காதல் பூக்கள் 70

முழு தொடர் படிக்க

 குமாரசுவாமி, ஒரு வாரம்‌ தன்‌ லீவுக்கான விண்ணப்பத்தை, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, தன்‌ உதவியாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார்‌. அதே வேகத்தில்‌ தானும்‌ ஒரு நிமிடம்‌ கூட உட்க்காராமல்‌ சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார்‌. அலுவலகத்தில்‌ தான்‌ விடுப்பில்‌ இருக்கும்‌ போது கவனிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, தன்‌ கீழ்‌ பணிபுரியும்‌ இரண்டு உதவி மேலாளர்களிடம்‌ விவரித்துக்கொண்டிருந்தார்‌. 

மாதத்தின்‌ கடைசி வாரம்‌ ஆதலால்‌, அந்தக்‌ கிளையின்‌ மாத வரவு செலவு கணக்கை, கையில்‌ வைத்துக்கொண்டு, நடராஜனின்‌ உதவியாளர்‌ அவர்‌ எதிரில்‌ நின்று கொண்டிருந்தார்‌. அவர்‌ கையழுத்துக்காக, ஊழியர்களின்‌ சம்பளப்பட்டியல்‌, காத்துக்கொண்டிருந்தது. 

அன்றைய வேலையை முடித்துவிட்டு, மூணு மணி அளவில்‌ கும்பகோணம்‌ கிளம்புவதற்கு அவர்‌ திட்டமிட்டிருந்தார்‌.

“ராஜகோபால்‌, உங்க கையில என்ன? இந்த மாச பேலன்ஸ்‌ ஷீட்டா? நடராஜன்‌ பாத்துட்டாரா?"

“யெஸ்‌ சார்‌: அர்ஜெண்டா பேலன்ஸ்‌ ஷீட்டைப்‌ உங்க பார்வைக்கு வைக்கச்‌ சொன்னார்‌: உங்க கிட்ட போன்ல பேசறேன்னும்‌ சொன்னார்‌."

“சரி அப்படி வைங்க நான்‌ பாக்கறேன்‌. நடராஜன்‌ அடுத்த ஒரு வாரம்‌ லீவுல இருப்பார்‌: அவர்‌ வந்தார்ன்னா ஒரு ரெண்டு நிமிஷம்‌ சிரமம்‌ பாக்காம, என்னைப்‌ பாத்துட்டு போகச்‌ சொல்லுங்க. நானும்‌ லீவுல போறேன்‌; அக்கவுண்ட்ஸ்ல்லாம்‌ நீட்‌ அண்ட்‌ க்ளீனா வெச்சுக்கங்க. யூ ஆர்‌ அன்‌ எக்ஸ்பீரியன்ஸ்டு மேன்‌! எதாவது முக்கியமான இஸ்யூன்னா, என்‌ செல்லுல எப்ப வேணா நீங்க என்னை காண்டாக்ட்‌ பண்ணலாம்‌. டூ யூ அண்டர்ஸ்டேண்ட்‌?"

“யெஸ்‌ சார்‌..."

“ரீங்க்க்க்க்க்‌" பஸ்ஸர்‌ ஒலித்தது.

“சார்‌... ஹெட்‌ ஆஃபீஸ்லேருந்து உங்க லீவு சேங்ஷன்‌ ஆகி பேக்ஸ்‌ இப்பத்தான்‌ வந்தது..." குமார சுவாமியின்‌ பர்ஸனல்‌ செகரட்ரி, மாலதி இண்டர்காமில்‌ அறிவித்தாள்‌.


“ம்ம்ம்‌... ஒரு வேலை முடிஞ்சுது... நிம்மதியாச்சு. அந்த ஃபேக்ஸை ரெண்டு காபி எடுத்து ஒன்னை நீங்க மெய்ன்டேய்ன்‌ பண்ற என்‌ பெர்சனல்‌ ஃபைல்ல வெச்சிடுங்க; ஒரு காப்பியை சஃப்‌ அக்கவுண்ட்ஸ்‌ ஆஃபிசர்‌ நடராஜன்‌ டேபிளுக்கு அனுப்பிடுங்க..."

“நீங்க சொல்றதை நான்‌ ஏற்கனவே செய்துட்டேன்‌ சார்‌; ஒன்‌ செகண்ட்‌ சார்‌: மிஸ்டர்‌ நடராஜன்‌ வந்திருக்கார்‌. உங்களை ஒரு நிமிஷம்‌ மீட்‌ பண்ணனும்ன்னு என்‌ ரூம்ல வெய்ட்‌ பண்றார்‌."

