழவன்‌ சிவதாணு கக்கூஸுக்கு போயிருக்கான்‌! வந்து சுகன்யாவை உனக்கு கூட்டி குடுப்பான்‌... வெச்சிடட்டா" சம்பத்‌ செல்வாவின்‌ பதிலுக்கு காத்திராமல்‌ லைனை கட்‌ பண்ணி... ஞாபகமாக செல்வாவின்‌ நம்பரை நோட்‌ பண்ணிக்கொண்டு, செல்லை செண்டர்‌ டேபிளின்‌ மேல்‌ வைத்தான்‌. 

'ஆப்பு அழகா எறங்கிடுச்சு... வெச்ச எனக்கும்‌ வலிக்கல... வெச்சிக்கிட்டவனுக்கும்‌ வலிக்கலை. நேரம்‌ போவ போவ அந்த பைத்தியக்கார செல்வா நான்‌ போட்ட பிட்டை திருப்பி திருப்பி மனசுக்குள்ளவே ரீவைண்ட்‌ பண்ணிப்‌ பாப்பான்‌... அப்ப வலிக்கும்‌...' சம்பத்‌ தன்‌ மனசுக்குள்‌ திருப்தியுடன்‌ சிரித்துக்கொண்டான்‌.


தொடரும்...

Comments

  1. என்ன சகோ பெரிய சண்டையை உருவாக்கி வச்சிடீங்க
    நான் அதிகம் படிக்காம scroll பண்ணது இந்த பாகம் தான் சகோ
    எப்பவும் interest ஆஹ் படிக்கறது இந்த பாகம் சரியில்லை சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60