காதல் பூக்கள் 61
"இப்பத்தான் சாப்ட்டு முடிச்சேன்... படுக்க வேண்டியதுதான்... சொல்லுங்க..."
"மாப்ள! மத்தியானம் நம்ம செல்வா என்கிட்ட பேசினாரு! அவரோட அம்மா மல்லிகாவும், கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்கன்னு சொன்னாரு..."
"நல்லதுங்க! ரொம்ப சந்தோஷம்!... நடராஜன் எதுவும் சொல்லலையா?"
"மாப்ளே! நான் சொல்றதை கேளுங்க; என்னதான் இருந்தாலும் . நாம பொண்ணு வீட்டுக்காரங்க: பையனே போன் பண்ணி சொல்லிட்டான்: அந்தம்மா மல்லிகாவைப் பத்தி நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன்ல: கொஞ்சம் சிணுங்கற டைப்:
"ம்ம்ம். அதுவும் சரிதான்..."
"வர்ற வெள்ளிக்கிழமை காலையில நாள் நல்லாருக்குன்னு நம்ம குடும்பத்துக்கு, நல்லது கெட்டது செய்து வெக்கிற அய்யரு சொல்றார்: ராகு காலத்துக்கு முன்னாடி வெத்திலை பாக்கு மாத்திக்கலாம்: என்ன சொல்றீங்க?"
"அதுக்குள்ள ஃபங்ஷனை அரேஞ்ச் பண்ண முடியுமா?"
"என்ன மாப்ளே?... இன்னைக்குத் திங்கள்.. இன்னியிலேருந்து நாலாவது நாள்... நடுவுல இன்னும் மூணு நாள் நம்ம கையில இருக்கு; இந்த காலத்துல மூணு நாள்ல ஒரு கல்யாணத்தையே முடிச்சிடலாம்? "சுந்தரி கிட்ட பேசிட்டீங்களா?"
"ம்ம்ம்... ஆச்சு; சுந்தரியும் சரின்ன்னுட்டா... இப்பவே நான் நடராஜன் கிட்ட பேசிடறேன்... அன்னைக்கு அவங்களை வரச்சொல்லட்டுமா?"
"சென்னையிலேருந்து வரணுமே? அவ்வளவு சீக்திரம் காலங்காத்தாலே.. அவங்களால வரமுடியுமா?"
"முதல் நாள் சாயந்திரமே வந்துடட்டும்... நம்ம வீடு ஒண்ணு காலியாதானே இருக்கு! விருந்தாளிங்க ராத்திரி மாடியில தங்கிக்கட்டும்; கீழ விசேவத்தை வெச்சுக்கலாம். காலையில இந்த வேலை முடிஞ்சா... மதியானம் சாப்பிட்டுட்டு அவங்க சவுகரியம் படி கிளம்பட்டும்..."
"புரியுது... உங்க வீட்டை வாடகைக்கு விட்டுருக்கறதா சுந்தரி சொன்னாளே?"
"பேங்க் மேனேஜர் ஒருத்தர் இருந்தார்: திடீர்ன்னு ட்ரான்ஸ்ஃபர்ல போயிட்டார். போனவாரம்தான், கீழே மேலேன்னு வெள்ளையடுச்சு, க்ளீன் பண்ணி, இப்ப வீடு சுத்தமா இருக்கு."
"அப்ப ரெண்டு வேளை டிஃபன்... ஒரு வேளை சாப்பாடு அரேஞ்ச் பண்ணணுமே?"
"அதெல்லாம் ஒரு மணி நேர வேலை; மாப்ளே... நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான்; கைராசிக்காரன்; அருமையா சமைக்கிறான்;: தேவையானதை ஆர்டர் கொடுத்தா போதும்; சுத்தமா செய்து நம்ம வீட்டுக்கே கொண்டாந்து அழகா பறிமாறிட்டு போயிடுவான்!"
"ரகு... எத்தனை பேரு வருவாங்கன்னு நடராஜனை கேட்டுக்கோ..."
"கேட்டுக்கறேன்... நீங்க எப்ப வர்றீங்க?"
"நாளைக்கு செவ்வாய் இல்லயா? நாளைக்கு ராத்திரி டின்னருக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்... என் கார்லேயே வந்துடலாம்ன்னு இருக்கேன்."
"சரி... நீங்க நடராஜனுக்கு, சுகன்யா உங்க பொண்ணுதான்னு சொல்லிட்டீங்களா? என்னமோ இந்த விஷயத்தை சஸ்பென்சா வெச்சிருக்கீங்க?" ரகு சிரித்தான்.