“லீவுல இருக்கறவரை ஏன்‌ காக்க வெக்கறீங்க? உடனே அவரை என்‌ ரூமுக்கு அனுப்புங்க..."'

“சார்‌ அப்ப நாங்க கிளம்பறோம்‌... உதவி நிர்வாகிகள்‌ இருவரும்‌ எழுந்தனர்‌..." 

"ஓகே.. கீப்‌ இன்‌ டச்‌ வித்‌ மீ..."

“சார்‌.. உங்களுக்கு லஞ்ச்‌ என்ன வரவழைக்கணும்‌?" மாலதி மீண்டும்‌ பஸ்ஸினாள்‌.

“ஓ. மைகாட்‌... மணி ஒண்ணாயிடுச்சா? ம்ம்ம்‌... மிஸஸ்‌ மாலதி... கிவ்‌ மீ ஒன்‌ மினிட்‌: நான்‌ சொல்றேன்‌." 

குமாரசுவாமி ரீஸிவரை வைக்கும்‌ போது, நடராஜன்‌ உள்ளே நுழைந்தார்‌.

“வாங்க மிஸ்டர்‌ நடராஜன்‌: என்னச்‌ சாப்பிடறீங்க அதை சொல்லுங்க முதல்ல..." குமாரசுவாமி தான்‌ கட்டியிருந்த டையை சிறிதே தளர்த்திக்கொண்டார்‌.

“வீட்டுல இந்த நேரத்துக்கு சமையல்‌ ரெடியாகிருக்கும்‌; இப்ப ஒண்ணும்‌ வேண்டாம்‌; நீங்க சாப்பிடுங்க சார்‌... ஐ வுட்‌ டேக்‌ ஒன்லி ௭ மினிட்‌ ஆர்‌ டூ..."

“இல்ல... இல்ல. நீங்க இன்னைக்கு என்‌ கூடத்தான்‌ சாப்பிடணும்‌. அயாம்‌ வெரி ஹாப்பி டுடே. ஊருக்குப்‌ போறேன்‌: பிளீஸ்‌... டேக்‌ யுவர்‌ சீட்‌: இப்ப லஞ்ச்‌ டயம்தானே: ரெண்டு நிமிஷம்‌ நிம்மதியா உக்காருவோம்‌." குமாரசுவாமி புன்னகைத்தார்‌.

“டிஃபன்‌ அயிட்டம்‌ எதாவது சொல்லுங்க; ரெண்டு வாரம்‌ முன்னாடிதான்‌ ஊர்லேருந்து வந்தீங்க: என்ன சார்‌ விஷயம்‌?" நடராஜன்‌ சோஃபாவில்‌ அவர்‌ எதிரில்‌ அமர்ந்து கொண்டார்‌.

“மிஸஸ்‌ மாலதி... டிஃபன்‌ என்ன கிடைக்கும்‌ நம்ம கேண்டீன்ல?"

"...."

“ரவா தோசை கிடைக்குமா? தட்ஸ்‌ குட்‌... குயிக்கா ரெண்டு ரவா தோசையும்‌, கூடவே ரெண்டு ப்ளேட்‌ தயிர்‌ வடையும்‌ வரவழைச்சுடுங்க; அண்ட்‌ நோ மோர்‌ கால்ஸ்‌ ஃபார்‌ அன்‌ அவர்‌; யூ மே கோ ஃபார்‌ யூவர்‌ லஞ்ச்‌ ஃப்ளீஸ்‌!"

“சார்‌... இது என்‌ லீவ்‌ லெட்டர்‌..." நடராஜன்‌ ஒரு காதிதத்தை அவரிடம்‌ நீட்டினார்‌: குமாரசுவாமி அதைப்‌ பார்க்கமலேயே தன்‌ கையெழுத்தை அதில்‌ கிறுக்கினார்‌.

“அப்புறம்‌ சொல்லுங்க..."

“என்‌ பையன்‌ செல்வா, ஒரு பொண்ணை விரும்பறான்னு உங்க கிட்ட சொல்லியிருந்தேன்‌; உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்‌; அந்த பெண்னை நிச்சயம்‌ பண்ணலாம்ன்னு குடும்பத்தோட கும்பகோணம்‌ போறேன்‌..."

“ரொம்ப சந்தோஷம்‌..."

