அந்தரங்கம் 51

முழு தொடர் படிக்க

 ஹாலுக்குள் நுழைந்த ப்ரியாவுக்கு கண்கள் இருட்டி தலை சுற்ற துவங்க, தண்ணீரை எடுத்து கட கடவென குடித்தாள். பெருமூச்சு விட்டவள், “கவியை வீட்டுக்கு வர விட கூடாது, அவளை தடுத்தே ஆகவேண்டும்” என்ற முடிவோடு கவிக்கு போன் போட்டாள்.

“ஏய்.. கவி”

“சொல்லுடி..”


“நமக்கு நைட்டுட்டி, நான் ஹாஸ்பிடல் வந்துருறேன்… ”

“ஏய்… பிரியா.. பாலாவ பாத்து 15 .நாள் ஆச்சு… வெக்கத்த விட்டு சொல்லனும்னா.. அவன் கூட படுக்கணும் டீ… ” என்று கவி சொல்லிவிட்டு.. வெக்கத்தில் சினுங்க….

“செருப்பு பிஞ்சுரும்… சேச்சிக்கு (கூட வேலை பார்க்கும் நர்ஸ்) உடம்பு சரியில்ல… வந்து சேரு” என்றாள்.

“சரி வை… ” என்று காண்டுடன் கவி போனை வைக்க,

பிரியா வேக வேகமாக கிளம்பி கதவைத் திறக்க, வாசலில் பாலா.

“ஏய். எங்க போற?” என்று அவள் கையை புடிக்க,

“ப்ளீஸ் கைய எடுங்க… செம காண்டுல இருக்கேன்.. கத்திருவேன்..” என்ற ப்ரியாவின் கண்கள் சிவந்து இருந்தது. விசுக்கென்று பாலாவின் பிடியில் இருந்து கையை உருவியவள், கலங்கிய கண்ணீரை துடைத்தாள்.

பாலாவை முறைத்த படி, “நான் ஒண்ணே ஒண்ணு தான் சொல்லுறேன்.. நீ கவிய ஏமாத்துன… அவ செத்துருவா… ” என்றவள் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.


ஐந்து நிமிடங்கள் கடந்தோடியது. பாலாவுக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. பாலா சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க, மிலிட்ரி ரிட்டர்ன் அப்பா கண்ணுக்குள் வந்து நின்றார். சிகரெட்டை பாக்கெட்டில் போட்டு விட்டு மீண்டும் போர்டிகோவில் நின்றபடி… தெருவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

பாலாவை நெருங்கிய ரதி, அவனை உரசிய படியே போர்டிகோவில் நின்றாள், 

“அத்தான், என்னாச்சு.. ஒன்னும் பேசவே மாட்டேங்கிறீங்க?” என்றவள் பாலாவின் விரல்களோடு விரல்கள் கோர்க்க, ஹாலுக்குள் இருந்து வந்த கலா அவர்களை பார்த்து முறைத்தாள்.


பாலா அவளின் பிடியை உதறிவிட்டு மொட்டை மாடிக்கு சென்றான். 

ரதியை நெருக்கிய கலா, “நீயும் அவனும் போட்ட ஆட்டத்தை பாத்து சும்மா இருக்கேன்கிற திமிரா? எல்லாம் என் தலை எழுத்து.. என் புருஷன் ஆசபட்ட பையனுக்கு கட்டி கொடுக்க முடியாம போக போகுது.. ” என்று கண்களில் சாறை சாரையாய் கண்ணீர் கொட்ட கிச்சனுக்குள் நுழைந்தாள்.

பாலாவின் தங்கை கிச்சனை தாண்ட, கலா அவள்முன் டீயை நீட்டினாள்.. 

“அண்ணாகிட்ட குடு”

போர்டிகோவில் ரதியையும் அண்ணனையும் காணவில்லை. மெதுவாக மொட்டை மாடிக்கு ஏற, அங்கே இருவரும் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் என்ன பேசிக்கொண்டு இருந்தார்கள் என்று அவளுக்கு கேட்கவில்லை. 

“அண்ணா டீ..” என்றபடி அவள் மொட்டை மாடிக்குள் நுழைய, அப்போது பாலாவின் கண்ணத்தை அழுத்தி பிடித்த ரதி அவன் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள்.

