மறுவாழ்வு 34
முழு தொடர் படிக்க
சத்யா மெஜஸ்டிக்கில் சந்தித்த தெவிடியாவை ஓத்து முடித்ததும், அவள் வெளியே போய் விட, அறையின் மூலையிலிருந்து, ஒரு பெண் குரல் கேட்டது,
சத்யா மெஜஸ்டிக்கில் சந்தித்த தெவிடியாவை ஓத்து முடித்ததும், அவள் வெளியே போய் விட, அறையின் மூலையிலிருந்து, ஒரு பெண் குரல் கேட்டது,
"என்ன காப்பாத்துங்களேன்" என்று, அவசரமான பெண் குரல்.
அவளைக் கடத்தி வந்து அடைத்து வைத்திருந்தவர்களிடமிருந்து காப்பாற்றி, அவளை அழைத்துப் போய் ஒரு ஓட்டலில் சாப்பிட வைத்தான்.
அவள் ஊர், பெயர் கேட்டான்.
"காஞ்சிபுரம்"
"சுகந்தி ஒங்க வீட்டில யாரு இருக்கா, போன் ஏதும் இருக்கா?"
"வீட்ல சித்தி மட்டுந்தான்."
"இல்ல.. அதெல்லாம் இல்ல."
யோசித்தான். சங்கடந்தான். இன்னிக்கு ராத்ரி நம்ப அப்பார்ட்மென்ட்தான். நாளைக்கு ஏதாவது வழி திறக்கும் என்று எழுந்து,
"சரி என் வீட்டுக்கு போலாம், வா" என்று கையைப் பிடித்தான். தவிர்த்து, அவளே எழுந்து நடந்தாள்.
ஓட்டல் பில் கொடுத்து விட்டு, அங்கிருந்து கிளம்பினர்.
நடையில் தள்ளாட்டம்தான். நடந்து போய், பஸ் பிடித்துப் போக முடியாது, தாள மாட்டாள், என்று ஒரு ஆட்டோ பிடித்தான். ஆட்டோ ஓடும் வேகத்தில், பெங்களூரின், பிப்ரவரி மாத குளிர் காற்று சில்லென அடித்தது. அவளுக்குப் பழக்கமில்லை, உடல் நடுங்க மார்பில் குறுக்காய் கை கட்டி உடலை குறுக்கி, அவனை ஒட்டி உட்கார்ந்தாள். அவள் தலை தானாக அவன் தோளில் சாய்ந்து கண் மூடினாள். அவனும் அவளை, கை சுற்றி அணைத்தான். அவன் கழுத்தில் பதிந்த நெற்றி சூடாக இருந்தது.
மணி பத்து இருக்கும். அப்பார்ட்மென்ட் நெருங்கும் பொழுதுதான், நினைவு வந்தது.
'ஆட்டோவுக்குப் பணம்?'
சிக்கல், 'ஆட்டோவை திருப்பி, ஏ டி எம் போக விட வேண்டுமா, இல்லை, மேலே போய் வீட்டில் எடுத்து வந்து கொடுக்கலாம்' என்று முடிவு செய்து இறங்கினான். ஆட்டோக்காரரிடம், காத்திருக்கச் சொல்லி, பணம் கொண்டு வருவதாகக் கூறினான்.
கேட் பூட்டியிருந்தது. காவல்காரன் தூங்கிக் கொண்டிருந்தான். கேட்டை தட்டி எழுப்பினான். அவன் எழுந்து, சாவி போட்டு, கேட் திறந்து வழிவிட்டான்.
ஆட்டோகாரர், "பேகனே பந்பிடி" (சீக்ரம் வந்துடுங்க) என்றான்
காவல்காரன், "என்னா தம்பி?" என்று விசாரித்தான் தமிழில்.
"வந்து....... பணம் பத்தல, பர்ஸல இல்ல, மேல போய்க் கொண்டு வரனும்" என்று சத்யா கூற
"நா குடுக்கரன் தம்பி நீங்க போங்க" என்று ஆட்டோக்காரரிடம் பேசி தன் ஜோபியிலிருந்து எடுத்துக் கொடுத்தான். ஆட்டோ போனது.