"ரகு சஸ்பென்ஸ்ல்லாம் ஒண்ணுமில்லேப்பா! நடராஜன் நாளைவரை ரெண்டு நாள் லீவு எடுத்திருந்தார். இன்னைக்கு ஒரு வாரம் லீவு எக்ஸ்டண்ட் பண்ணப்போறேன்னு சாயங்காலம் போன்லே சொன்னார். என்னன்னு கேட்டேன்? பையனுக்கு நிச்சயம் பண்ண கும்பகோணம் போக வேண்டியிருக்கும்ன்னார். அப்பவே விஷயத்தை புரிஞ்சுகிட்டு நானும் லீவுக்கு அப்ளை பண்ணிட்டேன்..."
"ம்ம்ம்.. அப்படீன்னா அவரு நம்ப போனை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார்ன்னு சொல்லுங்க"
"இருக்கலாம்; நாளைக்கு ஒரு மணி நேரம் ஆபீசுக்கு வர்றேன்னுருக்கார்..."
"ம்ம்ம்..."
"நாளைக்கு அவர் ஆஃபீசுக்கு வரும் போது, சுகன்யா என் பொண்ணுதான்னு சொல்லிட்டு, ஃபார்மலா வியாழக்கிழமையே வீட்டுக்கு வாங்கன்னு நானும் பெண்ணை பெத்தவனா அழைச்சிடறேன்..."
"சரி... அப்புறம்... நீங்க உங்க வீட்டுலயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க..."
"ஆகட்டும்... நான் இப்பவே பேசிடறேன்..."
"மாப்ளே, நானும் நாளை நைட் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரேன்னு சுந்தரிதிட்ட சொல்லியிருக்கேன். மீதியை நேர்ல பேசிக்கலாம்."
"நல்லது.. அப்படியே செய்யலாம்... வாங்க..."
************************************
செல்வா காம்பவுண்ட் கதவினருதில், சீனுவின் வரவுக்காக நின்றவன், ஆகாயத்தை தன் பார்வையால் துழாவிக் கொண்டுருந்தான்.
'ஓமை காட்! நிலா இன்னைக்கு எவ்வளவு பளிச்சுன்னு இருக்கு? இன்னும் ரெண்டு மூணு நாள்லே முழுசா பெரிசாயிடும். இன்னைக்கு நிலா என் கண்ணுக்கு அழகாத்தான் தெரியுது. நிலவைப் பாத்துக்கிட்டு இருந்தா மனசு இறுக்கம் குறையத்தான் செய்யுது'
'எதுவும் பேசாமல் நிலவை பாத்துக்கிட்டு நிக்கறது சுகன்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனை தடவை பீச்சுல, பவுர்ணமி நாள்லே, என் கூட நெருங்கி உக்காந்து, என் தோள்ல தலையை சாய்ச்சிக்கிட்டு, மவுனமா நிலவைப் பாத்துக்திட்டு இருந்திருக்கா'
'சுகு, நிலவுல என்னடா இருக்குன்னு கேட்டா, செல்வா உனக்கு ரசனையே இல்லையான்னு சிரிப்பா, நீ ஒரு மடையன்னு கொஞ்சலா முனகுவா. முனகிட்டே என் தோள்ல சரிஞ்சு கன்னத்தை கடிச்சு முத்தம் குடுப்பா! அவ உடம்புக்குன்னு ஒரு தனிவாசனைதான்'
சுகன்யாவின் உடல் வாசம் அவன் மனதுக்குள் எழுந்ததும், செல்வாவின் உடலில் சூடு ஏறி, அவன் தம்பி லுங்கிக்குள் தடிக்க ஆரம்பித்தான்.
'சே...நான் எவ்வளவு வீக்காயிட்டேன்? மனசுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லாம போச்சே? ரோட்டுல நிக்கறேன்; அவ உடம்பு வாசனை நினைவுக்கு வந்ததும், என் பையன் திமிறி எழுந்துக்கறான். அவன் என்ன பண்ணுவான்? பத்து நாளாச்சு; ஆஸ்பத்திரிக்கு போனதுலேருந்து சாப்பிட்டு சாப்பிட்டு படுத்து கெடந்தேன். அவன் கொழுத்துப் போயிருக்கான். அவனை கொஞ்சம் தடவி தடவி தாஜா பண்ணாத்தான் ஒரு ரெண்டு நாளைக்கு அடங்கி கிடப்பான்...! சட்டுபுட்டுன்னு கல்யாணம் முடிஞ்சு சுகன்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்ன்னா, இந்த கை வேலைக்கு ஓய்வு குடுக்கலாம்.'