“பொண்ணு பேரு சுகன்யா... என் பையனோட இங்க சென்னையிலத்தான்‌ வொர்க்‌ பண்ணிக்கிட்டு இருக்கா. ரொம்ப நல்லப்‌ பொண்ணு! கண்ணுக்கு நிறைவா குடும்ப பாங்கா இருக்கறா. என்‌ பையன்‌ அடிபட்டு பிழைக்க கிடந்தப்ப; கூடவே இருந்து தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி மாதிரி அவனைப்‌ பாத்துக்கிட்டா. பசங்க ஒருத்தரை ஒருத்தர்‌ ஆசைப்பட்டுட்டாங்க: கல்யாணத்தை உறுதி பண்ணிடலாம்ன்னு லீவுல போறேன்‌..."

“தட்ஸ்‌ வெரி நைஸ் டு ஹியர்‌..." குமாரசுவாமி அவர்‌ கையை குலுக்கினார்‌.

“சார்‌ . உங்க சொந்த ஊரும்‌ கும்பகோணத்துக்கு பக்கத்துலதானே?"'

“ஆமாம்‌..." குமாரசுவாமி, நடராஜன்‌ முகத்தையே பார்த்துக்கொண்டுருந்தார்‌. நடராஜன்‌ முகம்‌ மகிழ்ச்சியில்‌ பளீரென்றிருந்தது. 

ஆஃபீஸ்‌ பையன்‌ கேண்டீனிலிருந்து வரவழைக்கப்பட்ட டிஃபனை அவர்கள்‌ முன்னால்‌ பரிமாறினான்‌.

“ரமேஷ்‌ - பதினைஞ்சு நிமிஷம்‌ கழிச்சு எங்களுக்கு ரெண்டு கப்‌ காஃபி குடுத்துடுப்பா..."

“ஓ.கே. சார்‌" பையன்‌ நகர்ந்தான்‌.

“சாப்பிடுங்க நடராஜன்‌..."

“பொண்ணு அம்மா சுந்தரின்னு... பீ.ஜீ. டீச்சரா வொர்க்‌ பண்றாங்க; அவங்களுக்கும்‌ அவங்க ஹஸ்பெண்டுக்கும்‌ இடையில ஏதோ கொஞ்சம்‌ ஒத்துவராம தனியா பெண்ணை கஸ்டப்பட்டு வளர்த்து இருக்காங்க. அவங்களோட தம்பி, ரகுராமன்னு, தங்கமான மனுஷன்‌, அக்கா லைப்‌ இப்படி ஆயிடிச்சேன்னு, தான்‌ கல்யாணமே பண்ணிக்காம அக்கா கூடவே அக்காவுக்கும்‌, அக்கா பொண்ணுக்கும்‌ சப்போர்ட்டா இருக்கார்‌..."

“ம்ம்ம்ம்‌..."

“என்னோட கூட படிச்ச ஃப்ரெண்ட்‌ ஒருத்தன்‌ சுந்தரம்ன்னு, கம்பகோணத்துல ஹைஸ்கூல்‌ ஹொச்‌.எம்‌.-ஆ இருக்கான்‌. எங்க ஸ்கூல்லதான்‌ சுகன்யா படிச்சா.. எனக்கு அவளை நல்லாத்தெரியும்‌. நைஸ்‌ அண்ட்‌ இண்டலிஜண்ட்‌ கேர்ள்‌.. அவளோட அம்மாவும்‌ என்‌ ஸ்கூல்லத்தான்‌ வொர்க்‌ பண்றாங்க; ஹைலி டீசண்ட்‌ அண்ட்‌ மாரலி ஸ்ட்ராங்‌ வுமன்‌: கேள்வியே கேக்காம, கண்ணை மூடிக்கிட்டு சுகன்யாவை, உன்‌ மருமகளாக்கிக்கோன்னு சொன்னான்‌." 

குமாரசுவாமி தன்‌ வாயை மஷ்யூ பேப்பரால்‌ துடைத்துக்கொண்டு, காஃபியை உறிஞ்ச ஆரம்பித்தார்‌.

“ஸோ... நடராஜன்‌... நீங்க அவங்க குடும்பத்தைப்‌ பத்தி நல்லா விசாரிச்சு இருக்கீங்கன்னு தெரியுது!"

“ஆமாம்‌ சார்‌... என்‌ வீட்டுக்கு வரப்‌ போற பொண்ணு: அவ என்‌ மருமக இல்லே; என்‌ மகளா நான்‌ அவளை நடத்துவேன்‌: என்‌ வீட்டுல அவ சந்தோஷமா இருக்கணும்‌; அதே சமயத்துல என்‌ குடும்பத்தோட மகிழ்ச்சி அவ கையிலத்தானே இருக்கு? வயசான காலத்துல எங்களையும்‌, தன்‌ அப்பா அம்மாவா அவ கவனிச்சுக்கணும்‌. அதனால வரப்போற மருமக குடும்பத்தைப்‌ பத்தி நல்லா விசாரிக்கணும்‌ இல்லீங்களா?"