"நா போயி பணம் எடுத்தாரான்" என்றான் சத்யா
"என்னா தம்பி அவசரம்", என்று இதுவரை பார்த்திராத அந்தப் புதுப் பெண்ணைப் பார்த்தான், கேட்டைப் பிடித்துச் சோர்ந்து சாய்ந்திருந்தாள்.
"பாவம், ஏதோ ஒடம்பு சரியில்லாம இருக்காப்ல. நீ இட்டுட்டு போ தம்பி, நாளக்கி கொடுத்தாப் போச்சி, எங்கப் போவுது பணம்" என்றதும், சத்யா அவளைக் கைத்தாங்களாய் கூட்டிப் போனான்.
லிப்ட் ஏறி அவன் அப்பார்ட்மென்ட் கதவைத் திறந்து, கை பிடித்து நடத்தி, அறையில் அவன் ஒற்றைக் கட்டிலில் படுக்க வைத்தான். நெற்றியைத் தொட்டான் 'இது சாதாரணச் சூடு இல்லை, காய்ச்ச தான்'.
சுருண்டு படுத்தவள் மேல் போர்வை ஒன்றை போர்த்தினான். அடுத்த நிமிடம் அவள் கண் மூட, விளக்கை அணைத்து, குளியளறை விளக்கை மட்டும் பொறுத்தி கதவை ஒருக்களித்து வைத்தான். இருந்த இன்னொரு போர்வை தலைக்காணி எடுத்து ஹாலில் வந்து, தரையில் போட்டான். கைலிக்கு மாறி, படுத்தான். அன்றைய வித்யாச அடுத்தடுத்த நிகழ்வுகளை, திரும்ப நினைக்கக் கூட முடியாமல் அசதியில் படுத்ததும் தூக்கம்.
ஏதோ சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்தது. வாரி சுருட்டி எழுந்து ஓடினான் அறையை ஒட்டிய குளியலறையில், பேசினில் உவா உவா என்று வாந்தி. சட்டென அவள் தலையைப் பிடித்துத் தாங்கினான்.
எடுத்து முடிந்ததும், வாய் கொப்பளிக்க வைத்து, திரும்ப அழைத்து வந்தான். படுக்கையிலும் வாந்தி. அவளை ஓரத்தில் உட்கார வைத்து, விரிப்பை உருவி விட்டு, தனது விரிப்பை போட்டு, தண்ணீர் பாட்டில் எடுத்து ஒரு வாயில் தண்ணீர் புகட்டி படுக்க வைத்தான். உடல் நெருப்பாய்க் கொதித்தது. என்ன செய்வதெனப் புரியவில்லை.
மணி பதினொன்றை தாண்டி விட்டது.
'க்ளீனிக் ஏதும் அழைத்துப் போவனுமா, இந்த ஏரியாவில எங்க இருக்குன்னு தேடனும். இந்த நேரத்தில. அதுவும் இந்தப் பொண்ணு காயங்களோடு என்றால், ஏதோ போலீஸ் கேஸ் என்று தொடமாட்டார்கள்.' குழம்பினான்.
சட்டென ஒரு யோசனை, 'எதிர் அப்பார்ட்மென்ட் பெங்காலி மேடம் ஏதும் மருந்து வச்சிருப்பாங்க.'
ஒரு நாள் மாலை, அவன் ஆபீஸ் முடிந்து திரும்பி லிப்டில் ஏறும் பொழுது, நாளைந்து பசங்களாய் ஓடி வந்தார்கள். அதில் ஒரு பையனுக்குக் கிரிக்கெட் விளையாட்டில், மண்டையில் அடி பட்டு, ரத்தம் கசிந்தது. சத்யா விசாரிக்க, "பத்தாவது ஃப்ளோர் போறோம். அங்க ஒரு மேடம் மருந்து போடுவாங்க" என்றார்கள்.
தனது எதிர் அப்பார்ட்மென்ட்க்கு சமீபத்தில் குடி வந்தார்கள் ஒரு பெங்காலி மேடம்.
"அவங்க என்னா டாக்டரா?" என்றான்,
"இல்ல இல்ல அங்கிள் அவங்க ஹோமியோபதி மருந்து போடுவாங்க" என்றனர்.