விசுக்கென்று பாலா கீழே இறங்க, “ஏய் எரும, பஸ்ட் நைட் வர பொறுக்க முடியல.. ” என்று பாவனா கிண்டல் அடித்தாள்.

ரதியின் முகம் சிவந்து கோவம் கொப்பளிக்க கண்கள் கலங்கி இருந்தாள்.

“ஏய்.. என்னாச்சு?” என்று பாவனா பதற,

“உங்க அண்ணனுக்கு, நான் சின்ன பொண்ணாம், படிக்கணுமாம்.. இப்ப கல்யாணம் வேணாம்…” என்று தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“லூசு.. இதுக்கா கோவப்படுற.. எங்கப்பா அவன ஒரு கழுதைக்கு தாலிகட்ட சொன்னா கூட காட்டுவான்.. உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு. இந்தா உன் புருசனுக்கு கொண்டு வந்த டீ” என்று அவள் டம்ளரை நீட்ட, இப்போது தான் ரதியின் முகத்தில் சிரிப்பே வந்தது.


“உனக்கு வெவரம் பத்தல… ஆறு மாசமா இங்க இருக்கான்.. உனக்கு கரெட் பண்ண தெரியல” என்று பாவனா கிண்டல் அடிக்க…

“அதெல்லாம் தெரியும், எங்களுக்குள்ள எல்லாம் முடிச்சுருச்சு.. ” என்ற ரதி இதழுக்குள் சிரித்தாள்.

“அடி எழும்பி… அப்பவே நெனச்சேன்… மாசமா ஏதும் இருக்கியா? முன்னாடியே சொல்லிரு.. அப்பறம் மணவறைல உக்காந்து வாமிட் எடுக்க போற” என்று கிண்டல் அடித்த படி படிக்கட்டில் கீழ் இறங்க.. டீயை குடித்த ரதி, மெதுவாக அடிவயிற்றை தடவினாள். 18 நாள் கரு அவள் கர்ப்ப பைக்குள்.

*******************************

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தாள் பிரியா.

“ஏய்.. பிரியா.. ” என்று பார்கவி சேச்சி அழைக்க,

“சேச்சி.. நீங்க வீட்டுக்கு போங்க.. கவி வறா.. நாங்க நைட்டூட்டி பாத்துகிறோம்..” என்று சமாளித்து அனுப்பிவிட்டு கவிக்கு காத்திருக்க, கிரீன் காட்டன் புடவையில் உள்ளே வந்தாள் கவி. அவள் முகம் வாடி இருந்தது.

“ஏய்.. என்னாச்சு..?”

கவி, “வாமிட்…” என்று சொல்லி முடிக்கும் முன்… கப கபவென கக்க.. முதுகில் தடவி கொடுத்தாள். கவி தளர்ந்து நர்ஸ் சிட்டிங் ரூமில் இருந்த பெட்டில் சாயந்தாள்.

“ஏய்.. கவி.. என்னாச்சு.. என்ன சாப்பிட்ட”

பிரியா நீட்டிய வாட்டர் பாட்டிலை வாங்கிய கவி.. இதலுக்குள் சிரித்த படி.. “ம்ம்ம்… இது வேற வாந்தி…” என்றாள்.

பிரியாவின் உச்சந்தலையில் யாரோ உருட்டு கட்டையால் அடித்தது போல் இருந்தது. பொத்தென்று எதிரே இருந்த சேரில் சாய்ந்தாள்.

“நான் நாளைக்கு தான் வரலாம்னு இருந்தேன்.. ஒரே வாமிட்.. அம்மா கேட்டுட்டே இருந்தாங்க.. அதான் கிளம்பிட்டேன்..”

“சனியனே! எத்தன தடவ சொன்னேன்.. ஒழுங்கா காண்டம் யூஸ் பண்ண சொல்லி… அந்த பொருக்கி உன்ன ஏமாத்திட்டான்னா என்ன பண்ணுவ?”

“லூசு.. என் பாலா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ”

கோவத்தின் உச்சத்தில் இருந்த பிரியாவுக்கு ரவிக்கையை அவுத்து பாலா கடித்த காயத்தை காட்டி.. அவன் முக மூடியை கிழிக்கணும் போல இருந்தது.