'நம்ம சுப்பையா கல்யாணம் ஆனவன்; கல்யாணம் ஆதியும் தன் கையை யூஸ் பண்ணிட்டுத்தான் இருக்கேங்கறானே? கட்டுன பொண்டாட்டி அவன் கூட ஓத்துப்போவலையா? அடச்சை... என் புத்தி எங்க போவுது. அடியே-ங்கறதுக்கு பொண்டாட்டியைக் காணோம்.. அதுக்கள்ள புள்ளை எத்தனை பெத்துக்கலாம்ன்னு யோசனை பண்றேன்.' செல்வா தன்னை நொந்து கொண்டான்.
'சுகன்யாவும் இப்ப என்னை மாதிரி நிலாவை பாத்துக்கிட்டு இருப்பாளா? உண்மையிலேயே எனக்கு ரசனை கம்மிதான்னு ஓத்துக்கணும். அவளை மாதிரி சும்மா நிலாவையே பாத்துக்கிட்டு இருக்குறது சுத்த போர்... ஆனா இன்னைக்கு என்னமோ நிலா அழகா இருக்கற மாதிரி தோணுது!'
'ச்சை... எனக்கு ஏன் திரும்ப திரும்ப சுகன்யா நெனைப்பே வந்து தொலைக்குது? அவளுக்கும் என்னைப் பத்திய நினைவுகள் வருமா? ச்சே... ச்சே.. ஒரு பொண்ணை காதலிச்சாலும் காதலிச்சேன்... காதலிக்க ஆரம்பிச்ச நாள்லேருந்து என் வாழ்க்கையே நாறிப் போச்சு. இந்த காதல்ங்கறது ஒரே நாய் பொழைப்பா இருக்கே?'
'தனிமையை நீ எப்படிடா சமாளிக்கறேன்னு சீனுவைத்தான் கேக்கணும். அவனும்தான் கொஞ்ச நாள் அந்த ஜானகியோட தங்கச்சி, ஜெயந்தி கும்முன்னு இருக்கா மச்சான்னு, நூல் வுட்டுப்பார்த்தான். ஜெயந்தி யாரு, கழுவற மீன்ல நழுவற மீனாச்சே அவ. சாவித்திரி பெத்த பொண்ணாச்சே! சும்மாவா. இவனுக்கு அவ்வளவு சுலபமா உஷவாராவாளா?'
'சீனுதான் கையில வர்ற பைசாவை, அது எவ்வளவாயிருந்தாலும் அன்னைக்கே பீரா குடுச்சு, மூத்திரமா பேஞ்சிடறான். மீதி பைசாவை சிகரெட்டா கொளுத்தி ஊதி புகையாக்கிடறான். வேலாயுதத்துக்கு ஒரு நல்ல பொண்ணு ஆப்ட்ட மாதிரி சீனுக்கும் கெடைச்சா இவனும் உருப்படுவான்! இல்லேன்னா கோயிந்தா, கோயிந்தான்னு கடைசி வரைக்கும் அல்லாட வேண்டியதுதான்?'
'ஜெயந்தி ஒரு தரம் இவனை மூஞ்சால அடிச்சதும் "மச்சான், அவ கார் வெச்சிருக்கறவன் கிட்டத்தான் உஷவாராவாளாம். இவள்ளாம் நம்ம ரேஞ்சுக்கு ஒத்துவரமாட்டா"ன்னான். என் பாட்டனுக்கு அறுபது ஏக்கர் மண்ணு இருந்திச்சி... அவரு எல்லாத்தையும் காஞ்சிபுரம் மொட்டைகோபுரத்துல, பொட்டைச்சியோட புட்டத்துலத்தான் தொலைச்சிட்டாரு.. இதெல்லாம் இந்த சிறுக்கிக்கு தெரியுமா? ஹாய் சொல்லும் போதே நான் எப்ப காரு வாங்குவேன்னு கேக்கறா... இவ சகவாசம் எனக்கு சரிபடாதுன்னு பேசாம திரும்பிட்டேன்னான்... அதுக்கப்புறமா, சீனு, எந்த பொண்ணையும் திரும்பியே பாத்தது திடையாது.'