'அவங்க கிட்ட போனா ஏதாவது மருந்து கிடைக்கலாம். ஆனா இந்த இரவு வேளையில் தொந்தரவு கொடுப்பதா' என்று தயக்கம், ஆனால் 'இவள் காலை வரை தாங்க மாட்டாள், ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று எழுந்தான்.
எதிர் அப்பார்ட்மென்ட் அழைப்பு மணியை அழுத்தினான். பதில் இல்லை, நேரம் விட்டு மீண்டும் அடித்தான். சில நிமிஷம் பொறுத்து, கதவு திறந்தது. நின்றிருந்தாள் வேலைக்காரி. அவளைப் பார்த்துள்ளான் பேசியது இல்லை.
"மேடம் இதாரா?"
(இருக்கின்றார்களா) என்றான் கன்னடத்தில்.
(இருக்கின்றார்களா) என்றான் கன்னடத்தில்.
அவளுக்குத் தூக்கம் முழுமையாய் கலையவில்லை.
"இன்னா?" என்றாள் குழப்பமாய்.
"மேடம்.. மேடம்.." என்று அவன் மறுபடியும் கேட்டான்
"ஓ.. மேடமா, இல்லையே ஊருக்குப் போயிருக்காங்க, என்ன வேணும்" என்று தமிழில் பதில் வந்தது.
"ஓ தமிழா...... இல்ல...... காய்ச்சலுக்கு மருந்து வேணும்"
"காய்ச்சலா..... ஓ ஜொரமா.....இந்த நேரத்திலயா.........." என்று சற்று எரிச்சல்.
"யாருக்கு ஒங்களுக்கா?"
"இல்ல ஒரு பொண்ணுக்கு....."
"எந்தப் பொண்ணுக்கு?"
"என் அப்பார்ட்மென்ட்ல, இருக்கா"
"ஜொரம், எவ்ளோ நாளா இருக்கு"
"தெரியாது இன்னிக்குத்தான்னு நெனக்கிரன். ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, காலைல டாக்டர் கிட்ட போறவரக்கும் தாங்காது."
"நா வந்து பாக்கட்டுமா?"
"ஊம் வாங்களேன்" என்று அழைத்துப் போனான்.
சுகந்தி அருகில் போய், நெற்றியை தொட்டுப் பார்த்து, சட்டென எடுத்தாள்.
"அய்யோ இப்டி சுடுது, எப்போதிருந்து காய்ச்சல்"
"தெரியாது"
"தெரியாதா, எதனா மருந்து குடுத்தீங்களா?"
"அதுக்குத்தானே மேடத்துக்கிட்ட வந்தேன்"
"அய்யோ ஆமா இல்ல, தூக்கம் இன்னும் கலையல" என்று சிரித்து. சரி நா போயி எடுத்தாரன்" என்றாள்.
"வாந்தி கூட எடுத்திட்டா"
"அப்டியா?" என்று போனாள். பத்து நிமிடம் கழித்து, நாளைந்து மருந்து பாட்டில்களைக் கொண்டு வந்தாள். முதல் பாட்டிலில் இருந்து நாளைந்து பொடி மாத்திரைகளை எடுத்து அவள் வாயை திறக்கச் சொல்லிப் போட்டாள்.
"சப்பிச் சாப்பிடும்மா முழுங்காத" என்றாள்.
அவளும் கண் திறந்து, வாயை காட்டினாள், மருந்தை போட்டு விட்டு,
"இந்த நாலு மருந்த அரை மணிக்கு ஒரு வாட்டி மாத்தி மாத்தி கொடுக்கனும்" என்று மாத்திரை பாட்டில்களைக் கொடுத்து,
"காலைல சொல்லுங்க" என்று நகர்ந்தாள்.
கதவு வரை வந்து, போகும் முன்,
"ஆமா யாரு அவங்க, நா இதுவரக்கும் பாத்ததே இல்லயே" எனக் கேட்டாள்.
"ஆமா எனக்கும் யாருனு தெரியாது"
"அப்பிடின்னா?"