“நிச்சயமா..."

“குடும்பம்‌ நல்ல குடும்பம்ன்னா பொண்ணும்‌ குணமுள்ளவளாத்தான்‌ இருப்பா. சுகன்யாவோட ஆஃபீசுல விசாரிச்சேன்‌. யாருமே அந்த பெண்ணைப்‌ பத்தி ஒரு குறையும்‌ சொல்லலை. எல்லோருமே சுகன்யாவைப்‌ பத்தி நல்லபடியாத்தான்‌ சொன்னாங்க." 

"ம்ம்ம்ம்‌... நடராஜன்‌ நீங்க சொல்ற இந்த லேடியையும்‌, அவங்க ஃபேமலியையும்‌ எனக்கும்‌ பர்சனலாத்‌ தெரியும்‌.." தன்‌ மனைவியையும்‌, பெண்ணையும்‌, நடராஜன்‌ புகழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததை கேட்ட குமாரசுவாமியின்‌ மனதில்‌ பெருமிதம்‌ பொங்கிக்கொண்டுருந்தது.

“அப்படியா சார்‌! ஆச்சரியமா இருக்கு; அப்புறம்‌ தீர விசாரிச்சதுல சுகன்யாவோட அப்பாவும்‌, நார்த்ல எங்கேயோ நல்ல வேலையில இருக்கறதா தெரிஞ்சுது."

“ம்ம்ம்‌... அந்த லேடியோட ஹஸ்பெண்ட்‌, குடிப்பழக்கத்துக்கு ஆளாகி... பெண்டாட்பியையும்‌, பெண்ணையும்‌, தன்‌ குடும்பத்தையும்‌, அம்போன்னு விட்டுட்டு போயிட்டார்‌ இல்லையா?" குமாரசுவாமி புன்முறுவலுடன்‌ பேசினார்‌.

“அப்படித்தான்‌ என்‌ ப்ரெண்ட்‌ சுந்தரம்‌ சொன்னான்‌. என்‌ மனைவியும்‌ இந்த விஷயத்தை கேட்டதும்‌, ஆரம்பத்துல கொஞ்சம்‌ தயங்கினாங்க; என்‌ பிள்ளை மூலமா, சுகன்யாவை இது பத்தி கேக்கச்‌ சொன்னாங்க. ஆனா நல்ல குடும்பம்‌, நல்ல பொண்ணு: இதுக்கு மேல எனக்கு என்ன சார்‌ வேணும்‌? என்‌ வீட்டுக்கு வரப்போற பொண்ணோட குணம்தானே சார்‌ எங்களுக்கு முக்கியம்‌: சுகன்யாவோட அப்பாவைப்‌ பத்தி நமக்கென்னன்னு, என்‌ ஒய்ஃபை கன்வின்ஸ்‌ பண்ணேன்‌. என்‌ மனைவியும்‌ சரின்னு சொன்னாங்க. பைனலா, நேத்து ராத்திரிதான்‌ கல்யாணத்துக்கு எங்களுக்கு மனசார சம்மதம்ன்னு சொல்லிட்டேன்‌. அதனால..."

“ம்ம்ம்‌.." நடராஜன்‌ அவர்‌ சொல்வதை, குறுக்கிடாமல்‌ முகத்தில்‌ எந்த வித உணர்ச்சியையும்‌ காட்டாமல்‌ அமைதியாக கேட்டுக்கொண்டுருந்தார்‌.

“அதனால..." நடராஜன்‌ பேசுவதை ஒரு வினாடி நிறுத்தி விட்டு குமாரசுவாமியின்‌ முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கிவிட்டு தன்‌ தலையை தாழ்த்திக்கொண்டார்‌.

“சொல்லுங்க நடராஜன்‌.."

“நீங்க என்னைத்‌ தப்பா நெனைக்கக்‌ கூடாது.. அஃபீசியலா உங்களைப்‌ பத்தி எனக்கு ரொம்ப நல்லாத்‌ தெரியும்‌: நாலைஞ்சு வருஷமா பர்ஸனலாவும்‌ ஓரளவுக்கு தெரியும்‌. உங்க பொண்ணும்‌ உங்களை மாதிரி ரொம்ப நல்லப்‌ பொண்ணாத்தான்‌ இருப்பாங்க. ஆண்டவன்‌ அருளால அவங்களுக்கு நல்ல எடத்துல வரன்‌ அமையணும்‌: கண்டிப்பா அமையும்‌...” நடராஜன்‌ தன்‌ வார்த்தையை முடிக்காமல்‌ இழுத்தார்‌.