“ஏய் பிரியா… நான் வீட்டுல சொல்லிட்டேன்… அவங்களுக்கு ஓகே.. ஒரு வாரம் போகட்டும்.. பாலா வீட்டுல பேசலாம்..” என்று கவி கட்டிலில் சுருண்டு படுக்க,

'எப்படி… அவனுக்கும் ரதிக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா?' என்று மனதிற்குள் திட்டிய படி, ரிசப்ஷன் ரூமுக்குள் நுழைந்தாள் பிரியா.

பாலாவை எப்படி வர சொல்லுவது என்று தவித்த பிரியா, வேறு வழி இல்லாமல் கலா அக்கா வீட்டுக்கே போன் அடித்தாள்.

“ஹலோ”

“பிரியா.. சொல்லுமா..?” கலா பேசினாள்.

“அக்கா.. பாலா இருக்காறா?”

“காணுமேமா…”

யோசிக்கத்த பிரியா.. வேறு வழி இல்லாமல்.. “அக்கா, ப்ரியாவுக்கு முடியல.. ஹாஸ்பிடல் வர முடியுமா?” என்றாள்.

“அச்சோ என்னாச்சு, சரி நான் இப்ப வந்துடுறேன்மா…” என சொல்லி போனை வைத்தாள்.

கட்டிலில் பாலாவின் கனவுகளோடு தூங்கி கொண்டிருந்தாள் ரதி.

“ஏய்.. எரும… எந்திரி டீ… ”

“என்னாச்சும்மா?”

“வண்டிய எடு.. ஹாஸ்பிடல் போகணும்…”

என்னவென்று புரியாமல் ரதி பைக்கை எடுக்க, 10 நிமிடத்தில் ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தனர்.

வாசலில் பிரியா கையை பிசைந்து கொண்டு நிற்க.. கலா அக்கா கூடவே ரதியும் வருவதை பார்த்து அதிர்ந்தாள்.

“ரதி.. நீ ரிசப்ஷன்ல வெயிட் பண்ணு…. ”

“என்னாச்சு.. க்கா..”

“நீ சின்ன பொண்ணு… இங்கையே இரு…” என்றவள், கலாவுடன் உள்ளே நுழைய… கவி கட்டிலில் படுத்திருந்தாள்.

“என்னாச்சு டா” என்று கலா கேட்டு முடிக்கும் முன்.. அருகில் இருந்த கோப்பையில் கவி கப கபவென வாமிட் எடுக்க… பதறிய கலா அவள் அருகில் உக்கார கவி அவள் மார்பிள் துவண்டு விழுந்தாள்.

கலா அக்காவிற்கு புரிய ஆரமித்தது.

சற்று நேரத்தில் விபரம் தெரிந்து பாலாவும் ஹாஸ்பிடலுக்கு வர.. கவியின் அறையில் கலா, பிரியா, ரதி என எல்லோரும் கூடி இருந்தனர்.

பிரியா பேபி டெஸ்ட் ரிசல்ட்டை நீட்ட, கவியின் கண்ணில் வழிந்த கண்ணீர் கலாவின் மார்பை நனைத்தது. 

நின்று கொண்டிருந்த பிரியா.. “சார்… இப்பயாவது வாய தொறக்குறிங்களா?” என்று அவனை முறைத்தாள்.

“அக்கா.. அது வந்து..” என்று பாலா ஆரம்பிக்கும் முன்னே! கலா விசுக்கென்று எழுந்து வெளியே வந்தாள்.

ரதியின் விடலை உள்ளம் பாலாவை இழந்து விடுவோமா என்று தவித்தது. 

“அத்தான்.. என்னாச்சு…” என்றவள் அவனை கட்டிப்பிடித்தாள். 

பாலாவின் சாயம் வெளுக்க ஆரம்பிக்க, கவியின் கண்கள் இருள ஆரம்பித்தது.

“தான் படுத்த ஒரே காரணத்துக்காக.. தன் மகளையும் படுக்க வைத்து இப்போது கவியின் வாழ்க்கையும் நாசம் பண்ணிட்டானே!” என்று நினைத்த கலா அடுத்த நொடி, பாலாவை நெருக்கி, ஓங்கி ஒரே அரை.. அவளுடைய ஐந்து விரல்களும் பாலாவின் கன்னத்தில். ரதி கோவத்தில் அம்மாவின் மீது பாய, அவள் கன்னத்திலும் கலாவின் கை பதிந்தது.

பிரியா பாலாவின் காம லீலைகளை கொட்டி தீர்க்க, பாலாவின் இடுப்பை சுற்றி பிடித்திருந்த ரதியின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அப்படியே பின்னால் சென்று சுவற்றில் சாய்ந்தாள். 