"யாரோ ஒரு பொண்ணு, காஞ்சிபுரமாம், கடத்திட்டு வந்துட்டாங்களாம். நா சிக்பெட் கிட்ட போயிருந்தப்ப, அது தப்பிச்சி ஓடியாந்துது நாந்தான் காப்பாத்தி கூட்டி வந்தேன்."
"அப்டியா, அச்சச்சோ..! அய்யோ பாவம்." என்று தயங்கி நின்றவள்,
"வேற ஏதாச்சும் வேணுமா?" என்றாள்.
"இல்ல ஒண்ணும் வாணாம். காலைல பாக்கலாம்."
"ஊம்......" என்று திரும்பி, "நா ஓணுன்னா தொணயா இருக்கவா?" எனக்கேட்டாள்.
"இல்ல வாணாம், ஒங்களுக்கு எதுக்கு தொந்தரவு"
"தொந்தரவா எனக்கா.... அப்ப ஒங்களுக்கு.... இருங்க", என்று யோசித்து, "நீங்க என்னா பண்ணுவீங்க, ஆம்பள தனியா, அறை மணிக்கு ஒரு வாட்டி மருந்து குடுக்கனும். நா அவள இட்டுப் போயி என் அறையில படுக்க வச்சி, மருந்து குடுக்கலாம். நீங்க ஆபீஸ் போறவங்க, ராத்திரி எதுக்கு கண்ணு முழிக்கனும்.." என்று அவன் சம்மதத்திற்குக் காத்திராமல் திரும்பி வந்தாள்.
படுத்திருந்தவளை தொட்டு தூக்கி உட்கார வைத்தாள்.
"வாம்மா.. மெல்ல" என்று கை தாங்கலாய் தூக்கினாள். அவள் படுத்திருந்த கரையாகிய போர்வையையும் ஒரு கையால் சுற்றி எடுத்தாள்.
"எதுக்கு போர்வை"
"தொவச்சிடலாம். நீங்க என்னா பண்ணுவீங்க, காலைல பாக்கலாம்" என்று, அவளை நடத்தி போனாள்.
தன் அறையில் கட்டிலில் படுக்கை வைத்து, போத்திவிட்டு, தனக்குத் தரையில் ஒரு படுக்கை போட்டு படுத்தாள். சுரம் அதிகமாகி, உடல் தூக்கிப் போட்டது, இன்னும் ஒரு போர்வை எடுத்து போத்தி விட்டு, வேறு ஒரு மருந்தை கொடுத்து விட்டு, கட்டில் பக்கத்தில், அவள் தரை படுக்கையில் உட்கார்ந்தபடியே தூங்காமல், அவளையே பார்த்திருந்தாள்.
"நல்லா செவப்பா, அழகான பொண்ணு, இருவது வயசுதானிருக்கும், அதான் கொத்திட்டு வந்துட்டானுவ, கொலகாரப் பாவிங்க. பாவம் என்னா கஷ்டப் பட்டுதோ"
அப்பொழுதுதான் பார்த்தாள், கை, கழுத்தெல்லாம் ஆழமான கீறல்கள். எழுந்தாள், ஹோமியோபதி, மருந்தில், கேலன்டுலா என்னும், திரவத்தைப் பஞ்சில் நனைத்து, அவளை எழுப்பினாள். அவள் கண் திறக்க முடியவில்லை. கண்கள் சொருகியது.
"தோ பாரு, மருந்து தடவுறேன், எரியும் பொருத்துக்க" என்று தடவினாள்.
"ஆஆஆ.." என்று கத்தல், ஊதி விட்டு, சமாதானம் பண்ணி, காயம் இருந்த இடத்திலெல்லாம் தடவினாள். மீண்டும் போர்த்தினாள். தூங்காமல், விழிந்திருந்து, அரை மணிக்கு ஒரு தடவை எழுத்து, மருந்து கொடுத்து வந்தாள்.
எதிர் வீட்டில இருக்கரவரைப் பற்றி நினைவு ஓடியது.