“நடராஜன்‌... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப்‌ புரியுது. உங்க வாயில தயவு செய்து வேணாம்ங்கற வார்த்தை மட்டும்‌ வரவேண்டாம்‌. முதல்ல என்‌ டாட்டரோட போட்டோவை நீங்க ஒரு தரம்‌ பாருங்க; அப்புறம்‌ நீங்க உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க; ப்ளீஸ்‌..." குமாரசுவாமியின்‌ கண்களில்‌ விஷமம்‌ துள்ளி குதித்து விளையாடியது.

“நிச்சயமா சார்‌... மே காட்‌ பிளஸ்‌ ஹர்‌!" 

'என்‌ பையனுக்கு பெண்‌ ஃபிக்ஸ்‌ பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும்‌, இவர்‌ ஏன்‌ தன்‌ பெண்ணோட போட்டோவை எனக்கு காமிக்க விரும்பறார்‌? ம்ம்ம்ம்‌.. இவர்‌ பெண்ணும்‌ எனக்கு என்‌ பொண்ணு மீனாட்சி மாதிரிதானே: சாதாரணமா பாக்கறதுல என்னத்‌ தப்பு?' நடராஜன்‌ தன்‌ மனதுக்குள்‌ சொல்லிக்கொண்டார்‌. 

குமாரசுவாமி நிதானமாக எழுந்து தன்‌ மேஜையின்‌ இழுப்பை திறந்தார்‌. சமீபத்தில்‌ அவர்‌ தன்‌ குடும்பத்துடன்‌ மஹாபலிபுரம்‌ சென்ற போது எடுத்த, சுந்தரியும்‌, சுகன்யாவும்‌ அருகருதில்‌ நிற்கும்‌ பெரிதாக்கப்பட்ட புகைப்படத்தை நடராஜனிடம்‌ நீட்டினார்‌.

புகைப்படத்தை பார்த்த நடராஜன்‌ திடுக்கிட்டு, கண்களில்‌ திகைப்பும்‌, பேச்சில்‌ வியப்புணர்ச்சியும்‌ வெகுவாக கலந்திருக்க, சட்டென எழுந்தார்‌.

“சார்‌ உங்க கிட்ட இந்த போட்டோ? இந்த படத்துல இருக்கறது சுகன்யாவும்‌, அவளோட அம்மா சுந்தரியுமாச்சே!! இவங்களோட புகைப்படம்‌? உங்ககிட்ட... எப்படி சார்‌ ???"

“உக்காருங்க நடராஜன்‌, உங்க ஆச்சரியம்‌ எனக்குப்‌ புரியுது. சுந்தரி என்‌ மனைவி; சுகன்யா என்‌ ஒரே மகள்‌; ஆரம்பத்துல, தேவையில்லாத சில நண்பர்களின்‌ சேர்க்கையால.. அவங்க நட்ப்பை நான்‌ தவிர்த்து இருக்கணும்‌.." குமாரசுவாமி நீண்ட பெருமூச்சு விட்டார்‌.

“என்‌ கல்யாணத்துக்கு அப்புறம்‌, நான்‌ குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, எனக்கு கிடைச்ச அன்பான மனைவி, அருமையான மகள்‌, எல்லோரையும்‌ தவிக்கவிட்ட, நீங்க சொன்ன நார்த்ல வேலை செய்துதிட்டு இருந்த சுந்தரியோட ஹஸ்பெண்ட்‌ நான்தான்‌."

“அப்.. அப்ப..." நடராஜன்‌, தன்‌ காதுகள்‌ கேட்பதை நம்ப முடியாமல்‌ திகைப்புடன்‌ குமாரசுவாமி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்‌.

“நான்‌ சுகன்யாவை பெத்தவன்னு தெரியாம, என்‌ பொண்ணை நீங்க என்‌ கிட்ட வாயார, மனசு நெறைஞ்சு, புகழ்ந்து பேசுனீங்க. அதுக்கான எல்லா கிரெடிட்டும் என் மனைவிக்கு தான். இன்னைக்கு என்‌ மகள்‌ சுகன்யா நல்ல நிலைமையில இருக்கறதுக்கு காரணம்‌ என்‌ மனைவியின்‌ பொறுமை: உழைப்பு; என்‌ மைத்துனன்‌ ரகுவோட தியாகம்தான்‌; இன்னைக்கு என்‌ பெண்‌ உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷன்‌ வீட்டுக்கு மருமகளா போகப்‌ போறான்னா அதுக்கு காரணமே சுந்தரியும்‌ ரகுவும்தான்‌."

“சார்‌ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..."