“தன் தாயை இன்பத்தில் மிதக்க விட்டவன், தன்னையும் பார்த்து கொள்வான் என்று நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்… இப்படியே போனால் இன்று என்னை தன் இச்சைக்கு பயன்படுத்தியவன்… நாளை என் தங்கையையும்…” என்று நினைக்கும் போதே ரதியின் நெஞ்சுக்குழி வெடிப்பது போல் வலி எடுத்தது. கதறி அழ தொடங்கினாள். சுழன்று தரையில் விழுந்தாள்..

பரிதவித்த ப்ரியாவும் கவியும்.. அவளை அள்ளி கட்டிலில் போட… அவளுடைய 15 நாள் கரு சிதைந்து.. கரு அவள் கால் நடுவில் சிவப்பு நிறத்தில் கசிந்து.. அவளுடைய வெள்ளை சுடிதாரை நனைத்தது. 

ரதியின் உடல் குளிரில் நடுங்க கவியும் ப்ரியாவும் அவளின் கைகளையும் கால்களையும்… அழுத்தி தேய்த்துவிட்டனர். 

சிறிது நேரம் கலித்து மெதுவாக கண்விழித்தாள். தொடை நடுவே.. இடுப்புக்கு கீழ் வலி. கட்டிலில் கதற, கவி அவளை வாரி அணைத்தாள்.

இன்னும் கோபம் அடங்காமல் செருப்பை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு பாலாவை நெருங்கிய கலா அவன் பின்னால் இருந்த கண்ணாடியில் அவளுடைய முகத்தை பார்த்தாள். 

'எல்லாத்துக்கும் காரணம்… நான் தானே! ..ச்ச்சீ… வயசுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்கிறப்ப…' என்று நினைத்த கலாவின் மனம் விம்மி குமுற.. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க.. ஓங்கிய செருப்பால் தன்னைத் தானே தலையில் அடித்து கொண்டாள்.

ரதி அதிர்ச்சியில் எழுந்து உக்கார்ந்தாள்.

“ஏன்மா இப்படி பண்ணுற.. அத்தான் மேல ஒரு தப்பும் இல்ல… ”

“லூசாடி நீ..” என்று கத்திய கலா கையில் இருந்த செருப்பை எடுத்து வீசினாள்.

“நான் லூசுதான்.. அத்தான் அத்தன தடவ வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும்.. அடங்காம போனவ நான் தான்.. ” என்று கதறிய ரதியை கட்டி அணைத்தாள் கவி.

கலா பேச்சு மூச்சற்று சுவற்றில் சாய்ந்தாள்.

ப்ரியாவை முறைத்த கவி, “அக்கா.. என்னோட வைத்துல வளருற குழந்தைக்கு என்னோட புருஷன் தான் காரணம். பாலாவுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல.. ” என்று வேகமாக எழுந்து, நின்றிறுந்த பிரியாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள். அதிர்ச்சியில் ரூமே உறைந்தது போனது.

“ஏய்… கவி… என்னாச்சு உனக்கு..”

“என் மொகத்துல முழிக்காத.. வெளிய போ… ” என்று கவி கத்திய கத்தில்.. 

'ஏன் இப்படி நடந்துகிறா..' என்று புரியாமல் தவித்தாள் பிரியா.

“புள்ளத்தாச்சி இப்படி கத்தக் கூடாதுமா…” என்ற கலா, “ப்ரியா, எதுனாலும் அப்பறம் பேசிக்கலாம். நீ கொஞ்சம் வெளிய இரு..” என்று அவளை வெளியே அனுப்பி கதவை சாத்தினாள்.

“கவி… ” என்று பாலா வாயைத் திறக்க, 

கவி கண்களில் கண்ணீர் வழிய கை எடுத்து கும்பிட்டாள். 

பேசமுடியாமல் தவித்தான் பாலா.

பத்து நிமிடங்கள் கடந்தோட, “அக்கா நீங்க கிளம்புங்க.. பாலா அப்பாட்ட நாள் பார்க்க சொல்லுங்க..” என்றாள் கவி.

“உன்ன இப்படி விட்டுட்டு.. ”

“பிரியா இருக்காக்கா… பாத்துப்பா..”

“ரதி போகட்டும்.. நான் இருக்கேன்..”