'தெக்கத்திய தமிழ் பேசரவருன்னு தெரியாம போயிடுச்சே'
காலை நேரத்தில், அவன் தோள் பையோடு, ஸ்டைலாய், பைக் ஹெல் மெட் எடுத்து போகும் பொழுது நிறைய தடவை பார்த்துள்ளாள். 'படிச்சவங்க, பெரிய வேலையில இருக்கரவுரு, நாம்ப எங்க பேச'ன்னு கூச்சத்தில் பேசாமலே எட்டி நின்று பார்த்தவள்தான்.
'நல்லா அழகா இருக்காரில்ல'
நாளைந்து முறை மருந்து கொடுத்தபின், தாளமுடியாத தூக்கத்தில் எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாமல், விடிந்தபின்தான் எழுந்தாள்.
சத்யா, கதவை சாத்தி விட்டு வந்து படுக்கையில் படுத்து தலை சாய்த்தான். முதன் முதலாய் அவன் படுக்கையில் ஒரு பெண்ணின் வாசம். மெல்ல ஒரு புன்முருவல். நடந்த விசித்திர நிகழ்வுகளின் நினைவில் சற்று நேரம் தங்கி, தூங்கிப் போனான்.
மறுநாள் காலை வழக்கத்தை விட நேரம் கழித்தே விழிப்பு வந்தது. ஞாயிறு அவசரமில்லை, இன்னும் தூங்கலாம். ஆனால், நேற்று இட்டு வந்த பொண்ணு எப்டியிருக்கா என்று பாரக்க வேண்டும் என்று ஆவல்.
அடுத்த அரை மணியில் தயார். எதிர் அப்பார்ட்மென்ட் மணி அடித்து காத்திருந்தான். சிரித்த முகத்தோடு "வாங்க" என்றாள். இவனும் சிரித்து அவளை நன்றாக பார்த்தான். அவள் நேற்றிரவு பார்த்ததை விட நல்லா அழகா இருக்கா, வேலைக்காரி மாரியே இல்ல, நல்ல லக்ஷணமா குடும்பப் பொண்ணு மாரி.
"எப்படி இருக்காங்க நம்ம விருந்தாடி" என்று நுழைந்தான்.
"ராத்திரிக்கு எவ்வளவோ தேவல" என்று அவள் அறைக்கு அழைத்துப் போனாள். கட்டிலில் படுத்திருந்தவள் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்து ஒரு பார்வையோடு தலை கவிழ்ந்தாள்.
"எப்படி இருக்கு?" என்றான்.
கஷ்டப்பட்டு ஒரு வரட்டு புன்முறுவல், "பரவாயில்ல இப்ப" என்றாள்.
"நேத்துக்கு எவ்வளவோ தேவலையே, நா பயந்து போய்டேன்", என்றான்
"ஆமா, நாங்கூடத்தான். என்னா ஜொரம், தூக்கி தூக்கி போட்டுச்சே. மேடம் தான் சரியா மருந்து கொடுப்பாங்க நா என்னா செய்யறதுன்னு கவலப்பட்டேன், ஏதோ மேடம் சொன்ன மருந்துகளை ஞாபகத்தில வச்சி கொடுத்தேன். கடவுள் புன்னியத்தில ஹோமியோபதி மருந்து நல்லா வேலை செஞ்சிடுச்சு. இனி கவலை இல்ல. ஜொரம் கொஞ்சம் விட்டுருக்கு இன்னும் ஒரு நாள் போனா சரியாடுமாம்."
கைகளில், கழுத்தில் காயம் இருந்த இடத்தில் பஞ்சி வைத்திருந்தாள்.
"என்ன ஆயின்மென்ட் காயத்துக்கு?"
"ஆயின்மென்டெல்லாம் இல்ல, கேலண்டுலா (ஹோமியோபதி மருந்து) தடவி பஞ்சி வச்சிருக்கேன், சீக்ரம் ஆறிடும். நீங்க டிபன் சாப்பிட்றீங்களா."
"டிபனா? அந்தக் கெட்ட பழக்கம் எல்லாம் இல்ல, நேரா ஆபீஸ் காப்பி பத்து மணிக்குத்தான்." என்று சிரித்தான்.
"நல்லா இருக்கு........ காலைல வயித்த வெறும் வயிறா போடறதா, இட்லி சுட்டுட்டேன் சாப்டுப் போவலாம் ஒக்காருங்க" என்று சமையல் அறை உள்ளே போனாள்.