“ஒரு ஆசிரியர்‌, என்‌ ஊரைச்சேர்ந்தவர்‌... உங்க நண்பர்‌: அவரை எனக்குத்‌ தெரியாது: அவர்‌ என்‌ மனைவியை பாராட்டி பேசினதா சொன்னீங்க; கேக்கும்‌ போது எனக்கு ரொம்ப பெருமையா, மகிழ்ச்சியா இருந்தது."

“உண்மையை எப்படி சார்‌ மறைக்கமுடியும்‌?"

“நடராஜன்‌, நீங்க என்னை மன்னிக்கணும்‌. இப்ப சொல்லுங்க நடராஜன்‌ சார்‌! என்‌ மகள்‌ சுகன்யாவை நீங்க வேணாம்ன்னு சொல்லப்‌ போறீங்களா?" குமாரசுவாமி, நடராஜனின்‌ கைகளைப்‌ மன நெகிழ்ச்சியுடன்‌ பிடித்துக்கொண்டார்‌.

“நிச்சயமா மாட்டேன்‌ சார்‌... வேணாம்ன்னு சொல்ல எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"

“நடராஜன்‌! பிளீஸ்‌ நீங்க “சார்‌... சார்‌" ன்னு கூப்பிட்டு என்னை அன்னியப்படுத்தாதீங்க. நாம ரெண்டு பேரும்‌ ஒருத்தருக்கு ஒருத்தர்‌ சம்பந்தி ஆகப்‌ போறோம்‌. இன்‌ ஃபேக்ட்‌, இன்னைக்கு நான்‌ லீவுலே இருக்கேன்‌. நீங்களும்‌ லீவ்லேதான்‌ இருக்கீங்க" நான்‌ உங்க பாஸும்‌ இல்லே. நீங்க என்‌ கலீக்கும்‌ இல்லே" குமாரசுவாமியின்‌ குரலில்‌ சிறிது தழதழப்பு இருந்தது.

“ஓ.கே. ஆஸ்‌ யூ விஸ்‌... நான்‌ உங்களை குமார்ன்னு கூப்பிடட்டுமா?"

“நோ... இஸ்யூஸ்‌..."

“குமார்‌... நீங்க செல்வாவை ஹாஸ்பெட்டல்ல பாக்க வந்தப்ப, உங்க பொண்ணு சுகன்யா என்‌ பையனைத்தான்‌ லவ்‌ பண்றான்னு உங்களுக்கு தெரியுமா?"

“தெரியும்‌... அன்னைக்குத்தான்‌ நான்‌ என்‌ மனைவியையும்‌, மகளையும்‌, பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறமா மீண்டும்‌ சந்திச்சுட்டு வந்திருந்தேன்‌.."

“என்‌ பையன்‌ ஒரு பொண்ணை லவ்‌ பண்றான்னு சொன்னேன்‌. நீங்க உங்க பொண்ணை, செல்வாவுக்கு பாருங்கன்னு சொன்னீங்க; ஆனா உங்க பொண்ணு சுகன்யாதான்னு அப்ப ஏன்‌ சொல்லலை?"

“அயம்‌ சாரி நடராஜன்‌: அன்னைக்கு செல்வா லவ்‌ பண்ற பொண்ணு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்னு நீங்க சொன்னீங்க; என்‌ பொண்ணை உங்க பையனுக்கு பாருங்கன்னதும்‌ கொஞ்சம்‌ டயம்‌ குடுங்கன்னு கேட்டீங்க இல்லையா?"

“ம்ம்ம்‌." நடராஜன்‌ குறுக்தில்‌ பேசாமல்‌ குமாரசுவாமியை பேச அனுமதித்தார்‌.

“உங்களைப்‌ பத்தி எனக்கு நல்லாத்‌ தெரியும்‌, நேர்மையானவர்‌, குடுத்த வார்த்தையை மதிக்கறவர்‌. அப்படிப்பட்டவர்‌ எங்கிட்ட நீங்க டயம்‌ குடுங்கன்னு சொன்னதும்‌, ஒரு வினாடி என்‌ மனசுக்குள்ள... ஒரு சின்ன சந்தேகம்‌ வந்தது!"

“ம்ம்ம்‌... சந்தேகம்‌? என்ன அது?"

“நான்‌ ஒரு பெண்ணை பெத்தவங்கற ஸ்தானத்துல என்னை வெச்சு பாருங்க நடராஜன்‌... என்னுடைய ஃபினான்வியல்‌ பேக்‌ ரவுண்ட்‌, என்‌ சொத்து பத்து, இந்த விவகாரம்‌ எல்லாம்‌ உங்களுக்கு நல்லாத்‌ தெரியும்‌. நான்‌ இங்க வந்த உடனே, தனிப்பட்ட முறையில, உங்களை என்‌ ஆடிட்டராவும்‌ இருக்க சொல்லி ரெக்வெஸ்ட்‌ பண்ணியிருக்கேன்‌."