'மச்சான்... பொம்பளைங்களே மாயப் பிசாசுங்க! நீயும் ஜாக்திரதையா இரு; எவ கிட்டேயும் சிக்கிடாதே? தூக்திக் கட்டி, உள்ளே ஸ்பான்ச்சை ஃபிட் பண்ணிக்திட்டு, அசைஞ்சு அசைஞ்சு நடப்பாளுங்க; உண்மையில உள்ள ஒண்ணும் கிடையாது: இருக்கற மாதிரி சீன் காட்டுவாளுங்க; பையில காசு இல்லாம கிட்டப் போனே... கொட்டை மேல எட்டி உதைப்பாளுங்கன்னு, எனக்கு புத்தி சொன்னான்.'
'கொஞ்ச நாள் தாடி வெச்சுக்திட்டு, சித்தர்கள் ரேஞ்சுல தேங்காய் பாலு, மாங்காய் பாலுன்னு அவனுக்கும் புரியாம, கேக்கறவனுக்கும் விளங்காம எதையோ பேசிக்கிட்டு திரிஞ்சான். பொண்ணுங்களை கணக்கு பண்ற நம்ம பசங்களைப் பாத்து "எரிக்குழியை நோக்கி ஏண்டா ஓடறீங்க?"னு நக்கலா சிரிச்சிக்கிட்டு இருக்கான். "ஆனந்த ஜோதியில என் கூட வந்து ஐக்தியமாகுங்கடான்னு" குறைஞ்சது வாரத்துல ரெண்டு நாள் பசங்களை உக்கார வெச்சு பாடம் நடத்திட்டு இருக்கான்.'
'சீனு நிஜமாவே நீ ஒரு ஜெம்முடா! உன் குணத்தை, உன் அருமையான நட்பை, வெள்ளை மனசை புரிஞ்சிக்கற பொண்ணு இனிமேதானா உனக்காக பொறக்கப் போறா? கண்டிப்பா அவ எங்கேயோ பொறந்துதான் இருப்பா! கவலைப்படாதே மாப்ளே... சரியான நேரத்துல அவ உன் வாழ்க்கையில வந்து சேருவா..'
செல்வாவின் மனதில் சீனுவுக்காக அன்பும் பாசமும் ஒருங்கே சுரந்தது.
தெரு முனையில் ஆட்டோ ஓன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
'சீனுவாக இருக்குமோ?'
ஆட்டோவின் வேகம் குறைய ஆரம்பித்தது. வேகம் குறைந்த அந்த ஆட்டோ, அவன் வீட்டின் முன் தத்தி தத்தி வந்து நின்றது.
'அவனே தான்; சொன்ன மாதிரி வந்துட்டான்.'
ஆட்டோவிலிருந்து இறங்கிய சீனு, தன் கையிலிருந்த சிகரெட்டை வாயில் வைத்து ஒரு முறை நீளமாக இழுத்தவன், கையிலிருந்த துணுக்கை வீசி எறிந்துவிட்டு, செல்வாவை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினான்.
ஹாலில் உட்க்கார்ந்து படித்துக்கொண்டிருந்த மீனா ஆட்டோ சத்தம் கேட்டு, வரண்டாவிற்கு வந்தாள். வீட்டுக்குள் நுழைந்து கொண்டுருந்த சீனுவின் நடையைக் கண்டதும், அவன் அன்று ஜலகிரிடை நடத்திவிட்டு வருதிறானென்று அவளுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது.
'ஏன் இவன் இப்படி கெட்டுக் குட்டிச்சுவராப் போய்கிட்டு இருக்கான்?'
'இவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? நான் எதுக்கு இவனைப்பத்தி கவலைப்படணும்? இவன் செல்வாவோட ஃப்ரெண்ட்: ரெண்டு பேரும் காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சாங்க; என்னோட அஞ்சு வயசுலேருந்து இவனை எனக்குத் தெரியும்: என் வீட்டுக்கு நினைச்சப்ப வர்றான்: இந்த வீட்டுல உரிமையா சாப்பிடறான்; தூங்கறான்; நினைச்சப்ப எழுந்து போறான். அதே உரிமையோட இந்த வீட்டுல எந்த வேலையா இருந்தாலும், யாரும் சொல்றதுக்க முன்னே தானே தலை மேல இழுத்து போட்டுக்கிட்டு செய்யறான். இந்த வீட்டுக்குள்ள செல்வா மாதிரி இன்னொரு ஆம்பிளையா இருக்கான். நம்ம அப்பாவைப் பாத்தா மட்டும் இவனுக்கு கொஞ்சம் மரியாதை; பயம் உண்டு; அதனால அவரை மட்டும் எதுவும் கலாய்க்காம ஒதுங்கி நிக்கறான். மத்தப்படி இந்த வீட்டுல யார்திட்டவும் இவனுக்கு சுத்தமா பயங்கறதே கிடையாது.'