அந்த அறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்தான். நேற்றிரவு அவளைச் சரியாகப் பார்க்கவும் இல்லை.
நல்ல சிவந்த நிறம். முகம் அழகு பேரழகு என்று கூடச் சொல்லலாம்.
"ஏதும் சாப்பிடியா?"
"இல்ல இன்னும், இப்பத்தான் கண் விழிச்சி எழுந்தா, தோ அவளுக்கும் இட்லி கொண்டாரன்" என்று குரல் வந்தது சமையலறையிலிருந்து..
சற்று பொறுத்து, இரண்டு தட்டில் நான்கு நான்கு இட்லி சுடச்சுட வந்தது. தட்டுக்களை வைத்து விட்டு "வா எந்திரி வாயக் கொப்பளிச்சுட்டு சாப்டு மெல்ல" என்றதும் அவள் சற்று சிரமத்தோடு எழுந்தாள், கை பிடித்துத் தூக்கி விட்டுப் பாத்ரூம் அழைத்துப் போனாள்.
இட்லியை பார்த்து சத்யா நாக்கில் ஜலம் ஊறியது. வாயில் கரைந்தது இட்லி, காரமாய்த் தேங்காய் சட்னி.
"நல்லாயிருக்கா இட்லி", என்றாள் சத்யாவைப் பார்த்து.
"மல்லிகைபூ..... பல மாசமாச்சி வீட்டு இட்லி சாப்பிட்டு"
"இன்னும் ரெண்டு?" என்றதும்
"ஊம்.." என்றான்.
சாப்பிட்டு முடித்ததும். காப்பி கொண்டு வந்தாள்.
"ஒனக்கு, ஹோமியோபதி மருந்துக்குக் காப்பி ஆகாது, ஹார்லிக்ஸ் கலக்கனும்."
காப்பி ஆனதும்,
"நன்றி டிபனுக்கும், இந்த இக்கட்டான சமயத்தில ஒதவினதுக்கும்" என்றான் சத்யா.
"அய்ய இதெல்லாம் இன்னா. ஒரு பொண்ண காப்பாத்தி இட்டு வந்திருக்கீங்க, நானும் ஒரு நல்ல பொண்ணா இருந்து உதவ வேணாமா."
"இவ்ளோ நாளா இந்த ப்ளோர்லயே எதித்தாப்பல இருந்தும்......நாம பேசினதில்ல, எம்பேரு சத்யா, நீங்க?"
"நானு மரகதம்."
"அவ பேரு சுகந்தியாம்"
"தெரியுமே.. ஆமா என்னாச்சாம்"
"அந்த வெவரமெல்லாம் இன்னும் கேக்கல. ராத்திரி எழுப்பி எழுப்பி மருந்து கொடுத்ததோடு சரி, இப்பத்தான் தெளிவா இருக்கா."
"என்னாச்சிமா சொல்லு" என்றாள்
சுகந்தி, தலையைக் கவிழ்த்த படியே சொன்னாள்.
"எங்க ஊடு காஞ்சிரத்தில தேனம்பாக்கம்ன்ற எடத்தில இருக்கு. நா என் சித்தி மட்டும் தனியா இருக்கோம். அப்பா எறந்துட்டாரு. நா செங்கல்பட்டுல வேல செய்யரன். ரெண்டு நா முன்னால, இருட்டுற வேல, வீட்டுக்கு, ரயில்வே ஷ்டேஷன் விட்டு, தனியா நடக்கனும். திடீருன்னு ஒரு கார் இடிக்கறாப்பல வந்து நின்னுது, ரெண்டு பேர் வந்து தூக்கி கார்ல போட்டுட்டாங்க" என்று கூறி கண்ணில் நீர் வடிய தலை குனிந்தாள்.
"அப்ரம் என்னாச்சி?"