“சரி..."

“என்‌ அசையும்‌, அசையா சொத்து விவரங்களை நம்ம கம்பெனி விதி முறைகள்‌ படி நான்‌ வருஷா வருஷம்‌ டிக்ளேர்‌ பண்ணியிருக்கேன்‌. இந்த கிளையோட சீஃப்‌ அக்கவுண்ட்ஸ்‌ ஆஃபிசர்ங்கற முறையில, இந்த விவரங்கள்‌ அடங்கிய என்‌ பெர்சனல்‌ பைல்‌, உங்க கிட்டத்தானே இருக்கு?"

“யெஸ்‌ ... யூ ஆர்‌ கரெக்ட்‌...”

“உங்க பையன்‌, ஒரு பொண்ணை லவ்‌ பண்றான்‌; ஆனால்‌ அந்த பொண்ணை உங்க மருமகளா ஏத்துக்கறதா, இல்லையான்னு, அந்த நேரத்துல நீங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கலை. மேலும்‌ அந்த பொண்ணோட குடும்பத்தைப்‌ பத்தி அந்த நேரத்துல நீங்க முழுமையா விசாரிச்சு இருக்க மாட்டீங்கன்னு நான்‌ நம்பினேன்‌..."

“உண்மைதான்‌ குமார்‌..."

“அந்த நேரத்துல புதுசா ஒரு நல்ல வசதியான ஒரு இடம்‌ உங்க பையனுக்கு வருதுன்னதும்‌, உங்க மகனும்‌, நீங்களும்‌ என்‌ ப்ரப்போசலுக்கு எப்படி ரியாக்ட்‌ பண்ணப்‌ போறீங்கனு பாக்க நினைச்சேன். ஒரு ஆவரேஜ்‌ மனிதன்‌, வசதியான ஒரு குடும்பத்து பெண்ணை பாப்போமேன்னு நினைக்கறது சகஜம்‌ தானே..."

“மே பீ. மே பீ..."

“நடராஜன்‌, நீங்க வசதியான இடத்தை தேர்ந்தெடுக்கிறீங்களா? இல்லே, பையனுடைய ஆசைக்கு மட்டுமே முக்கியத்துவம்‌ குடுக்கறீங்களானு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன்‌..."

“ம்ம்ம்‌..."

“எனக்கு அபீஷியலா நல்லாத்‌ தெரிந்த நடராஜனை, என்‌ கலீக்கை, என்‌ ஃப்ரெண்டை, டெஸ்ட்‌ பண்ணணும்ன்னு நான்‌ அன்னைக்கு நினைக்கலை; என்‌ பொண்ணு லவ்‌ பண்ற பையனோட அப்பாவை டெஸ்ட்‌ பண்ணணுங்கற எண்ணம்‌ எனக்கு சட்டுன்னு வந்தது..."

“ம்ம்ம்‌..."

“ஒரு விதத்துல இது தப்புதான்‌ நடராஜன்‌. அதுக்காக நான்‌ உங்க கிட்ட இப்ப மன்னிப்பு கேட்டுக்கறேன்‌..."

“நோ... நோ... இட்ஸ்‌ ஆல்ரைட்‌..."

“சுகன்யா என்‌ பொண்ணுன்னு உங்களுக்கு தெரிய வரும்போது, உங்களோட நேர்மையை, நாணயத்தை, நான்‌ சந்தேகப்பட்ட மாதிரி உங்களுக்குத்‌ தோணலாம்‌."

“ம்ம்ம்‌."

“பொண்ணைப்‌ பெத்தவன்‌ நான்‌; நீங்க எப்படி என்‌ குடும்பத்தைப்பத்தி, நாலு பேருக்கிட்ட விசாரிச்சேன்னு சொன்னீங்களோ: அது மாதிரிதான்‌ நான்‌ என்‌ பொண்ணை ஒரு வீட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, என்‌ பொண்ணு எங்க போய்‌ வாழப்போறா? அந்த வீட்டு மனுஷாளோட குணம்‌ எப்படின்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்‌.

நாலு விதமா யோசனை பண்ணி, நல்லா விசாரிச்சுத்தானே என்‌ ஒரே பொண்ணை நான்‌ இன்னொருத்தர்‌ வீட்டுக்கு அனுப்ப முடியும்‌? அதனாலதான்‌ செல்வா ஆசைப்படற பொண்ணு, சுகன்யாதான்‌, அவ என்‌ பொண்ணுதான்னு அன்னைக்கு உங்க திட்ட நான்‌ சொல்லலை."