'அம்மாவுக்கு இவன் மேல அப்படி என்னத்தான் பிரியமோ? எது செய்தாலும் சீனுவுக்கு ரெண்டு எடுத்து வைடி... போன் பண்ணி வரச்சொல்லுடி; ஆறிப்போனாலும் பரவாயில்லே; அவன் வந்தான்னா குடுக்கலாம்னு அம்மாவுக்கு அவன் மேல பாசம் பொங்கி வழியும். இன்னைக்கு கூட சாயந்திரம் டிபனுக்கு செய்த வாழைக்காய் பஜ்ஜி, எடுத்து வெச்சு ஆறி அவலாப் போயிருக்கு. ரெண்டு தரம் போன் பண்ணேன்; வந்து தின்னுட்டுப் போடான்னு; அய்யா, சாவகாசமா கட்டிங் வுட்டுட்டு பத்து மணிக்கு மெதுவா நகர் ஊர்வலம் வர்றாரு?'
'திடீர்ன்னு கொஞ்ச நாளா இவனைப்பாத்தா, என் மனசுக்குள்ள ஒரு இனம் தெரியாத இரக்கம், ஒரு பரிவு தன்னாலே வருதே அது ஏன்? அதுவும் செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில திடந்ததுலேருந்து, நானும் பாக்கறேன், இந்த இரக்கம், பரிவு, பாசம், பிரமிப்புன்னு இவனை பாக்கும் போது, என் மனசுக்குள்ள வெள்ளமா பொங்குது.'
'என் அண்ணன் கூடவே இருந்து அவனுக்கு எல்லா உதவியும் பண்ணாங்கறதுனலயா? நிச்சயமா இல்லே? எத்தனையோ தரம் இதுமாதிரி பல சந்தர்ப்பங்கள்ள நம்ம வீட்டுக்கு அவன் உதவி பண்ணியிருக்கான்.'
'சீனு நல்லா சம்பாதிக்கறான். இவனுக்கு, எல்லோருக்கும் உதவணுங்கற எண்ணம் இருக்கு. கூப்பிட்ட குரலுக்கு, என்ன வேணும்.. வந்துட்டேன்னு எந்த நேரத்துலயும் குரல் குடுக்கறவன். ஒருத்தன் கிட்ட பழகிட்டா அவனுக்காக தன் உயிரையே குடுக்க ரெடிங்கறான். நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், ஒரே பிள்ளை. அப்படி இருக்கும் போது இவனுக்கு என்ன கவலை? எதுக்கு இப்படி பார்ட்டி பார்ட்டின்னு ஒரு சாக்கை சொல்லிக்கிட்டு, இந்த குடியை பழக்கிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போறான்?'
'எவன் அழிஞ்சா எனக்கென்னன்னு என்னால இருக்க முடியலியே? இதுக்கு காரணம் என்ன? சின்ன வயசுலேருந்து இவனை பார்க்கறதுனால இருக்குமா? அறியாத வயசுலேருந்தே இவன் கூட பழகறதுனால இருக்குமா? என் அண்ணனுக்கு உயிர் சினேகிதன்ங்கறதுனால இருக்குமா? தெரியலை... எனக்கு தெரியலை. ஆனா இவன் மேல ஒரு தனிப்பட்ட அன்பு எனக்குள்ள இருக்குங்கறது மட்டும் உண்மை...'
'பார்ட்புன்னு சொல்றது எல்லாம் பொய், புளுகு. இப்பல்லாம் வாயைத் தொறந்தா அதிகமா பொய் பேசறான்.'
'அவன் பொய் பேசினா எனக்கு என்ன? பேசிட்டு போகட்டும். எனக்கென்ன நட்டம்? இவனே எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்திட்டு நாலு பேருக்கு பார்ட்டி குடுக்க வேண்டியது. திரும்ப எவன் கிட்டவாவது பார்ட்டி கொடுடான்னு அவனுங்க கொடலை அறுக்கவேண்டுயது; குடிச்சுட்டு இங்க மாடியில வந்து யாருக்கும் தெரியாம சுருண்டுக்க வேண்டியது. இதே வழக்கமா போச்சு. இன்னைக்கு இது ஒரு முடிவு கட்டறேன்.'
தொடரும்...


அடுத்து மீனா சீனு காதல் கதையா சகோ
ReplyDeleteநடக்குமா?
Deleteசரியா ஒரு மாசத்துக்கு பிறகு, பலர் திரும்ப திரும்ப கேட்ட பிறகு, காதல் பூக்கள் கதை போட்டு உள்ளீர்கள்
ReplyDelete