"நா எவ்வளவோ திமிறிப் பாத்தேன். கைகுட்டய வச்சி முகத்த மூடினாங்க. மயங்கிட்டேன். கார்ல ரொம்ப நாழி போனா மாதிரி இருந்திச்சி. ராத்திரி வேளையில, கார உட்டு எறக்கி நடத்திகிட்டு போனாங்க. ஒரு அறையில அடைச்சி வச்சிட்டாங்க. சோறு தண்ணி குடுப்பாங்க, பாத்ரூம் போவ இட்டுட்டுப் போயி வந்த ஒடனே பூட்டி வச்சிடுவாங்க. எவ்ளோ கெஞ்சி பாத்தேன் படுத்துக் கெடந்தேன்" என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
"பரவா இல்ல பரவா இல்ல அழாத" என்று மரகதம் தலையைத் தடவி விட்டாள்.
"அப்ரம்?"
அடுத்து அந்தத் தெவிடியா வீட்டப் பத்தி என்ன சொல்லப் போகின்றாளோ என்று சத்யா நெளிந்தான்,
"இவருதான் என்ன காப்பாத்தினாரு."
"ஆமா ஆமா" என்று அவன் முந்திக்கொண்டு, "நா சிக்பெட்டுக்கு ஒரு வேலையாப் போனேன், அப்ப இருட்டில யாரோ ஓடி வந்து மோதிட்டான்னு பாத்தா இவதான். காப்பாத்துங்க காப்பாத்துங்கனு சொன்னதும். கைய புடிச்சிகிட்டு ஓடினோம், சந்து சந்தா ஓடி அந்த எடத்த விட்டு வெளியேறிட்டோம். அப்ரம் ஒரு ஆட்டோ பிடிச்சி கூட்டி வந்துட்டேன்." என்றான்.
"நல்ல வேளையாப் போச்சி, அந்தக் கும்பல்காரங்க கிட்டேயிருந்த தப்பிச்ச. இனி கவல இல்ல" என்று மரகதம் அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள்
பலகாரம் ஆனதும், "சரி நீங்க அவள பாத்துக்குவீங்க இல்ல, சிரமம் ஒன்னுமில்லயே, மேடம் எப்ப திரும்புவாங்க?" எனக் கேட்டான்.
"அவங்க வர இன்னும் ஒரு வாரம் இருக்கு. இவ தங்க ஒன்னும் கஷ்டமில்ல. மேடம் வந்தாக்கூட என்னா சொல்லப் போறாங்க, இப்டி ஒதவரதுக்கு ஒன்னும் சொல்லமாட்டாங்க. அவங்க நல்ல குணம் யாருக்கு வரும்."
"அப்ப சரி..... நா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, சாயந்திரமா நிதானமா பேசலாம். மருந்து மாத்திரை ஏதும் வாங்கி வரவா."
"ஒன்னும் வேணாம் ஹோமியோபதி இருக்க மத்தது எதுக்கு."
"ஆங் ஒன்னு மறந்து போச்சே. அவங்க சித்தி இவளத் தேடுவாங்களே"
"ஆமாம் இல்ல. ஏம்மா, சித்திக்கு எப்டி தெரிவிக்கறது, ஒனக்கு ஆபத்து ஒன்னுமில்லன்னு அவங்களுக்கு எப்படி சொல்றது. டெலிபோன் ஏதாவது.?"
"அதெல்லாம் இல்ல."
"ஏன் அண்டை பக்கத்து வீட்டில போன் இல்லயா?"
"இருக்கும், நெம்பர்லெல்லாம் தெரியாது. நாளைக்கு லெட்டர் ஒன்னு போட்டா போதும்" என்றாள்.
"ஆகட்டும் எழுத வச்சி போடறேன். நீங்க போய் வாங்க. அப்ரம், மத்யானமும் சாப்ட வாங்களேன்."
"இல்ல வெளில போறேன் வர லேட்டாவும்"
"அப்ப, ராத்திரி வந்து சாப்பிடுங்க"
"அய்யய்யோ எதுக்கு வீண் சிரம்ம்"
"அதெல்லாம் ஒன்னுமில்ல, நானே சமைச்சி தனியா சாப்டு அலுத்துப் போச்சி, ஒங்க ரெண்டு பேருக்கும் சேத்து சமைக்கிரது, ஒன்னா சாப்பிடர சந்தோஷம் வருமா. நல்ல தமிழ்ல பேச பேச்சித்துணை ஒன்னு போதுமே."