“புரியுது குமார்‌ ..."

“என்‌ அணுகுமுறையை நீங்க தப்புன்னு நெனைச்சா, அயாம்‌ எக்ஸ்ட்ரீம்லி சாரி நடராஜன்‌..." குமாரசுவாமி தன்‌ கைகளை கூப்பினார்‌.

“இல்ல குமார்‌! நான்‌ உங்களைத்‌ தப்பா நினைக்கலை..."

“இப்ப சொல்லுங்க நடராஜன்‌, என்‌ பொண்ணு சுகன்யாவை, உங்க பையன்‌ செல்வாவுக்கு கல்யாணம்‌ பண்ணிக்க சம்மதம்தானே?"

“கரும்பு தின்ன கூலி கேக்கறவன்‌ நான்‌ இல்ல."

“நடராஜன்‌, என்‌ மச்சினன்‌ ரகு உங்க கிட்ட பேசியிருப்பார்‌. வர வியாழக்கிழமையே நீங்க குடும்பத்தோட, உங்க உறவினர்களையும்‌, நண்பர்களையும்‌, அழைச்சுக்கிட்டு வந்துடுங்க; ராத்திரி அங்க தங்கறதுக்கான ஏற்பாடுகளை நான்‌ பண்ணிடறேன்‌; வெள்ளிக்கிழமை காலையில வெத்திலைப்‌ பாக்கு மாத்திக்கலாம்‌. அப்புறம்‌ எல்லோருக்கும்‌ வசதியான ஒரு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கலாம்‌..." குமாரசுவாமி எழுந்து நடராஜனின்‌ கைகளை பற்றிக்கொண்டார்‌.

“குமார்‌. எங்க தரப்புல ஒரு பத்துப்‌ பேரு வருவோம்‌. ஒரு வேளை, அதிகபட்சம்‌, ஒருத்தர்‌ இல்லே ரெண்டு பேர்‌ கூடலாம்‌. அவ்வளவுதான்‌. நீங்க ரொம்ப தடபுடலா எதையும்‌ செய்ய வேண்டாம்‌. நம்ம ரெண்டு குடும்பமும்‌ அன்னைக்கு ஒண்ணா உக்காந்து, சிம்பிளா டிஃபன்‌ சாப்பிடலாம்‌. அந்த அளவிற்கு ஏற்பாடு பண்ணுங்க அது போதும்‌..."

“ரொம்ப சந்தோஷம்‌ நடராஜன்‌..."

“இன்னொரு சின்ன விஷயம்‌... என்‌ மனைவி மல்லிகா சுகன்யாவுக்குன்னு ஒரு பட்டுப்புடவையும்‌, ஒரு சின்ன செயினும்‌ வாங்க இன்னைக்கு கடைக்கு என்‌ பெண்‌ மீனாவோட போயிருக்காங்க; இது எங்க குடும்ப வழக்கம்‌... சுகன்யா படிச்ச பொண்ணு; அவளுக்குன்னு சில கலர்‌, டிசைன்‌ அப்படீன்னு மனசுக்குள்ள நிறைய விருப்பங்கள்‌ இருக்கும்‌: அதுல தப்பு இல்லே; இருந்தாலும்‌ விசேஷத்து அன்னைக்கு, நாங்க அவளுக்குன்னு கொண்டு வர புடவையையும்‌, நகையையும்‌, எங்க வீட்டுக்கு வரப்போற குழந்தை சந்தோஷமா கட்டிக்கணும்‌, போட்டுக்கணும்ன்னு நாங்க பிரியப்படறோம்‌. இதை நீங்க சுகன்யாகிட்ட என்‌ வேண்டுகோளா சொல்லிடுங்க." நடராஜன்‌ மனதில்‌ திருப்தியுடன்‌ அவர்‌ கைகளை குலுக்கினார்‌.

“நிச்சயமா நடராஜன்‌... சுகன்யா இனிமே உங்க வீட்டுப்‌ பெண்‌... பெரியவங்க விருப்பத்தை சுகன்யா எப்பவும்‌ மறுக்கமாட்டாள்ங்கற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கு.." குமாரும்‌ மன மதிழ்ச்சியுடன்‌ நடராஜனின்‌ கைகளை பற்றிக்‌ கொண்டார்‌.


தொடரும்...

Comments

  1. ப்ரோ புது கதை ஏதும் இல்லையா. முதலிரவு கதை ஏதாவது போடுங்க

    ReplyDelete
  2. நந்தவனம் கதை தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60