“அக்கா.. அவ என்னோட பிரண்டு.. என்ன புரிஞ்சுப்பா..” என்ற கவி, உதட்டில் வெற்று புன்னகையுடன் கட்டிலில் சாய்ந்தாள்.

ஹாஸ்பிடலின் மொட்டை மாடியில் கடுப்பில் தம் அடித்து கொண்டிருந்த பாலா, ரதியும் கலாவும் ஆட்டோவில் கிளம்புவதை பார்த்த அடுத்த நொடி.. படிக்கெட்டில் வேகமாக கீழ் இறங்கி ரூமுக்குள் ஓடினான்.

தலையணையில் முகம் புதைத்து கவி படுத்திருக்க, பாலாவின் விரல்கள் அவளுடைய கன்னத்தில் பதிந்த அடுத்த நொடி, விசும்பலும் கண்ணீருமாய் பாலாவின் மார்பிள் முகம் புதைத்தாள். அவளுடைய கைகள் பாலாவின் கழுத்தை பின்னிக் கொள்ள, ரூம் முழுவதும் நிசப்தம். மெதுவாக தலையை உயர்த்தி பாலாவின் முகத்தை பார்த்தாள். அவளுடைய முகம் அழுது சிவந்து வீங்கி இருந்தது.

“ஸாரிடி…” என்று பாலா முடிப்பதற்குள், பாலாவின் உதட்டைக் கவ்வி முத்தமிட்டாள். பாலாவின் உடலில் ஷாக் அடித்தது போல் விறைக்க ஆரம்பித்தது.

படக்கென்று கதவு திறக்கப்படும் சத்தம்.. ப்ரியா ரூமுக்குள் நுழைந்தாள். 

“ஏய்.. கவி.. என்ன பண்ணுற…”

மெதுவாக உதட்டை விடுவித்தாள் கவி.

“ஏண்டி… இன்னுமா இவன நம்புற” பிரியா கோபத்தின் உச்சத்திற்கே சென்றாள். கவியின் கையை இழுத்து தன் தலையில் வைத்தவள், 

“சத்தியம் பண்ணுடி… உன் புள்ளைக்கு அப்பன் இவன் இல்லைன்னு” என்றாள்.

“புரிஞ்சுக்க பிரியா.. பாலா மேல தப்புனா.. நான் மட்டும் ஒழுங்கா… ” முகத்தில் வழிந்த கண்ணீரை துடைத்த கவி, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து மட மடவென குடித்தாள்.

“இத்தோட விட்டுரு ப்ளஸ்…” என்று கவி ப்ரியாவின் கைகளில் முகத்தை புதைக்க,

“தப்பு மேல தப்பு பண்ணுற டீ..” என்று பிரியா கைகளை உதறினாள்.

“ரதி இப்ப தான் அப்பாவ இழந்துருக்கா.. ரொம்ப பாவம் டீ அவ…” என்ற கவி.. பாலாவை நோக்கி தன் கையை நீட்டினாள். 

“ப்ளீஸ் பாலா.. சத்யம் பண்ணுங்க… ”

“என்னால முடியாது கவி.. நான் எங்க அப்பாட்ட பேசுகிறேன்.. ”

“ஆம்பள இல்லாம தவிக்கிற குடும்பம் பாலா.. ”

“நீ பாவம் இல்லையா கவி” என்ற ப்ரியாவின் வாயை பொத்தினாள் கவி,

“உன்னால என்ன மறக்க முடியமா…” என்ற பாலாவின் விழிகளை பார்க்க முடியாமல் துடி துடித்த கவி, 

“தெரியல பாலா.. ” என்றபடி பாலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.


தொடரும்...

Comments

  1. ரதியைக் கட்டிக் கொண்டு, மற்ற எல்லோரும் இலவச இணைப்பு, போனஸ், gift மாதிரி தானே பாலாவுக்கு! ரதியே கவி யிடம் நமக்குள் சக்களத்தி சண்டை வராது ன்னு சொல்லிட்டாளே?! சட்டப்படி, ஒருவன் ஒருத்தி தான் கல்யாணம் பண்ண முடியும்! மற்ற எல்லாம், யானைக்கால் பாண்டி விளையாடு வது போல் துணைக்கால் தான்! இணைவி, துணைவி, பெஸ்டி, concubine தான்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 47

நந்தவனம் 5