"ஒங்கிஷ்டம்" என்று நடந்தான்.
'சினிமாவுக்குப் போயி பல மாசமாச்சி. எம் ஜி ரோட் போயி சுத்திட்டு, சாப்டு ஒரு நல்ல இங்கிலீஷ் படம்', என்று போனான்.
பஸ்ஸில் போகும் பொழுது, சத்யாவுக்கு, அந்தப் பெண் சுகந்தி பற்றி நினைவு ஓடியது.
'நல்லா செவப்பா லட்சணமா இல்ல அந்தப் பொண்ணு',
'ஆமா மாப்ள...... ஒனக்கு... பாக்ர எல்லா வயசுப் பொண்ணும் கண்ணுக்கு ரதிதான். நாப்பது வயசு மாமியப் பாத்தே மயங்கி உளுந்தவன் தானே நீ.'
'நல்ல வேல தெவிடியா ஊட்டுக்குள்ளார நம்பளப் பாத்தத வெளிய சொல்லாம விட்டுதே அந்தப் பொண்ணு...'
'ஆமா பொளச்சோம், சொல்லியிருந்தா நம்ப மானம் அந்த மரகதம் எதிரில கப்பலேறியிருக்கும்.'
'என்னமோ விதி, அந்தப் பொண்ண காப்பத்தான் நம்பள அந்த மோசமான எடத்துக்கு இளுத்துப் போச்சோ என்னமோ.'
'ஆமா பாவம் இல்ல அது. பொம்பளங்க ரெண்டு பேரு மட்டும், ஆம்பளத் தொண இல்லன்னு தெரிஞ்சி இருக்கும், அதான் தெகரியமா தூக்கிட்டு வந்துட்டானுவ. பேமானிப் பசங்க. பெங்களூர் கொண்டு வந்தவனுவ அடுத்து பாம்பே கொண்டு போய் வித்துட்ரிப்பானுவ. அஙெத்தான் புராஸ்டூஷன் (விபச்சாரம்) தலையாமே.'
'என்னமோ, கெட்ட காலத்திலயேயும் ஒரு நல்ல காலம், நாம அங்கப் போனது.'
மாலை ஏழு மணி அளவில் திரும்பினான் சத்யா. உடை மாற்றிக் கை கால் முகம் அலம்பி, தலை சீவி, மீசையை சீர் செய்து, முகத்துக்கு லைட்டா மேக்கப் டச். கழுத்தில், கக்கத்தில் ஆடவர் சென்ட் அடித்து கிளம்பினான்,
'என்னா மாப்ள குஷியாக் கௌம்பராப்பல ராத்ரி விருந்துக்கு, வீட்டுச் சாப்பாடா'
'ஆமா.... அதுவும் ஆசையா கூப்டிருக்கு அந்த எதிர் அப்பார்ட்மென்ட் பொண்ணு'
'யோகந்தான் போ' என்று மனது நக்கல் அடித்தது.
"வாங்க வாங்க" என்று வாய் திறந்த சிரிப்போடு மரகதம்.
அந்தப் பெண் சுகந்தி முன் ஹாலில் உட்கார்ந்திருந்தவள், இவனைப் பார்த்ததும், எழுந்தாள்.
"ஒக்காரு ஒக்காரு பரவாயில்ல" என்று அவன் ஒரு சோபாவில் உட்கார்ந்தான்
"ஒடம்பு பரவாயில்லயா?"
"தேவலாம். ஜொரம் விட்டுரிச்சி, அசதியா இருக்கு."
தொடரும்...
மூவர் கதையும் இணைந்தாலும் இணையும்!: தனித்தனிக் கதையாகவும் தொடரும் எனறீர்கள்! இப்போ, இணைஞ்சுட்டு!
ReplyDeleteசர்ப்ரைசா இருக்கும்னு பாத்தேன்.
Deleteநன்றி! காதல் பூக்கள் கதை வந்து எட்டு நாளாச்சு! போடுங்க! ஐயர் குடும்ப காம கதைகள் போடுங்க
ReplyDeleteவிரைவில் தொடருகிறேன்.
Delete